search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்த்திட வேண்டும்.

    சிவகங்கை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இதுவரை மட்டும் மாவட்டத்தில் ரூ.24½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, சிவகங்கை மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால், நேற்று (26.03.2024) வரை ரொக்கம் ரூ.24 லட்சத்து 47ஆயிரத்து 900 உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதாக கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு தொடர்புடைய கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பிரதமரின் உத்தரவாதத்தை விட உபத்திரவாதம் தான் அதிகமாக உள்ளது.
    • பா.ம.க. கூட்டணி குறித்து மாறி மாறி பேசி தற்போது பா.ஜ.க.வில் இணைந்து உள்ளனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது தேர்தலில் மோடி உத்தரவாதம் என்று பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமரின் உத்தரவாதத்தை விட உபத்திரவாதம் தான் அதிகமாக உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மொத்தம் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போதும் இந்த கூட்டணி வெற்றி பெறும். 10 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணி செயலாற்றி வருகிறது. தொகுதி பங்கீட்டில் எங்களுக்குள் எந்த வித முரண்பாடும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் உருவாகியிருக்கிற கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். பா.ம.க. கூட்டணி குறித்து மாறி மாறி பேசி தற்போது பா.ஜ.க.வில் இணைந்து உள்ளனர். இந்த கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.

    கடந்த காலங்களில் மக்களுக்கு எதிரான சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியபோது அதனை ஆதரித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரையும் மக்கள் நிராகரிப்பார்கள்.

    பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்கு பா.ஜ.க. மத்திய இணை அமைச்சர் ஷோபாவுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில தேர்தல்களாக அங்கு ப. சிதம்பரம் அணியின் கையே ஓங்கி உள்ளது.
    • கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் என்பதால் மீண்டும் சர்ச்சை எழுந்தது.

    சிவகங்கை:

    சிவகங்கை தொகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியே போட்டியிட்டு வருகிறது. 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கு தி.மு.க. நேரடியாக போட்டியிடவில்லை. அதன் பிறகு 2014-ல் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் களம் கண்டதில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனாலும் சிவகங்கை எப்போதும் காங்கிரசின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.

    இங்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் ஆகிய இரு கோஷ்டிகள் உள்ளன. இரு தரப்பினரும் எப்போதும் ஒருவரையொருவர் போட்டி போட்டு கருத்துக்களை தெரிவித்து எதிர் வினையாற்றி வருவது காங்கிரசாரிடையே பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் தேர்தல் என்று வந்து விட்டால் ஒற்றுமை உணர்வுடன் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது இயல்பானதாகிவிட்டது.


    இந்நிலையில் கடந்த சில தேர்தல்களாக அங்கு ப. சிதம்பரம் அணியின் கையே ஓங்கி உள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரம் இரண்டு முறை எம்.பி. பதவி வகித்து வருகிறார். அண்மையில் தமிழக காங்கிரசின் மாநில தலைவராக புதிதாக பொறுப்பேற்ற செல்வபெருந்தகை ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கிடையில் அண்மை காலமாக கார்த்தி சிதம்பரத்தின் பேச்சுகள் கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. பிரதமர் மோடி குறித்தும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்தும் கார்த்தி சிதம்பரம் பேசிய பேச்சுகள் கட்சியினரின் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தின. இது எதிர்கோஷ்டியான சுதர்சனம் நாச்சியப்பன் அணியினருக்கு சாதகமாக அமைந்தது. கார்த்தி சிதம்பரம் பேச்சு குறித்து காங்கிரஸ் மேலிடம் வரையிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் அண்மையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இரு கோஷ்டியினரும் கடும் வாக்குவாதத்திலும், மோதலிலும் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் அண்மையில் சிவகங்கை அருகே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ராஜிவ் பஞ்சாயத்து ராஜ் தேசிய ஒருங்கிணைப்பாளர் இனா முன் ஹசன் பயணம் செய்த காரை கவுன்சிலர் புருஷோத்தமன் உள்ளிட்ட சிலர் மறித்து காரின் சாவியை பறித்துச் சென்றனர். அவர்கள் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் என்பதால் மீண்டும் சர்ச்சை எழுந்தது.


