என் மலர்
சினிமா செய்திகள்
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67.
- இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இப்படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவித்தபடி தளபதி 67 படத்தின் டைட்டிலை விக்ரம் பட பாணியில் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு லியோ (Leo - Bloody Sweet) என்று பெயரிடப்பட்டுள்ளனர். கையில் ஆயுதங்களுடன் விஜய் காட்சியளிக்கும் இந்த வீடியோ தற்போது லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
- இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'.
- இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டது.
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்து 2010-ல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற பையா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. பையா 2-ம் பாகத்தில் கார்த்தி நடிக்கவில்லை பதிலாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்றும் இதில் கதாநாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் பேசி வருவதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.

ஜான்வி கபூர் - ஆர்யா
ஏற்கனவே தமிழ் படத்தில் நடிக்க ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் பையா 2-ம் பாகத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இதனை அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனிக் கபூர் மறுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஜான்வி கபூர் தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
- படப்பிடிப்புக்காக தளபதி 67 படக்குழு காஷ்மீர் சென்றுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தளபதி 67 படக்குழு படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் காஷ்மீருக்கு சென்றதாக கூறப்பட்டது. இதனிடையே தொடர் அப்டேட்டுகளை கொடுத்து படக்குழு ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், காஷ்மீர் படபிடிப்புக்காக தனி விமானத்தில் சென்ற வீடியோவை பகிர்ந்து உறுதிபடுத்தியுள்ளனர். அப்போது விமானத்தில் இருந்த அனைவரையும் விஜய் சந்தித்து கையசைத்து வரவேற்றார். மேலும் படக்குழுவினரை வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Neengal keta seithigalai udanukudan therivipathu ungal olipathivaalar @7screenstudio ?#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @duttsanjay @PriyaAnand @akarjunofficial #Thalapathy67 pic.twitter.com/eAbaKRDQpI
— Seven Screen Studio (@7screenstudio) February 3, 2023
- தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத் நேற்று காலமனார்.
- இவரின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கே.விஸ்வநாத் ஐதராபாத் இல்லத்தில் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இரகல் தெரிவித்த இளையராஜா
இந்நிலையில் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- 'துணிவு' திரைப்படத்தின் ஓடிடி வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துணிவு
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

துணிவு
இந்நிலையில், 'துணிவு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
- சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அழைத்து சென்று தன்னை கற்பழித்ததாக இளம்பெண் புகார் கூறியிருந்தார்.
- புகார் தொடர்பாக போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மார்ட்டின் செபாஸ்டின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் மார்ட்டின் செபாஸ்டின். சினிமா தயாரிப்பாளர்.
மலையாள திரையுலகில் பல படங்களை தயாரித்து உள்ள மார்ட்டின் செபாஸ்டின் மீது திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் மார்ட்டின் செபாஸ்டின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்.
மார்ட்டின் செபாஸ்டின் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனவும் குற்றம்சாட்டியிருந்தார். கடந்த 2000-ம் ஆண்டு இந்த சம்பவங்கள் நடந்ததாகவும் கூறி இருந்தார்.
மேலும் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அழைத்து சென்று தன்னை கற்பழித்ததாகவும் புகார் கூறியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மார்ட்டின் செபாஸ்டின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த குற்றச்சாட்டுகளை மார்ட்டின் செபாஸ்டின் மறுத்தார். மேலும் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, எர்ணாகுளம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து போலீசார் மார்ட்டின் செபாஸ்டினிடம் விசாரணை நடத்தினர். 72 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். பாலியல் புகாரில் சினிமா தாயரிப்பாளர் மார்ட்டின் செபாஸ்டின் கைது செய்யப்பட்டது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ்.
- இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் நெல்லை தங்கராஜ் காலமானார்.
2018-ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ். தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனின் (கதிர்) தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்திருந்தாலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடுசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டது.

