search icon
என் மலர்tooltip icon

    ஸ்வீடன்

    • பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது ஸ்வீடன்
    • "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்" என நேட்டோ பொதுச்செயலாளர் கூறினார்

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள், ஒன்றிணைந்து அமைத்த ராணுவ கூட்டமைப்பு நேட்டோ (North Atlantic Treaty Organization) எனப்படும்.

    நேட்டோ உறுப்பினர் நாட்டை மற்றொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து உறுப்பினர் நாட்டிற்கு ஆதரவாக நிற்கும். இதில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.

    பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.

    2022ல் நடந்த ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.

    ஆனால், "தனக்கு எதிரான நாடு" எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது. மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, "தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஸ்வீடன் ஆதரவளிக்கிறது" என குற்றம் சாட்டி ஸ்வீடனை இணைக்க சம்மதிக்கவில்லை.

    கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.

    சில வாரங்களுக்கு முன், ஹங்கேரியும் தனது நிலையை மாற்றி கொண்டது.

    நேட்டோவில் உறுப்பினராக இணைவதற்கு சுவீடன் நாட்டிற்கு இருந்த அனைத்து தடைகளும் நீங்கிய நிலையில், நேற்று, அதிகாரபூர்வமாக ஸ்வீடனின் இணைப்பு அறிவிக்கப்பட்டது.


    நேட்டோ அமைப்பில் இணையும் 32-வது உறுப்பினர் நாடு ஸ்வீடன் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்வீடனின் இணைப்பு குறித்து, "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்" என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg) கூறினார்.

    இது குறித்து பேசிய ஸ்வீடன் அதிபர் உல்ஃப் க்ரிஸ்டர்சன் (Ulf Kristersson), அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.


    • நேட்டோ உறுப்பினரை எந்த நாடு தாக்கினாலும் அனைத்து நாடுகளும் ஒன்றாக எதிர்க்கும்
    • நீண்ட காலமாக ஸ்வீடன் எந்த போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள் ஒன்றிணைந்து அமைத்த அணி நேட்டோ (North Atlantic Treaty Organization).

    நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டை வேறொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து அந்த நாட்டிற்கு ஆதரவாக நிற்கும்.

    நேட்டோ அமைப்பில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டும்.

    சுமார் 200 வருடங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.

    2022ல் உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்த பிறகு ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.

    ஆனால், ஸ்வீடன் தனக்கு எதிரான நாடு எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது.

    இந்நிலையில், ஹங்கேரி தனது நிலையை மாற்றி கொண்டது.

    ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orban), "இரு நாடுகளும் ஒருவருக்காக மற்றொருவர் இறக்கவும் தயாராக உள்ள நாடுகள்" எனக் கூறி ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்தார்.


    ஹங்கேரியின் ஒப்புதல் குறித்த தகவல் வந்த நிலையில் நேற்று ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் க்ரிஸ்டர்ஸன் (Ulf Kristersson) மகிழ்ச்சி தெரிவித்தார்.

    ஹங்கேரியின் இந்த முக்கிய முடிவு குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க், "நேட்டோ, முன்னை காட்டிலும் வலுவான மற்றும் பாதுகாப்பான அமைப்பாகவும் மாறி விட்டது" என (Jens Stoltenberg) தெரிவித்தார்.

    மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி ஸ்வீடன் இணைய சம்மதிக்கவில்லை.

    ஆனால், கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லைஸ்பர்க் பார்க்கின் விரிவாக்கமாக ஓஷியானா பார்க் உருவாகியது
    • காணாமல் போன ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

    வட ஐரோப்பாவில் உள்ள நாடு, ஸ்வீடன். இதன் தலைநகரம் ஸ்டாக்ஹோம் (Stockholm).

    ஸ்வீடனின் மேற்கு கடற்கரையோர நகரம், கோதன்பர்க் (Gothenburg).

