search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வீடுகளில்  லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க...
    X

    வீடுகளில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க...

    • செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும்.
    • வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    அதிகாலையில் எழுந்ததும் வீட்டின் பின்பக்க வாசலை திறந்து வைத்து, அதன்பின் தலைவாசலைத் திறக்க வேண்டும்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும்.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவம் விலகி பாக்கியங்களும், பொருளும் சந்தோஷமும் பெருகும்.

    பவுர்ணமி தோறும் மாலையில் குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து பால் பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து வணங்கிய பின்னரே, இரவு உணவு உட்கொள்ள வேண்டும்.

    வைரம் வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும்.

    ஒருவர் தனக்கு சீராக அளிக்கப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களை தன் காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கு கூட அன்பளிப்பாக கொடுக்க கூடாது. தன் காலத்திற்கு பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும்.

    Next Story
    ×