search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • முதற்கட்ட படப்பிடிப்பு பிஜப்பூர் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.
    • இந்த படத்தை ரோஹித் பதகி இயக்கி வருகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார் மற்றும் 'நடராக்ஷசா' டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக 'துர்கி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'உத்தரகாண்டா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பிஜப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.

     


    இப்படத்தை கே.ஆர்.ஜி. ஸ்டுடியோஸ் சார்பில் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி. ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குநர் ரோஹித் பதகி இயக்கத்தில் உருவாகி வரும் 'உத்தரகாண்டா' படத்தில் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட், கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மார்வெல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது
    • மார்வெல் ஸ்டுடியோவில் இருந்து அடுத்ததாக Deadpool & Wolverine படம் வெளியாக உள்ளது.

    மார்வெல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் இருந்து இன்னொரு சூப்பர் ஹீரோ படம் வெளியாக உள்ளது. மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர்களாக மாறிய படங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தற்போது புதிய படம் வெளியாக உள்ளது. மார்வெல் ஸ்டுடியோவில் இருந்து அடுத்ததாக Deadpool & Wolverine படம் வெளியாக உள்ளது.

     

    ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் ஜூலை 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

     

    முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்ச்சராக வெளிவரவிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சுவாரஸ்யமாக உள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மீண்டும் ஒருமுறை மகிழ்விக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. எம்மா கொரின், மொரீனா பாக்கரின், ராப் டெலானி, லெஸ்லி உக்காம்ஸ், கரண் சோனி, மேத்யூ மக்ஃபேடியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். Deadpool & Wolverine உலகம் முழுவதும் ஜூலை 26 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    படத்தின் டிரெயிலர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்தாண்டு மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'.
    • படத்தை பார்த்து ரஜினி உள்பட நிறைய திரைப்பிரபலங்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்தாண்டு மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    படத்தை பார்த்து ரஜினி உள்பட நிறைய திரைப்பிரபலங்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அயோத்தி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் நடித்த படம் வெற்றியடைந்தது.

    அயோத்தி படம் வெளியாகி 1 வருடம் கடந்த நிலையில் அப்படத்தின் இயக்குனரான மந்திர மூர்த்தி இயக்கும் படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பாக சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிக்கவுள்ளார். இதற்கு முன் ஆண்டவன் கட்டளை, மருது, தங்க மகன் போன்ற வெற்றி படங்களை கோபுரம் பிலிம்ஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தில் யார் நடிக்க போகிறார்கள் எம்மாதிரியான கதைக்களம் கொண்ட திரைப்படம் போன்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது
    • ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன

    நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், தென்னித்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக வைப்புரீதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூ.50 இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி அவர்களிடம் வழங்கினார்.

    இதற்கு முன்பாக, நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளுக்காக நடிகர் கமல்ஹாசன் 1 கோடியும், நடிகர் விஜய் 1 கொடியும் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • .படம் வெளியாகி இரண்டே நாட்களில் 10 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது
    • ரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த திரைப்படம் கில்லியே ஆகும்.

    தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திரைக்கு வந்த படம் கில்லி. படத்தில் வேலு கதாபாத்திரத்தில் விஜய்யும் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷாவும் முத்துப்பாண்டியாக பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர்.

    கில்லி படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் 50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. படம் வெளியாகி உள்ள திரையரங்குகள் அனைத்திலும் சில தினங்களுக்கு டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் அனுபவத்தையும் , ஆடிய ஆட்டத்தையும் ஒன்ஸ் மோர் பாடல்களை கேட்டு திரையரங்குகளில் ஆடிக் கொண்டு இருக்கும் வீடியோவை நாம் சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக பார்த்த வண்ணம் இருக்கிறோம்.

    2004 ஆம் ஆண்டு வெளியான போது படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைத்ததோ அதே அளவு 20 ஆண்டுகளுக்கு பிறகும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி இரண்டே நாட்களில் 10 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. ரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த திரைப்படம் கில்லியே ஆகும்.

    கில்லி ரீ ரிலிஸ் பற்றியும் மக்களின் கொண்டாடத்தை பற்றியும் திரிஷா அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் அவரது மகிழ்ச்சியை சில தினங்களுக்கு முன் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து இன்று பிரகாஷ் ராஜ் அவரது எக்ஸ் பக்கதில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

    அதில் லவ் யூ ஆல் செல்லம்ஸ் முத்துபாண்டி கதாப்பாத்திரத்தை காதலித்ததற்கு . உங்கள் அன்பில் நான் மிகவும் மெய் சிலிர்த்து போகிறேன். இயக்குனர் தரணி சாருக்கும் தயாரிப்பாளரான ரத்னம் சாருக்கும், ம்ய் டியர் விஜய்க்கும் , என்னோட செல்ல திரௌஷாவுக்கும் என் மன்மார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

    படம் விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் வார தினங்களான இன்றும் பல திரையரங்குககளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் அடுத்த பாடலான மெலடி பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது.
    • அப்பாடலில் கவின் பெண் வேடம் அணிந்து குத்தாட்டம் ஆடி இருந்தார்,

    மணிகண்டன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த டாடா படத்தில் கவின் நடித்து இருந்தார். அபர்னா தாஸ், பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்களும் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடயே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது,

    கவின் அடுத்ததாக ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் நடித்து வருகிறார்.இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்டார் படம் உருவாகியுள்ளது.

    இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது. அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாடலான "விண்டேஜ் லவ்" பாடல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலாகிய நிலையில் படத்தின் அடுத்த பாடலான மெலடி பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

    அப்பாடலில் கவின் பெண் வேடம் அணிந்து குத்தாட்டம் ஆடி இருந்தார், மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கவின் எப்படி பெண் வேடத்திற்கு மேக்அப் போட்டு மெலடி பெண்ணாக மாறினார்  என்ற வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.