    இந்நகரில் "ஓஷியானா வாட்டர் பார்க்" (Oceana water park) எனும் புதிய தண்ணீர் பூங்கா கட்டப்பட்டு வந்தது. "லைஸ்பர்க் அம்யூஸ்மென்ட் பார்க்" (Liseberg Amusement Park) எனும் பொழுதுபோக்கு பூங்காவின் விரிவாக்கமாக இது உருவாகி வந்தது.

    நேற்று, ஓஷியானா தண்ணீர் பூங்காவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுமானம் முடிந்து, பயன்பாட்டிற்கு இன்னும் வராத பல நீர்சறுக்கு அமைப்புகள் தீக்கிரையாகின.


    அப்பகுதி முழுவதும் கருமண்டலம் போல் புகை சூழ்ந்தது.

    இந்த தீ விபத்தில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. ஆனாலும், ஒருவர் காணவில்லை என்றும் அவரை தேடும் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தீ விபத்திற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.


    தண்ணீர் பூங்காவை சுற்றியுள்ள ஒரு ஓட்டல் மற்றும் அருகிலிருந்த அலுவலகங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மேலும், தீ முழுவதுமாக அணைக்கும் வரை தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும், ஜன்னல்களையும் கதவுகளையும் தாழிட்டு கொள்ளவும் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் பணியாற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

    அப்பகுதி முழுவதும் எரிந்த பிளாஸ்டிக் வாடை வீசுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இனி சுவீடனில் தங்க விரும்புபவர்கள் அங்கு வேலை தேடி கொள்ள வேண்டும்
    • சுவீடிஷ் மொழியில் தேர்வு பெற்றாக வேண்டும் என்கிறது புதிய நடைமுறை

    ஐரோப்பிய நாடுகளில் 27 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் எல்லைகளை தாண்டி செல்ல ஒரே விசா முறையான ஷென்கன் விசா (Schengen Visa) நடைமுறையில் உள்ளது. இதை சுவீடன் (Sweden) நாடும் அங்கீகரித்து வந்தது.

    சுற்றுலா தவிர, சுவீடனில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கவும், அங்கு தங்கி பணியாற்றவும் பல நாடுகளிலிருந்து அங்கு மக்கள் செல்கின்றனர். ஆனால், தற்போது சுவீடன் அரசாங்கம் தங்கள் நாட்டில் குடி புக நினைக்கும் அனைத்து அயல்நாட்டினருக்கும் புதிய சட்டதிட்டங்களை வகுக்க உள்ளது.

    சுவீடனின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அறிவித்திருப்பதாவது:

    சுவீடனில் தங்க விரும்புபவர்கள் இங்கு தாங்களாகவே வேலையை தேடி கொள்ள வேண்டும். இதன் மூலம் அனைவரும் அரசாங்க உதவி இல்லாமல் தங்களை தேவைகளை தாங்களே பார்த்து கொள்ள முடியும். சுவீடன் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் சமூக குறியீடுகளை குறித்த புரிதல் இருக்க வேண்டும் என்பதும் இனி கட்டாயம். சுவீடன் நாட்டு மொழியான சுவீடிஷ் (Swedish) மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவர். அதற்காக ஒரு தேர்வு நடத்தப்படும். இங்கு தங்கி பணியாற்ற விரும்புபவர்கள் ஒவ்வொருவரின் "சமுதாய புரிதல்" குறித்து ஒரு ஆய்வாளரின் அறிக்கை பெறப்படும். இங்கு கல்வி கற்று, பிறகு வேலையில் சேர்ந்து பணியாற்ற அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக விசா திட்டங்கள் மாற்றப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "சுவீடனுக்கு அனவைரையும் வரவேற்கிறோம். ஆனால், எங்கள் சட்டதிட்டங்கள் இனி இதுதான். சுவீடிஷ் மொழியை கற்று எங்கள் சமூகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து படித்து புரிதல் கொண்டவர்கள் மட்டுமே இங்கு வர வேண்டும்" என சுவீடனின் தொழிலாளர் துறை அமைச்சர் ஜோகன் பெர்சன் (Johan Pehrson) தெரிவித்தார்.

