search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
    X

    திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

    • தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள் உள்ளன.
    • உடுமலை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிக்களுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிந்தது. இதையடுத்து திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலமாக அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று முடிந்தது.

    இந்தநிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கிடங்கு திறக்கப்பட்டு 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.

    கண்ட்ரோல் யூனிட், இ.வி.எம்., - வி.வி.பேட் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஜி.பி.எஸ்., பொருத்திய வாகனத்தில், 8 சட்டசபை தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது.

    தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள் உள்ளன. கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் தலா 360, விவிபேட் 390 அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவை தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படுகிறது. காங்கயம் தொகுதியில் 295 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 356, விவிபேட் 386 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்படுகிறது.

    அவினாசி சட்டமன்ற தொகுதியில் 313 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 378, விவிபேட் 410 அனுப்பி வைக்கப்பட்டது. இவை அவினாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இருப்பு வைக்கப்படுகிறது. திருப்பூர் வடக்கு தொகுதியில் 379 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 458, விவிபேட் 496 அனுப்பி வைக்கப்பட்டது. இவை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்படுகிறது.

    திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 292, விவிபேட் 317 அனுப்பி வைக்கப்பட்டது. இவை திருப்பூர் குமரன் பெண்கள் கல்லூரியில் இருப்பு வைக்கப்படுகிறது. பல்லடம் தொகுதியில் 412 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 498, விவிபேட் 539 அனுப்பி வைக்கப்பட்டது. அவை பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டது.

    உடுமலை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 355, விவிபேட் 385 அனுப்பி வைக்கப்பட்டன. இவை உடுமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இருப்பு வைக்கப்பட்டது. மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 347, விவிபேட் 375 அனுப்பி வைக்கப்பட்டன. இவை மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்படுகிறது. 8 தொகுதியில் கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு எந்திரங்கள் தலா 3 ஆயிரத்து 44-ம், விவிபேட் 3 ஆயிரத்து 298-ம் பயன்படுத்தப்படுகிறது.

    Next Story
    ×