search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் - பஜ்ரங் புனியா அறிவிப்பு
    X

    மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் - பஜ்ரங் புனியா அறிவிப்பு

    • மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சந்தித்தனர்.
    • ஜூன் 15-ம் தேதி வரை எவ்வித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என சாக்ஷி மாலிக் கூறினார்.

    புதுடெல்லி:

    மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை சந்தித்த பிறகு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாசெய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

    டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுகிறது. ஜூன் 15ம் தேதிக்குள் போலீஸ் விசாரணை முடிவடையும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி உள்ளோம், அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

    பாலியல் புகாரில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் 15-ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீதான விசாரணை நிறைவு பெறும். ஜூன் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும்.

    ஜூன் 15-ம் தேதி வரை எந்தவித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என கூறினார்.

    Next Story
    ×