    சில தினங்களுக்கு முன், ஃபாஸ்ட் டிராக் (fast track) எனப்படும் "விரைவு பரிசீலனை" முறையில் வழங்கப்பட்டு வந்த விசா வழங்கலை சுவீடன் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • தனது புதுமையான எழுத்துக்கள் மூலம் நார்வே இலக்கியத்தில் சாதனை புரிந்தார்
    • சந்தோஷத்துடன் சற்று அச்சமாகவும் உள்ளது என்றார் ஜான் ஃபாஸ்

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், மற்றும் வேதியியல் துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்திருக்கிறது.

    "தனது புதுமையான நாடகங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நார்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர் ஜான் ஃபாஸ். அவரது படைப்புகளுக்காக அவரை கவுரவிக்கும்விதமாக இந்த பரிசினை வழங்குகிறோம்" என அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.

    "மிகவும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன். அதே சமயம் சற்று அச்சமாகவும் உள்ளது. இதை இலக்கியத்திற்கான பரிசாக நான் பார்க்கிறேன்" என தனக்கு கிடைத்திருக்கும் விருதினை குறித்து ஜான் ஃபாஸ் தெரிவித்தார்.

    1901லிருந்து தற்போது 2023 வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு 116 முறை வழங்கப்பட்டிருக்கிறது.

    • 5 துறைகளிலும் சாதனை புரிந்தவர்களுக்கு வருடா வருடம் வழங்கப்படுகிறது
    • மூவரும் குவான்டம் டாட்ஸ் துறையில் வெற்றிகரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான மருத்துவ மற்றும் பவுதிக துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அறிவியலுக்கான ராயல் சுவீடிஷ் அகாடமி இது குறித்து அறிவித்திருப்பதாவது:

    நேனோ தொழில்நுட்பத்தில் உயர் தொழில்நுட்ப பிரிவான "குவான்டம் டாட்ஸ்" துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு நுகர்வோர் மின்னணு துறையிலும் மருத்துவ துறையிலும் பல்வேறு புரட்சிகள் ஏற்பட வழி வகுத்த அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி. பல்கலைகழகத்தை சேர்ந்த அமெரிக்கரான மவுங்கி பவெண்டி (Moungi Bawendi), அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தை சேர்ந்த லூயி ப்ரு (Louis Brus) மற்றும் ரஷியாவை சேர்ந்த அலெக்ஸி எகிமோவ் (Alexey Ekimov) ஆகிய மூவருக்கும் இது பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அகாடமி அறிவித்திருக்கிறது.

    இந்த மூவரின் பெயர்களை வேதியியல் துறையில் நோபல் பரிசை பெற தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவர் ஜோஹன் அக்விஸ்ட் (Johan Aqvist) உறுதிப்படுத்தினார்.

    வழக்கமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை பரிசுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆனால், இம்முறை இன்று காலை சுவீடன் நாட்டை சேர்ந்த ஒரு நாளிதழுக்கு மின்னஞ்சல் மூலமாக இந்த மூவரின் பெயர்கள் முன்னரே கசிந்தது சர்ச்சையை உருவாக்கியது.

    • தகுதியுடையவர்களை இந்நிறுவனத்தின் 50 பேராசிரியர்களை கொண்ட குழு தேர்வு செய்யும்
    • விருது பெறும் இருவருமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோல்னா (Solna) எனும் பகுதியில் உள்ளது 'கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்' எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம்.

    இக்கல்வி நிறுவனத்தின் 50 பேராசியர்களை கொண்ட 'நோபல் அசெம்பிளி' (Nobel Assembly) எனும் குழு ஒவ்வொரு வருடமும் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு பலனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை செய்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு எனப்படும் உலகப்புகழ் வாய்ந்த விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.

    இந்த வருட மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, கட்டாலின் கரிக்கோ (Katalin Kariko) மற்றும் ட்ரூ வைஸ்மேன் (Drew Weissman) ஆகியோருக்கு வழங்கப்படுவதாக இந்த குழு அறிவித்துள்ளது.

