search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • வெயில் காலத்தில் வறுத்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்கலாம்.
    • பழச்சாறுகளை எடுத்து கொள்வது வியர்க்குரு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

    கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது வியர்க்குரு பிரச்சனையில் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை உள்ளது. வியர்குரு அதிகாமாக வருவதற்கு காரணம் என்னவென்றால் வியர்வை காரணமாக வரும் பாக்டீரியல் கிருமியின் அதிகப்படியான உற்பத்தி தான் இந்த வியர்குரு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    இந்த வியர்குருவில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் தினமும் மூன்று நேரம் குளியல் என்ற நடைமுறையை இந்த காலத்தில் கொண்டு வரவேண்டும். இவ்வாறு மூன்று வேலை குளிக்கும் போதும் நமது உடலில் வியர்வையால் ஏற்படும் பாக்டீரியாவில் இருந்து விடுபடலாம்.

    அதையும் தாண்டி உங்களுக்கு வியர்குரு வந்தால் நல்ல ஆன்டி பாக்டீரியல் பவுடரையும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு மிகவும் லேசான காட்டன் உடைகளை பயன்படுத்துதல் நல்லது.

    அதிக படியான இந்த வெயில் காலத்தில் வறுத்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்கலாம். அதிக கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் வியர்வை பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

    அதிகப்படியான பழம், பழச்சாறுகளை எடுத்து கொள்வது வியர்குரு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

    • மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
    • கோபம் வரும் வேளையில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது அமைதி காத்திடு என்பதுதான்.

    வேலையில் ஏற்படும் சிரமங்கள், குடும்பத்தில் ஏற்படும் ஒரு சில மனக்கசப்புகள், படிப்பிலும் மற்ற நண்பர்களிடம் ஏற்படும் சிறு - சிறு சண்டைகள், தற்போதைய வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள் என கூறி கொண்டே போகலாம். இந்த மாதிரியான காரணங்களால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கோபம் என்பது சாதாரணமாக வந்து விடுகிறது.

    சில நேரங்களில் கோபம் வந்தால், என்ன செய்கிறோம் என்பதை மறந்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு மாரடைப்பு வருகிறது. அதில், சிலர் மரணமும் அடைகின்றனர்.

    இதுபோன்ற உச்சக்கட்ட கோபத்தின் வெளிப்பாட்டால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


    கொலம்பியா பல்கலைக்கழகம், யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் நியூயார்க்கில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூட்டுக் குழு, சில நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமான, உணர்ச்சிகரமான அனுபவங்கள், இருதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை என்பது குறித்து ஆய்வுகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கின.

    இந்த ஆய்வில் கோபத்தின் காரணமாக பதட்டமான நிலை, சோகமான உணர்வுகளால் இதய நோய் அதிகமாக உருவாகும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது.


    அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் கோபத்தின் சிறிய வெடிப்புகள் கூட இருதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தூண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது, 8 நிமிட கோபம் மாரடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது தான். எனவே, கோபம் வரும் வேளையில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது அமைதி காத்திடு என்பதுதான்.

    • சரும எரிச்சல், அசிடிட்டி போன்ற நிலைகளையும் குறைக்கிறது.
    • ரோஜா இதழ்களை பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும்.

    ரோஜா என்றாலே பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அதில் மருத்துவ குணங்கள் இருக்கு என்றால் எல்லோருக்கும் பிடிக்காமல் போகுமா என்ன? ரோஜா இதழ்கள் பார்ப்பதற்கு அழகாகவும், கண்களை கவரும் வண்ணங்களிலும் இருக்கிறது. இதில் மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம்.

    ரோஜா பூக்கள் குளிர்ச்சி தன்மை உடையவை. ரோஜா இதழ்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை தனித்து சமநிலைப்படுத்துகிறது. இது தவிர சரும எரிச்சல், அசிடிட்டி போன்ற நிலைகளையும் குறைக்கிறது.

    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும். மேலும், உடல் எப்போதும் சோம்பேறியாகவும் மந்தமாகவும் இருக்கும். எனவே, அடிக்கடி காய்ச்சல் வரும் நபர்களுக்கு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ரோஜா இதழ்களை ஈட்டு பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


    பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை போக்குவதற்கு ரோஜா இதழ்கள் மருந்ததாக பயன்படுகிறது. எனவே, ரோஜா இதழ்களை பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் உடல் இளமையாகவும் இருக்கும்.

    ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து கெட்டியான தயிரில் கலந்து காலை வேளையில் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.

    • பெண்களுக்கு கருமுட்டை சேகரிப்பு முறை வரப்பிரசாதமாக உள்ளது.
    • கருமுட்டை குறிப்பிட்ட வெப்பநிலையில் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    கரு முட்டைகளை உறையவைப்பது என்றால் என்ன?

    கரு உறைய வைத்தல் என்பது அதி நவீன தொழில்நுட்பங்களால் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறை ஆகும். இதில் 2 முறைகள் பராமரிக்கப்படுகிறது. ஒன்று பெண்ணின் உடலில் இருந்து கருமுட்டைகளை எடுத்து சேமித்து வைக்கும் முறை.

