search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள்
    X

    மணவெளி தொகுதியில் திட்ட பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள்

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • சசிகுமார், பழனிவேல், தனுசு, செந்தில், இளஞ்செழியன், முரளி, தங்கதுரை, என். எஸ். கே. மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில்

    மணவெளி தொகுதியில் இடையார்பாளையம் பகுதியில் உள்ள குடுவையாறு கரையை ரூ.25.90 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது.

    மேலும் மணவெளி பகுதியில் உள்ள செட்டிகுளம் மற்றும் அதன் வாய்க்காலை ரூ. 7.16 லட்சம் மதிப்பில் ஆழப்படுத்தி வாய்க்காலை மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

    இப்பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகுமார், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம் மற்றும் முக்கிய பிரமுகர்களான தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், இடையார்பாளையம் பகுதி முக்கிய பிரமுகர்கள் அர்ஜுனன், நாகராஜ், கூட்டுறவு சங்க இயக்குனர் பழனி, என்ற தன்ராஜ், சீனிவாசன், ராஜாராமன், மணவெளி பகுதி முக்கிய பிரமுகர்கள் கலைவாணன், முருகன், பன்னீர், சசிகுமார், எஸ்.வி .எஸ். குமரன், ராமச்சந்திரன், சசிகுமார், பழனிவேல், தனுசு, செந்தில், இளஞ்செழியன், முரளி, தங்கதுரை, என். எஸ். கே. மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×