search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்தவர் சாவு
    X

    கோப்பு படம்.

    மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்தவர் சாவு

    • திடீர் பிரேக் போட்டதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்தவர் பரிதாபமாக இறந்து போனார்.
    • சீனிவாசனை அங்கு இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுச்சேரி:

    திடீர் பிரேக் போட்டதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்தவர் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுவை ஜீவானந்தபுரம் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மேட்டுபாளையம் கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் திடீர் என பிரேக் போட்டதால் மோட்டடார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். சீனிவாசனை அங்கு இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×