என் மலர்

    பிரிட்டன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், முட்டை மற்றும் மைகளை வீசினர். மேலும் புகை குண்டுகளை வீசினர்.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 19-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்தியாவின் பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால்சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூதரகத்தில் இருந்த இந்திய தேசிய கொடியை அகற்றினர்.

    இந்நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு ஏராளமானோர் திரண்டு கோஷம் எழுப்பினர். இதையடுத்து தூதரகத்தில் இருந்து பல அடி தூரத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டனர். அப்பகுதியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூதரகத்துக்குள் யாரும் நுழைந்து விடாதபடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், முட்டை மற்றும் மைகளை வீசினர். மேலும் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, இந்திய தூதரகம் முன்பு போராட்டம் சிறியதாக தொடங்கினாலும் மாலையில் எண்ணிக்கை அதிகரித்தது. சுமார் 2 ஆயிரம் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் தடுப்புகளை உடைக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், மை மற்றும் வண்ண பொடிகளை வீசினர் என்றனர்.

    இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அகற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தூதரக கட்டிடம் முன்பு பெரிய அளவில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.
    • ரபேல் நடால் தற்போது 13-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்

    லண்டன்:

    அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் கைப்பற்றினார்.

    இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

    இந்த தரவரிசை பட்டியலில் கார்லோஸ் அல்காரஸ் முதலிடம் பிடித்துள்ளார். நோவக் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.

    சிட்சிபாஸ் மூன்றாமிடமு, காஸ்பர் ரூட் நான்காம் இடமும், மெத்வதேவ் 5ம் இடமும் பிடித்துள்ளனர்.

    தரவரிசையின் முதல் 10 இடன்களில் இருந்து முதல் முறையாக ரபேல் நடால் வெளியேறியுள்ளார். அவர் தற்போது 13ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • அத்துடன் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அதிகாரிகள் தூதரக வளாகத்தில் புதிய தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.

    இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு தலைநகர் புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வது மற்றும் வழக்கு தொடரும் வகையில் இங்கிலாந்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இங்கிலாந்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் உள்ளது.
    • உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் அந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    அந்த ஹோட்டலில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அந்த ஹோட்டல் மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியது. தகவலறிந்து சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்றன. அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மந்திரி ஆலிவர் டவ்டன் கூறினார்.
    • அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

    லண்டன்:

    அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அதாவது, அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த வரிசையில் பிரிட்டனிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு அலுவலக செல்போன்களில் டிக்டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக பாராளுமன்றத்தில் மந்திரி ஆலிவர் டவ்டன் கூறினார்.

    அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள செயலிகளை மட்டுமே அரசு அலுவலக செல்போன்களில் பயன்படுத்த அனுமதிக்கப்படும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

    சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயைக் கடந்து இங்கிலாந்து கரைகளில் இறங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    அந்தவகையில் கடந்த 2018, 19-ம் ஆண்டுகளில் இந்தியர்களின் சட்ட விரோத குடியேற்றம் இல்லாத நிலையில், 2020-ல் 64 பேர், 2021-ல் 67 பேர் இங்கிலாந்தில் நுழைந்துள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 683 ஆக அதிகரித்து இருக்கிறது.

    இவ்வாறு சட்ட விரோதமாக நுழைவோரை திருப்பி அனுப்பும் வகையில் இந்தியா, பாகிஸ்தான், செர்பியா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகவும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

    சட்ட விரோதமாக நுழைபவர்கள் தஞ்சம் கோரமுடியாது எனக்கூறிய அவர், போலியான மனித உரிமைகளையும் முன்வைக்க முடியாது என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இங்கிலாந்து மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி
    • மேகன் மார்கெலை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    லண்டன்

    இங்கிலாந்து மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, 'டிவி' நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    அதன் பின்னர் அரச குடும்பத்துடன் அரண்மனையில் வசித்து வந்த இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

    அதை தொடர்ந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய அவர்கள் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். ஹாரி-மேகன் தம்பதிக்கு ஆர்ச்சி என்ற 3 வயது மகனும், லிலிபெட் என்ற 1 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகள் இருவரும் அரச குடும்பத்தின் அரச பட்டங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இனி அவர்கள் முறையாக இளவரசர் ஆர்ச்சி, இளவரசி லிலிபெட் என அழைக்கப்படுவார்கள் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

    இதுப்பற்றி பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இங்கிலாந்து அரச பட்டங்களுக்கான விதிகளின்படி, ஆர்ச்சி மற்றும் லிலிபெட் பிறக்கும்போதே தானாக இளவரசர் மற்றும் இளவரசி ஆக்கப்படவில்லை, ஏனெனில் அவர்கள் அப்போது ராணியாக இருந்த 2-ம் எலிசபெத்தின் கொள்ளுப் பேரக்குழந்தைகள் ஆவர். தற்போது அவர்களின் தாத்தா 3-ம் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியவுடன் அவர்கள் இருவரும் அரச பட்டங்களுக்கு உரிமையை பெற்றனர்" என கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக எனது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்றார்.
    • எனக்கு இந்தியாவில் நியாயமான விசாரணை கிடைக்காது என்றார் நிரவ்மோடி .

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் சிக்கிய பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டன் தப்பியோடினார்.

    பணத்தை திருப்பி செலுத்தாததால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வங்கி தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார். லண்டனில் உள்ள வான்ட்ஸ் வொர்த் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அதற்கான செலவுத் தொகையை நிரவ் மோடியே செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து நிரவ் மோடி நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு லண்டனில் உள்ள பாக்கிங்சைட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி மூலம் ஆஜரான நிரவ் மோடி தன்னை நாடு கடத்துவதற்கு எதிரான மேல் முறையீட்டுக்கான செலவு தொகை 150,247 பவுண்டுகள் (ரூ.146 லட்சம்) செலுத்த பணம் இல்லை. என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது .

    எனவே என்னால் பணம் செலுத்த முடியவில்லை என்றார்.

    அப்போது நீதிபதிகள் அவரிடம் சொத்துக்கள் ஏன் முடக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நிரவ்மோடி பதில் அளிக்கையில், எனது பெரும்பாலான சொத்துக்கள் இந்தியாவில் உள்ளன. அங்கு நான் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக எனது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்றார்.

    அப்படியென்றால் அபராதத்தொகையாக மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் (ரூ.9.7 லட்சம்) எப்படி செலுத்திகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிரவ்மோடி கூறுகையில், "நான் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு சிறையில் இருக்கிறேன். எனது முதல் 2 வருடங்களில் கையில் இருந்த நிதி செலவாகிவிட்டது. எனவே கடந்த 2 ஆண்டுகளாக நான் மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் கடன் வாங்கி அபராதம் செலுத்துகிறேன் என்றார்.

    உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என்றால் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ஏன் இந்தியாவிற்கு திரும்பவில்லை என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு நிரவ் மோடி எனக்கு இந்தியாவில் நியாயமான விசாரணை கிடைக்காது என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கும் தருணம் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பது உண்மை.
    • இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த சீன மாணவி சென் யினிங் பட்டமளிப்பு விழாவில் நடந்து கொண்ட விதம் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    படித்தவர்களின் வீடுகளுக்கு செல்லும் போது அங்கு தலையில் குல்லா வைத்து கையில் சுருட்டிய சான்றிதழுடன் காட்சி அளிக்கும் புகைப்படங்களை கட்டாயம் பார்க்கலாம்.

    வீட்டுக்கு வந்தவர்கள் அந்த படம் குறித்து கேட்டால் அவர்கள் கல்லூரி நாட்களை பற்றியும், படித்து முடித்து பட்டம் வாங்கிய தருணம் குறித்தும் மணிக்கணக்காக பேசதொடங்கி விடுவார்கள்.

    அந்த அளவுக்கு மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்களில் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கும் தருணம் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பது உண்மை.

    அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த சீன மாணவி சென் யினிங் பட்டமளிப்பு விழாவில் நடந்து கொண்ட விதம் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    விழா மேடையில் பட்டம் வாங்க மாணவிகள் பலரும் வரிசையில் நின்றனர். சீன மாணவி சென் யினிங் பட்டம் வாங்க செல்லும் நேரம் வந்த போது அவர் திடீரென விழா மேடையில் குங்பூ ஸ்டைலில் குட்டிக்கரணம் அடித்தார்.

    பட்டம் வழங்க இருந்த கல்வியாளர்கள் இதனை கண்டு ஆச்சரியமடைந்தனர். அதோடு அவர்கள் சீன மாணவி சென் யினிங்குக்கு சிரித்தபடி பட்டத்தை வழங்கினர்.

    இந்த காட்சிகளை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றவர்கள் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பல லட்சம் லைக்குகளை அள்ளியது. வீடியோ காட்சிகளை பார்த்து சீன மாணவியை ஏராளமானோர் பாராட்டி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க. நிரந்தரமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து விடலாம் என நினைக்கிறது.
    • ஆனால் அது நடக்காது என்று லண்டனில் பேசிய ராகுல் காந்தி கூறினார்.

    லண்டன்:

    வயநாடு தொகுதி எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசினார். தொடர்ந்து சாத்தம் ஹவுஸ் என அழைக்கப்படும் சிந்தனையாளர் பேரவையில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில் இருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சிதான் பெரும்பாலான காலகட்டத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. பாஜ.க.வின் ஆட்சிக்கு முன்பாக நாங்கள்தான் 10 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினோம். ஆனால், இந்தியாவில் நாம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டோம். நாம்தான் நிரந்தரமாக ஆட்சி செய்வோம் என்று பா.ஜ.க. நம்புகிறது. ஆனால் அது நடக்காது.

    காங்கிரஸ் கட்சி தவிர்த்து அன்னிய ஊடகங்களும், இந்திய ஜனநாயகத்தில் தீவிரமான பிரச்சினைகள் இருப்பதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. எனது செல்போனில் பெகாசஸ் உளவு மென்பொருள் இருந்தது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இது நடக்கவில்லை.

    ஆர்.எஸ்.எஸ்., ஒரு அடிப்படைவாத, பாசிச அமைப்பாக செயல்படுகிறது. அது நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகப் போட்டியின் தன்மையை மாற்றி உள்ளது.

    பத்திரிகைத்துறை, நீதித்துறை, பாராளுமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்து ஜனநாயக அமைப்புகளும் அழுத்தத்தின்கீழ் உள்ளன. அச்சுறுத்தலின் கீழ் இருக்கின்றன. ஒரு வழியில் அல்லது பிற வழியில் கட்டுப்படுத்தப்படுகின்றன.

    இந்தியாவின் 2000 ச.கி.மீ. பகுதியில் சீனா உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் எங்கள் பிரதமர் அங்கு சீன நாட்டினர் இல்லை என்கிறார். அமெரிக்கா உடனான இந்திய உறவை சீனா அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அருணாசல பிரதேசம் மற்றும் லடாக்கில் உள்ள படை வீரர்களின் பின்னணியில் உள்ள அடிப்படை அம்சம், உக்ரைனில் நடந்ததைப் போன்றதுதான். இதை நான் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம் தெரிவித்தேன். அவர் நான் சொன்னதை ஒப்புக்கொள்ளவில்லை. இது ஒரு வேடிக்கையான யோசனை என அவர் நினைக்கிறார் என குறிப்பிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo