என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
குன்றத்தூர் அருகே தந்தை-மகன் அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை
- மகன் தற்கொலை செய்த துக்கம் தாளாமல் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- செல்போன் விளையாட்டால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போனது.
பூந்தமல்லி:
குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுந்தர்(வயது40). கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் நவீன்குமார்(14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
நவீன்குமார் அதிகமாக செல்போனில் கேம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தான். இதனை அவரது தந்தை சுந்தர் அடிக்கடி கண்டித்து வந்தார். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் நவீன்குமார் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடினார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த போது நவீன்குமார் செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்தார். இதனை தந்தை சுந்தர் கண்டித்து விட்டு வேலைக்கு வெளியே சென்றுவிட்டார். அப்போது சுந்தரின் மனைவியும் வெளியே சென்று இருந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே தந்தை கண்டித்ததால் மனமுடைந்த நவீன்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் சுந்தர் வீட்டுக்கு திரும்பி வந்த போது மகன் நவீன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் கண்டித்ததால் தான் மகன் தற்கொலை செய்து இறந்து விட்டான் என்று நினைத்து சுந்தர் மனமுடைந்தார்.
இதைத்தொடர்ந்து தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இதற்கிடையே சுந்தரின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் நவீன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பைத கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நவீன்குமாரின் உடலை இறக்கி அருகில் உள்ள அறையில் வைத்தனர். மேலும் சுந்தருக்கு ஆறுதல் கூறினர். ஆனாலும் தன்னால் தான் மகன் தற்கொலை செய்து கொண்டான் என மனவேதனையில் இருந்த சுந்தர் திடீரென தனது கையை கத்தியால் அறுத்து கொண்டு மகன் தற்கொலை செய்த அதே அறைக்குள் சென்றார். பின்னர் மகன் தற்கொலை செய்த அதே கயிற்றில் சுந்தரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த தற்கொலையை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது குறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்த சுந்தர், அவரது மகன் நவீன்குமார் ஆகிய இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகன் தற்கொலை செய்த துக்கம் தாளாமல் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செல்போன் விளையாட்டால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போனது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்