    இது குறித்து அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது:

    மனிதர்களின் மரபணு கூறுகள், மனிதர்களின் எதிர்ப்பு சக்தியில் ஆற்றும் பங்கினை கண்டறிய இந்த இருவரும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் பெரிதும் உதவியது. அதன் மூலம் உலகையே அச்சுறுத்தி வந்த கோவிட்-19 பெருந்தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை பெருமளவு தயாரிப்பது எளிதாக அமைந்தது.

    இவ்வாறு நோபல் அசெம்பிளி அறிவித்துள்ளது.

    விருது பெறும் இருவருமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உயிர்வேதியியல் துறையை சேர்ந்த 68 வயதான ஹங்கேரிய அமெரிக்க விஞ்ஞானியான கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

    அமெரிக்க வேதியியல் விஞ்ஞானியான 64 வயதான ட்ரூ வைஸ்மேன், மரபணு ஆராய்ச்சிக்கான பென் இன்ஸ்டிட்யூட் (Penn Institute) நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.

    மருத்துவ துறைக்கு இவ்விருதுகள் வழங்கப்பட தொடங்கிய 1901 வருடத்திலிருந்து இதுவரை 113 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும், அவற்றில் 12 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • பால்டிக் கடல் எல்லையில் ரஷியாவின் நடவடிக்கையை தடுக்க சுவீடன் இந்த முடிவை எடுத்துள்ளது
    • சுவீடன் முழுநேர உறுப்பினராக துருக்கி தடையாக உள்ளது

    நேட்டோ அமைப்பில் முழுநேர உறுப்பினராவதற்காக நீண்ட காலமாக சுவீடன் முயற்சித்து வருகிறது. இருப்பினும், முழு நேர உறுப்பினராகும் முன்னதாகவே நேட்டோவுடன் இணைந்து பணியாற்றுவதை வரவேற்பதாக சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

    நேட்டோ மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன், ராணுவ மந்திரி பால் ஜான்சனுடன் இணைந்து தெரிவித்திருக்கிறார்.

    சுவீடன் மண்ணில் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் ராணுவ தளவாடங்களை இறக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கவும் இந்த கூட்டு முயற்சியில் அனுமதிக்கப்படும் என தெரிவித்தார். இந்த செய்தி ரஷியாவுக்கு விடப்பட்ட ஒரு சமிக்ஞை செய்தியாகவும், சுவீடனின் தற்பாதுகாப்புக்கும் உதவும் ஒரு நிகழ்வாகவும் இந்த செய்தி பார்க்கப்படுகிறது.

    சுவீடனில் நேட்டோவின் இருப்பு அனுமதிக்கப்படுவதால், பால்டிக் கடற்பகுதியில் ரஷியா ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதை தடுக்கக்கூடிய வகையிலும் இது அமையக்கூடும் எனபதால், சுவீடனின் தற்பாதுகாப்புக்கான ஒரு முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது.

    சுவீடன் நாட்டின் நேட்டோ உறுப்பினருக்கான கோரிக்கை இன்னமும் ஏற்கப்படாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. நேட்டோவில் 2022-ம் வருடத்திலிருந்து சுவீடன் இணைய அழைப்பு இருந்தும் அதை உறுதி செய்ய வேண்டிய 31 உறுப்பினர் நாடுகளில், துருக்கி மற்றும் ஹங்கேரியும் சம்மதிக்கவில்லை.

    நேட்டோவின் சட்டப்பிரிவு 5-ன்படி ஒரு உறுப்பினர் நாடு மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பினர்களின் மீதும் நடத்தப்பட்டதாக கருதப்படும். ஆனால், இந்த பாதுகாப்பு அம்சம் முழு உறுப்பினர்கள் நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    கடந்த மே மாதம், துருக்கி நாட்டின் அதிபராக எர்டோகன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் சுவீடனின் உறுப்பினர் அந்தஸ்து குறித்து இதுவரை அவர் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

    துருக்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் சுவீடன் நிறைவேற்றி விட்டதால் விரைந்து முடிவெடுக்கும்படி துருக்கியை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கேட்டுக் கொண்டுள்ளது. இதில் துருக்கி நாட்டால் பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்ட குர்திஷ் இன போராட்டக்காரர்களின் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மீது சுவீடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் அடங்கும்.

