search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல். திருவிழா 2024

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார்
    • அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும்

    இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டத்தில் இருப்பதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார். அப்போது பௌலிங் மாற்றம், பீல்டிங் மாற்றம் குறித்த ஆலோசனைகளை டோனியிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சமயத்தில் சம்மதம் தெரிவித்த டோனி பௌலர்கள் மாற்றம் குறித்தும், பீல்டர்கள் மாற்றம் குறித்த திட்டத்தையும் எடுத்துரைத்தார்.

    ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே உடனடியாக ருதுராஜிடம் அடுத்து வரும் போட்டிகளில் என்னிடம் இது போன்ற ஆலோசனை கேட்க வேண்டாம் என்று டோனி நேரடியாக கூறிவிட்டதாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

    ஏனெனில் அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும். அதனால் தான் அவரையே முடிவெடுக்க சொல்லி டோனி கடைசியாக ஒருமுறை அட்வைஸ் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது
    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 10-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 10-வது இடத்தில் உள்ளது.

    குஜராத் டைட்டன்ஸ் இதற்கு முந்தைய ஆட்டத்தில் டெல்லியிடம் தோல்வியடைந்தது. அதேநேரத்தில், பெங்களூரு அணி பலம் பொருந்திய ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தி வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு 1-ல் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் அணி 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

    • ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற 4-வது இடத்தில் உள்ளது.
    • ரகானே நன்றாக விளையாடக் கூடியவர் ஒரு சில ஆட்டத்தை வைத்து முடிவு செய்துவிடக் கூடாது.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டித் தொடரின் 46-வது 'லீக்' ஆட்டமாகும். சேப்பாக்கத்தில் நடைபெறும் 5-வது போட்டியாகும்.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 84 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து சி.எஸ்.கே. 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 2 ஆட்டத்தில் தோற்றது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பது அவசியமாகும்.

    ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.


    இன்றைய போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி கூறியதாவது:-

    சேப்பாக்கம் மைதானத் தில் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்சின் சாதனை நன்றாகவே இருந்தது. ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலமாக இருக்கிறது. கடந்த சில ஆட்டத்தில் பனித்துளி தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததாக கருதுகிறேன். பனியின் தாக்கம் சி.எஸ்.கே. பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தது. லக்னோவுக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் நேர்த்தியுடன் வீச இயலவில்லை.

    ஜடேஜா கடந்த சில ஆண்டுகளாக பின் வரிசையில் ஆடி வருகிறார். தற்போது 4-வது வீரராக ஆடி வருகிறார். சூழ்நிலைக்கு தகுந்தவாறு களம் இறக்கப்படும் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல் படுகிறார்.

    ரகானே நன்றாக விளையாடக் கூடியவர் ஒரு சில ஆட்டத்தை வைத்து முடிவு செய்துவிடக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நடப்பு சாம்பியன் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி கண்டு 8 புள்ளி பெற்றுள்ளது.
    • சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணி ஒருபோதும் தோற்றதில்லை.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு அரங்கேறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியன் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி கண்டு 8 புள்ளி பெற்றுள்ளது. சென்னை அணி கடைசியாக லக்னோ மற்றும் சொந்த மண்ணில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டங்களில் முறையே 8 விக்கெட், 6 விக்கெட் வித்தியாசத்தில் அடுத்தடுத்து தோல்வி கண்டது. முந்தைய ஆட்டத்தில் சொந்த மண்ணில் 210 ரன்கள் குவித்தும் எதிரணியை அதற்குள் கட்டுப்படுத்த தவறியது. பனியின் தாக்கம் காரணமாக சுழற்பந்து வீச்சு கைகொடுக்காததால் உள்ளூரில் சென்னை அணி 3 வெற்றிக்கு பிறகு முதல் சறுக்கலை சந்தித்தது. இந்த சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பி அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த வேண்டிய நெருக்கடியில் சென்னை அணி உள்ளது.

