search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 8 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது. தற்போது போலீசார் ஜெயக்குமார் வீடு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இரும்பு பிரசின் பிளாஸ்டிக் கவர் அவரது வீட்டின் உள்ளே உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன் தனது கைப்பட 2 கடிதங்களை எழுதி இருந்தார்.
    • விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4-ந்தேதி அவரது வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன் தனது கைப்பட 2 கடிதங்களை எழுதி இருந்தார். அந்த கடிதங்களில் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை எழுதி யாரெல்லாம் தனக்கு பணம் தர வேண்டும், மிரட்டல் விடுத்தவர்கள் யார், யார் என குறிப்பிட்டு இருந்தார்.

    அந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடித்து வந்த நிலையில், விசாரணைக்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படையினர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.

    இந்த நிலையில், நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு தொடர்பாக நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரனிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையானது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

    • ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் எழுதியதாக 2 கடிதங்கள் வெளிவந்தது
    • கடித்தில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது சாவு வழக்கில் இதுவரை உறுதியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    பல்வேறு கோணங்களில் விசாரணையை நகர்த்தி வரும் சூழ்நிலையில் கொலையா? அல்லது தற்கொலையா? என்று உறுதியான முடிவுக்கு வரமுடியாமல் போலீசார் இருந்து வருகின்றனர்.

    இதற்கிடையே ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் எழுதியதாக 2 கடிதங்கள் வெளிவந்தது. அதில் ஒன்று கடந்த 30-ந்தேதி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எனவும், மற்றொரு கடிதம் 27 மற்றும் 30-ந்தேதி என குறிப்பிடப்பட்டு அவரது மருமகனுக்கும், குடும்பத்தாருக்கும் என்றும் எழுதியதாக வெளிவந்தது

    இந்த 2 கடிதங்களையும் அவர், தன் கைப்பட எழுதினாரா அவரது கையெழுத்து தானா என்று போலீசார் உறுதி படுத்துவதற்காக அதனை தடய அறிவியல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த கடிதத்தை ஆய்வு செய்த நிலையில், அவரது பழைய கடிதங்களில் உள்ள எழுத்துக்களை இந்த கடித்தில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தனர்.

    அதில் 2 கடிதங்களையும் ஜெயக்குமார் தனது கைப்பட எழுதியுள்ளார் என்று தடய அறிவியல் அலுவலர்கள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
    • ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

    பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகும்.

    இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதனிடையே ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.

    முன்னதாக, 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

    மேலும் மரணத்துக்கு முன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் தொடர்புடையவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பல கோடி ரூபாய் லோன் வாங்கித் தருவதாக கூறி மோசடி.
    • போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையத்து அருகே உள்ள பாலாமடையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50). இவர் கல்குவாரி நடத்தி வருகிறார்.

    இவருக்கு தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2015-ம் ஆண்டு வங்கியில் கடன் வாங்க முடிவு செய்துள்ளார்.

    இதனை அறிந்த கேரள மாநிலம் கொல்லம் அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த சிபின் (35) உள்பட 4 பேர் பாலசுப்பிரமணியனை சந்தித்துள்ளனர்.

    பின்னர் வங்கி அதிகாரியை தங்களுக்கு தெரியும் என்றும், அவர்களுக்கு ரூ.16 லட்சம் கமிஷன் கொடுத்தால் பல கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியன் ரூ.16 லட்சம் பணத்தை சிபின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சிபின் வங்கியில் கடன் வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதைத்தொடர்ந்து சிபினை சந்திக்க முயன்ற போது அவர் தலை மறைவாகிவிட்டார்.

    இதுகுறித்து பால சுப்பிரமணியன் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்படி, துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், பிச்சையா ஆகியோர் தலைமறைவான சிபினை தேடி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர் கொல்லம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் நெல்லை நீதிமன்றத்தில் சிபின் ஆஜர்படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படுகாயம் அடைந்த மாணவன் சின்னத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
    • சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்தது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற மகனும், சந்திரா என்ற மகளும் உள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் வள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர்.

