search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார்.
    • அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த 5-ம் கட்ட தேர்தலில்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குமிக்க தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த இரு தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருந்தது. அமேதியில் ராகுலும், ரேபரேலி தொகுதியில் பிரியங்காவும் களம் இறக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியானதால் இந்த இரு தொகுதி வேட்பாளர்கள் தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

    ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று காலை அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார்.

    அதில், ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேசத்தின் அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி களமிறக்காதது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியுள்ளதாவது:-

    பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்தை தனது தீவிரமான பரப்புரையின்மூலம் ஒற்றை ஆளாக தவிடுபொடியாக்கி வருகிறார் பிரியங்கா காந்தி.

    காங்கிரஸ் கட்சிக்காக அவர் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள் பிரியங்கா காந்தி சுருங்கிவிடக் கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது,
    • அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, ராகுல் காந்தி அங்கே சென்றார்.

    குஜராத் மாநிலம் தஹோத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கடவுள் ராமர் கற்பனையே. வரலாற்று ரீதியாக அல்லது அறிவியல்பூர்வமாக அவர் இருந்ததற்கான எந்த சான்றுகள் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.

    அவர்கள் தடைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி கடவுள் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான வழியை ஏற்படுத்தினார். 10 நாட்கள் சடங்குகளுக்குப் பிறகு ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22-ந்தேதி நடைபெற்றது.

    நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, அடுத்த நாளே அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி அங்கே சென்றார்.

    அப்சல் குருவுக்கு ஆதரவான துண்டாக்க விரும்பும் கும்பலுக்கு ஆதரவு தெரிவித்தார். அவருடைய கட்சி அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு (கணையா குமார் வடகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்) மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர்கள் தேச விரோத சக்திகளுடன் இல்லையா? அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?

    அம்பேத்கர் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது, சமூக நீதிக்காக இடஒதுக்கீடு எனக் கூறியதை பிரதமர் மோடி மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

    எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இது நமது அரசியலமைப்ப சூறையாடுவதற்கு சமம். நாட்டை பலவீனப்படுத்தும் மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    • ரெயில்வே பிளாட்பாரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையும் அந்த குழந்தையின் தாயும் அழுது கொண்டிருந்ததை போலீசாரே பார்த்தனர்.
    • உதவி செய்தால் உபத்திரவத்தை அவர் அல்லவா சுமக்க வேண்டும்?

    கண் முன்னால் எத்தனையோ பேர் ஆபத்துகளில் சிக்குகிறார்கள். ஆனாலும் சுற்றி இருப்பவர்கள் கண்டு கொள்ளாமல் போய்விடுகிறார்களே என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்டவர்களை பார்ப்பதால் தான் மற்றவர்களும் உதவிக்கு வர தயங்குகிறார்கள்.

    இதை மெய்ப்பிக்கும் வகையில் சென்னை மாம்பலத்தில் நேற்று மாலை ஒரு சம்பவம் அரங்கேறியது. சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4:45 மணி அளவில் செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் மாம்பலத்தில் நிறுத்தி பயணிகள் ஏறியதும் ரெயில் புறப்பட தொடங்கியது. அப்போது ஒரு சிறு குழந்தை தனியாக ரெயிலில் ஏறி விட, ஏற முடியாமல் நின்ற தாய் கதறி போட்ட கூச்சலால் விபத்து நேர்ந்ததைப் போல் ரெயில் நிலையத்தில் பயணிகள் அலற தொடங்கினார்கள். ரெயிலுக்குள் இருந்த பயணிகளும் பதட்டத்தோடு குரல் எழுப்பினார்கள்.

    ஏதோ ஆபத்து நடந்திருக்கிறது என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். ஆனால் அதற்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யாரும் சிந்திக்கவில்லை. அப்போது கிராமத்து வாசி ஒருவர் தனது மனைவியுடன் இருந்தவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார் அவ்வளவுதான். ரெயில்வே போலீசார் விரைந்து வந்தார்கள். ரெயில்வே ஊழியர்களும் ஓடி வந்தார்கள். இதற்கிடையில் ரெயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தவரை ஏதோ தப்பு செய்துவிட்டவர் போல் அனைவரும் பார்க்கத் தொடங்கினார்கள். அதை பார்த்ததும் நமக்கு ஏதும் பிரச்சினை வருமோ என்று பயந்த அந்த நபர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு மெதுவாக இறங்கி அங்கிருந்து தெறித்து ஓடி விட்டார். அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பெட்டிக்குள் வந்த போலீசாரும், ரெயில்வே ஊழியர்களும் சங்கிலியை இழுத்தது யார் என்று கேட்டார்கள். யாரும் ஒழுங்காக பதில் சொல்லாததால் உருட்டி, மிரட்ட தொடங்கினார்கள் .

    அப்போது ஏதோ ஒரு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முதியவர் எழுந்து போலீசாரிடம் இப்போ இதற்கு என்ன சார் பிரச்சினை? குழந்தை விழுந்ததால் சங்கிலியை இழுத்திருக்கிறார்கள்.

    இதில் என்ன தவறு இருக்கிறது? என்று சாதாரணமாக கேட்டார். உடனே ஆத்திரம் அடைந்த போலீசார் ஏங்க ரெயிலில் பயணம் பண்ண ஆசையா? இல்லை போலீஸ் நிலையத்திற்கு வர ஆசையா? என்று குரலை உயர்த்தினார்கள். அதை கேட்டதும் நான் தான் சங்கிலியை இழுத்தேன். இப்போது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர் ஆத்திரப்பட்டார். உடனே அப்போ நீங்க வாங்க சார் போலீஸ் நிலையத்திற்கு என்று அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்கள்.

    அதை பார்த்து பரிதாபப்பட்ட இளைஞர் ஒருவர் போலீசாடம் என்ன சார் இது நியாயம்? ஆபத்து காலத்தில் யாரோ உதவி இருக்கிறார்கள். இதற்கு ஏன் இவ்வளவு பிரச்சனை என்றார். அவ்வளவுதான் போலீசுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உனக்கு என்னய்யா தெரியும்? சங்கிலியை ஒருவர் இழுத்தால் கீழே இறங்கி வந்து அந்தப் பிரச்சனைக்கு காரணத்தை சொல்லி அவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் சேர்ந்து எழுதிக் கொடுக்க வேண்டும். தெரியுமா உனக்கு? ஒழுங்காக வாயை மூடிக்கொண்டு போ என்று சவுண்டு விட்டதும் அந்த இளைஞரும் அடங்கிப் போனார்.

    அப்புறம் ரெயில் நகர்ந்தது. ரெயில்களில் அவசர காலங்களில் இழுத்து ரெயிலை நிறுத்துவதற்கு தான் அபாய சங்கிலி வைத்துள்ளார்கள். இதை கிராமத்து வாசியாக இருந்தாலும் அந்த நபர் அறிந்து வைத்திருந்ததால் ரெயில்வே பிளாட்பாரமும் ரெயிலும் அல்லோகலப்பட்டபோது யாரும் முன் வராத நிலையில் அவர் துணிச்சலாக சென்று சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். அதற்காக சம்பந்தப்பட்டவர் போலீஸ் நிலையத்திற்கு வர வேண்டும். பாதிக்கப்பட்டவர் யார் என்று சொல்ல வேண்டும். இருவரும் சேர்ந்து மனு எழுதிக் கொடுக்க வேண்டும். என்றெல்லாம் விதிமுறைகளை சொன்னால் அவசர வேலைக்காக குடும்பத்துடன் சென்று கொண்டிருப்பவர் இதற்கெல்லாம் வர முடியுமா? போலீஸ் நிலையத்திற்கு சென்றால் எவ்வளவு நேரம் ஆகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அங்கு சென்ற பிறகும் உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? என்றெல்லாம் கேள்வி வரும். இதற்காகத்தான் யார் விழுந்தால் என்ன? யார் செத்தால் என்ன? என்று யாரும் உதவிக்கு வர மறுக்கிறார்கள். இந்த சம்பவத்தை பொறுத்தவரை ரெயில்வே பிளாட்பாரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையும் அந்த குழந்தையின் தாயும் அழுது கொண்டிருந்ததை போலீசாரே பார்த்தனர்.

    அப்படி இருக்கும்போது இதுதான் நடந்தது என்பதை உணர்ந்து ரெயிலை தொடர்ந்து செல்ல அனுமதிப்பதில் என்ன வந்து விடப் போகிறது? இந்த சிறு பிரச்சனைக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டும் என்றால் ரெயில்களில் பயணிக்கும் போது யாரோ ஒருவன் கத்தியை காட்டி நகையை பறிக்கலாம், அல்லது ஒருவரை கொலை கூட செய்யலாம். அதை பார்த்து எந்தப் பயணி உதவி செய்ய முன்வருவார்? உதவி செய்தால் உபத்திரவத்தை அவர் அல்லவா சுமக்க வேண்டும்? காலம் மாறி இருக்கிறது என்கிறோம்.

    எல்லாவற்றிலும் மாற்றங்கள் தேவை என்கிறோம். இந்த மாதிரி உதவாத சட்டங்களையும், விதிமுறைகளையும் வைத்துக்கொண்டு செயல்பட்டால் என்ன நடக்கும்? எத்தனையோ வழக்குகளில் என்னவெல்லாம் தகிடு தித்த வேலைகளை செய்கிறார்கள் இது ஒரு மனிதாபிமான உதவி. இதற்கும் நியாயமாக போலீசார் உதவினால் என்ன? யோசியுங்கள். உங்கள் வாழ்க்கை பயணம் மட்டுமல்ல எல்லோரது வாழ்க்கை பயணமும் சுகமாக அமைய வேண்டும்.

    • கவர்னர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
    • இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.மம்தா பானர்ஜி மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

    மேற்கு வங்கத்தில் கவர்னராக இருப்பவர் ஆனந்த் போஸ். மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.



    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது மேற்கு வங்கம் வந்துள்ளார். அவர் இரவில் ராஜ்பவனில் தங்க உள்ளார். இந்நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், கவர்னர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

    அங்குள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை போலீசார் 'ஹரே தெரு' காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் எழுத்துப்பூர்வமாக கவர்னர் மீது புகார் கொடுத்தார்.




    அதில் தன்னை கவர்னர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பிரசார பயணத்திற்கு வந்துள்ளதால் தற்போது இது தொடர்பாக விசாரணை செய்ய வரும் போலீசாரை ராஜ் பவனுக்குள் நுழைய கவர்னர் தடை விதித்து உள்ளார்.

    • இன்று முதல் 6ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
    • நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் வெப்ப அலை பதிவாகியுள்ளது.

    தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோடை காலம் என்பதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும்.

    தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கும்.

    குறிப்பாக, தருமபுரி, திருத்தணி, திருப்பதூர் உட்பட 10 இடங்களில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும்.

    இன்று முதல் 6ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நாளை முதல் கத்திரி வெயில் தொடங்கவுள்ள நிலையில், முதல் ஒரு வாரம் வெப்பம் அதிகரித்து காணப்படும்.

    சென்னையை பொருத்தவரையில் கோடை மழை பெய்ய வாய்ப்பில்லை.

    கால நிலை மாற்றம் மட்டுமே வெப்ப அலைக்கு காரணம் இல்லை.

    நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் வெப்ப அலை பதிவாகியுள்ளது.

    அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
    • ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.

    முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., பாலியல் புகாரில் சிக்கி உள்ளார். பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் தற்போது ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் முடிந்ததும் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகுதான் அவரைப்பற்றிய ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவாகி உள்ளது. அதுபோல் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் வேலை பார்த்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதே போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது. மேலும் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களில் ஒருவர் கடத்தப்பட்டதாக அப்பெண்ணின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    அப்பெண்ணை எச்.டி.ரேவண்ணாவின் ஆட்கள் தான் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரேவண்ணா மீது ஆட்கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    • ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
    • அமேதி தொகுதியில் கே.எல். சர்மா களம் இறக்கப்பட்டுள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகள் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகள் பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட்டு வருகிறார்கள். சோனியா காந்தி மக்களவை தொகுதியில் போட்டியிடவில்லை என முடிவு செய்ததால் ரேபரேலிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற கேள்வி எழுந்தது.

    அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாகவும், அமேதி தொகுதியில் கே.எல். சர்மாவும் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் காந்தி குடும்பம் அமேதி தொகுதியில் போட்டியிடாத நிலையில், காங்கிரஸ் ஏற்கனவே தோல்வியை ஏற்றுக் கொண்டுவிட்டது என அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இஸ்மிரிதி இரானி கூறுகையில் "அமேதி தொகுதியில் காந்தி குடும்பம் போட்டியிடாதது, இந்த தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது என்பதை குறிக்கிறது.

    இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு ஏதாவது வாய்ப்பு இருந்திருந்தால், அவர்கள் போட்டியிட்டிருப்பார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களை நிறுத்தியிருக்க மாட்டார்கள்.

    இவ்வாறு ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 6-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    7-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    8-ந்தேதி மற்றும் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை: அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

    இன்று மற்றும் நாளை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

    03.05.2024 முதல் 07.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.

    வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

    இன்று முதல் 6-ந்தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    03.05.2024 முதல் 06.05.2024 வரை: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    • வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், விழுப்புரம் தொகுதி வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்கான சிசிடிவி கேமராக்கள் திடீரென நின்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் 9.56 மணிக்கு மீண்டும் சிசிடிவி செயல்பட தொடங்கியது.

    யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவரும், ஆட்யருமான பழனி விளக்கம் அளித்துள்ளார்.

    • வீராட்-அனுஷ்கா RCB நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.
    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    பாலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலியும் காதலித்து வந்தனர்.

    இவர்கள் இருவருக்கும் 2017- ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. 2021 ஜனவரி மாதம் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா, விராட்கோலி விளையாடும் முக்கிய போட்டிகளில் எல்லாம் களத்திற்கு வந்து அவரை

    உற்சாகப்படுத்த என்றுமே தவறியதில்லை. சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் விராட்கோலி தனது 50-வது சதத்தை பூர்த்தி செய்தபோது அனுஷ்கா சர்மா, முத்தங்களை பறக்கவிட்டு உற்சாகத்தை கொடுத்தார். தற்போதும் கூட ஐபிஎல் தொடரில் RCB அணியில் விளையாடும் விராட் கோலியை அவ்வபோது சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

     இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா கடந்த மே- 1ந்தேதி அன்று தனது 36-வது பிறந்த நாளை வீராட் கோலியின் RCB நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார்.

    உத்தரபிரதேசம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் இருப்பதால் அந்த மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது.

    அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.

    வருகிற 7-ந்தேதி 3-ம் கட்ட தேர்தலில் 10 தொகுதிகளுக்கும், 13-ந்தேதி 4-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும், 20-ந்தேதி 5-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 15 தொகுதி வேட்பாளர்களை அறிவித்து விட்ட காங்கிரஸ் அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதி வேட்பாளர்களை மட்டும் அறிவிக்காமல் வைத்திருந்தது.

    உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த 5-ம் கட்ட தேர்தலில்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குமிக்க தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர்.

    ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.
    • சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பயணிகளின் டிராவல் பேக்கில் சோதனை செய்தபோது அதில் சுருள் வடிவில் மறைத்து எடுத்து வந்த 235 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    கே.கே. நகர்:

    வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவில் கடத்தல் தங்கம் கடத்தப்பட்ட வருவது, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பயணிகளின் டிராவல் பேக்கில் சோதனை செய்தபோது அதில் சுருள் வடிவில் மறைத்து எடுத்து வந்த 235 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.16.17 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×