search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்த பெண் பக்தர் திடீர் உயிரிழப்பு
    X

    சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்த பெண் பக்தர் திடீர் உயிரிழப்பு

    • சோழவரம், எஸ்.பி.கே.நகர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
    • ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரியபாளையம்:

    சிறுவாபுரி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. கடந்த மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மண்டலாபிஷேகம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் பங்கேற்க தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் சோழவரம், எஸ்.பி.கே.நகர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 66) என்பவர் நேற்று இரவு சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் தரிசனம் முடித்ததும் கோவிலின் பின்புறத்தில் உள்ள இருக்கையில் தூங்கினார். இதனை அங்கிருந்த ஊழியர்கள் கவனிக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலை சுத்தம் செய்ய பணியாளர்கள் வந்தபோது ராஜேஸ்வரியை எழுப்ப முயன்றனர். அப்போது அவர் இறந்து இருப்பது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் ஆரணி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜேஸ்வரி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×