search icon
என் மலர்tooltip icon

    ஜார்கண்ட்

    • பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
    • இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.

    ராஞ்சி, மே. 4-

    பிரதமர் மோடி இன்று காலை ஜார்கண்ட் மாநிலம் பாலமுவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    2014-ம் ஆண்டு உங்கள் வாக்கு மூலம் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அகற்றினீர்கள். ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், ஆந்திராவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதத்தை பரப்பி வந்தனர்.

    எனவே பல தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்தனர். அவர்களது மகன்கள் கெட்ட சகவாசத்தால் ஆயுதம் ஏந்திக் காடுகளை நோக்கி ஓடினார்கள். ஜார்கண்ட மாநிலம் நக்சலைட்டுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    பா.ஜ.க. ஆட்சியால் உங்களது ஒவ்வொரு வாக்கும் இளம் பிள்ளைகளை காப்பாற்றியது. அவர்களின் தாய்மார்களின் நம்பிக்கையை நிறைவேற்றியது. இதுதான் ஒரு வாக்கின் பலம். உங்கள் ஒரு வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள், அதன் விளைவாக ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. 500 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்ட உங்கள் ஒரு வாக்கு பங்களித்தது.

    உங்களின் வாக்கு பயங்கரவாதத்தை தடுப்பதில் எங்களுக்கு உதவியது. பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

    காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகமாக இருந்தது. தற்போது இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.

    ஒரு காலத்தில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பலவீனமான காங்கிரஸ் அரசு உலகம் முழுவதும் சென்று கதறி அழுதது. இப்போது பாகிஸ்தான் உலகம் முழுவதும் கதறிக் கொண்டிருக்கிறது. சர்ஜிக்கல் மற்றும் பாலகோட் தாக்குதல்கள் பாகிஸ்தானை உலுக்கியது.

    துல்லிய தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் தலைவர்கள், காங்கிரசின் இளவரசர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் வலுவான இந்தியா தற்போது வலுவான அரசாங்கத்தை மட்டுமே விரும்புகிறது.

    ஏழைகளுக்கு காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை. அவர்களது தலைமுறைக்காக ஏழைகளிடம் இருந்து கொள்ளையடித்தனர்.

    காங்கிரசும், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சியும் அவர்களது பிள்ளைகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் நான் உங்களது பிள்ளைகளுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். நான் மக்கள் பணி செய்வதற்காக பிறந்தவன்.

    கடந்த 25 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் இருக்கும் என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. எனக்கு சொந்தமாக வீடு இல்லை, சைக்கிள் கூட இல்லை. ஊழல் நிறைந்த ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்காக பெரும் சொத்து குவித்துள்ளனர்.

    ஆனால் எனது வாரிசுகள் நீங்கள் அனைவரும்தான். உங்கள் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் என் வாரிசுகள். வளர்ச்சியான பாரதத்தை உங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியமாக கொடுக்க விரும்புகிறேன். என் குடும்பமும், கோடிக்கணக்கான குடும்பங்களும் சந்திக்க நேர்ந்ததை (வறுமை) நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.

    வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும். நான் ஏழ்மையில் வாழ்ந்தேன். ஒரு ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பதை அறிவேன். கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை.

    நான் பயனாளிகளை சந்திக்கும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். ஏழ்மையையும், போராட்டத்தையும் கண்டவர்களால்தான் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியும். தனது தாய் அடுப்பில் புகையால் இருமுவதைக் காணாதவரால் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியாது.

    மோடியின் கண்ணீரில் காங்கிரசின் இளவரசர் (ராகுல் காந்தி) தனது மகிழ்ச்சியைத் தேடுகிறார். வறுமை பற்றி காங்கிரசுக்கு என்றைக்குமே தெரியாது. காங்கிரஸ் இளவரசர் தான் பணக்காரராக இருப்பதற்காக பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்.

    நீங்கள் வறுமையில் வாழ்வதை நான் விரும்பவில்லை. வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

    நான் உயிருடன் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் சட்டத்தை மாற்றுவதில் காங்கிரசின் எந்த வடிவமைப்பையும் வெற்றிபெற அனுமதிக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி அரசியல் பயணத்தை தொடங்கினார்.
    • டெல்லியில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் கலந்து கொண்டார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். இவரது மனைவி கல்பனா. இவர் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கந்தே சட்டமன்ற தேர்தலுக்கு மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட இருக்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.ஏல்.ஏ. சர்பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் கந்தே தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா, எம்டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார். ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பள்ளி கல்வியை முடித்த அவர், இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படிப்பை புவனேஸ்வரில் உள்ள கல்லூரிகளில் முடித்தார்.