    . சாண்டி மாஸ்டர் இந்த பாடலிற்கு நடன் இயக்குனர் ஆவார். இதற்கு அடுத்து நாளை படத்தின் அடுத்த பாடலான ஜிமிக்கி காசல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ஸ்டார் திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் மாலை வெளியிட்டார்
    • தடம் படத்திற்கு பிறகு இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய் , எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வனங்கான், பார்டர், AV 36 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் மாலை வெளியிட்டார்.

    இப்படத்திற்கு 'ரெட்ட தல' என்ற தலைப்பை வைத்துள்ளனர் அதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். தடம் படத்திற்கு பிறகு இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    அப்போஸ்டரில் அருண் விஜய் மற்றொரு அருண் விஜயின் கழுத்தை கடிப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன்
    • நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .

    அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் கடந்த மாதம் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசரை விஜய் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். 

    ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பிளே பாய் கதாப்பாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.

    அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .

    இவர்களுடன் அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார்.

    ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படமும் வெற்றியடையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் கொச்சியில் வனிதா பிலிம் பேர் அவார்ட் வழங்கும் விழா நடைப்பெற்றது.
    • மோகன் லால் அந்த விழாவில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்தின் பாடலான ஜிந்தா பண்டா பாடல் மற்றும் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் பாடலான ஹுக்கும் பாடலுக்கு நடனமாடினார்.

    மலையாள திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களாக இருப்பவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி. இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாலமே இருக்கின்றன. எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் என்றுமே போட்டி பொறாமை என்று இருந்ததே இல்லை.

    அவர்கள் இருவரும் இணைந்து பலப் படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். திரையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி அவர்களுக்குள் இருக்கும் நட்பு பந்தம் மிகவும் அழகானது.

    சமீபத்தில் கொச்சியில் வனிதா பிலிம் பேர் அவார்ட் வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மமூட்டி மற்றும் மோகன்லால் அதில் பங்கேற்றனர். மோகன் லால் அந்த விழாவில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்தின் பாடலான ஜிந்தா பண்டா பாடல் மற்றும் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் பாடலான ஹுக்கும் பாடலுக்கு நடனமாடினார்.

    மோகன்லால் ஆடிய நடன வீடியோ மோகன்லால் ரசிகர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகியது. அதைப் பார்த்த ஷாருக்கான் அவரது எக்ஸ் பக்கத்தில்

    'இந்தப் பாடலை இப்போது எனக்கு மிகவும் ஸ்பெஷலாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நான் உங்களைப்போல் பாதி நன்றாகச் ஆடியிருக்க விரும்புகிறேன். லவ் யூ சார் மற்றும் உங்கள் வீட்டின் இரவு உணவிற்காக காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒர்ஜினல் ஜிந்தா பண்டா" என்ற பதிவை பகிர்ந்துள்ளார்.

    அதற்கு மோகன்லால் பதிலளிக்கும் வகையில் அன்புள்ள @iamsrk, உங்களைப் போல் யாரும் நடனமாட முடியாது! நீங்கள் எப்போதும் உங்கள் உன்னதமான, ஒப்பற்ற பாணியில் OG ஜிந்தா பண்டாவாக இருப்பீர்கள். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. மேலும், வெறும் இரவு உணவா? காலை உணவுக்கு மேல் ஏன் ஜிந்தா பண்டாவை விரும்பக்கூடாது? என்று பதிலலித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த விருது வழங்கும் விழாவில் மம்மூடிக்கு சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் அதை மோகன்லால் அவருக்கு வழங்கினார். விருதை வாங்கி கொண்டு மமூட்டி "நான் இந்த திரையுலகில் 42 வருடங்களாக இருக்கிறேன். என்னோடு இத்தனை காலங்கள் பயணித்து தோளோடு தோள் நின்று இருப்பது மோகன்லால் ஆவார், அவர் திறமையான நடிகர், நல்ல நடனமாட கூடியவர் எல்லாத்தையும் சிறப்பாக செய்பவர்" என்று கூறிய பிறகு மம்மூட்டி மோகன்லால் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட மோகன்லால் அதே அன்போடு மம்மூட்டி கன்னத்திலும் முத்தம் கொடுத்தார். இப்புகைப்ப்டம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார்.
    • இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை யொட்டி திரையரங்குகளில் 'ரிலீஸ்' ஆக உள்ளது.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், பிரேம்ஜி, பார்வதி நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

    இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார் GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

    கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதைக்கும் மாஸ்கோவுக்கும் சம்பந்தம் இருப்பதால் தான் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்

    மேலும் இப்படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட உள்ளதாக தகவல் வெளியானது.




    இந்நிலையில் திரிஷாவுக்கு பதில் தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அந்த நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை யொட்டி திரையரங்குகளில் 'ரிலீஸ்' ஆக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார்.
    • படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படஹ்ட்தின் மூலம் தான் அறிமுகமாகிறார்கள்.கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்நிலையில் படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார். தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் அமைந்து இருக்கிறது வடக்கன் திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் நடிகர் சூரியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
    • சூரியும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என்று அனைவரோடும் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

    உலகப்பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. ஜாதி, மத பாகுபாடின்றி மக்கள் ஒன்று கூடி மகிழும் ஒற்றுமை திருவிழாவான இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    வி.ஐ.பி.க்கள் வரிசை என்றில்லாமல் அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரியும் மக்களோடு மக்களாக கலந்துகொண்டார். என்னதான் மதுரையில் பிறந்து வளர்ந்த போதிலும், அவரை பார்த்ததும் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் நடிகர் சூரியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    அவரும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என்று அனைவரோடும் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முழுவதுமாக கண்டு ரசித்த பின்னர் அழகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    ×