    மற்றொன்று கருமுட்டைகளை விந்தணுவுடன் சேர்த்து கருவாக உறுமாறி 3 அல்லது 5 நாட்களுக்கு பிறகு எம்ரியோ ஃப்ரீசிங் அதாவது கரு உறைய வைத்தல் முறை மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.

    இந்த முறையில் கருமுட்டைகளை மட்டுமே எடுத்து சேமித்து வைக்கும் போது அது தரமான முட்டைகள் தானா என்ற உத்திரவாதம் அளிக்க முடியாது. சில நேரங்களில் கருக்கலைந்துபோக வாய்ப்புகள் அதிகம். எனவே தான் இந்த கருமுட்டைகளை எம்ரியோவாக மாற்றி தான் சேமித்து வைப்பது தான் நல்லது.

    அப்படி உருமாற்றி உள்ள கருவை திரவ நைட்ரஜை பயன்படுத்தி குடுவைக்குள் செலுத்தி குறிப்பிட்ட வெப்பநிலையில் பல வருடங்களுக்கு சேமித்து வைக்கப்படுகிறது. இதனை தேவைப்படும் போது எடுத்து பெண்ணின் கருப்பையில் செலுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

    பொதுவாகவே குழந்தைகளை தாமதமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டையை, மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உறைய வைக்கலாம். அறிவியல்பூர்வமான 'ஊசைட் கிரையோபிரிசர்வேஷன்' என்பது இதன் பெயர். இதனை கருமுட்டைகளை உறைய வைக்கும் முறை என்று குறிப்பிடப்படுகிறது.

    இதில் முட்டைகளை உறையவைக்க, ஒரு பெண்ணுக்கு மருந்துகள் செலுத்தப்பட்டு அவருடைய ஓவரீஸ் தூண்டி விடப்படும். இதன் மூலமாக குறிப்பிட்ட அளவிலான முட்டைகள் ஒரு பெண்ணின் கருப்பையில் உருவாகும். அவை கருப்பையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட வெப்பநிலையில் உறைய வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.

    ஒரு பெண்ணோ அல்லது ஒரு தம்பதியோ இப்போது எனக்கு குழந்தை வேண்டாம், நான் தேவைப்படும் பொழுது இந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறுபவர்கள் அவர்கள் விரும்பும் பொழுது உறைய வைக்கப்பட்ட கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற இந்த முறை உதவியாக இருக்கும்.

    எனவேதான் பல நடிகைகளும் தங்களுடைய 30 வயதில் கருமுட்டைகளை உறைய வைக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான இளம்பெண்கள் தமக்கு வசதியான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக கருமுட்டைகளை உறைகுளிர் பெட்டிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

     

    கரு முட்டைகளை எப்படி உறையவைப்பது?

    மாதவிடாய் காலத்தின்போது, பொதுவாக ஒரு கரு முட்டை உருவாவதுண்டு. பல கரு முட்டைகள் உருவாவதற்கு பெண்களுக்கு ஊசி வழியாக சுரப்பிநீர் செலுத்தப்படும்.

    கரு முட்டைகளை அகற்ற, அல்ட்ரா சவுண்டு கருவியைக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    தரம் மிகுந்த கரு முட்டைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க, அந்த நடைமுறை பல முறை தொடரலாம். அதன்பிறகு கரு முட்டைகள் பின்னர் உறையவைக்கப்படும்.

    நடைமுறையில் சில பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.

    யாரெல்லாம் எக் ஃப்ரீசிங் முறையை பயன்படுத்தலாம்.

     இப்போது மக்கள் பல்வேறு காரணங்களுக்காக "எக் ஃப்ரீசிங்" எனப்படும் கருமுட்டை உறையவைத்தல் முறையை விரும்புகின்றனர்.

    உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் பெண்களுக்கும், உடல் நலத்தில் ஏதேனும் குறைபாடோ அல்லது இளம்வயது வாழ்க்கையை நன்றாக அனுபவித்துவிட்டு நடுத்தர வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு கருமுட்டை சேகரிப்பு முறை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    சேமித்து வைக்கப்படும் இந்த கருமுட்டை இயற்கையாக உருவாகும் கருமுட்டையை போலவே அதே தரத்துடன் இருக்கும் எனவும், 10 வருடங்கள் வரை இதனை சேமித்து வைக்க முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பெண்ணிற்கு புற்றுநோயோ அல்லது புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த கருமுட்டை உறைய வைக்கும் முறையில் முறையில் தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைக்கலாம்.

    ஏனெனில் புற்று நோய்க்காக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி ஆகிய சிகிச்சை முறைகள் பெண்ணின் கருப்பையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது அவர்கள் கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்சினையை உண்டாக்கலாம்.

    எனவே புற்று நோய்க்கான சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அந்த பெண்ணினுடைய கருப்பையில் இருந்து கருமுட்டையை எடுத்து, ஆய்வகத்தில் சேமித்து வைத்து விட வேண்டும்.

    எதிர்காலத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முடிந்த பின்பு அல்லது தாம் விரும்பும் நேரத்திலும் கருமுட்டையை கருத்தரிக்க வைத்து குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    கருத்தரிக்க விரும்பும் பெண் ஐவிஎஃப் எனப்படும் முறையில் குழந்தை பெற விரும்பினால், இந்த கருமுட்டை உறைய வைத்து சேமிக்கும் முறையைபயன்படுத்தி கொள்ளலாம்.