    மார்ச் மாதம் 4-ந்தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தொடக்க தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது கல்பனா தனது அரசியல் பயத்தை தொடங்கினார். அப்போது, 2019-ல் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு பதவிக்கு வந்ததில் இருந்தே எதிரிகளால் சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஜார்கண்ட் தனது கணவரை சிறையில் தள்ளிய சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார்.

    ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பின் கல்பனா டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    அமலாக்கத்துறை சம்மனை எதிர்கொண்டபோது, ஹேமந்த் சோரன் அவரது மனைவியை முதல்வராக்க முயற்சிக்கிறார் என பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்
    • சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்

    ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நடந்த நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இதில் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    கைது செய்யப்பட்டு உள்ள ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை கோர்ட்டு நேற்று தொடங்கியது.

    இதற்கிடையே சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம் ரூ.31.07 கோடி மதிப்பிலானது ஆகும்.

    கடந்த 2010-11-ம் ஆண்டு முதலே இந்த சொத்தை சொந்தமாக வைத்திருக்கும் சோரன், அதை மோசடியாக பெற்றுக்கொண்டதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில், இந்த சொத்தை பறிமுதல் செய்ய அனுமதியும் கோரப்பட்டு உள்ளது.

    ஹேமந்த் சோரன் முறைகேடாக பெற்றதாக கூறப்படும் 8,86 ஏக்கர் சொத்தின் காப்பாளராக 14 முதல் 15 ஆண்டுகள் வரை இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணையின்போது சந்தோஷ் முண்டா என்பவர் தெரிவித்திருக்கிறார்.

    அந்த நிலத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற சோரன் கூறியதை பொய் என நிரூபிக்க சந்தோஷ் முண்டாவின் வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பயன்படுத்தி உள்ளது. மேலும், அந்த நிலத்திற்கு ராஜ்குமார் பஹான் என்ற நபர் உரிமை கோரியதையும் அமலாக்கத்துறை நிராகரித்தது.

    அந்த நிலத்தை ஒதுக்கீடாக பெற்றவர்கள், சில நபர்களுக்கு விற்றதாகவும், அவர்களை சோரன் வெளியேற்றிவிட்டு 2010-11ல் நிலத்தின் கட்டுப்பாட்டை பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.

    ஹேமந்த் சோரனும் அவரது மனைவி கல்பனாவும், இரண்டு முதல் மூன்று முறை அந்த நிலத்திற்குச் சென்றதாகவும், அந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின்போது ஹேமந்த் சோரன் கூடவே இருந்து வேலை செய்ததாகவும் அமலாக்கத்துறை விசாரணையின்போது சந்தோஷ் முண்டா தெரிவித்துள்ளார்.

    சோரனின் உத்தரவின் பேரில் சொத்துக் காப்பாளர் பொறுப்பு சந்தோஷ் முண்டாவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை கூறுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹிலாரியாஸ் கச்சாப், அங்கு மின்சார மீட்டர் பொருத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இந்த நிலத்தில் சந்தோஷ் முண்டாவும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர் என்பதும், குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமார் பஹான் வசம் இல்லை என்பதும் நிரூபணமாகியிருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை தனது குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் முக்கிய ஆதாரமாக, பிரிட்ஜ் மற்றும் ஸ்மார்ட் டி.வி.யின் பில்களை காட்டியிருக்கிறது. இந்த ரசீதுகளை ராஞ்சியைச் சேர்ந்த இரண்டு டீலர்களிடமிருந்து பெற்று குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளது.

    இந்த 2 ரசீதுகளும் சந்தோஷ் முண்டாவின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    குற்றப்பத்திரிகையில் ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ள பிரிட்ஜ், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முண்டாவின் மகன் பெயரிலும், ஸ்மார்ட் டிவி 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முண்டாவின் மகள் பெயரிலும் வாங்கப்பட்டுள்ளது. அந்த பில்லில், வழக்கில் உள்ள நிலத்தின் முகவரி உள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    அரசுத் தரப்பு புகாரை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    • யானையின் கால்பந்து விளையாட்டை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசிக்கின்றனர்.
    • வீடியோவை பார்த்த வன ஆர்வலர்கள் மற்றும் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    யானை ஒன்று கால்பந்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்கண்டின் சகுலியா பகுதியில் யானை ஒன்று சாலையில் நடந்து செல்கிறது.

    ராம்லால் என்று அன்புடன் அழைக்கப்படும் அந்த யானை கால்பந்தை உதைத்து விளையாடுவதும், தும்பிக்கையால் பந்தை தூக்கி வீசுவது, பின்னர் அந்த பந்தை எடுத்து விளையாடுவது போன்ற காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.

    மேலும் யானையின் கால்பந்து விளையாட்டை அப்பகுதி பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த வன ஆர்வலர்கள் மற்றும் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.
    • சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நடந்த நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இதில் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    கைது செய்யப்பட்டு உள்ள ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை கோர்ட்டு நேற்று தொடங்கியது.

