search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
    X

    கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

    • பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மந்திர மூர்த்தி (வயது29). இவரும், இவரது நண்பர் செல்வ மாரியப்பன் என்பவரும் கடந்த 24-ந்தேதி இரவு கோவில்பட்டி வசந்த் நகர் பகுதியில் தண்டவாளத்தின் அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்நிலையில் போதையில் இருந்த மந்திர மூர்த்தியும், அவரது நண்பர் செல்வ மாரியப்பனும் ரெயில் முன்பு செல்பி எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது இருவரும் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டனர். இதில் மந்திர மூர்த்தி படுகாயம் அடைந்துள்ளார். செல்வ மாரியப்பன் லேசான காயம் அடைந்துள்ளார்.

    அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். படுகாயம் அடைந்த மந்திர மூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×