    ஆனால், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் குடியேறியுள்ள ஒரு சில துருக்கி நாட்டு ஆர்வலர்களையும், சுவீடன் வெளியேற்ற வேண்டும் என துருக்கி நிர்பந்திக்கிறது. இதற்கு சம்மதிக்க மறுக்கும் சுவீடன், தங்கள் நாட்டில் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதாகவும், இந்த விஷயத்தில் தலையிட முடியாதெனவும் அறிவித்தது.

    இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சுவீடன் தமது நாட்டின் ராணுவத்திற்கான செலவினங்களையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்த செய்தியைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என விமர்சனம் செய்தனர்.
    • உடலுறவு போட்டி தொடர்பான கோரிக்கையானது ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

    எப்போதுமே வினோதமான செய்திகள் வேகமாக பரவுவதுடன் கடும் விவாதப் பொருளாகவும் மாறிவிடுகிறது. அப்படித்தான், ஸ்வீடனில் உடலுறவு என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாகவும் செய்தி வேகமாக பரவி வருகிறது. ஜூன் 8ம் தேதி தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்திகளில் பெரும்பாலான செய்திகள் ட்வீட்களை ஆதாரங்களாக காட்டியுள்ளன. இந்த தகவலைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.

    ஆனால் ஸ்வீடனில் இருந்து அறிக்கையோ அல்லது சர்வதேச அளவிலான அறிக்கையோ வெளியாகாத நிலையில், இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது.

    அதாவது, ஸ்வீடன் செய்தி நிறுவனமான கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் தகவலின்படி, செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான விண்ணப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

    'ஸ்வீடன் நாட்டில் செக்ஸ் கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவர் டிராகன் பிராக்டிக் ஒரு சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார். உடலுறவானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார். எனினும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    • ஆஸ்திரியாவுக்கு தேவையான பணியாளர்களை வரவழைத்துக் கொள்ளவும், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • இந்தோ-பசிபிக், ஜி20 மாநாடு ஆகியவை பற்றியும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    ஸ்டாக்ஹோம்:

    சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் ஐரோப்பிய கூட்டமைப்பு-இந்தோ பசிபிக் மந்திரிகள் மாநாடு நடந்து வருகிறது. அதில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

    மாநாட்டுக்கு வந்துள்ள பிற நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை மாநாட்டுக்கு இடையே ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். லாட்வியா, ஆஸ்திரியா, பிரான்ஸ், பெல்ஜியம், ருமேனியா, சைப்ரஸ், பல்கேரியா, லிதுவேனியா ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    லாட்வியா வெளியுறவுத்துறை மந்திரி எட்கர்ஸ் ரிங்கெவிக்சுடனான பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது பற்றி பேசினார். உக்ரைன் போரின் விளைவுகள் பற்றியும் இருவரும் விவாதித்தனர்.

    அரசியல் ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு பற்றியும், உணவு பாதுகாப்பு குறித்தும் பேசினர். ஆஸ்திரியா நாட்டின் வெளியுறவு மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலன்பெர்க்கை ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது, ஆஸ்திரியாவுக்கு தேவையான பணியாளர்களை வரவழைத்துக்கொள்ளவும், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இருவரும் உக்ரைன் போர் பற்றியும், இந்தோ-பசிபிக் விவகாரம் குறித்தும் ஆலோசித்தனர். பிரான்ஸ் வெளியுறவு மந்திரி கேத்தரின் கொலன்னாவை ஜெய்சங்கர் சந்தித்தபோது, பிரதமர் மோடி ஜூலை மாதம் பாரீ்ஸ் நகரில் நடக்கும் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது பற்றி விவாதித்தனர். அந்த பயணத்தை வெற்றிகரமாக ஆக்குவது பற்றி பேசினர்.

