search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல்: தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் பிரசாரம் நிறைவு
    X

    பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல்: தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் பிரசாரம் நிறைவு

    • ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.
    • முதல் கட்டமாக மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தலானது ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.

    தமிழ்நாடு, அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

    தமிழகத்தில் 39 தொகுதி, உத்தர பிரதேசத்தில் 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதி, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்டில் தலா 5 தொகுதிகள் உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகள் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 21 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×