search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கிரீஸ் ரெயில் விபத்து - பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு
    X

    கிரீஸ் ரெயில் விபத்து - பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

    • இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகளில் தீப்பற்றியது.
    • ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

    ஏதென்ஸ்:

    கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது.

    லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. அப்போது 3 பெட்டிகள் வெடித்தது.

    இந்த கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், 85 பேர் காயமடைந்துள்ளனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கிரீஸ் ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×