என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிங்கப்பெண்ணே
- 1
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 109 | 140 |
Point | 319 | 212 |
விளையாட்டு துறையில் சாதிக்க போராடும் பெண்ணின் கதை.
கதை களம்
நாயகி ஷில்பா மஞ்சுநாத் நீச்சல் வீராங்கனையாக சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால் அது நடக்காமல் போகிறது. அதனால், சென்னையில் நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே அவர் தனது சொந்த ஊரான தென்காசிக்கு பெற்றோரை சந்திக்க செல்கிறார். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஆர்த்தி, நீச்சல், வேகமாக சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஓடுவது என்று அனைத்திலும் திறமையானவராக இருக்கிறார்.
இதற்கிடையே, பெற்றோர் இல்லாத ஆர்த்திக்கு ஆதரவாக இருந்த அவரது பாட்டி காலமாகி விடுகிறார். அதன்பிறகு ஆர்த்தியை தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லும் ஷில்பா மஞ்சுநாத், அவருக்கு முறையாக நீச்சல், சைக்கிள் மற்றும் ஓட்டப்பந்தய பயிற்சியை அளித்து அவரை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்த முடிவு செய்கிறார். அதன்படி, பயிற்சியில் ஈடுபடும் ஆர்த்தி, மாவட்ட கலெக்டரின் மகளை விட அதிவேகமாக ஓடுவதோடு, தேசிய அளவிலான சாதனை நேரத்தை எளிதில் கடந்து விடுகிறார். இதனால், மாவட்ட கலெக்டர் ஆர்த்தியை போட்டியில் பங்கேற்க விடாமல் தடுக்க முயற்சிக்கிறார்.
இறுதியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியின் முயற்சியை தடுத்தாரா? கலெக்டரை எதிர்த்து ஷில்பா மஞ்சுநாத், ஆர்த்தியை வெற்றி பெற வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ட்ரைஹத்லான் விளையாட்டில் தேசிய அளவில் பல முறை வெற்றி பெற்றிருக்கும் வீராங்கனை ஆர்த்தி, இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஆர்த்தி விளையாட்டில் மட்டும் அல்ல நடிப்பிலும் வெற்றி பெற கடினமாக உழைத்திருக்கிறார்.
பயிற்சியாளராக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத், அந்த வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் தோற்றத்தில் பிட்டாக இருக்கிறார். நீச்சல் உடையிலும் எடுப்பாக இருப்பதோடு, விளையாட்டு பயிற்சியாளருக்கான மிடுக்கோடு நடித்து கவனம் ஈர்க்கிறார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் பிரேம், பயிற்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் தீபக் நம்பியார், பசங்க சிவகுமார், ஷில்பா மஞ்சுநாத்தின் தந்தையாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ், ஆர்த்தியின் முறை மாமனாக நடித்திருக்கும் செண்ட்ராயன் என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
விளையாட்டு போட்டியை மையமாக கொண்ட திரைப்படங்களுக்கு என்று ஒரு பாணி இருக்கிறது. அந்த பாணியை துளிகூட மாற்றாமல் அப்படியே பின்பற்றி பழைய பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெ.எஸ்.பி.சதீஷ். எந்தவித திருப்பமும் இன்றி, யூகிக்கும்படி சொல்லியிருப்பது ரசிகர்களை சலிப்படைய செய்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் தனது கேமரா மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் தேசிய அளவிலான ட்ரைஹத்லான் போட்டியை காட்சிப்படுத்திய விதம் வியக்க வைக்கிறது.
இசை
இசையமைப்பாளர் குமரன் சிவமணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ப்ரொடக்ஷன்
ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்