search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    டேவிஸ் கோப்பை டென்னிஸ்- முதல் ஆட்டத்தில் டென்மார்க் வீரரிடம் யுகி பாம்ப்ரி தோல்வி
    X

    டேவிஸ் கோப்பை டென்னிஸ்- முதல் ஆட்டத்தில் டென்மார்க் வீரரிடம் யுகி பாம்ப்ரி தோல்வி

    • அனுபவம் வாய்ந்த டென்மார்க் வீரரின் சர்வீஸ்களை சமாளிக்க, யூகி தீவிரமாக போராடினார்.
    • மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் விளையாடுகிறார்

    ஹில்லராட்:


    டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்-1 சுற்றில் இந்தியா - டென்மார்க் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிகள் டென்மார்க்கின் ஹில்லராட் நகரில் நடைபெற்று வருகின்றன. முதல் நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, உலகின் 9ம் தரநிலை வீரரான ஹோல்கர் ரூனேவை சந்தித்தார்.

    ஆரம்பம் முதலே ரூனேயின் கை ஓங்கியிருந்தது. அனுபவம் வாய்ந்த அவரது சர்வீஸ்களை சமாளிக்க, யூகி தீவிரமாக போராடினார். ஆனாலும் இப்போட்டியில் வெறும் 58 நிமிடங்களில் 2-6, 2-6 என்ற நேர்செட்களில் யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தார். இதன்மூலம் 0-1 என இந்தியா பின்தங்கி உள்ளது.

    மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் விளையாடுகிறார். இந்த போட்டியில் இந்திய வீரர் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதன்பின்னர் மாற்று ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த சுற்றில் இந்தியா தோல்வியடைந்தால் உலக குருப்-2 நிலைக்கு பின்தள்ளப்படும்.

    Next Story
    ×