    சென்னை அணியின் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம் உள்பட 359 ரன்), ஷிவம் துபே (3 அரைசதம் உள்பட 311) ஆகியோர் அருமையாக செயல்பட்டு வருகிறார்கள். ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கணிசமாக பங்களிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா, துஷர் தேஷ்பாண்டே, தீபக் சாஹர் வலுசேர்க்கிறார்கள்.

    அதிரடியில் அசத்தி வரும் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்ததுடன், ரன் குவிப்பில் புதிய சாதனை படைத்த அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றியை ருசித்த நிலையில் முந்தைய ஆட்டத்தில் 35 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் 207 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 171 ரன்னில் முடங்கியது. இலக்கை விரட்டுகையில் ஆக்ரோஷமான ஆட்டத்தால் தொடக்க மற்றும் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. இருப்பினும் தங்களது தடாலடி பேட்டிங் தொடரும் என்றும் இனி வரும் ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்ய விரும்புவதாகவும் அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (325 ரன்), அபிஷேக் ஷர்மா (288), ஹென்ரிச் கிளாசென் (275), ஷபாஸ் அகமது அசத்துகிறார்கள். மார்க்ரம்மிடம் இருந்து இன்னும் அதிரடி வெளிப்படவில்லை. பந்து வீச்சில் நடராஜன், கம்மின்ஸ், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    தங்களது சொந்த ஊரில் நடந்த சென்னைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. எனவே அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணி ஒருபோதும் தோற்றதில்லை. சொந்த மண்ணில் அந்த அணிக்கு எதிரான 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. அந்த பெருமையை தக்கவைத்து கொள்ளவும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் சென்னை அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 14 ஆட்டங்களில் சென்னையும், 6 ஆட்டங்களில் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, டோனி, தீபக் சாஹர், துஷர் தேஷ்பாண்டே அல்லது ஷர்துல் தாக்குர், முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா.

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ்குமார் ரெட்டி, அப்துல் சமத், ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனட்கட் அல்லது நடராஜன்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

    பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் - குஜராத் கேப்டன் சுப்மன் கில்.

    பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் - குஜராத் கேப்டன் சுப்மன் கில்.

     

    முன்னதாக, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது முக்கியமானதாகும். குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் நல்ல பார்மில் உள்ளனர். ராகுல் திவேதியா, டேவிட் மில்லர், விருத்திமான் சஹா நிலைத்து நின்று அசத்தினால் அந்த அணியின் பேட்டிங் மேலும் பலம் பெறும். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், சாய் கிஷோர், நூர் அகமது எதிரணியினருக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். அதிக ரன்களை வாரி வழங்கும் வேகப்பந்து வீச்சார்கள் மொகித் ஷர்மா, சந்தீப் வாரியர் ஏற்றம் காண வேண்டியது இன்றியமையாததாகும்.

    பெங்களூரு அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொடரும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அத்துடன் வாய்ப்பு முடிந்து போய்விடும். எனவே முந்தைய ஆட்டத்தை போல் அந்த அணி வீரர்கள் அச்சமின்றி அதிரடியாக ஆடுவதில் கவனம் செலுத்துவார்கள். கடந்த ஆட்டத்தில் 35 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது நிச்சயம் அந்த அணிக்கு நம்பிக்கையை அதிகரித்து இருக்கும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (430 ரன்), கேப்டன் டுபிளிஸ்சிஸ், தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், கேமரூன் கிரீன் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது. யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா உள்ளிட்ட பவுலர்கள் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 2 முறையும், பெங்களூரு அணி ஒரு தடவையும் வெற்றி கண்டுள்ளன.

    • சாம்சன் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • துருவ் ஜூரல் 52 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணியின் டி காக், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். ஆனால் அடுத்த பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் டக்அவுட்டில் வெளியேறினார். இதன்மூலம் 2 ஓவரில் 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை லக்னோ அணி இழந்தது.

    அதன்பின் கேஎல் ராகுல் உடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. மேலும், அணியின் ரன்ரேட்டை 10-க்கு கொண்டு வந்தது. பவர்பிளேயில் 46 ரன்கள் அடித்திருந்தது. 10 ஓவரில் 94 ரன்கள் சேர்த்திருந்தது.