    சுதர்சன நாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் உள்ளிட்டோர் ஓரணியாக திரண்டு போட்டி கோஷ்டியாக இங்கு செயல்பட்டு வருகின்றனர். இது கார்த்தி சிதம்பரம் தரப்பினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இரு தரப்பினரும் கடும் போட்டியில் குதித்து தங்களது தரப்புக்கு சீட் வாங்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதற்கிடையில் தற்போது சிவகங்கை தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே ஒதுக்குவது உறுதியாகியுள்ளது. எனவே இங்கு மீண்டும் போட்டியிடுவது குறித்து இரு கோஷ்டிகள் மத்தியிலும் கடும் போட்டி நிலவி வருகிறது. மீண்டும் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதற்கான வியூகங்களை வகுத்து முன்னாள் மத்திய அமைச்சரும், அவரது தந்தையுமான ப.சிதம்பரம் மேலிடத்தை அணுகி வருகிறார். அவருக்கே மீண்டும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    அதே வேளையில் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ள கார்த்தி சிதம்பரத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது. எது எப்படி இருந்தாலும் இது போன்ற தொடர்ந்து வரும் களேபரங்களுக்கு மத்தியில் எதிர்ப்பாளர்களை துவம்சம் செய்து சிவகங்கை தொகுதியை தக்க வைப்பதில் கார்த்தி சிதம்பரம் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

    கோஷ்டி பூசல்களை களைந்து ஒருதாய் பிள்ளையாக இருந்து முதலில் வெற்றியை பெற வேண்டும். அதன் பிறகு பூசல்கள், சண்டை, சச்சரவுகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பினர் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் இந்த முறை சிவகங்கை தொகுதியில் வழக்கத்தை விட கூடுதல் அனல் பறக் கும் என்பதில் சந்தேகமில்லை.

    • ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டுள்ளனரா?
    • அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பெட்ரோல் ரூ.50. டீசல் ரூ.40 எனக் கூறினார். குறைத்துள்ளனரா?.

    மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதனையொட்டி நள்ளிரவு முதல் பிரதமர் மோடி அறிவித்ததன்படி சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் வரவிருக்கும் நிலையில் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் குறைப்பார்கள். அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பெட்ரோல் ரூ.50. டீசல் ரூ.40 எனக் கூறினார். குறைத்துள்ளனரா?.

    ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டுள்ளனரா?

    தேர்தலுக்காக 100 ரூபாய் குறைப்பார்கள். தேர்தல் முடிந்த பிறகு கூட்டமாட்டோம் எனச் சொல்லட்டும். தேர்தலுக்காக குறைக்கிறேன் என்றால்... வேண்டாம் என்று சொல்லல.. மக்களுக்கு பயன்.

     தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் கூட்டமாட்டேன் என்று பிரதமர் மோடி சொலலட்டும்.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    ஐந்து மாநில தேர்தலையொட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    • வாலிபர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை:

    மானாமதுரையை அடுத்த கொன்னக்குளம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார், சிவகங்கையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், இவர் கருங்காலி மாலை வாங்குவதற்காக மானாமதுரையில் உள்ள விஜய மார்த்தாண்டம், என்பவரது நகை கடைக்கு சென்றுள்ளார்.

    அப்போது, நகை பட்டறை உரிமையாளருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. திடீரென, நகை பட்டறை உரிமையாளர் விஜய மார்த்தாண்டம், சதீஷ்குமார் மீது ஆசிட் வீசியதில், அவர் படுகாயம் அடைந்தார்.

    இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருங்காலி மாலை வாங்க சென்ற வாலிபர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முஹம்மது ஷரீபும் பணத்தை கட்டி விட்டு ரசீதுடன் சென்றபோது சேவுகப்பெருமாள் ஒப்புதல் அளிக்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
    • கைதான அதிகாரி சேவுகப்பெருமாளின் வீடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் பகுதியில் உள்ளது.

    தேவகோட்டை:

    ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் முகமது சரீப் (வயது45). இவருக்கு சொந்தமாக கூரியூர் பகுதியில் நிலம் உள்ளது. இதனை வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக ராமநாதபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுக பெருமாளிடம் மனு செய்தார்.

    அவர் 8 மனைகளுக்கு வளர்ச்சி கட்டணமாக ரூ.28 ஆயிரத்து 192 மற்றும் வரன்முறை படுத்துதல் கட்டணமாக ரூ.50 ஆயிரத்து 745 ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்தி ரசீது கொண்டு வரும்படி கூறியுள்ளார்.

    அதன்படி முஹம்மது ஷரீபும் பணத்தை கட்டி விட்டு ரசீதுடன் சென்றபோது சேவுகப்பெருமாள் ஒப்புதல் அளிக்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    போலீசாரின் அறிவுரைப்படி லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றபோது சேவுகப்பெருமாளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    கைதான அதிகாரி சேவுகப்பெருமாளின் வீடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் பகுதியில் உள்ளது. நேற்று இரவு முதல் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை அங்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் வருவாய்த்துறை முன்னிலையில் வீட்டில் சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேவுகப்பெருமாள் வருகிற அக்டோபர் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது.
    • கடந்த காலங்களை விட தற்போது அதிகமாக மீனவர்கள் பாதிப்படைகிறார்கள்.

    காரைக்குடி:

    சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை அடக்குமுறை மூலமே தீர்க்க பா.ஜனதா முயற்சிக்கிறது. விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை என்பது வெறும் கனவுதான். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். எனது தொகுதி மக்களுக்கு ஒரு எம்.பி.யாக என்னால் முடிந்ததை செய்துள்ளேன்.

