என் மலர்
- பாஜக சுவர் விளம்பரப் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
- கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை என்றும் கூறினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்திற்கு பாஜகவினரை சந்திக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது, பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுவர் விளம்பரப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
அப்போது, சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், சிலிண்டர் எரிவாயுவை இறக்குமதி செய்வதால், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டி இருப்பதாகவும், கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை என்றும் கூறினார். மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டி உள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாதததால், சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
- மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது.
- மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசினார். அப்போது அவர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்தி ரேட் கோர்ட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், குஜராத் முன்னாள் மந்திரியுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து அவரது மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப் பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல்முறையீடு செய்வதற்காக அவர் சூரத் செல்கிறார். 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அவர் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.
மேல்முறையீடு மனுவில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்தாகும்.
- காதல் விவகாரம் சம்பந்தமாக நடந்த பேச்சு வார்த்தையில் தகராறு ஏற்பட்டு காருக்குள் வைத்து அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
- சந்திரகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி அடுத்த சந்திரகிரி பிராமண பள்ளியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 33). பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுலோசனா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். நாகராஜன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது காரில் எரிந்த நிலையில் உடல் கருகி பிணமாக கிடந்தார். கார் எரிந்து நிற்பதை கண்ட அந்த பகுதி மக்கள் சந்திரகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கார் நம்பர் மூலம் துப்புதுலக்கினர். அதில் இறந்து கிடந்தது. நாகராஜன் என்பது தெரியவந்தது.
நாகராஜின் தம்பி புருஷோத்தம் இவர் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் ஊருக்கு வந்த நாகராஜை தம்பியின் காதல் விவகாரம் சம்பந்தமாக பேச வேண்டும் என்று இரவில் ஒருவர் போனில் அழைத்துள்ளார். இதனையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற நாகராஜன் வீடு திரும்பவில்லை காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப் பட்டுள்ளார்.
காதல் விவகாரம் சம்பந்தமாக நடந்த பேச்சு வார்த்தையில் தகராறு ஏற்பட்டு காருக்குள் வைத்து அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக புருஷோத்தம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இது தொடர்பாக சந்திரகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மயிலாப்பூரை சுற்றுலாத் துறையும், அறநிலையதுறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலா மையமாக மாற்ற உதவிட வேண்டும்.
- ஆர்.ஏ. புரம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வள்ளீஸ்வரன் தோட்டத்திற்கு கலைஞர் நகர் என்று பெயர் சூட்ட வேண்டும்.
சென்னை:
சட்டசபையில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு மானிய கோரிக்கையின் போது பேசியதாவது:-
மாநகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணத்தை தாயுள்ளதோடு, பெண்களின் உணர்வுகளையும், சுமைகளையும் புரிந்து கொண்டு எந்த மாநிலமும் செய்யாத திட்டத்தை நம் முதல்வர் முன்மாதிரியாக செய்திருக்கிறார் அதுதான் "திராவிட மாடல் ஆட்சி" என்று சொல்லி எனது தொகுதியின் கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறேன்.
கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு கலைஞருக்கு பிடித்த இடம் மெரினா கடற்கரை, மெரினா கடற்கரை ஓரமாக மீனவ குடியிருப்புகளை ஒட்டியுள்ள லூப் சாலைக்கு முத்தமிழ் அறிஞர் பெயரை சூட்ட வேண்டும்.
நிறைவடையும் தருவாயில் உள்ள ஆர்.ஏ. புரம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வள்ளீஸ்வரன் தோட்டத்திற்கு கலைஞர் நகர் என்று பெயர் சூட்ட வேண்டும்.
எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டிடங்கள் பழுதடைந்த காரணத்தினால் மக்களிடம் பேசி 30 மாதங்களில் கட்டி முடித்து தருகிறோம் என்று உறுதியளிக்கிறோம். ஆனால் அது சரியாக பின்பற்றபடவில்லை. காரணம் இன்றைய சூழ்நிலையில் வீட்டு வாடகை அதிக சுமையாக இருக்கிற காரணத்தால் மக்கள் கொந்தளிக்கின்றனர்.
