search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் தொடரில் இருந்து பிராவோ ஓய்வு...சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்
    X

    டுவைன் பிராவோ

    ஐபிஎல் தொடரில் இருந்து பிராவோ ஓய்வு...சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்

    • எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நாள்.
    • பயிற்சியாளர் தொப்பியை அணிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த மேற்கு இந்திய தீவை தேர்ந்த ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ, நசென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், தமது ஓய்வு முடிவினை அவர் அறிவித்து உள்ளார். இதையடுத்து சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள பிராவோ டி20 லீக்கில் 15 ஆண்டுகள் விளையாடிய பிறகு நான் இனி ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டேன் என்று இன்று அறிவிக்கிறேன். இது ஒரு சிறந்த பயணம், நிறைய ஏற்ற தாழ்வுகளுடன் இருந்தது. அதே நேரத்தில், நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மற்றும் முக்கியமாக எனது ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நாள் என்பதை நான் அறிவேன்.

    ஆனால் அதே நேரத்தில் பயிற்சியாளர் தொப்பியை அணிய ஆவலுடன் காத்திருக்கிறேன் என்பதை எனது ரசிகர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். சென்னை அணியில் இளம் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த தலைமுறை சாம்பியன்களுக்கு உதவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் எனது அழைப்பு இப்போது உள்ளது. பல ஆண்டுகளாக அனைத்து ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 61 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை பிராவோ வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×