    மேலும், இந்தோ-பசிபிக், ஜி20 மாநாடு ஆகியவை பற்றியும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். லிதுவேனியா, பெல்ஜியம் லிதுவேனியா நாட்டு வெளியுறவு மந்திரி கேப்ரியலியஸ் லேண்ட்ஸ்பெர்கிசுடனான சந்திப்பின்போது, இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி பேசப்பட்டது. உலக நிகழ்வுகள் குறித்த ஐரோப்பாவின் பார்வை பற்றியும் விவாதிக்கப்பட்டது. பெல்ஜியம் வெளியுறவு மந்திரி ஹட்ஜா லபிப்பை ஜெய்சங்கர் சந்தித்தபோது, இருதரப்பு உறவை மேலும் முன்னெடுத்து செல்வது பற்றி இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உறுதி எடுத்துக்கொண்டனர்.

    அடிக்கடி சந்திக்க சம்மதம் தெரிவித்தனர். பல்கேரியா வெளியுறவு மந்திரி இவான் கொண்டோவுடனான சந்திப்பின்போது, இருதரப்பு உறவு குறித்து பேசப்பட்டது. மாணவர்கள் மீட்புக்கு உதவி ருமேனியா வெளியுறவு மந்திரி போக்டன் அவுரெஸ்குவை ஜெய்சங்கர் சந்தித்தபோது, கடந்த ஆண்டு உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்பதில் ருமேனிய அரசு அளித்த உதவிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். பாதுகாப்பு, எரிசக்தி ஒத்துழைப்பு குறித்தும் பேசினர். சைப்ரஸ் வெளியுறவு மந்திரி கான்ஸ்டன்டினோஸ் காம்போசை சந்தித்த ஜெய்சங்கர், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான தேவை குறித்து ஆலோசித்தார்.

    • நார்வேயில் தரையிறங்கிய ஏவுகணை செலுத்தியை மீட்டெடுக்கும் பணி நடந்து வருகிறது.
    • தவறான பாதையில் சென்றதற்கு பின்னால் உள்ள தொழில்நுட்ப கோளாறு குறித்து விசாரணை தொடங்கப்படுகிறது.

    வடக்கு ஸ்வீடனில் உள்ள எஸ்ரேஞ்ச் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமை அதிகாலை ஸ்வீடன் ஸ்பேஸ் கார்ப் ஏவப்பட்ட ஆராய்ச்சி ராக்கெட் திடீரென பழுதடைந்து அண்டை நாடான நார்வேயில் 15 கிமீ (9.32 மைல்) தொலைவில் தரையிறங்கியது.

    பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் நடத்திய சோதனையில் ராக்கெட் 250 கிமீ உயரத்தை எட்டியதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

    இந்த ஆராய்ச்சி ராக்கெட் மலைகளில் 1,000 மீட்டர் உயரத்திலும், அருகிலுள்ள குடியேற்றத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் தரையிறங்கியதாக ஸ்வீடனர் ஸ்பேஸ் கார்பின் தகவல் தொடர்புத் தலைவர் பிலிப் ஓல்சன் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், " விஷயங்கள் தவறாக நடக்கும்போது அதை சரிசெய்வதற்கான நடைமுறைகள் உள்ளன. இதுதொடர்பாக ஸ்வீடன் மற்றும் நார்வே அரசாங்கங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

    நார்வேயில் தரையிறங்கிய ஆராய்ச்சி ராக்கெட்டில் உள்ள முக்கிய கருவிகளை மீட்டெடுக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ராக்கெட் தவறான பாதையை அடைந்ததற்கு பின்னால் உள்ள தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆராயப்படுகிறது" என்றார்.

    • மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளை தொடர்ந்து பொருளாதாரத்துக்கும் நோபல் பரிசு.
    • வங்கிகள், நிதி நெருக்கடி குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    ஸ்டாக்ஹோம்:

    மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாக், டக்லஸ் டைமண்ட், ஃபிலிப் ஹெச்.டிப்விக் ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    ×