என் மலர்

    திருப்பத்தூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 19 புதிய மனுதாரர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்
    • போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடந்தது.

    கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 15 மனுதாரர் களை நேரில் அழைத்தும், 19 புதிய மனுதாரர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, அவர்க ளின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கி னார்.

    கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ் பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் சோதனையில் சிக்கினர்
    • 230 பாக்கெட்டுகள் பறிமுதல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நியூடவுன் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதி வேகமாக சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் கடத்தி வந் தது தெரிய வந்தது.

    விசாரணையில் காரில் வந்தவர்கள் ஜமுனாமரத்தூர் பகுதியை சேர்ந்த கோபி (வயது 20), குமரன் (24), மைக்கேல் (20), கதிர்வேல் (20) என்பதும், இவர்கள் கர்நாடக மாநில மது பாக்கெட்டுக் களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்க ளிடம் இருந்து 230 மது பாக் கெட்டுகளை போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்ப திவுசெய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • 3 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி வரை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக குனிச்சி, லக்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட 3 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு அதன் அருகிலேயே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மாற்றுப்பாதையில் செல்ல ஒரே ஒரு இடத்தில் கூட தார் சாலை அமைக்கப்படவில்லை. 3 இடங்களிலுமே மண் நிரப்பப்பட்டு ஜல்லிக்கற்கள் மட்டுமே போடப்பட்டு பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் கரடுமுரடான மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. இந்த மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லும்போது, நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்க வாகனங்களில் செல் வோரின் கண்களில் மண்துகள்கள் விழுந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    மேலும் ஜல்லி கற்களில் இருசக்கர வாகனங்களில் செல் வோர் தவறி கீழே விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை, சம்பந்தப்பட்டதுறை அதிகா ரிகள் சிறு பாலங்கள் அமைக்கும் மூன்று இடங்களிலும் தார் சாலை அமைக்க வேண்டும் அல்லது காலை மாலை இரு வேளையிலும் டிராக்டர் மூலம் தண்ணீர் தெளிக்கவும், மாற் றுப்பாதையில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் வகையில், போலீசார் தொடர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநா தன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது, மேல்குப்பம் பகுதியில் இருந்து மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்தநபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அதேப்பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 52) என்பதும், பாலாறு பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை போலீ சார் கைது செய்து, மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் சோதனை
    • அறிவிப்பு பதாகை வைக்கவும் அறிவுரை

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலை மையில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் வாணியம்பாடி நகராட்சி பணியாளர்கள் இணைந்து உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வாணியம் பாடி நகராட்சிக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது விற்பனைக்கு வைத்திருந்த பான்பராக் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் உள்ள புகையிலை சம்பந்தப் பட்ட விளம்பரங்களை அப்புறப்படுத்தவும், புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பதாகை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    நகராட்சி ஆணையாளர் பொறுப்பு) சங்கர், மண்டல துணை தாசில்தார் விமல் மோகன், நகராட்சி சுகாதார ஆய் வாளர் செந்தில்குமார், சரவணன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், போலீசார், சுகாதார ஆய்வாளர்கள், வாணியம்பாடி நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் கள் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 90 பாக்கெட் பறிமுதல்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கேத்தாண்டப்பட்டி அருகே கள்ளச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பெயரில் நாட்டறம்பள்ளி போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது கேத்தாண்டப்பட்டி அருகே கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த பரத் (வயது 23). வல்லரசு (19) ஆகிய இருவரும் தங்களது வீட்டின் பின்புறம் தலா 45 பாக்கெட் கள்ளச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்தனர்.

    திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடமமிருந்து 90 கள்ள சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திடீரென அமைத்த வேகத்தடையால் விபரீதம்
    • பொதுமக்கள் சாலை மறியல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் லக்கி நாயக்கன்பட்டி அருகே பாலம் வேலை நடைபெறுகிறது. இதனால் அந்த இடத்தில் நேற்று இரவு திடீெரன வேகத்தடை அமைத்தனர். இதையறியாத வாகன ஓட்டிகள் வேகத்தடையில் விபத்தில் சிக்கினர்.

    காக்கங்கரை அருகே மேற்கு பதனவாடி என்ற ஊரைச் சேர்ந்த சூர்யா (வயது 22). லாரி டிரைவர். இரவு 9 மணிக்கு மேற்கு பதனவாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    லக்கி நாயக்கன்பட்டியில் வேகத்தடைய கவனிக்காமல் சென்ற சூர்யா தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனை அறிந்த அவரது தாய் சிவகாமி விபத்து நடந்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரும் தடுப்பில் மோதி காயம் அடைந்தார்.

    போலீசார் சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காயமடைந்த சிவகாமி சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

    இதனையடுத்து திருப்பத்தூர்- தர்மபுரி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விரைந்து வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

    இந்த விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்
    • அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என அறிவுரை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள வாகன சோதனை மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் நேற்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    போலீஸ் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருகிற 20-ந் தேதி கடைசி நாள்
    • கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தகவல்

    திருப்பத்தூர்:

    தமிழகத்தின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ்மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குகலை இளமணி விருது; 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச் சுடர் மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது' வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள் ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவி யம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க் கால் குதிரை, தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக் கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

    தங்கள் சுயவிவர குறிப்பு, புகைப்படம், வயது சான்று, முகவரிச்சான்று (ஆதார் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் இயக்குநர், கலை பண்பாட் உதவி டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் 631502 என்ற முகவரிக்கு வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப் பிக்கலாம்.

    இத்தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரி வித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளை தொடங்குகிறது
    • காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு சேர்க்கை உறுதி செய்யப்படமாட்டாது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை மாணவ, மாண விகள் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது. முதல்நாளில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 2-ந் தேதி பி.காம், சி.ஏ., 3-ந் தேதி மொழிப்பாட பிரிவுகளான பி.ஏ தமிழ், ஆங்கிலம் ஆகிய பாட பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    மேலும் மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து தகவல்களும் http://www.gasctpt.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப் படும். தேர்வு பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் அவர்களுக்கு உரிய தேதியில் சேர்க்கைக்கு உரிய அசல் மற்றும் நகல் சான் றுகளுடன் கல்லூரிக்கு நேரடியாக வரவேண்டும். தேர்வு பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கலந்தாய்விற்கு வராத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் தரவரிசைப்படி நிரப்பப்படுவர்.

    காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு சேர்க்கை உறுதி செய்யப்படமாட்டாது. இத்தகவலை கல்லூரி முதல்வர் பெ.சீனுவாசகுமரன் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீயணைப்பு படை வீரர்கள் பிணத்தை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே கொடும்பம்பள்ளி சாமு கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தருமன் இவரது மனைவி இந்திரா (வயது 55). தருமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    மேலும் இவரது மகன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இந்திரா தனது மருமகளுடன் ஜோலார்பேட்டை அருகே உள்ள குடியனகுப்பம் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இந்திரா கடந்த 28-ந்தேதி தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர் வீட்டில் அவரை தேடி வந்தனர். குடியானகுப்பம் பகுதியில் உள்ள அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று காலை இந்திரா பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் கயிறு கட்டல் கட்டி இறக்கி பிணத்தை மீட்டனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.