search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மு.க.ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் தி.மு.க.வில் அதிரடி மாற்றம்- துரைமுருகன்
    X

    மு.க.ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் தி.மு.க.வில் அதிரடி மாற்றம்- துரைமுருகன்

    • அனைத்து தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்.
    • புதிய வாக்காளர்களை நாம் சேர்க்க வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. கட்சியினர் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தி.மு.க. கொடி ஏற்ற வேண்டும். வருகிற 15, 16, 17 ஆகிய 3 தேதிகளில் அனைவரும் கருப்பு, சிவப்பு அணிந்த துண்டை அணிந்து செல்ல வேண்டும்.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அனைவரும் கடைசி வரை இருக்க வேண்டும். ஒரு ஓட்டு என்பது கூட முக்கியமானது. காட்பாடி தொகுதியை பொறுத்தவரை உழைத்தோம். ஆனால் அதிகமான நேரத்தில் ஓய்வு எடுத்து விட்டோம். இப்பொழுது உள்ள முறைகள் சரியில்லை. வருகிற 20-ந் தேதிக்கு பிறகு அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் நான் நேரில் வந்து மக்களுடைய குறைகளை கேட்டு அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

    வாக்குச்சாவடிகளில் பழைய முகவர்கள் சரியில்லை என்றால், அவர்களை நீக்கி விட்டு புதியவர்களை சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் காட்பாடி தொகுதி பழைய முறைப்படி தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலைமை மீண்டும் ஏற்படும்.

    கடந்த முறை என்ன நடந்தது? தோற்றுவிடுவோம் என்ற நிலை இருந்தது. அதை நான் சவாலாக எடுத்துக் கொண்டேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். ஏன் அனைத்து தொகுதிகளிலும் சொல்லவில்லை என்றால் எதிர்க்கட்சி 34 தொகுதியிலாவது வரட்டுமே என்ற எண்ணம் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதியாக இருந்து வெற்றி பெற்று விடுவார்.

    இப்பொழுது புதிய வாக்காளர்களை நாம் சேர்க்க வேண்டும். அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்த பிறகு கட்சியில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும்.

    அனைத்து தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். ஒளிமயமான எதிர்காலம் வந்துள்ளது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×