search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அக்டோபர் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது- சபாநாயகர் அப்பாவு தகவல்
    X

    அக்டோபர் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது- சபாநாயகர் அப்பாவு தகவல்

    • கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
    • ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைக்கான சட்ட மசோதா கொண்டுவரப்படுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ந்தேதி தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.

    இந்த கூட்டத்தொடரின்போது, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு தடைக்கான சட்ட மசோதா கொண்டுவரப்படுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு புகார் தொடர்பான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    Next Story
    ×