உதாரணம் தேனாம்பேட்டை வன்னியபுரம் காலி செய்து 11 மாதங்கள் ஆகியும் அடிக்கல் நாட்டப்படவில்லை அதேபோல், நாட்டான் தோட்டம், பருவா நகர், ஆண்டிமான்ய தோட் டம், பிள்ளையார் கோயில் தோட்டம், முத்தையாபுரம் போன்ற பகுதிகளில் மக்கள் வீட்டை காலி செய்துதர தயார் நிலையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்திட வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க மயிலாபூருக்கு என்று ஒரு தனிபேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும். மயிலாப்பூரை சுற்றுலாத் துறையும் அறநிலையதுறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலா மையமாக மாற்ற உதவிட வேண்டும்.
மயிலாப்பூரில் உள்ள மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வெங்கடேச அக்ரகாரம் சாலையில் உள்ள பழைய வணிகவளாக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய வணிக வளாகம் மற்றும் மல்ட்டி லவல் கார்பார்க்கிங் கட்டி கொடுத்தால் கோயிலுக்கு வருமானமும், மயிலாப்பூரில் போக்குவரத்து நெரிசலும் குறையும். கால்நடைகள் பராமரிக்க ஒரு தனி இடம் சென்னை மாநகராட்சி அமைத்துதர வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்களின் வாடகையை பல மடங்கு உயர்த்திய காரணத்தால் இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் அதிகமான நிலுவை தொகை கட்ட கூடிய சூழ்நிலை இருக்கிறது. இதற்கு அரசு ஒரு சரியான, சுமூகமான முடிவை ஏற் படுத்தி ஏழை மக்களை காப்பாற்றிட வேண்டுகிறேன்.
மீனவ மக்கள் அதிகமாக வசிக்கும் வாரிய குடியிருப்பு பகுதியில் சிங்கார வேலவரின் மார்பளவு சிலை அமைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
- மது குடிக்க பணம் கேட்டு வாலிபரை அடித்து கொன்ற கும்பல் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
- வீட்டை மாற்றி சென்ற போது மதுகுடிக்க பணம் கொடுக்காததால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லிவாக்கம்:
வில்லிவாக்கம், மூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு மணிகண்டனுக்கு திருமணம் நடை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது இருக்கும் வீட்டில் வசதி குறைவாக இருந்ததால் வில்லிவாக்கம் திருமலை நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு மாறி செல்ல இருந்தார்.
இதற்காக நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டில் உள்ள பொருட்களை மினி லாரியில் மணிகண்டன் ஏற்றினார். அவருக்கு உதவியாக தம்பி பிரபாகரனும் இருந்தார்.
அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை மினிலாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போது அங்கிருந்த 5 வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் மதுகுடிக்க பணம் கொடுக்கும் படி கேட்டனர். இதற்கு மணிகண்டன் மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். மேலும் கல்லாலும் தலையில் ஓங்கி அடித்தனர். இதனை தடுக்க முயன்ற அவரது தம்பி பிரபாகரனையும் மர்ம நபர்கள் கடுமையாக தாக்கினர்.
இதற்குள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். உடனே தாக்குதலில் ஈடபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தலையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஐ.சி.எப். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஐ.சி.எப்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மது குடிக்க பணம் கேட்டு வாலிபரை அடித்து கொன்ற கும்பல் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
இதில் ஈடுபட்டது அதே பகுதியைசேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வீட்டை மாற்றி சென்ற போது மதுகுடிக்க பணம் கொடுக்காததால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது.
- தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும் பயன் படுத்தக்கூடிய ராக்கெட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.
பெங்களூர்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.
பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது.
இந்த நிலையில் தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும் பயன் படுத்தக்கூடிய ராக்கெட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.
செயற்கைகோளை விண்ணில் நிலை நிறுத்த கொண்டு செல்லும் ராக்கெட்டின் பாகம் விண்வெளியில் சுற்றும் அல்லது கடலில் விழும். மேலும் வெடித்து சிதறும் வாய்ப்பும் உள்ளது.
செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட்டை மீண்டும் பூமியில் தரையிறங்கும் ஆய்வில் இஸ்ரோ ஈடுபட்டது. 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வந்த நிலையில் விண்ணில் இருந்து ராக்கெட் பூமியில் தானாக தரையிறங்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ, இந்திய பாதுகாப்புத்துறை, இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து இச்சோதனையை கர்நாடக மாநிலம் சித்ர துர்காவில் உள்ள ஏரோ நாட்டிகல் டெஸ்ட் ரேஞ்ச் மையத்தில் நடத்தப்பட்டு இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் இணைக்கப்பட்ட ராக்கெட், 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் இருந்து விடுவிக்கப்பட்ட ராக்கெட் ஓடுபாதையில் வெற்றிகரமாக தரையிறக்கியது. விஞ்ஞானிகள் நிர்ணயித்த இலக்கின் படி ராக்கெட் தரையிறக்கியது. இதன் மூலம் இச்சோதனை வெற்றி பெற்றது.
