search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.13 கோடி செலவில் வாகன சுரங்கப்பாதை- அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்
    X

    ரூ.13 கோடி செலவில் வாகன சுரங்கப்பாதை- அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்

    • சுரங்கப்பாதையின் மொத்த நீளம் 207 மீ, அகலம் 6 மீட்டர். இதில் 37 மீட்டர் ரெயில்வே நிர்வாகத்தாலும், 170 மீட்டர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பிலும் அமைக்கப்பட உள்ளது.
    • ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு, திட்ட பணியானது இன்று அமைச்சர் பெருமக்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர்கள் கே.என். நேரு, பி. கே. சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரெயில்வே சந்திக்கடவு 11 ஏ-ல் ரூ.13.40 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதை அமைக்கும் திட்ட பணியினை இன்று தொடங்கி வைத்தனர்.

    சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், போஜராஜன் நகரில் ரெயில்வே சந்திக்கடவு 11 ஏ-ல் அமையவுள்ள வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதை திட்ட பணியின் மொத்த மதிப்பு ரூ.20 கோடி. இந்த சுரங்கப்பாதையின் மொத்த நீளம் 207 மீ, அகலம் 6 மீட்டர். இதில் 37 மீட்டர் ரெயில்வே நிர்வாகத்தாலும், 170 மீட்டர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பிலும் அமைக்கப்பட உள்ளது.

    இதில் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் 37 மீட்டர் நீளத்திற்கான பணியை மேற்கொள்ள சென்னை மாநகராட்சியின் சார்பில் மூலதன நிதியிலிருந்து ரூ.6.60 கோடி ஏற்கனவே ரெயில்வே நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் இப்பணி முடிவுற்றுள்ளது.

    சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.13.40 கோடி மதிப்பில் மூலதன மானிய நிதியின்கீழ் 170 மீட்டர் நீளத்திற்கு அணுகு சாலை அமைக்கப்படவுள்ளது. இப்பணிக்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு, திட்ட பணியானது இன்று அமைச்சர் பெருமக்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×