    பிளஸ்-2 படித்து வந்த சின்னத்துரைக்கும், நாங்குநேரியை சேர்ந்த மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே சாதி ரீதியான மோதல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சின்னத்துரையை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க வந்த அவரது தங்கை சந்திராவுக்கும் வெட்டு விழுந்தது.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த மாணவன் சின்னத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் பிளஸ்-2 காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை மருத்துவமனையில் இருந்தவாறு எழுதினார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவர் சின்னத்துரை 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். 


    • கடிதத்தில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் எழுதியுள்ளார்.
    • 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்(வயது 60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கடந்த 2-ந்தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார்.

    இதுகுறித்து அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் 3-ந்தேதி உவரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அவர் தனது தந்தை எழுதி வைத்திருந்ததாக கடிதம் ஒன்றையும் போலீசில் அளித்தார்.

    இந்நிலையில் ஜெயக்குமார் 4-ந்தேதி வீட்டுக்கு பின்னால் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    ஜெயக்குமார் உடலில் மின்சார வயர்கள் கட்டப்பட்டு இருந்தது. அவரது தலை பகுதியில் தொடங்கி இடுப்பு, கால் உள்ளிட்ட பகுதிகளிலும் வயர் கட்டப்பட்டிருந்தது. வயிற்றின் அடிப்பகுதியில் மரப்பலகை கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மேலும் சம்பவ இடத்தில் மண்எண்ணை கொட்டிக்கிடந்ததும், காய்ந்த சறுகுகள், காய்ந்த தென்னை மட்டைகள் உள்ளிட்டவை அவரது உடல் மீது கிடந்து தீயில் எரிந்த நிலையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வீட்டில் இருந்து சுமார் 350 அடி தூரத்தில் தான் ஜெயக்குமாரின் தோட்டம் உள்ளது. அங்கு அவர் எரிந்து கிடந்தார். தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் ஜெயக்குமார் 2-ந்தேதி நள்ளிரவு அல்லது 3-ந்தேதி அதிகாலையில் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.

    தற்கொலை செய்த பின்னர் ஒருவரது உடல் எரிக்கப்பட்டிருந்தால் அதனால் உண்டாகும் புகை அவரின் உடலிலேயே தேங்கி இருக்கும்.

    ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது நுரையீரல் உள்ளிட்ட எந்த பகுதிகளிலும் புகை எதுவும் தேங்கவில்லை. எனவே இது கொலை சம்பவமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

    அவரை மர்ம நபர்கள் கடத்தி சென்று தாக்கி கொலை செய்திருக்கலாம் என்றும், பின்னர் உடலை தோட்டத்தில் வைத்து எரித்து இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.

    அவ்வாறு நடைபெற்று இருந்தால் தோட்டத்தின் அருகே உள்ள குடியிருப்புகளுக்கு அவரது அலறல் சத்தம் கேட்டிருக்கும். மேலும் இரவு நேரத்தில் சம்பவம் நடந்திருப்பதால் தீயின் வெளிச்சம் அங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் இருக்காது.

    அதேநேரத்தில் தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர் கணேசன் எப்போதும் அங்கு தான் இருப்பார் என்பதால் இது தொடர்பாக அவரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே போலீசாரிடம் வழங்கப்பட்ட கடிதங்களில் தனக்கு யார் யார் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? தான் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்த விபரங்களை எழுதி வைத்திருந்தார்.

    அவர் தனது குடும்பத்திற்கு, மருமகனுக்கு என தனித்தனியாக எழுதியிருந்த கடிதங்களை ஆராய்ந்தபோது அவர் கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது தெரியவந்துள்ளது.

    மேலும் அந்த கடிதங்களில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரது பெயர்களையும் குறிப்பிட்டு அவர்கள் தனக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த பணத்தை கேட்கும்போது எதிர்தரப்பினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் அதில் எழுதியுள்ளார்.

    இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் உள்ளது. எனவே இந்த கோணத்திலும் விசாரணையை நகர்த்தி வருகின்றனர்.

    இதனையொட்டி அவர் கடிதத்தில் எழுதியிருந்த நபர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக செல்போனிலும், நேரில் அழைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதலாவதாக இடையன்குடி பஞ்சாயத்து தலைவரும், கால்டுவெல் பள்ளி தாளாளருமான ஜேகர் தனக்கு ரூ.30 லட்சம் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

    அவரிடம் பணகுடி இன்ஸ்பெக்டர் அஜிகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் கைப்பட எழுரி நடந்த சம்பவங்களை எழுத்துப்பூர்வமாக போலீசார் பெற்று வருகின்றனர்.