    இதற்கிடையே சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

    ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம் ரூ.31.07 கோடி மதிப்பிலானது ஆகும்.

    கடந்த 2010-11-ம் ஆண்டு முதலே இந்த சொத்தை சொந்தமாக வைத்திருக்கும் சோரன், அதை மோசடியாக பெற்றுக்கொண்டதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில், இந்த சொத்தை பறிமுதல் செய்ய அனுமதியும் கோரப்பட்டு உள்ளது.

    அதேநேரம் இந்த சொத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
    • இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவே நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்

    ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஜெய்பிரகாஷ் பாய் படேல், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் , ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் ஆலம் ஆகியோர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் பாய் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எனக்கு எனது பதவியை பற்றி கவலையில்லை. ஜார்க்கண்டை பாதுகாக்க வேண்டும். அதனால் தான் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

    வரும் மக்களவை தேர்தலில் ஹசாரிபாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் படேல் நிறுத்தப்படலாம் என்று செல்லப்படுகிறது. 

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க உதவித்தொகை வழங்கபடும்

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க உதவித்தொகை வழங்க உள்ளதாக அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ இந்த திட்டம் உதவும் என்பதால், இதனை ஜார்க்கண்ட் அரசு அமல்படுத்தி இருக்கிறது. விதவைகள் தங்கள் திருமணப் பதிவுச் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். மறுமணமான ஒரு வருடத்தில் அவர்களது வங்கி கணக்கில் 2 லட்சம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    ஜார்க்கண்ட் அரசு 2024-25 நிதியாண்டில் ரூ.1.28 லட்சம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. சம்பை சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர் ஒருவர் தனது பேராசிரியருக்கு அவரின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்து வழங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மாணவரின் கலைத்திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மாணவர்கள் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு வித்தியாசமான பரிசுகளை வழங்க ஆசைப்படுவார்கள். அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் தனது பேராசிரியருக்கு அவரின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்து வழங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், பேராசிரியரிடம் மாணவர்கள் சிலர் அவரது உருவப்படத்தை ஓவியமாக வரைந்து பரிசளிப்பதையும், அதைப்பார்த்த பேராசிரியர், இது அச்சிடப்பட்டதா? என வியப்புடன் கேட்பதையும், பின்னர் அந்த ஓவியத்தை வரைந்த மாணவரை பாராட்டும் காட்சிகளும் பயனர்களை கவர்ந்துள்ளது.

    பகிரப்பட்ட சில மணி நேரங்களில் 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்த அந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மாணவரின் கலைத்திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • பிரதமர் மோடி ஜார்க்கண்டில் ரூ,35,700 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
    • ஜார்க்கண்ட் மாநிலம் சிந்த்ரியில் நடைபெற்ற விழாவில் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

    ராஞ்சி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜார்க்கண்டில் ரூ,35,700 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அங்குள்ள தன்பாத் மாவட்டத்தில் உள்ள சிந்த்ரி பகுதியில் ரூ.8,900 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் உர்வராக் மற்றும் ரசாயன லிமிடெட் உரத்தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிந்த்ரியில் நடைபெற்ற விழாவில் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

    இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு யூரியா உற்பத்தி செய்யும். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    இந்தியாவின் யூரியா உற்பத்தி 2014-ல் 225 லட்சம் டன்னாக இருந்தது. இது தற்போது 310 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

    இன்று ரூ.35 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை ஜார்க்கண்ட் பெற்றுள்ளது.

    சிந்த்ரி உர ஆலையை புதுப்பிப்பது மோடியின் உத்தரவாதமாக இருந்தது. அது இன்று நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இந்தியா யூரியாவில் தன்னிறைவு பெறும் என தெரிவித்தார்.

    இதுதவிர, ஜார்க்கண்டில் ரூ.26,000 கோடி மதிப்பிலான ரெயில், மின்சாரம் மற்றும் நிலக்கரி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.
    • பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் மோதியது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் ரெயில் மோதி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஜம்தாரா- கர்மாதாண்ட் வழித்தடத்தில் கல்ஜாரியா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    பாகல்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.

    தீ விபத்தால் அச்சமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் பயணிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

    சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, ௧௨ பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    • ஜார்க்கண்ட் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் மதுகோடா.
    • இவரது மனைவியான கீதா கோடா இன்று காங்கிரசில் இருந்து விலகினார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2006-ம் ஆண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்த மதுகோடா காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல் மந்திரியாக பதவியேற்றார்.

    மதுகோடாவின் மனைவி கீதா கோடா, டெல்லி சென்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது இவர் ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

    இந்நிலையில், ஜார்க்கண்டின் சிங்பூர் தொகுதி எம்.பி.யான கீதா கோடா, இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட கூட்டணி குறித்த அதிருப்தியால் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    • இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி.
    • இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி. பின்னர் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    ×