என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுவை தமிழ் சங்கத்தில் வள்ளலார் விழா
- அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த முன்னிட்டு புதுவை தமிழ் சங்கத்தில் சிறப்பு வில்லிசை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
- எதிர்க்கட்சி தலைவர் சிவா வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த முன்னிட்டு புதுவை தமிழ் சங்கத்தில் சிறப்பு வில்லிசை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன் தாசு வரவேற்றார். துணைத் தலைவர் ஆதிகேசவன், துணைச்செயலாளர் அருள் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தொடக்க உரையாற்றி கவிதை வாசித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து எல்லாம் தந்த வள்ளல் என்ற தலைப்பில் வில்லிசை வேந்தர் பட்டாபிராமன் குழுவினரின் சிறப்பு வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
புலவர் துரை மாலிறையன் , போலீஸ் சூப்பிரண்டு வீர. பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பொருளாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், சீனு.கந்தகுமார்,, தினகரன், சிவேந்திரன், கணேசுபாபு மற்றும் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்