search icon
என் மலர்tooltip icon

    கேரளா

    • வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    கேரளா:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26 மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந் தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி கடந்த 19-ந்தேதி முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    2-ம் கட்டத் தேர்தலுக்கு கடந்த 4-ந்தேதி மனுத்தாக்கல் தொடங்கியது. 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் 2-ம் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    * கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    * பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி திருச்சூரில் வாக்களித்தார்.

    * காங்கிரஸ் வேட்பாளர் கே.சி.வேணுகோபால் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    * திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பத்தனம்திட்டா பாஜக வேட்பாளர் அனில் ஆண்டனி தனது வாக்கினை செலுத்தினார்.

    * கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார்.

    * பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார்.




    • 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    • வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

    அந்தவகையில் கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    எனவே மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையிலேயே பிரசாரம் ஓய்ந்தது.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

    2-ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15.88 கோடியாகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.


    • 742 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானதாகவும், 1,161 வாக்குச்சாவடிகள் பிரச்சனைக்குரியவையாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
    • கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடது சாரி ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்ததில் இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் கேரள மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று மத்திய மந்திரி அமித்ஷா, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். பல இடங்களில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சியினருக்கிடையே மோதலும் நடந்தது.

    இந்நிலையில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை (26-ந்தேதி) நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    வாக்காளர்கள் ஓட்டு போடுவற்காக 25,231 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    742 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானதாகவும், 1,161 வாக்குச்சாவடிகள் பிரச்சனைக்குரியவையாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த 1,903 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளும் ஓட்டுப்பதிவு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 75 சதவீத வாக்குச்சாவடிகள் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 34லட்சத்து 15ஆயிரத்து 293 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 43 லட்சத்து 33ஆயிரத்து 499 பேர், மூன்றாம் பாலினத்தினர் 367 பேர்.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரளாவில் திருவனந்தபுரம், திருச்சூர், காசர்கோடு, கோழிக்கோடு, பத்தினம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களில் 144 தடையை அமல்படுத்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருவனந்தபுரம், திருச்சூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் 144 தடை நேற்று(24-ந்தேதி) நேற்று மாலை 6 மணிக்கே அமலுக்கு வந்தது.

    அந்த மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதி வரை தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பத்தினம்திட்டா மாவட்டத்தில் இன்று மாலை 6 மணிமுதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கிறது.

    இந்த மாவட்டங்களில் 5 பேருக்கு மேல் கூடுதல், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர்.
    • ஓட்டுப்போடுவதற்காக கடந்த 2 வாரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அரபு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

    மாநிலத்தின் 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக கடந்த 2 வாரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அரபு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர். இன்றும் (வியாழக்கிழமை) அதிகமானோர் வருவார்கள் என கூறப்படுகிறது.

    • சுரேஷ் கோபி மீதான நம்பிக்கையில் 2019 மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா களம் இறக்கியது.
    • திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றிக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் எந்த மக்களவை தொகுதியிலும் கால் பதிக்க முடியவில்லை. அதற்கான நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா ஈடுபட்டது. இதற்காக சில திட்டங்களை கேரளாவில் செயல்படுத்தி வருகிறது.

    முக்கியமாக அங்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகர் சுரேஷ்கோபி மூலமாக அதனை நிறைவேற்ற பாரதிய ஜனதா முடிவு செய்தது. கேரளாவில் 1990-களில் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்களில் ஒருவராக சுரேஷ்கோபி இருந்தார். அவர் மீதான நம்பிக்கையில் 2019 மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா களம் இறக்கியது.

    அந்த தேர்தலில் நிலவிய மும்முனை போட்டியில் சுரேஷ்கோபி 3 லட்சம் வாக்குகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இது கேரளாவில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு 11.1 சதவீதத்தில் இருந்து 28.2 சதவீதமாக அதிகரிக்க உதவியது. திருச்சூரில் பாரதிய ஜனதாவின் அதிர்ஷ்டத்தை உயர்த்த பிரதமர் மோடி, சுரேஷ்கோபியை கையில் எடுத்தார்.

    அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்கியது. அந்த பதவி 2022-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. அதன் பிறகு திருச்சூரில் பாரதிய ஜனதா செல்வாக்கை உயர்த்த பிரதமர் மோடி, சுரேஷ் கோபியை தேர்ந்தெடுத்தார். அவர் மூலம் பல்வேறு பணிகளை பிரதமர் மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து தற்போதைய மக்களவை தேர்தலிலும் திருச்சூர் தொகுதியில் போட்டியிட சுரேஷ்கோபிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரசின் மூத்த தலைவரான முரளீதரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் சுனில்குமார் ஆகியோரை எதிர்த்து களம் காண்கிறார்.