    தன்னுடைய ஆண் துணையிடம் சரியான அளவிலோ அல்லது தரமான உயிரணுக்கள் இல்லை என்றாலோ பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டையை சேமித்து வைத்துக்கொண்டு பிறகு ஆய்வகத்தில் பரிசோதனை செய்து தரமுள்ள உயிரணுக்களை கருமுட்டையில் செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    கருத்தரிக்க வைக்கப்பட்ட முட்டையை மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி இயற்கையான முறையில் குழந்தை பெற வைக்க முடியும்.

    மருத்துவ காரணங்கள் மட்டுமின்றி வாழ்வியல் ரீதியாகவும் பிற சமூக காரணங்களுக்காகவும் சிலர் கருமுட்டையை சேமித்து வைத்து விரும்புவர்.

    உதாரணத்திற்கு தன்னுடைய தொழிலில் நன்றாக முன்னேற்றம் அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும், இளம் வயது வாழ்க்கை நன்றாக அனுபவித்து பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும் அல்லது வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பிறகு நிதி ரீதியாக வலிமையான நிலையை அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கும் இந்த கருமுட்டையை சேமித்து வைக்கும் முறையை பின்பற்றலாம்.

    அவர்களின் கருப்பையில் இருந்து சேமித்து வைக்கப்படும் கருமுட்டை பின்வரும் காலங்களில் அவர்கள் விரும்பும் நேரத்தில் கருவூட்டல் செய்யப்பட்டு, அந்த பெண் விரும்பினால் மீண்டும் அவர்களுடைய கருப்பைக்குள்ளேயே செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    பெண்ணின் கருவணுவகத்தில் இருந்து ஒரு கரு முட்டையை எடுத்து, அவளுடைய கணவனின் விந்தணுவை நுண்அறுவை முறையில் அந்த கரு முட்டைக்குள் புகுத்தி அதை சினைப்படுத்தும் உத்தி பல ஆண்டுகளாகவே கையாளப்பட்டுவருகிறது.

    அந்த கருவை ஒரு சோதனைக் குழாயில் சில நாட்களுக்கு வளரவிட்ட பின், அதை அதே பெண்ணின் கருப்பைக்குள் பதித்துவிட்டால், பத்து மாதம் கழித்து முழுக் குழந்தையாக வெளிப்படும்.

    பெண்களில் இருந்து பெறப்படும் கருமுட்டையானது அவர்களின் வயது மற்றும் உடல் நிலையை பொறுத்து கருமுட்டையின் தரமும் மாறுபடும். எனவே இப்படி கருமுட்டை சேகரிக்க விரும்பும் பெண்கள் இளம் வயதிலேயே கருமுட்டையை உறைய வைத்து சேமித்து வைக்க வேண்டும்.

    • ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசை.
    • உடலை ஸ்லிம்மாக இருக்க வைக்கும் உணவுகள்.

    ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசை. எத்தனை மணி நேரம் ஜிம்மில் நேரம் செலவழித்தாலும், வீட்டுக்கு வந்தவுடன் பசிக்கு தேவையான உணவை உடனே அள்ளி இரைத்துக் கொள்கிறோம். எந்தெந்த உணவுகள் உடலில் கொழுப்பையோ, அதிக எடையையோ சேர்க்காது என்பதை தெரிந்து கொண்டால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும். ஸ்லிம்மாக இருக்க வைக்கும் சில உணவுகள் இதோ...

     பாதாம்

    பாதாமில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான கொழுப்பைத் தரும். தேவையில்லாத கொழுப்பை உடலில் சேர விடாது. புரதம், வைட்டமின்-இ, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக சாப்பிடலாம். இரவில் ஊறவைத்த பாதாமை தோல் உரித்து மறுநாள் சாப்பிடுவது நல்லது. ஒருநாளைக்கு ஐந்து பாதாம்களுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

     பசி உணர்வை போக்கும் `ஆப்பிள்'

    ஆப்பிளில் உள்ள பெப்டின், மெதுவாக செரிமானமாக உதவும். வயிறு நிறைந்த உணர்வைத் தரும். வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பசியின்மை பிரச்சினையை போக்கும். வாரத்தில் மூன்று நாட்கள், ஆப்பிளை சாப்பிடலாம்.

     ஆற்றல் தரும் 'ப்ரோக்கோலி'

    புற்றுநோயை எதிர்க்கக் கூடியது, ஆரம்ப கட்டத்தில் உள்ள மார்பகப் புற்றுநோயை தடுக்கும் வல்லமை பெற்றது. நூறு கிராம் ப்ரோக்கோலியில், 30 கலோரிகள் கிடைக்கும். இதனுடன் கால்சியம், நார்ச்சத்து கிடைப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

     கலோரிகளை குறைக்கும் `கேரட்'

    நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பசித்த நேரத்தில் சாப்பிட பசியும் போகும். தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும். கலோரிகளை எரிக்கும் துரித உணவாக இருக்கும். இதில் உள்ள பீட்டா கரோட்டீன் பார்வை திறனை கூர்மையாக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

     எடையை பராமரிக்கும் `அத்தி'

    புதிதாக பறித்த அத்தியில் அதிகளவு நார்ச்சத்து இருக்கும். செரிக்கும் போது ரத்தத்தில் மெதுவாக சர்க்கரையின் அளவு சேரும். இதனால் உடல் எடையும் அதிகரிக்காது. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதால் அத்திப்பழம் அல்லது ஜூசாக அடிக்கடி பருகலாம்.

