search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மோட்சம்   தரும்  பிரத்தியங்கரா தேவி
    X

    மோட்சம் தரும் பிரத்தியங்கரா தேவி

    • பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்.
    • எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும்.

    நரசிம்மருக்கும், சரபருக்கும் இடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்ட போது கண்ட பேருண்டம் என்ற பட்சியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார். கண்ட பேருண்டம் சரபப் பட்சிக்கு எதிரியாகும்.

    சரபருக்கு கோபத்தில் அவர் நெற்றிக்கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள்.

    இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுந்தி விட்டாள்.

    சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும், சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவிகள்.

    இவர்கள் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர்.

    பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியே தான்.

    சரபமூர்த்தி நரசிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக "உக்ரா" என்று அழைக்கப்படுகிறாள்.

    பிரத்தியங்கிராவுக்கு ஆயிரம் முகங்கள். இம்முகம் எல்லாம் சிங்க முகம் போலவே இருக்கும்.

    இரண்டாயிரம் கைகள், பெரிய சரீரம், கரியநிறம், நீள ஆடை இப்படி தியானித்து உபாசித்தால் நாட்டுக்கோ, மக்களுக்கோ சத்ரு பயம் ஏற்படாது.

    தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்தியங்கிரா தான்.

    இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்று விட்டால், அந்த ராமலட்சுமணர்கள் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித் நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான்.

    தன்னை உபாசிப்பவன் நல்லவனா, கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள்.

    பிரத்தியங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்து விட்டு மறுவேலை பார்த்தார்.

    பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்.

    எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும்.

    Next Story
    ×