    திருச்சூர் தொகுதியில் அவரது வெற்றிக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர். அவரது வெற்றியின் மூலம் கேரளாவில் தனது கணக்கை திறக்க வேண்டும் என்று நம்பிக்கையில் பாரதிய ஜனதா உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விலைவாசி உயர்வு, மக்களை பாதிக்கும் பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் தவறிவிட்டார்.
    • அதற்குப் பதிலாக பொருத்தமற்ற விசயத்தில் கவனம் செலுத்துகிறார். பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுதினம் (ஏப்ரல் 26-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்று மாலை ஆறு மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய இருப்பதால் நட்சத்திர தலைவர்கள் கேரளாவை முற்றுகையிட்டு இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி இன்று கேரளாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    பிரதமர் மோடி மக்களுக்காக ஏதும் செய்யவில்லை. உண்மையான பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். விலைவாசி உயர்வு, மக்களை பாதிக்கும் பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் தவறிவிட்டார். அதற்குப் பதிலாக பொருத்தமற்ற விசயத்தில் கவனம் செலுத்துகிறார். பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இந்த மக்களவை தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்பை பாதுகாப்பதற்கான வாய்ப்பு. முன்னேற்றம் குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். உண்மையான பிரச்சனை குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10 ஆண்டுகளாக கடுமையாக அதிகரித்தது. அதேபோல் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு பிரயங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    • மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது.
    • சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா, கேரள மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது. சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான எல்.டி.எஃப், காங்கிரஸ் தலைமையலான யு.டி.எஃப். பல வருடங்களாக இந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கப்பட்டது.

    காங்கிரஸ் கூட்டணி பாப்புலர் பிரன்ட்ஆஃப் இந்தியா வெளிப்படையாக ஆதரவு எனத் தெரிவித்துள்ளது. அதன்மீதான தடை குறித்து இடது சாரி கூட்டணி அமைதி காத்து வருகிறது. அது வேளையில் பிரதமர் மோடி இதுபோன்ற அமைப்புகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக பணியாற்றி கொண்டிருக்கிறார்" என்றார்.

    • கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது.
    • வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து வாளிகளில் இருந்த குண்டுகளை கைப்பற்றினர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தலின் 2-வது கட்ட வாக்குப்பதிவு கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெற உள்ளது. இதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் தனியார் தோட்டத்தில் இருந்து இரும்பு வெடிகுண்டுகள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு இன்று காலை ஒரு பெண் புல் வெட்டச் சென்றுள்ளார். அப்போது அங்கு 2 வாளிகளில் 9 இரும்பு வெடிகுண்டுகள் கேட்பாரற்ற நிலையில் இருப்பதை அவர் பார்த்துள்ளார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து வாளிகளில் இருந்த குண்டுகளை கைப்பற்றினர். அவை இரும்பு குண்டுகள் என தெரியவந்தது.

    அதனை அங்கு பதுக்கியது யார்? எதற்காக பதுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் பானூர் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை அதிகமாக தாக்கி பேசினார்.
    • காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார் என அன்வர் எம்.எல்.ஏ. பேசினார்.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், கேரள மாநிலத்தில் தற்போதைய மக்களவை தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. அவர்கள் அனைத்து தொகுதிகளிலும் இரு கூட்டணிகளாக இருந்து களம் காணுகின்றனர்.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். இதனால் இரு கட்சியினரும் எதிரும் புதிருமாக இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    மேலும் இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பிரசாரம் செய்தார்கள். ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை அதிகமாக தாக்கி பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில் கேரள மாநிலம் நீலம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அன்வர் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார். காந்தி என்ற குடும்ப பெயரை விடுவித்து ராகுல் என்று தான் அவரை அழைக்க வேண்டும். ராகுலின் டி.என்.ஏ.வை ஆய்வு செய்யவேண்டும் என்று பேசினார்.

    அவரது இந்த பேச்சுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆதரித்திருக்கிறார். மேலும் அவர், 'ராகுல் முதிர்ச்சியற்றவர், சுதந்திரமாக சிந்திக்க முடியாதவர். உள்ளூர் தலைவர்களின் வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்கிறார். அதனால் தான் தனது பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று ராகுலிடம் கேட்டுக்கொண்டேன்' என்றார்.