செயற்கைக் கோள்களை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்திய பின் ராக்கெட்டை பூமியில் தரையிறக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து உள்ளது.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் மூலம் செலவு குறையும். கால விரயம் தடுக்கப்படும். மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ முந்திய மைக்கல்லை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதுகுறித்து இஸ்ரோ கூறும்போது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனம் என்ற கனவு யதார்த்தத்திற்கு இந்தியா ஒரு படி நெருக்கமாக வருகிறது.
மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஏவுகணைகளை தயாரிப்பது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்து உள்ளது.
சோதனை முடிந்த பிறகு மென்பொருள் தரையிறங்கும் கருவி சரிபார்ப்பு, ஓடு பாதையில் உள்ள உத்தேச இடத்துக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான சென்சார் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- மர்ம நபர்கள் காரில் இருந்த ராஜூஜாவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
- காயம் அடைந்த அவரது நண்பர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் ராஜூஜா. பா.ஜனதா பிரமுகர். தொழில் அதிபராகவும் இருந்தார்.
இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் துர்காபூரில் இருந்து கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தார். பர்தமான் மாவட்டம் சக்திகர் பகுதியில் அவர்களின் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள ஒரு கடைக்கு அருகே நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென்று ராஜூஜா சென்ற காரை வழிமறித்தனர். உடனே கார் நிறுத்தப்பட்டது.
உடனடியாக மர்ம நபர்கள் காரில் இருந்த ராஜூஜாவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராஜூஜா பலத்த காயம் அடைந்தார். மேலும் துப்பாக்கி சூட்டில் அவரது நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
உயிருக்கு போராடிய ராஜூஜா மற்றும் அவரது நண்பர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ராஜூ ஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்த அவரது நண்பர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தை பர்த மான் போலீஸ் சூப்பிரண்டு கம்னாசிங் சென் பார்வையிட்டு விசாரணை மேற் கொண்டார். ராஜூஜாவை கொன்ற மர்மநபர்கள் யார்? அவர் எதற்காக கொல்லப் பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. சம்பவம் நடந்த உடனேயே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சி காலத்தில் ராஜூஜா சட்ட விரோதமாக நிலக்கரி வர்த்தகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அதன்பிறகு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின்போது அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்ட சபை தேர்தலுக்கு முன்பு அவர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
- 15 நிமிடத்தில் சூப்பரான சுவையான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
சீஸ் துருவல் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
ஓரிகானோ - அரை டீஸ்பூன்
சோள மாவு - 3 டீஸ்பூன்
பிரெட் தூள் - 2 டீஸ்பூன் + தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
மிக்சியில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள், தனி மிளகாய் தூள், சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ, பிரெட் தூள் 2 டீஸ்பூன், வெண்ணெய், சோயா சாஸ் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கி கொத்தமல்லியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
பிரெட் தூளை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.
சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி மெல்லிய பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவில் அதில் உருண்டையை வைத்து மெலிதாக பூரி போல் தட்டவும். பின்னர் அதன் நடுவில் சிறிதளவு சீஸை வைத்து நன்றாக மூடி சதுரமான வடிவில் செய்யவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த பைட்ஸை சோள மாவு கரைசலில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
இப்போது சூப்பரான சிக்கன் சீஸ் பைட்ஸ் ரெடி.
- புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர்ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.
- மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். மாவட்ட நிர்வாகம் சார்பில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைக்குறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
- நடுவானில் பறந்த போது பலூனில் திடீரென்று தீப்பிடித்தது.
- ராட்சத பலூனில் பயணிகள் அலறினார்கள்.
மெக்சிகோவில் உள்ள தியோதிஹுவான் தொல் பொருள் தளத்தில் இருந்து ராட்சத பறக்கும் பலூன் ஒன்று புறப்பட்டது. அதில் 3 பேர் பயணம் செய்தனர். நடுவானில் பறந்த போது பலூனில் திடீரென்று தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் ராட்சத பலூனில் பயணிகள் அலறினார்கள். அப்போது 39 வயது பெண், 50 வயது ஆண் ஆகிய 2 பேர் பலூனில் இருந்து கீழே குதித்தனர். இதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஒரு சிறுவனுக்கு முகத்தில் தீக்காயமும், வலது தொடையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.