என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கண்டெய்னரில் அ.தி.மு.க. கட்சி சின்னம் பதித்த டி சர்ட்டுகள் பறிமுதல்
ByMaalaimalar3 April 2024 9:40 AM GMT
- டி சர்ட்டுகள் கரூர், மதுரைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
- கண்டெய்னர் லாரியை வெண்ணந்தூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
ராசிபுரம்:
சேலம் அருகே உள்ள மல்லூர் பகுதியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அதிகாரிகள் இன்று வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அ.தி.மு.க. கட்சி சின்னம் பதித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசர்ட்டுகள் இருப்பது தெரிய வந்தது. டி சர்ட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றி கண்டெய்னர் லாரி டிரைவர் மூர்த்தி (48) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்த டி சர்ட்டுகள் கரூர், மதுரைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட டி சர்ட்டுகளின் மதிப்பு ரூ.2லட்சத்து 36ஆயிரத்து 250 என தெரிய வந்தது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை வெண்ணந்தூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X