    • கோடைகாலத்தில் உஷ்ணமும் வியர்வையும் உடலை இயல்பாகவே பலவீனப்படும்.
    • 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    கோடைகாலம் என்பது இளவேனிற், முதுவேனிற் காலங்களையே குறிக்கும். சித்திரை, வைகாசி மாதங்கள் இளவேனிற் காலம் என்றும், ஆனி, ஆடி மாதங்கள் முதுவேனிற் காலம் என்றும் அழைக்கப்படும்.

    ஆனால் தற்சமயம், பின்பனி காலமாகிய மாசி, பங்குனி மாதங்களிலேயே வெயில் வறுத்தெடுத்து வியர்வைத் துளி ஆவியாகும் அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் பாடாய்படுத்துகிறது.

    கோடைகாலத்தில் ஏற்படும் உஷ்ணமும் வியர்வையும் நம் உடலை இயல்பாகவே பலவீனப்படுத்துகின்றது. கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பல்வேறு பாதிப்புகள், நோய்களை நாம் சந்திக்கிறோம்.

    இந்த நோய்களுக்கு இயற்கையான முறையில் நமது வீடுகளில் உள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தியும், எளிய சித்த மருந்துகளை பயன்படுத்தியும் தீர்வு காணலாம்.

    நம் உடலின் சராசரி வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட். கோடைகாலத்தில் வெப்பம் 100 டிகிரியை தாண்டும். சில இடங்களில் வெப்ப அலை கடுமையாக வீசும். அப்போது வெயில் அளவு 106 முதல் 112 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கும்.

    இது போன்ற சூழ்நிலையில் உடல் வெப்பம் அதிகரித்து உடலில் நீர்ச் சத்து குறைந்து களைப்பு, மயக்கம் வரலாம். வெப்ப தாக்குதல் அதிகமாகும் போது ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதம் தாக்கும் ஆபத்து உள்ளது. அதுபோன்ற நிலையில் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாய் முடியலாம். எனவே இதில் இருந்து பாதுகாக்க கவனமாக இருக்க வேண்டும்.

    கோடைகால நோய்கள்

    கோடைகாலத்தில் டைபாய்டு, மஞ்சள் காமாலை, அமீபியாசிஸ், அம்மை போன்ற நோய்கள் பரவும். இயற்கையிலேயே கோடைகாலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உடல் வன்மை குறைந்து காணப்படும். ஆகையால் தான் மாசி முதல் ஆடி வரையுள்ள காலம் `ஆதாந காலம்' என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது.

    நாம் பருகும் நீரும், உண்ணும் உணவும் சுத்தமானதாக இருக்க வேண்டும். 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குடிக்கும் நீரை கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்து பருகலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோம்புத் தண்ணீர், சீரகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

     வியர்க்குரு:

    கோடை காலத்தில் தான் வியர்வை சுரப்பிகளில் அழுக்குகள் சேர்ந்து வியர்க்குருக்கள் தோன்றும். அதிகப்படியான வியர்வை பிசுபிசுப்பால் சில கிருமிகள் வியர்வையுடன் சேர்ந்து தேமல், படை, தினவு போன்ற சரும தொற்றுகளை ஏற்படுத்தும்.

    மருந்து:

    சிறிதளவு அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை அடிக்கடி தோலின் மீது பூசி பயன்படுத்த வேண்டும்.

     நலங்கு மாவு:

    குளிப்பதற்கு நலங்கு மாவு பயன்படுத்தலாம். நலங்கு மாவு என்பது வெட்டிவேர், விலாமிச்சுவேர், கோரைக்கிழங்கு, கிச்சிலி கிழங்கு, பாசிப்பயறு, கார்போகரிசி, சந்தனம் இவைகளை சமஅளவில் எடுத்து பொடித்த பொடியாகும். இதை சோப்பிற்கு பதிலாக உடலில் தேய்த்து குளித்து வரவேண்டும். இதனால் தேமல், படை, தினவு, தோல் வறட்சி இவைகள் நீங்கி தோல் பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் காணப்படும்.

    அதிகப்படியான வியர்வைக்கு:

    உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை, தோலின் வியர்வை, வியர்வை நாற்றம் அதிகம் உள்ளவர்கள் ஆவாரம்பூ, மகிழம்பூ இவை இரண்டையும் டீ போல போட்டு குடித்தும், வெளிப்பூச்சாக ஆவாரம்பூ, மகிழம்பூ, கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை இவைகளை சமஅளவில் அரைத்து தேய்த்து குளித்தும் வரலாம்.

    தலை அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல்:

    வெயில் காலத்தில் பிரத்தியேகமாக ஏற்படும் தலை அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் இவைகளை நீக்க கடுக்காய்த் தோல், நெல்லிவற்றல், மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து இவைகளை சமஅளவு எடுத்து பொடித்து பசும்பாலில் காய்ச்சி குளிப்பதற்கு 15 நிமிடம் முன்பாக தலையில் நன்றாக தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணிந்து கண்களுக்கும் நல்ல குளிர்ச்சி உண்டாகும்.

    சிறுநீரகக் கற்கள்:

    போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருத்தல், வெயிலில் அலைதல், அசைவ உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுதல் இவைகளால் உணவில் உள்ள அதிகப்படியான கால்சியம், ஆக்சலேட், பாஸ்பரஸ் போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பாதையில் தேங்கி கற்களாக உருவாகின்றது. மேலும் சிறுநீரகத் தொற்றினாலும் கற்கள் உருவாகும். சிறுநீரை அடக்காமல் கழித்து விடவேண்டும்.

    வெட்டிவேர், நன்னாரி வேர் கலந்த தண்ணீர் குடிக்கலாம். சுரைக்காய், வாழைத்தண்டு, சவ்சவ், முள்ளங்கி, பீர்க்கங்காய், எலுமிச்சம்பழம், இளநீர், பீன்ஸ் இவைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சிறுகன்பீளை செடி, நெருஞ்சில் விதை இவைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

     சின்னம்மை:

    கோடைகாலத்தில் காணப்படும் தொற்றுகளில் முதன்மையானது சின்னம்மை. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடர்பு, காற்று மூலமாக எளிதில் தொற்றும் நோய். முதல் அறிகுறியாக காய்ச்சல், உடல்வலி, கொப்புளங்களை ஏற்படுத்தும்.

    கொப்புளங்களை நகங்களால் கீறவோ, கிள்ளவோ கூடாது. ஒரு வாரத்தில் தானாகவே மறைந்து விடும். வேப்பிலை, வேப்பிலை தளிரில் படுக்க வைக்க வேண்டும். வேப்பிலை, மஞ்சள் அரைத்த நீரால் உடலைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

    சீரகம், கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்த நீரை அடிக்கடி குடித்து வரவும். நுங்கு, இளநீர், பதனீர், தர்ப்பூசணி, கிர்ணி, முலாம்பழம், மோர், சின்ன வெங்காயம், கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற உணவுகளை அடிக்கடி எடுக்க வேண்டும்.

    தசைப்பிடிப்பு வலிகள்:

    கோடைகாலத்தில் ஏற்படும் அதிவியர்வை, நீரிழப்பு, தொற்று நோய்களான வாந்தி, வயிற்றுப்போக்கு முதலியவற்றால் உடலில் உள்ள பொட்டாசியம் அளவு குறையும். உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு பொட்டாசியம் அவசியமான ஒன்று. இது குறைந்தால் உடல் களைப்படைந்து தசைகள் இழுத்துக் கொள்ளும். சில நேரங்களில் கால் மூட்டுகள் வலுவிழந்து நடக்க முடியாத நிலை கூட ஏற்படும்.

    இதைத் தவிர்க்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளான இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, திராட்சை, வாழைப்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கோடை காலத்தில் சூரியக் கதிர்களில் இருந்து வரும் புறஊதாக் கதிர்களில் ஒருவகை தோலின் ஆழம் வரை ஊடுருவி செல்லக் கூடியது. இதனால் ஒவ்வாமை, தோல் சுருக்கங்கள் மற்றும் இளவயதிலேயே வயதான தோற்றம் போன்றவைகளை ஏற்படுத்தும்.

    மற்றொரு வகை கதிர்கள் தோலின் மேற்பகுதியை ஊடுருவி செல்லக் கூடியது. இவை தோலின் நிறமிச் செல்களை பாதித்து மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உடல் கருநிறம் அடைகின்றது.

    இதை தவிர்க்க முகம், உதடுகளில் வெண்ணெய் பூசிக்கொள்ளலாம். உடலில் தேங்காய் எண்ணெய் தேய்த்து கொள்ளலாம். புற ஊதாக்கதிர்கள் உடலை தாக்காதவாறு துணிகளால் உடலை மூடிக் கொள்ளலாம்.

     நீர்க்கடுப்பு-சூடு பிடித்தல்

    கோடையில் நம் உடலில் நீரின் அளவு குறைவதால், வெளியேறும் சிறுநீரின் அளவும் குறைகின்றது. தினமும் 3 முதல் 4 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். இளநீர், நுங்கு, எலுமிச்சை, நன்னாரி சர்பத், முலாம் பழம், தர்ப்பூசணி பழம், வெள்ளரி போன்ற நீர் சத்துள்ள பழங்கள் சாப்பிட வேண்டும்.

    எலுமிச்சைச்சாறு, பனங்கருப்பட்டி, கொடம்புளி, சுக்குப்பொடி, ஏலப்பொடி, தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படும் `பானகம்' உடலுக்கு குளர்ச்சியைத் தரும். இது நீர்க்கடுப்புக்கு அருமருந்தாகும். எலுமிச்சை, கொடம்புளி, புளி, அன்னாசி, மாதுளை போன்ற பல வகையான பானகங்களை கோடைகாலத்தில் குடிக்கலாம்.

    • உடற்பயிற்சி செய்வதையோ, கடுமையான வேலை செய்வதையோ தவிருங்கள்.
    • வியர்வை ஆவியாக மாறுவதற்கு ஏற்ப பருத்தியாலான ஆடைகளை அணியுங்கள்.

    அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. நாட்டின் பல நகரங்கள் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை சர்வ சாதாரணமாக எட்டிப்பிடித்துவிட்டன. இன்னும் அச்சுறுத்தும் வகையில் வெப்ப அலையும் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. வெப்ப அலை என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? அது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

    வெப்ப அலை ஏன் ஏற்படுகிறது?

    வெப்பநிலை அதிகரிக்கும் சமயங்களில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு தொடர்ந்து காற்றை அழுத்தித் தள்ளும் செயல்முறை நடக்கும். அப்படி காற்று ஒரே பகுதியில் குவிந்து காற்றழுத்தம் அதிகரிக்கும்போது மேகங்கள் உருவாவது கட்டுப்படுத்தப்படும். வானம் நீல நிறத்தில் தெளிவாக காணப்படும்.

    அப்போது வானின் மேற்பரப்பில் வெப்பம் பரவி வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கும். இப்படி காற்றின் வடிவங்களில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றம் குறிப்பிட்ட பகுதிக்கு வெப்பமான காற்றை கொண்டு வரக்கூடும். அத்துடன் காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலையும் இணைந்து வெப்ப அலைக்கு வித்திடுகின்றன.

    எங்கு வெப்பநிலை அதிகமாகும்?

    பொதுவாகவே இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கும். இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சத்தீஸ்கார், மத்தியபிரதேசம், குஜராத், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் சராசரி வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவும்.

    வெப்ப அலை என்றால் என்ன?

    பொதுவாக இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் கோடை காலங்களில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பநிலை உயருவதைத்தான் வெப்ப அலை என்று குறிப்பிடுகிறார்கள். பொதுவாக வெப்ப அலை மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் ஏற்படும்.

    சில சமயம் ஜூலை மாதம் வரை நீடிக்கும். இயல்பாக இருக்கும் வெப்பநிலையை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் அதனை வெப்ப அலை என்று வரையறை செய்கிறார்கள். அதிலும் சமவெளி பகுதியில் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகவும், கடலோர பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவும், மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியசுக்கு கூடுதலாகவும் வெப்பநிலை உயர்ந்தால் அங்கு வெப்ப அலை வீசுவதாக கணக்கிடப்படுகிறது.

    எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்?

    வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும்போது நீரிழப்பு, சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு, வியர்வை, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகள் எற்படும். உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அதாவது 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாகும்.

    அதனால் மயக்கம், வலிப்பு, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். சிலர் கோமா நிலைக்கு தள்ளப்படலாம். வெப்ப அலைகள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவை அதிகப்படுத்தும். அதனை ஈடுசெய்ய போதுமான திரவ நிலை உணவுகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

     வெப்ப அலை வீசும் சமயத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:

    * தாகம் எடுக்காவிட்டாலும் நாள் முழுவதும் தண்ணீர் மற்றும் திரவ பானங்கள் அருந்திக்கொண்டிருக்க வேண்டும். பருகும் தண்ணீர் அறை வெப்பநிலைக்குள்ளாகவே இருக்க வேண்டும்.

    குறிப்பாக குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் நீர் பருகுவதை தவிர்க்கவும். அதிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியல் நிலையில் இருந்தால் குளிர்ந்த நீரை அறவே தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதனை பருகுவது ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    * வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும் சமயங்களில் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடனே கை, கால்களை கழுவக்கூடாது. அறை வெப்பநிலைக்கு உடல் தன்னை தயார் செய்த பிறகு அல்லது அரை மணி நேரம் கழித்து கை, கால்களை கழுவவோ, குளிக்கவோ செய்யலாம்.

    * வெப்பம் அதிகம் நிலவும் வேளையில் சோர்வாக இருந்தால், உடனடியாக குளிர்ந்த நீரை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அது நரம்புகள், ரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழிவகுக்கும். பக்கவாதத்திற்கும் வித்திடும்.

    * வெப்பம் அதிகம் நிலவும் சமயத்தில் உடற்பயிற்சி செய்வதையோ, கடுமையான வேலை செய்வதையோ தவிருங்கள்.

    * உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை ஆவியாக மாறுவதற்கு ஏற்ப பருத்தியாலான ஆடைகளை அணியுங்கள்.

    * வெப்பநிலை அதிகமாக இருக்கும் சமயத்தில் குளிரூட்டப்பட்ட அறை, நூலகம் மற்றும் உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் நேரத்தை செலவிடலாம். தினமும் இருமுறை குளியல் போடலாம்.

    • வயது தொடர்பான சரிவுகள் கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானது.
    • வயதாகும்போது, ​​குறைவான முட்டைகள் கிடைக்கின்றன.

    கருமுட்டை தரம் குறைதல்

    முட்டையின் தரத்தில் வயது தொடர்பான சரிவுகள் கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானது மற்றும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். குறைவான முட்டைகள் கிடைக்கும். பெண்களுக்கு பிறக்கும் போது குறைந்த அளவு முட்டைகள் உள்ளன, மேலும் அவர்கள் வயதாகும்போது, குறைவான முட்டைகள் கிடைக்கின்றன, இது இயற்கையாக கர்ப்பம் தரிக்க கடினமாக இருக்கலாம்.

    ஹார்மோன் மாற்றம்

    வயது தொடர்பான ஹார்மோன் மாற்றங்கள் அண்டவிடுப்பைக் குறைத்து, கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    உடல்நலப் பிரச்சினைகள்

    நார்த்திசுக்கட்டிகள், பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவை கருவுறுதலை பாதிக்கும் மற்றும் கர்ப்பம் தரிக்க மிகவும் சவாலான சில மருத்துவ பிரச்சனைகளாகும்.

    கர்ப்பத்தில் சிக்கல்

    முன்கூட்டிய பிரசவம், கர்ப்பகால நீரிழிவு மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா ஆகியவை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்ப பிரச்சினைகளில் அடங்கும்.

    குரோமோசோம் அசாதாரணங்கள்

    40 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணுக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    கருவுறுதல் சிகிச்சையின் செயல்திறன் குறைந்தது. ஐ.வி.எப் போன்ற கருவுறாமை சிகிச்சைகள் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வேலை செய்யாமல் போகலாம், இது கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    40 வயதிற்கு மேற்பட்ட கருத்தரிப்பதில் சிக்கல் உள்ள பெண்கள் தங்கள் மருத்துவர் மற்றும் இனப்பெருக்க நிபுணரிடம் தங்கள் விருப்பங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சாத்தியமான சிரமங்கள் பற்றி பேசுவது மிகவும் முக்கியம்.

    • பெண்ணின் வயதுக்கு ஏற்ப கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையும்.
    • ஆரோக்கியமான கர்ப்பத்தைத் தாங்கும் வாய்ப்புகள் குறையும்.

    40 வயதிற்குப் பிறகு கர்ப்பமாக இருக்க சிறந்த வழிகள்?.

    பல பெண்களுக்கு, 40 வயதிற்குப் பிறகு ஒரு குடும்பத்தைத் தொடங்கும் எண்ணம் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் இருக்கும். 40 வயதிற்கு பிறகும் கருத்தரிக்க முடியும் என்றாலும், ஒரு பெண்ணின் வயதுக்கு ஏற்ப கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் இயற்கையாகவே குறையும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    40 வயதிற்குப் பிறகு கருவுறுதலை பாதிக்கும் பல்வேறு காரணம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி ஆராய்வோம். 40 வயதிற்குப் பிறகு கர்ப்பத்துடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் பரிசீலனைகளைப் பற்றியும், இதன்மூலம் நீங்கள் வாழ்க்கையில் ஒரு குடும்பத்தைத் தொடங்குவது பற்றி தகவலறிந்த முடிவை எடுக்கலாம்.

    40 வயதிற்குப் பிறகும் இயற்கையாகவே கருத்தரிக்க முடியும், ஆனால் ஒரு பெண் வயதாகும்போது, கருவுறுதல் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தைத் தாங்கும் வாய்ப்புகள் குறையும். 40 வயதிற்குப் பிறகு கருவுறுதலை பாதிக்கும் காரணிகள்.

    கருப்பை செயல்பாடு குறைதல்

    பெண்களின் முட்டைகளின் அளவு மற்றும் தரம் குறைவதால், வயதாகும்போது இயற்கையாக கருத்தரிப்பது மிகவும் சவாலானது.

    ஹார்மோன் மாற்றங்கள்

    வயது தொடர்பான ஹார்மோன் மாற்றங்களால் அண்டவிடுப்பைக் குறைத்து, கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    மருத்துவ நிலைகள்

    எண்டோமெட்ரியோசிஸ், பிசிஓஎஸ் மற்றும் ஃபைப்ராய்டுகள் உள்ளிட்ட பல மருத்துவக் கோளாறுகளால் கருவுறுதல் பாதிக்கப்படலாம்.

    வாழ்க்கை முறை

    புகைபிடித்தல், அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கம் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆகியவை கருவுறுதலை பாதிக்கும் மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

    ஆண் துணையின் வயது

    சந்ததியினருக்கு சில மரபணு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரித்து, வயதான தந்தையின் கருவுறுதலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    பல கருச்சிதைவுகள் அல்லது பிற கர்ப்ப கஷ்டங்கள் 40 வயதிற்குப் பிறகு பெண்கள் கர்ப்பமாக இருப்பதை மிகவும் கடினமாக்கலாம்.

    40 வயதிற்குப் பிறகும் இயற்கையான கருத்தரித்தல் சாத்தியம் என்றாலும், பெண்கள் தங்கள் கருவுறுதல் விருப்பங்களைப் பற்றி தங்கள் மருத்துவரிடம் பேசுவதும், தேவைப்பட்டால், செயற்கை கருத்தரித்தல் போன்ற உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்களைப் பெறுவதும் முக்கியம்.

    • முக்கனிகளில் பிரபலமான கனி வாழை.
    • அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கும்.

    முக்கனிகளில் பிரபலமான கனி வாழையாக கருதப்படுகிறது. அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கக் கூடியதாக உள்ளது. வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

    இரும்புச்சத்து வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை உட்கொள்வதால், ரத்த சோகை நீங்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலையும் சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும். இதனால் தான் விளையாட்டு வீரர்கள் அடிக்கடி வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.

    வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது, வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன.

    உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் பி-6, ரத்தசோகை போன்ற

    குறைபாடுகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

    தாது உப்புக்களைப் பொறுத்த வரையில், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மெக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.

    100 கிராம் வாழைப்பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத்துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.

     மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.