    மேலும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஜெயக்குமார் தனசிங் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் பொருளாதார ரீதியாக கடந்த சில நாட்களாகவே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இன்று ஜெயக்குமார் இறப்பின் 3-வது நாள் துக்க நிகழ்ச்சி முடிந்ததும், அவரது மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின் உள்ளிட்டோரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஜெயக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களில் முக்கிய புள்ளி ஒருவர் தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் ஆப் செய்யப்பட்டுள்ளது.

    எனவே அவரை தேடி பிடிக்க 2 தனிப்படை தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து 7 தனிப்படையினரையும் ஒவ்வொரு கோணத்தில் விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

    • தற்போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது.
    • ஜெயக்குமார் வீட்டின் பின்பகுதியில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ந்தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றபோது தனது காரை எடுத்துச்சென்றுள்ளார்.

    அப்போது அவர் தனது 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அவரது தோட்டத்திற்கு சற்று தொலைவில் நின்ற அவரது காரை போலீசார் கண்டுபிடித்த நிலையில் அவரது செல்போன்கள் இதுவரை போலீசாரின் கையில் சிக்கவில்லை.

    அந்த செல்போன்கள் எங்கே மாயமானது என்பது தெரியவில்லை. அதனை கண்டுபிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. அதனை கைப்பற்றினால் தான் அவரது செல்போனுக்கு கடைசியாக யார் தொடர்பு கொண்டார். அவர் மாயமான 2-ந்தேதி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் யாருக்கெல்லாம் அவர் தொடர்பு கொண்டு பேசினார் என்ற விபரம் தெரியவரும் என்பதால் அதனை தேடி வருகின்றனர்.

    அதே நேரத்தில் அவரது வீட்டின் பின்பகுதியில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை.

    இதனால் யாரேனும் கேமராவை திட்டமிட்டு பழுதாக்கினார்களா? அல்லது கேமரா வேலை செய்யவில்லை என்பதை நன்கு தெரிந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

    • ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு.
    • காவல்தறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன்தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    நேற்று உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் என்ற பெயரில் 2 கடிதங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், ஜெயக்குமார் மரண வழக்கு வேகமெடுக்கிறது.

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், மூத்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

    ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்தறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    ஆலோசனை கூட்டத்தில், வழக்கு தொடர்பாக கிடைத்த முதற்கட்ட விவரங்களை கொண்டு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது.
    • ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் 2 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

    ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதங்கள் வெளியான நிலையில், நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    புகார் அளித்த கடந்த 3ம் தேதி அன்றே உவரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாரின் மகன், இந்த கடிதத்தையும் கொடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடிதத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதாக நெல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

    விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது.

    ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சடலமாக மீட்கப்பட்டதால், இயற்கைக்கு மாறான மரணம் என தற்போது வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    • கே.பி.கே. ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய பிரமுகர்களில் ஒருவர் தற்போது தலைமறைவு ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், இன்று மாலைக்குள் வழக்கின் முழு விவரம் வெளியாகும் எனவும் போலீஸ் மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.

    கொலையா? அல்லது தற்கொலையா? என்பதில் தொடர்ந்து முரண்பாடான கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில் ஓரிரு நாட்களில் வழக்கின் முழு விவரங்களும் தெரிவிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வழங்குவதற்காக கே.பி.கே. ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய பிரமுகர்களில் ஒருவர் தற்போது தலைமறைவு ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை பிடிப்பதற்காக தனிப்படை விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் விவரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    இதற்கிடையே, ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், இன்று மாலைக்குள் வழக்கின் முழு விவரம் வெளியாகும் எனவும் போலீஸ் மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் கொண்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
    • போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் கொண்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் ஜெயக்குமார் எரிந்த நிலையில் கிடந்த சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் இன்று 2-வது நாளாக ஆய்வு செய்தார்.

    மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் ஆனந்தி தலைமையிலான குழுவினரும் இன்று 2-வது நாளாக சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    அப்போது போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர்கள் அங்கேயே விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×