நெல்லை தங்கராஜ்
இந்நிலையில் தெருக்கூத்துக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல படத்தில் நடித்துள்ளார்.
- நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் 'பத்து தல' படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பத்து தல
கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

பத்து தல
இந்நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'பத்து தல' படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'நம்ம சத்தம்' என்ற பாடல் பிப்ரவரி 3-ந்தேதி (இன்று) நள்ளிரவு 12.06 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அக்கரயில நிக்கிறவன எட்டுது நம்ம சத்தம் என்ற பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
Here's the first single from #PathuThala #NammaSatham ❤️@arrahman @StudioGreen2 @nameis_krishna @Gautham_Karthik @SonyMusicSouth @Lyricist_Vivek @iamSandy_Off https://t.co/68gKat26za pic.twitter.com/etPZmpYko7
— Silambarasan TR (@SilambarasanTR_) February 2, 2023
- சங்கராபரணம் உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் கே.விஸ்வநாத்.
- தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு இவரை கவுரவித்துள்ளது.
ஐதராபாத்:
இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1965-ம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ஆத்ம கவுரவம் படத்துக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார்.
தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ'விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது. 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "காதல் கண்டிசன்ஸ் அப்ளை".
- இந்த படத்தில் நடிகர் மஹத் மற்றும் சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் மஹத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதல் கண்டிசன்ஸ் அப்ளை". நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் வழங்கும் இந்த படத்தில் சனா மகுல், விவேக் பிரசன்னா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காதல் கண்டிசன்ஸ் அப்ளை இசை வெளியீட்டு விழா
இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நிதின் சத்யா பேசியதாவது, "இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான ஒரு பீல் குட் திரைப்படம். இந்த படம் கோவிட் காரணமாக சிறிது தாமதமானது. ஆனால் படத்தில் நடித்த அனைவரும் இந்த படத்திற்காக தங்களது முழு ஆதரவையும் கொடுத்தனர். பலருடைய உத்வேகத்தாலும், உதவியாலும் இந்த படம் நன்றாக உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள். நல்ல நட்புடன் சேர்ந்து நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்த படம்" என்று கூறினார்.

காதல் கண்டிசன்ஸ் அப்ளை இசை வெளியீட்டு விழா
இயக்குனர் அரவிந்த் பேசியதாவது, "புது இயக்குனர்களை வைத்து படம் எடுப்பதில் பொருளாதார சிக்கல் இருக்க தான் செய்கிறது. அதை தாண்டி தயாரிப்பாளர் நிதின் சத்யா, ரவீந்தர் தொடர்ந்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள், அதற்கு நன்றிகள். இது தொடர வேண்டும். இந்த படத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள்" என்று கூறினார்.
- இயக்குனர் அரவிந்த இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”.
- இந்த படத்தில் மஹத் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் மஹத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதல் கண்டிசன்ஸ் அப்ளை". நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் வழங்கும் இந்த படத்தில் சனா மகுல், விவேக் பிரசன்னா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காதல் கண்டிசன்ஸ் அப்ளை இசை வெளியீடு விழா
இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர் மஹத் கூறியதாவது, "இது எனது 16- வது படம், ஆனால் ஹீரோவாக முதல் படம். எனது நண்பர் நிதின் சத்யா, கோவிட் காலத்தில் என்னை அணுகி படம் பண்ணலாம் என்று கூறினார். இயக்குனர் அரவிந்த் உடன் பல ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன், அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி.

காதல் கண்டிசன்ஸ் அப்ளை இசை வெளியீட்டு விழா
இசையமைப்பாளர் ரமேஷ் இந்த படத்தில் அறிமுகமானது எனக்கு மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர், நடிகர்கள் அனைவரும் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளனர். இந்த படம் பொருளாதார சிக்கலில் சிக்கி இருந்த போது, ரவீந்தர் தான் உதவினார். அவருக்கு எனது நன்றிகள். நிதின் சத்யா, ரவீந்தர் போன்ற ஆட்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை. அனைவருக்கும் நன்றிகள்."