    ஒவ்வாமையால் கஷ்டப்படுபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது. இதில் அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

    தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான அல்சர் பிரச்சினை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

    வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    • கருத்தரிப்பு நிகழவில்லை எனில் மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.
    • இருவருக்கும் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மலட்டுத்தன்மை என்பது கணவன் மனைவி இருவரும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டாலும் தொடர்ந்து ஒரு வருடங்கள் வரை கருத்தரிப்பு நிகழவில்லை எனில் அது கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.

    இந்த கருவுறாமை என்பது பெண்ணின் பிரச்சனை மட்டுமல்ல. ஆண்களும் மலட்டுத்தன்மையை கொண்டிருக்கலாம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் என இருவருக்குமே கருவுறுதல் அல்லது மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்

    ஒழுங்கற்ற மாதவிடாய்

    மாதவிடாய் இல்லாமல் போவது

    ஹார்மோன் பிரச்சனைகள்

    ஃப்லோபியன் குழாய் அடைப்பு

    செலியாக் நோய்

    சிறுநீரக நோய்

    எக்டோபிக் கர்ப்ப்பம்

    இடுப்பு அழற்சி நோய்

    பிட்யூட்டரி சுரப்பி கோளாறுகள்

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்

    சிக்கிள் செல் இரத்த சோகை

    எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பாலிப்கள்)

    தைராய்டு நோய்

    அதிக வயதை கொண்டிருத்தல்

    உடல் பருமன் அல்லது மிக குறைவான எடை கொண்டிருப்பது

    இனப்பெருக்க அமைப்பை சேதப்படுத்தும் சில பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் இருப்பது.

    ஆண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்

    வெரிகோஸ் வெயின் பிரச்சனை (விரிவாக்கபட்ட நரம்புகள்)

    விந்தணுக்கள் வைத்திருக்கும் சாக்

    மரபணு கோளாறுகள் (சிஸ்டிக், ஃபைப்ரோசிஸ்)

    இறுக்கமான ஆடைகள் அணிவதால் விந்தணுக்கள் அதிக வெப்பத்தை சந்திதல்

    விந்தணுக்கள் குறைவாக இருப்பது (டெஸ்டோஸ்ட்ரான் அளவு குறைவது)

    முன் கூட்டிய விந்து வெளிபாடு

    விந்தணுக்களின் வடிவம், இயக்கம், அது உள் செல்லும் நேரம் போன்ற குறைபாடு

    மருத்துவ நிலைமகள் மற்றும் மருந்துகள் எடுத்துகொள்வது.

    • கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு.
    • சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம்.

    இன்றைய காலகட்டத்தில் வைத்தியசாலையில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகள் மூன்று முதல் மூன்றேகால் கிலோ வரை இருந்தால் ஆரோக்கியமான குழந்தை என கருதுகிறோம். சில குழந்தைகள் பிறக்கும் போது ஐந்து கிலோ எடைக்கு மேல் இருக்கும்.

    இத்தகைய குழந்தைகள் வளர்ச்சி அடையும் போது உடற்பருமன் பாதிப்பிற்கு ஆளாகி, எதிர்காலத்தில் அதாவது நாற்பது வயதிற்குள்ளாகவே இதய பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

    இருப்பினும் இந்த கொழுப்பு இயல்பான அளவைவிட கூடுதலாக உடலில் சேகரிக்கப்படும் போது அது ரத்த நாளங்களில் படிமங்களாக தங்கி, ரத்த ஓட்டத்தினை சீர்குலைத்து, இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவர்கள் உங்களுடைய கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவு மீது எப்போதும் தீவிர கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள்.

    மேலும் நாற்பது வயதை கடந்த ஆண்களும், பெண்களும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் காலகட்டத்தில் கொழுப்பின் அளவை அறிவதற்கான பிரத்தியேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

    கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளாகும். இது தண்ணீரில் கரையாத காரணத்தால் தானாகவே கொழுப்பு புரதங்களாக மாறி, ரத்த நாளங்களில் படிவுகளாக படிகின்றன.

    கொழுப்புகள் புரதங்களாக மாறி ஹார்மோன்கள், விட்டமின்கள், செல் கட்டமைப்பை உருவாக்குதல், பராமரித்தல் போன்றவற்றிற்கு இன்றியமையாத பணியை மேற்கொள்கிறது. இதன் காரணமாக அனைவருக்கும் கொழுப்பு என்பது அவசியம்.

    ஆனால் இயல்பான அளவை விட கூடுதலாக அதிகரிக்கும்போது அவை பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

     கொழுப்புகளில் நல்ல கொழுப்பு- கெட்ட கொழுப்பு என்ற இரண்டு வகை உள்ளது. இதில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் பாதிப்புகள் உயர்கிறது. அதீத கொழுப்பு சேர்வது என்பது சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். இவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி தங்களது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

     நீரிழிவு நோயாளிகள், நாள்பட்ட சிறுநீரக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், ஹைபோதைராய்டிசம், புற்றுநோய், முகப்பரு, உயர் ரத்த அழுத்தம், சமசீரற்ற இதயத்துடிப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி அதீத கொழுப்பு பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள பிரத்தியேக ரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் படி உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக முதலில் மருத்துவர்கள் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துவர்.

    இதனைத் தொடர்ந்து உங்களது வயது, ஆரோக்கிய நிலை, மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக பிரத்தியேக மருந்தியல் சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.

    ×