என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பகண்டை கூட்டு ரோடு அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 1.68 லட்சம் பணம் பறிமுதல்
- சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லோடு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
- உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.
சங்கராபுரம்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் யாரும் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு ரோட்டில் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லோடு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உளுந்தூர்பேட்டை தாலுக்கா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த செவத்தான்(51), மற்றும் அவரது உறவினரான டிரைவர் சின்னப்பன் (36) என்பதும், அவர்கள் இருவரும் ஆடு வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.
அவர்கள் 28 ஆடுகளை அத்தியூர் வார சந்தையில் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் அப்பணத்தை பறிமுதல் செய்து வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்