search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு: தும்கூர் பகுதியில் போலீசார் இரவு முழுவதும் சோதனை
    X

    ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு: தும்கூர் பகுதியில் போலீசார் இரவு முழுவதும் சோதனை

    • வழக்கை மாநில அரசு தேசிய புலனாய்வுக்கு மாற்றியது.
    • கண்காணிப்பு கேமிராவில் பதிவான வாலிரை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கபேவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக போலீசார் மேற்கொண்ட ஆய்வில் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்து காட்சியில் வாலிபர் ஒருவர் ஓட்டலுக்கு தலையில் தொப்பி மற்றும் முககவசம் அணிந்து வந்து ரவா இட்லி சாப்பிட்டு விட்டு ஒரு பையை விட்டு விட்டு சென்றதும், அந்த பையில் இருந்து குண்டு வெடித்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வழக்கை மாநில அரசு தேசிய புலனாய்வுக்கு மாற்றியது.

    தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறனர். மேலும் கண்காணிப்பு கேமிராவில் பதிவான வாலிரை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வாலிபரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அந்த சந்தேக நபர் கர்நாடக மாநிலம் தும்கூரில் தலைமறைவாக இருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 28 வாகனங்களில் போலீசார் தும்கூர் நகருக்கு இரவு சென்றனர்.

    பின்னர் தும்கூர் போலீசாருடன் இணைந்து இரவு முழுவதும் அங்குள்ள ரெயில் நிலையம், பேருந்து நிலையம், மாநகரட்சி வளாகம், மண்டிப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    இதனால் தும்கூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×