    பெண்களுக்கான திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதாவாக கோரினேன். அதேபோல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படு வதை முற்றிலுமாக நிறுத்துவோம்.

    கடந்த காலங்களை விட தற்போது அதிகமாக மீனவர்கள் பாதிப்படைகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாங்குடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, நகர தலைவர் பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • இறந்த கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லீம் மதப்படி அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் எனவும் மாற்றிக்கொண்டார்.

    காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (எ) அன்வர் உசேன், மதம் மாறி சையத் அலி பாத்திமா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென மரணமடைய, அவரது உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்ய தன்னிடம் ஒப்படைக்கோரி முதல் மனைவி சாந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இறந்த கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லீம் மதப்படி அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (வயது 59) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் சாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த பாலசுப்பிரமணியன், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த சையத்அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் எனவும் மாற்றிக்கொண்டார்.

    இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

    ஆனால் திடீரென்று அங்கு வந்த முதல் மனைவி சாந்தி தரப்பினர், பாலசுப்பிரமணியனின் பூர்வீக ஊரான ராமநாதபுரம் மாவட்ட பேரையூரில் இந்து முறைப்படி தான் அடக்கம் செய்ய போவதாகவும் உடலை தங்களிடம் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் இரு தரப்பினரும் சென்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து இருத்தரப்பினரிடமும் வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சையத்அலி பாத்திமா தரப்பினர் கூறுகையில், ஏற்கனவே சாந்தியை விவகாரத்து செய்து விட்டார். இதனால் நாங்கள் தான் அடக்கம் செய்வோம் என்று கூறினார்.

    ஆனால் சாந்தி தரப்பினர் கூறுகையில், விவகாரத்து உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் எங்களிடம் தான் உடலை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். இப்பிரச்சனையில் காவல் துறையினர் முடிவெடுக்க முடியாமல், உடலை கைப்பற்றி காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர்.

    கணவர் உடலை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு மனைவிகளும் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்று உடலை பெற்று கொள்ளுமாறு கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இறந்த கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லீம் மதப்படி அடக்கம் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன் என்பவரின் உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (வயது 59). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டிரைவரான இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் சாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த பாலசுப்பிரமணியன், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த சையத்அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் எனவும் மாற்றிக்கொண்டார்.

    இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

    ஆனால் திடீரென்று அங்கு வந்த முதல் மனைவி சாந்தி தரப்பினர், பாலசுப்பிரமணியனின் பூர்வீக ஊரான ராமநாதபுரம் மாவட்ட பேரையூரில் இந்து முறைப்படி தான் அடக்கம் செய்ய போவதாகவும் உடலை தங்களிடம் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் இரு தரப்பினரும் சென்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து இருத்தரப்பினரிடமும் வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சையத்அலி பாத்திமா தரப்பினர் கூறுகையில், ஏற்கனவே சாந்தியை விவகாரத்து செய்து விட்டார். இதனால் நாங்கள் தான் அடக்கம் செய்வோம் என்று கூறினார்.

    ஆனால் சாந்தி தரப்பினர் கூறுகையில், விவகாரத்து உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் எங்களிடம் தான் உடலை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். இப்பிரச்சனையில் காவல் துறையினர் முடிவெடுக்க முடியாமல், உடலை கைப்பற்றி காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர்.

    கணவர் உடலை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு மனைவிகளும் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்று உடலை பெற்று கொள்ளுமாறு கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். உயிருடன் இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனைகளை விட பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன், இறந்த பின்னர் சந்தித்த பிரச்சனைகள் தான் அதிகம் என்று இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் முணுமுணுத்தப்படி சென்றனர்.

    • கழக மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஏற்பாட்டில் கட்சிக்காக உழைத்த உங்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
    • நீங்கள் இல்லாமல் கலைஞர் இல்லை, கலைஞர் இல்லாமல் நீங்கள் இல்லை.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் ஏற்பாட்டில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொற்கிழி, பதக்கங்களையும் வழங்கி பேசியதாவது:-

    மக்கள் அனைவரும் என்னை இளையவர் என்றும், சின்னவர் என்றும், அமைச்சர் என்றும் அழைக்கின்றார்கள். ஆனால் உங்கள் மத்தியில் நான் வயதிலும் சரி, அனுபவத்திலும் சரி சின்னவன் தான். நான் அமைச்சராக பதவியேற்று முதன் முதலில் வருகை புரிந்ததும் இந்த சிவகங்கை மண்ணிற்கு தான். இன்று கழக மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஏற்பாட்டில் கட்சிக்காக உழைத்த உங்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.