    இந்நிலையில் அன்வர் எம்.எல்.ஏ. மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கருத்து தெரிவித்த அன்வர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹாசன் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் அவர் தனது புகாரில், 'மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்டேவின் மறு அவதாரம் அன்வர். கோட்சேவின் தோட்டாக்களை விட அன்வரின் வார்த்தைகள் பெரிய ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. அன்வரின் கருத்துக்கள் பினராயி விஜயனின் ஆதரவுடன் கூறப்பட்டவை. ராகுல் காந்தியை அவமதித்தது மட்டுமின்றி ராஜீவ்காந்தியின் தியாகத்தையும் அவர் அவமதித்துள்ளார்' என்று கூறியிருக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாவோயிஸ்டுகள் வந்த தகவலை அறிந்த வனத்துறையினர் கம்பமலை பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
    • மாவோயிஸ்டுகள் கம்பமலை கிராமத்திற்கு துப்பாக்கியுடன் சென்று பொதுமக்களை சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் கண்ணூரில் உள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அவர்கள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமப் பகுதிக்குள் அவ்வப்போது வந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மானாந்தவாடி பகுதியில் உள்ள வன அலுவலகத்திற்குள் ஆயுதங்களுடன் அதிரடியாக புகுந்த மாவோயிஸ்டு கும்பல், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியது. மேலும் அலுவலகத்தை அடித்து உடைத்து சூறையாடியது.

    இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள வனப்பகுதிகள் மட்டுமின்றி தமிழக வனப்பகுதிகளிலும் மாவோயிஸ்டு வேட்டை நடத்தப்பட்டது. மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட கம்பமலை பகுதிக்குள் இன்று காலை 4 மாவோயிஸ்டுகள் புகுந்தனர். துப்பாக்கியுடன் வந்த அவர்களை பார்த்த கம்பமலை பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்களை பார்த்து வருகிற மக்களவை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று மாவோயிஸ்டுகள் வலியுறுத்தினர்.

    மேலும் அரசுக்கு கோஷங்களும் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களிடம் தங்களது கருத்துக்களை வெகுநேரம் தெரிவித்தப்படி இருந்த மாவோயிஸ்டுகள் பின்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    மாவோயிஸ்டுகள் வந்த தகவலை அறிந்த வனத்துறையினர் கம்பமலை பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் துப்பாக்கியுடன் வந்த மாவோயிஸ்டுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மாவோயிஸ்டுகள் கம்பமலை கிராமத்திற்கு துப்பாக்கியுடன் சென்று பொதுமக்களை சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த வீடியோ காட்சியில் மாவோயிஸ்டுகள் 4 பேரின் முகமும் தெளிவாக தெரிகிறது.

    அதன் மூலம் மாவோயிஸ்டுகள் 4 பேர் யார்? என்பதை வனத்துறையினர் அடையாளம் கண்டு உள்ளனர். அதன் அடிப்படையில் கிராமத்துக்குள் வந்த மாவோயிஸ்டுகளை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • கேரளாவில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்துகள் தெரிவித்தார்.
    • இது அவர் பக்குவமற்ற அரசியல்வாதி என காட்டுகிறது என முதல் மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

    திருவனந்தபுரம்:

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.

    காங்கிரசுக்கு எதிராக கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை இறக்கி கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஓட்டுகள் பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமைய கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

    இதேபோல், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தபோதும், அவர்கள் தங்கள் மாநிலங்களில் தனித்தனியாகவே போட்டியிடுகின்றனர். தங்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக இறக்கி உள்ளனர். காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் கூட்டணிக்கான முக்கியத்துவம் அளிக்கப்படாமல் அக்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

    இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படாமல் உள்ளார். இது பிரசாரத்தில் கட்சிகள் தலைவரை முன்னிறுத்துவதற்கு முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால், இந்தியா கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டில் பல தீவிர அரசியல் முன்னேற்ற விசயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை. அவர் ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை. இதுவே நாட்டிலுள்ள மக்களின் அனுபவம். இதுபற்றி நாம் விமர்சிப்பதில் இருந்து விலகியே இருக்கிறோம்.

    ஏனெனில், அவர் வேறொரு கட்சியில் இருந்து வந்தவர். அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். ஆனால், பொது தேர்தல் நடக்க கூடிய நேரமிது. இந்த தருணத்தில், அவர் கேரளாவுக்கு வந்து மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என கடுமையாக சாடியுள்ளார்.

    • கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது
    • இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது

    தமிழ்நாடு உள்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக பாராளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது.

    இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியினர் தாக்கியதால் கண்ணில் காயம் ஏற்பட்டதாக கண்ணில் பிளாஸ்திரியுடன் கொல்லம் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகர் கிருஷ்ணகுமார் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் பாஜக தொண்டர் சனல் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது, நான் தான் தவறுதலாக கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் காவல்துறை சனலுக்கு ஜாமீன் வழங்கியது.

    ×