search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?: வெளியானது கருத்துக் கணிப்பு
    X

    சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?: வெளியானது கருத்துக் கணிப்பு

    • மிசோரம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.
    • வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.

    ராய்ப்பூர்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:

    சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா டுடே: பாஜக 36-40, காங்கிரஸ் 40-50

    இந்தியா டிவி: பாஜக 30-40, காங்கிரஸ் 46-56

    ஆஜ் தக்: பாஜக 36-46, காங்கிரஸ் 40-50

    ஜன் டிவி பாஜக: 34-45 காங்கிரஸ் 42-53

    இதையடுத்து, சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலைப் பிடித்துள்ளது என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    Next Story
    ×