    நான் பெரியாரையோ, அண்ணாவையோ நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவர்களோடு சேர்ந்து கட்சிக்கு பாடுபட்ட உங்களை இன்று நேரில் பார்க்கும் நான் அவர்கள் ரூபத்தில் உங்களைப் பார்க்கிறேன். நான் ஒவ்வொரு மாவட்ட கழக நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்கு முன்பாக அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். நான் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதலாவதாக கட்சிக்காக உழைத்த கழக முன்னோடிகளை கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன் வைப்பேன்.



    அந்த அடிப்படையில் நான் அமைச்சர் பதவியேற்ற ஒரு வருட காலத்தில் கலந்து கொண்ட எந்த ஒரு கழக நிகழ்ச்சியிலும் கழக முன்னோடிகளான உங்களை குறித்து நான் பேசுவதுண்டு. நீங்கள் இல்லாமல் கலைஞர் இல்லை, கலைஞர் இல்லாமல் நீங்கள் இல்லை. அந்த அளவுக்கு உங்களை பார்க்கும் போது பெருமையாகவும், பொறாமையாகவும் கருதுகிறேன். எனவே இளைஞர்களாகிய எங்களை வழிநடத்தும் ஆற்றல் மிகும் சக்தியாக நீங்கள் தான் கழகத்தில் இருக்கிறீர்கள்.

    வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் அதே உத்வேகத்தோடு பாடுபட்டு வெற்றியடைய செய்யுங்கள் என்று உங்களை இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட கழக நிர்வாகிகளான மணி முத்து, சேங்கை மாறன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர கழக, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

    • ஐகோர்ட்டு உத்தரவுப்படி தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
    • தேரை வடம் பிடித்து இழுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் ராமாயண கால புராண வரலாறு கொண்ட சிறிகிழிநாதர் என்ற சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    அரசர் காலத்தில் இருந்து தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி போன்ற நான்கு நாட்டைச் சேர்ந்த சுமார் 170 கிராமங்களை சேர்ந்த வர்களுக்கு தலைமைக் கோவிலாக இந்த கோவில் விளங்கியது. இக்கோவில் தேரோட்டம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த நிலையில் தேர்வடம் பிடித்து இழுப்பதில் கருத்து 1998-ம் ஆண்டு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாக 1998-ம் ஆண்டு தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் 2002 முதல் 2006-ம் ஆண்டு வரை தேரோட்டம் நடை பெற்றது.

    கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர், தேர் பழுதானதாகக் கூறி, தேரோட்டத்தை நடத்த வில்லை. இதையடுத்து பல லட்சம் செலவில் புதிய தேர் தயார் செய்யப்பட்டது.

    ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடத்தப் படவில்லை, ஒவ்வொரு முறையும் வெள்ளோட்டம் நடக்க முற்படும் பொழுது ஒவ்வொரு காரணங்களால் தடைபட்டது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி தேர் வெள்ளோட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.

    பல்வேறு தடைகளை தாண்டி ஐகோர்ட்டு உத்தரவுப்படி தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக நேற்று மாலை கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. நேற்று சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் புதிய தேர் மற்றும் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

     இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சிறப்பு யாக வேள்விகளும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடை பெற்றது. தொடர்ந்து காலை 6.10 மணிக்கு கோவில் வாசலில் அலங்கரிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நடந்தது. தேரை அறநிலை துறை பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் வடம் பிடித்து இழுத்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து அறநிலை பணியாளர்கள் வர வழைக் கப்பட்டு இருந்தனர். தேரை வடம் பிடித்து இழுக்க பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    தேர் நகன்றதும் அங்கு கூடியிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கண்ணீர் மல்க சொர்ணமுர்த்தீஸ்வரா ... என பக்தி கோஷம் எழுப்பினர். தேர் முன்பும், வழித்தடத் திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    17 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கண்டதேவி தேர் வெள்ளோட்டத்தை காண சுற்றி உள்ள கிராமங்களி லிருந்து ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். அவர் கள் தீவிர சோதனைக்கு பின் தேர் வெள்ளோட்டத்தை காண அனுமதிக்கப்பட்னர்.

    தேர் வெள்ளோட்டத்தை காண வந்த பக்தர்கள் இந்த வெள்ளோட்டத்தை போல தேரோட்டமும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.


    • இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
    • இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் பழனிச்சாமி (வயது 23). இவர் படித்து முடித்த பின்னர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் தனது பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது உறவினர் தம்பி பட்டியை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் சக்தி (16). இவர் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து விட்டு பின்னர் கல்வியை தொடரவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு பழனிச்சாமி, இவரை அழைத்துக் கொண்டு, ஊர்குளத்தான் பட்டியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி நோக்கி தபால்துறைக்கு சொந்தமான அஞ்சலக வாகனம் சென்றது.

    அந்த வாகனம் மணமேல்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக இருவரையும் நெடுஞ்சாலைதுறை ரோந்து வாகனம் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    ×