    கேஎல் ராகுல் 31 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் தீபக் ஹூடா 30 பந்தில் அரைசதம் அடித்தார். அ அரைசதம் அடித்த அடுத்த பந்தில் தீப் ஹூடா ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். லக்னோ அணி 15 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    16-வது ஓவரின் முதல் பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். 5-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார்.

    18-வது ஓவரில் கே.எல். ராகுல் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் அவர் 76 ரன்கள் அடித்தார்.

    கடைசி மூன்று ஓவரில் குறைவான ரன்களே கிடைக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்தது.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 24, பட்லர் 34 என வெளியேறினர். அடுத்து வந்த ரியான் பராக் 14 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து சாம்சன்- ஜூரல் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். லக்னோ தரப்பில் யாஷ் தாகூர், ஸ்டோய்னிஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • தீபக் ஹூடா 31 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • கே.எல். ராகுல் 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் 76 ரன்கள் அடித்தார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணியின் டி காக், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். ஆனால் அடுத்த பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் டக்அவுட்டில் வெளியேறினார். இதன்மூலம் 2 ஓவரில் 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை லக்னோ அணி இழந்தது.

    அதன்பின் கேஎல் ராகுல் உடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. மேலும், அணியின் ரன்ரேட்டை 10-க்கு கொண்டு வந்தது. பவர்பிளேயில் 46 ரன்கள் அடித்திருந்தது. 10 ஓவரில் 94 ரன்கள் சேர்த்திருந்தது.

    கேஎல் ராகுல் 31 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் தீபக் ஹூடா 30 பந்தில் அரைசதம் அடித்தார். அ அரைசதம் அடித்த அடுத்த பந்தில் தீப் ஹூடா ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். லக்னோ அணி 15 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    16-வது ஓவரின் முதல் பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். 5-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார்.

    18-வது ஓவரில் கே.எல். ராகுல் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் அவர் 76 ரன்கள் அடித்தார்.

    கடைசி மூன்று ஓவரில் குறைவான ரன்களே கிடைக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்தது. 

    • டிம் டேவிட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • திலக் வர்மா 32 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி மெக்கர்க் (27 பந்தில் 84 ரன்), ஸ்டப்ஸ் (25 பந்தில் 48 ரன்), ஷாய் ஹோப் (17 பந்தில் 41 ரன்) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் டெல்லி அணி 257 ரன்கள் குவித்தது.

    பின்னர் 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. பவர்பிளேயான முதல் ஆறு ஓவரில் மும்பை இந்தியன்ஸ் ரன்கள் குவிக்க திணறியது. இஷான் கிஷன் 14 பந்தில் 20 ரன்களும், ரோகித் சர்மா 8 பந்தில் 8 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 13 பந்தில் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆறு ஓவரில் 65 ரன்கள் அடிப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. என்றபோதிலும் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் கொடுக்க முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா 24 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வதேரா 2 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

    6-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஒரு கட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறும் என்ற நிலைக்கு வந்தது.

    அந்த நேரத்தில்தான் 18-வது ஓவரின் 4-வது பந்தில் டிம் டேவிட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ரிசிக் சலாம் வீசினார். இந்த ஓவரில் மும்பை அணிக்கு 16 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா எதிர்கொண்டார். முகேஷ் குமார் இந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்களுக்கு ஓடும்போது திலக் வர்மா ரன்அவுட் ஆனார். அவர் 32 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். அத்துடன் மும்பை அணியின் நம்பிக்கை வீணானது.

    கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.

    • மெக்கர்க் 27 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸ் உடன் 84 ரன்கள் விளாசினார்.
    • ஸ்டப்ஸ் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் பிரேசர் மெக்கர்க்- பொரேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 18 ரன் கிடைத்தது.

    3-வது ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் மெக்கர்க் 3 பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 18 ரன் கிடைத்தது.

    4-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய மெக்கர்க் 15 பந்தில் அரைசதம் விளாசினார். மேலும் இந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். டெல்லி அணிக்கு இந்த ஓவரில் 14 ரன் கிடைத்தது.

    5-வது ஓவரை ஹர்திப் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் இரணடு பவுண்டரி, இரண்டு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 20 ரன் கிடைத்தது.

