search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரியில் கடத்த முயன்ற 22 டன் ரேசன் அரிசி பறிமுதல்- 5 பேர் கைது
    X

    லாரியில் கடத்த முயன்ற 22 டன் ரேசன் அரிசி பறிமுதல்- 5 பேர் கைது

    • 50 கிலோ அளவிலான 452 மூட்டைகளில் 22 ஆயிரத்து 600 கிலோ ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது.
    • அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தருமபுரி:

    உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காவேரிப்பட்டணம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர்.

    அதில், 50 கிலோ அளவிலான 452 மூட்டைகளில் 22 ஆயிரத்து 600 கிலோ ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. அதை தொடர்ந்து லாரிக்கு பாதுகாப்பாக கார் வந்ததும் தெரிந்தது. இதையடுத்து லாரி, கார்களில் இருந்த விருதுநகர் மாவட்டம், வெள்ளியம்பலத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 48), தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த சேட்டு (28), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சுதாகர் (34), கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை நாகராஜ் (58), சேலம் மாவட்டம், ஓமலூர் ராமச்சந்திரன் (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரேசன் அரிசியை வாங்கி, கர்நாடக மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரிந்தது. அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ரேசன் அரிசி, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×