search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நிலுவை தொகையை விரைவாக வழங்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    நிலுவை தொகையை விரைவாக வழங்க வேண்டும்

    • சுகாதார ஊழியர்கள் சம்மேளனம் கோரிக்கை
    • அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 கோடியே 40 லட்சம் கூடுதல் செலவாகும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சுகா தாரத்துறை ஊழியர்களுக்கு நோயாளிகள் கவனிப்பு படி , செவிலியர் படி இந்த மாதம் முதல் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனை நோயாளிகள் கவனிப்பு படி பிரிவு-8க்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு மாத ந்தோறும் ரூ.4 ஆயிரத்து 100 ஆகவும், பிரிவு 9-க்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 300 ஆகவும் உய ர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    செவிலியர் படி அனைத்து பிரிவினருக்கும் மாதம் ரூ. 7 ஆயிரத்துத் 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதற்கான உத்தரவை அரசு சுகாதாரத்துறை சார்பு செயலாளர் கந்தன் வெயிட்டுள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு ஊழியரும் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 2500 வரை கிடைக்கும். 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்த்தப் பட்டுள்ளது.

    இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 கோடியே 40 லட்சம் கூடுதல் செலவாகும். சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நிலுவைத் தொகையோடு வழங்கும் வகையில் தான் கோப்புகள் அனுப்பப்பட்டது. தற்போது அரசு நிதிநிலை சரியில்லாத காரணத்தால் நிலுவைத் தொகை வழங்க சாத்தி ழ்யக்கூறு இல்லாததால் மாத ஊதியத்தில் மட்டும் உயர்த்தி வழங்குவதை ஏற்றுக் கொண்டுள்ளோம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஊதியத்துடன் இந்த தொகையை உயர்த்தி தந்துள்ளனர். இதற்கு முதல்-அமைச்சர்,

    சுகாதார நிதி துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். கொரோனா நேரத்தில் ஒய்வின்றி உழைத்த சுகாதார ஊழியர்களுக்கு படிகளின் நிலுவை தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள அறிக்கையில் கூறியுள்ளனர்

    Next Story
    ×