    6-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் பும்ரா 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி அணி பவர்பிளேயான முதல் ஆறு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்தது.

    ஹர்திக் பாண்ட்யா வீசிய 7-வது ஓவரில் பொரேல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். மெக்கர்க் ஒரு சிக்ஸ் அடித்தார். ஓவர் த்ரோ மூலம் ஐநது ரன்கள் கிடைக்க டெல்லி 21 ரன்கள் குவித்தது.

    அடுத்த ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மெக்கர்க் ஆட்டமிழந்தார். மெக்கர்க் 27 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸ் உடன் 84 ரன்கள் விளாசினார். இவர் ஆட்டமிழக்கும்போது டெல்லி 7.3 ஓரில் 114 ரன்கள் குவித்திருந்தது.

    அதன்பின் ரன் உயர்வு மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது. பொரேல் 27 பந்தில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 12 ஓவரில் 150 ரன்னைத் தாண்டியது. ஷாய் ஹோப் ஐந்து சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    16.1 ஓவரில் டெல்லி அணி 100 ரன்னைத் தொட்டது. 18-வது ஓவரை வுட் வீசினார். இந்த ஓவரில் ஸ்டப்ஸ் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்கள் விறாசினார்.

    19-வது ஓவரை பும்ரா வீசினார். இநத் ஓவரில் ரிஷப் பண்ட் 19 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் பும்ரா 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ் உடன் 17 ரன்கள் கிடைக்க டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சர் பட்டேல் 6 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
    • மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திப் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. ஜேக் பிரேசர்-மெக்கர்க், 2. குமார் குஷாக்ரா, 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ஸ்டப்ஸ், 6. அபிஷேக் பொரேல், 7. அக்சார் பட்டேல், 8. குல்தீப் யாதவ், 9. லிசாட் வில்லியம்ஸ், 10. முகுஷ் குமார், 11. கலீல் அகமது.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- ரிசிக் தர் சலாம், பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால், ரிக்கி புய், சுமித் குமார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. இஷான் கிஷன், 3. திலக் வர்மா, 4. நேஹால் வதேரா, 5. ஹர்திக் பாண்ட்யா, 6. டிம் டேவிட், 7. முகமது நபி, 8. பியூஷ் சாவ்லா, 9. லுக் வுட், 10. பும்ரா, 11. நுவான் துஷாரா.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- சூர்யகுமார் யாதவ், நமன் திர், ஷாம்ஸ் முலானி, தெவால்ட் பிரேவிஸ், குமார் கார்த்திகேயா

    • சி.எஸ்.கே.வுக்கு எதிராக 2-வதாக ஆடியே வெற்றி பெற்றது.
    • இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும்.

    17- வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்'சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5- வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 4 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 3-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட்) பெற்றது. ஒன்றில் (லக்னோ 6 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 4 போட்டியில் ஒன்றில் வெற்றி (மும்பை 20 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை நாளை (28-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் 5-வது ஆட்டம் இதுவாகும். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அவர்கள் மற் றொரு கோலாகலத்துக்கு தயாராகி விட்டனர்.

    ஐதராபாத்தில் கடந்த 5- ந் தேதி நடந்த ஆட்டத்தில் தோற்றதற்கு சி.எஸ்.கே. பழிதீர்க்கும் ஆர்வத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த போட்டியில் 210 ரன் குவித்தும் சென்னை அணி தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். பந்துவீச்சும், பீல்டிங்கும் மிகவும் மோசமாக இருந்தது. பிளே ஆப் சுற்றுக்கு நுழைய இனி ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுவது அவசியமாகும்.

    பேட்டிங்கில் ஷிவம் துபே 22 சிக்சர்களுடன் 311 ரன்னும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1 சதம், 2 அரை சதத்துடன் 349 ரன்னும் எடுத்து நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான் 12 விக்கெட்டும், பதிரனா 11 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா இருக்கிறார்.

    ரகானே தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். நாளைய போட்டிக்கான அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

    டோனி கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் சி.எஸ்.கே. ரசிகர்கள் அவரது பேட்டிங்கை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 3- வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இந்த தொடரில் ஐதராபாத் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் சாதனைகளை படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்தால் அந்த அணி ஸ்கோரை அதிகமாக குவித்து விடுகிறது. அதே நேரத்தில் 2- வது பேட்டிங் செய்யும் போது திணறி விடுகிறது.

    சி.எஸ்.கே.வுக்கு எதிராக 2-வதாக ஆடியே வெற்றி பெற்றது. இதனால் சேப்பாக்கத்தில் நம்பிக்கையுடன் விளையாடும்.

    ஐதராபாத் அணியில் டிரெவிஸ் ஹெட் (325 ரன்), அபிஷேக் சர்மா (288), கிளாசன் (275), ஷபாஸ் அகமது உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்து வீச்சில் டி.நடராஜன் (12 விக்கெட்), கேப்டன் கம்மின்ஸ் (10) நல்ல நிலையில் இருக்கிறார்கள். இரு அணிகளும் 20 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 14-ல், ஐதராபாத் 6-ல் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக 4 தொடக்க வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்தனர்.
    • அதிக சிக்சர் அடித்த அணி என்ற சாதனையை பஞ்சாப் படைத்தது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவுக்கு எதிராக 262 ரன் இலக்கை எடுத்துப் புதிய வரலாறு படைத்தது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணிக்கு 262 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பில்சால்ட் 37 பந்தில் 75 ரன்னும் (6 பவுண்டரி, 6 சிக்சர்), சுனில் நரீன் 32 பந்தில் 71 ரன்னும் (9 பவுண்டரி, 4 சிக்சர்), வெங்கடேஷ் அய்யர் 23 பந்தில் 39 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், சாம்கரண், ராகுல் சஹார் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 8 பந்து எஞ்சியிருந்த நிலையில் 262 ரன் இலக்கை எடுத்து 20 ஓவர் போட்டியில் புதிய வரலாறு படைத்தது. அந்த அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 48 பந்தில் 108 ரன்னும் (8 பவுண்டரி, 9 சிக்சர்), சஷாங் சிங் 28 பந்தில் 68 ரன்னும் (2 பவுண்டரி, 8 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங் 20 பந்தில் 54 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். பஞ்சாப் அணிக்கு கிடைத்த 3-வது வெற்றி இதுவாகும். கொல்கத்தா அணிக்கு 3-வது தோல்வி ஏற்பட்டது.

    இந்தப் போட்டியில் பல புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 262 ரன்னை சேஸ் செய்ததன் மூலம் 20 ஓவர் போட்டியில் பஞ்சாப் அணி புதிய சாதனை படைத்தது.

    இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 259 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இதை பஞ்சாப் அணி நேற்று முறியடித்துப் புதிய உலக சாதனை நிகழ்த்தியது.

    ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை சேசிங் செய்ததே சாதனையாக இருந்தது. மேலும் அதே ராஜஸ்தான் அணி இதே கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக கடந்த 16-ந்தேதி 224 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்று இருந்தது. இந்த ரன் சேசிங்கை பஞ்சாப் அணி நேற்று முறியடித்தது.

    இந்த ஆட்டத்தில் மொத்தம் 42 சிக்சர்கள் (கொல்கத்தா 18 + பஞ்சாப் 24) அடிக்கப்பட்டன. இது புதிய சாதனையாகும். ஐதராபாத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி சன்ரைசர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதிய போட்டியில் 38 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

    24 சிக்சர்கள் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த அணி என்ற சாதனையை பஞ்சாப் படைத்தது. கடந்த 20-ந்தேதி டெல்லிக்கு எதிராக ஐதராபாத் 22 சிக்சர்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதை பஞ்சாப் முறியடித்து அதிக சிக்சர் மழை பொழிந்தது.

    ஒட்டுமொத்த 20 ஓவரில் 2-வது அதிக சிக்சர்கள் ஆகும். மங்கோலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த ஆட்டத்தில் நேபாளம் 26 சிக்சர்கள் அடித்து இருந்தது.

    ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக 4 தொடக்க வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்தனர். கொல்கத்தா அணியில் பில்சால்ட் (75), சுனில் நரீன் (71), பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் (54), பேர்ஸ்டோ (108) ஆகியோர் அரை சதத்துக்கு மேல் ரன்களை எடுத்தனர்.

    மேலும் 4 தொடக்க வீரர்களும் சேர்ந்து 308 ரன்கள் எடுத்துள்ளனர். இதுவும் ஐ.பி.எல்.லில் சாதனையாகும்.

    இதற்கு முன்பு கடந்த ஆண்டு குஜராத்-லக்னோ போட்டியில் தொடக்க வீரர்கள் 293 ரன்கள் எடுத்து இருந்தனர்.

    மேலும் 5 அரை சதங்கள் 25 அல்லது அதற்கு குறைவான பந்துகளில் (ஸ்டிரைக்ரேட் 200) அடிக்கப்பட்டதும் சாதனையாகும். பில்சால்ட் 25 பந்திலும், நரீன் 23 பந்திலும், பிரப்சிம்ரன் சிங் 18 பந்திலும், பேர்ஸ்டோ 23 பந்திலும், சஷாங் சிங் 23 பந்திலும் அரை சதத்தை தொட்டனர்.

    பஞ்சாப் அணி 7-வது முறையாக 200 ரன்னுக்கு மேற்பட்ட இலக்கை சேஸ் செய்துள்ளது. இதற்கு முன்பு மும்பை அணி 6 தடவை 200 ரன்னுக்கு மேற்பட்ட இலக்கை எடுத்து இருந்தது.

    • டெல்லி அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 43-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 224 ரன்கள் குவித்த டெல்லி எதிரணியை 220 ரன்னுக்கு கட்டுப்படுத்தி 'திரில்' வெற்றியை தனதாக்கியது. முந்தைய 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றியை ருசித்த நம்பிக்கையோடு இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பண்ட் அசத்தி வருகிறார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஜேக் பிராசர் மெக்குர்க், ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் பிரித்வி ஷா கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். மோசமான பார்ம் காரணமாக கடந்த ஆட்டத்தில் வெளியில் வைக்கப்பட்ட டேவிட் வார்னருக்கு பதிலாக களம் கண்ட ஷாய் ஹோப் சோபிக்காததால் வார்னருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். அன்ரிச் நோர்டியா அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது தலைவலியாக இருக்கிறது. இம்பேக்ட் வீரராக முந்தைய ஆட்டத்தில் ஆடிய ராசிக் சலாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் தனது இடத்தை தக்கவைத்து கொள்வார்.

    5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி கண்டு 6 புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் பார்மில் உள்ளனர். இஷான் கிஷன், டிம் டேவிட், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டால் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்டு கோட்ஜீ பலம் சேர்க்கிறார்கள். ஆனால் மற்ற பவுலர்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது பாதகமாக உள்ளது.

    கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் கண்ட மோசமான தோல்வியை மறந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப மும்பை முனைப்பு காட்டும். இந்த சீசனில் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விக்கு பிறகு டெல்லியை 29 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ததால் மும்பை அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். ஆனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19 ஆட்டங்களில் மும்பையும், 15 ஆட்டங்களில் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.

    லக்னோவில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் (குஜராத் அணிக்கு எதிராக) கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறது. அந்த அணியின் பேட்டிங்கில் ரியான் பராக், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் பட்டையை கிளப்புகிறார்கள். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா உள்ளிட்டோர் கைகொடுக்கிறார்கள்.

     

    லக்னோ அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூரில் நடைபெற்ற கடந்த 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக சென்னையை வீழ்த்திய அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்கும் ஆவலில் உள்ளது. லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன், கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய மார்கஸ் ஸ்டோனிஸ், குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் யாஷ் தாக்குர், மொசின் கான், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    ஜெய்ப்பூரில் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்று இருந்த லக்னோ அணி அதற்கு பழிதீர்க்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ராஜஸ்தான் அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த மோதலில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வாகை சூடினால் ஏறக்குறைய பிளே-ஆப் சுற்றை எட்டி விடும்.

    இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    ×