என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடும்பம், வேலை, தனிப்பட்ட பிரச்சினைகள் என ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன.
    • சிலர் எப்போதும் மன அழுத்தத்துடனேயே இருப்பர். எதற்காக கோபப்படுகிறோம் என்று தெரியாமலேயே கோபப்படுவர்.

    மன அழுத்தம்... இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்சினை. உடலை விட மன ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோர் தான் இன்று அதிகம். வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணம்.

    குடும்பம், வேலை, தனிப்பட்ட பிரச்சினைகள் என ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. மகிழ்ச்சியாக இல்லை என்றால் மன அழுத்தம் இருக்க வாய்ப்பு அதிகம். ஏன், அன்றாட வேலைகள் பாதிக்கப்படும்போதும், வழக்கத்திற்கு மாறாக ஒரு செயலை செய்யும் போதும் கூட மன அழுத்தம் ஏற்படலாம்.

    மன அழுத்தத்தால் ஒரே எண்ணம் மீண்டும் மூளையில் தோன்றி, தூங்கவிடாமல் செய்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட ஹார்மோன்களை அதிகம் சுரக்க செய்யும். இதனால் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

    வாழ்வில் திடீரென ஏற்படும் எதிர்மறையான மாற்றம், நிர்பந்தம், முரண்பாடுகள், ஒப்பிடும் மனப்பான்மை, எதார்த்தமில்லாத இலக்குகள், உறவுமுறைகளில் விரிசல், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசைகள் மன அழுத்தத்திற்கான காரணங்களாக அமைகின்றன. மன அழுத்தத்தால் கோபம், பயம், வெறுப்பு, கவனமின்மை, கவலை, சந்தேகம் போன்றவை ஏற்படுகிறது. எனவே மன அழுத்தத்தை சரியாக கையாள வேண்டும்.

    நமது உடலில் இதயம், நுரையீரல், மூளை, வயிறு போன்ற அனைத்து உறுப்புகளும் எங்கு இருக்கிறது என்பது நமக்கு தெரியும். ஆனால் மனம் எங்கிருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. மனம் ஆனது உடல் முழுக்க இருக்கிறது.

    மனம் என்பது குதிரை போல ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு சமயம் அலுவலகத்தை பற்றி நினைத்தால் அடுத்த நிமிடம் வீட்டில் இருக்கும் மனைவியை பற்றி நினைப்போம். நாளைக்கு எங்கே போகலாம்? என்று நினைப்போம். இப்படி எத்தனையோ நினைவுகள் வந்துகொண்டே இருக்கும். இவ்வாறு சஞ்சலப்படும் மனதை ஒருநிலைப்படுத்துவதற்காக தான் அந்த காலங்களிலேயே மன்னர்கள் ஊருக்கு ஊர் ஆலயங்களை கட்டி வைத்தனர். ஆலயங்களுக்கு செல்வது இறைவனை வேண்டுவதற்காக மட்டுமல்ல மனதை சாந்தப்படுத்துவதற்கும் தான். ஆலயத்தில் அமைதியாக பிரார்த்தனை செய்யும்போது நம் மனம் ஒருநிலைப்படுகிறது.

    சிலர் எப்போதும் மன அழுத்தத்துடனேயே இருப்பர். எதற்காக கோபப்படுகிறோம் என்று தெரியாமலேயே கோபப்படுவர். ஏதாவது கேட்டால் சத்தம் போட்டு பேசுவார்கள். அடிப்பதற்கு கூட கை ஓங்கி விடுவர். இவர்களை டென்சன் பேர்வழிகள் என்று அழைப்பது உண்டு. இன்னும் சிலரோ ஒரு படி மேலே போய் மனைவி, குழந்தைகளை அடிப்பார்கள். 2 வயது பச்சிளம் குழந்தை சொல்பேச்சு கேட்க மறுக்கிறது என கூறி அடிப்பார்கள். மதிப்பெண் குறைந்து விட்டால் குழந்தைகளை சகட்டு மேனிக்கு திட்டுவார்கள். இவர்களின் மன அழுத்தம் அந்த குழந்தைகளையும் தாக்கும். விளைவு அந்த குழந்தைகள் உயிரை மாய்க்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    மனம் சரியில்லை என்றால் எவற்றையெல்லாம் செய்யக்கூடாதோ, அவை அனைத்தையும் செய்வோம். சிலர் சிகரெட்டை பாக்கெட், பாக்கெட்டாக ஊதி தள்ளுவார்கள். அளவுக்கு அதிகமாக மது குடிப்பார்கள். இதனால் யாருக்கு நஷ்டம். நம் உடல் நலம் தான் பாதிக்கப்படும். உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என யாரையும் விட்டு வைக்காமல் திட்டுவார்கள். பின்னர் அவர்களே சப்பை கட்டு கட்டுவர். கோபம் வந்தால் இப்படித்தான் சத்தம் போடுவேன். பிறகு அவர்களிடம் சகஜமாக பேசி விடுவேன் என்பார்கள். இது உங்களுக்கு சரியானதாக இருக்கலாம். ஆனால் திட்டு வாங்குபவர்கள் மனம் உடைந்து போவார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

    மன அழுத்தம் இருந்தால் சரியாக வேலை செய்ய முடியாது. வாழ்வில் வெற்றி பெற முடியாது. மன அழுத்தமின்றி பணியாற்றினால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். உங்கள் மீது பிறருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும். அவர் நல்ல மனிதருங்க, கோபப்பட மாட்டார், நிதானமாக பேசுவார், எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர் என பிறர் பாராட்ட வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் வாழ்வில் வெற்றி பெறுவர். எப்போதும் நல்லதை மட்டும் நினைப்பவர்களுக்கு மன அழுத்தம் வராது.

    இப்போது 5 வயது குழந்தைக்கு கூட டென்சன் வருகிறது. குழந்தை டி.வி. பார்த்துக்கொண்டு இருக்கும் போது ரிமோட்டை வாங்கி விட்டால் டென்சனாகி விடுகிறார்கள். 6 வயது குழந்தை போர் அடிக்கிறது என்கிறான், 10 வயது சிறுவன் தாயார் தன்னை டார்ச்சர் செய்வதாக சொல்கிறான். 30 வருடத்துக்கு முன்பு வரை இப்படியெல்லாமல் குழந்தைகள் பேசி கேள்விப்பட்டு இருக்கவே மாட்டோம். இந்தநிலை மாற வேண்டுமானால் பெரியவர்கள் மன அழுத்தம் இன்றி அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். இதைப் பார்த்து வருங்கால சந்ததியரும் அவர்களாகவே மாறி விடுவார்கள். மன அழுத்தம் வந்து அதற்கு தீர்வு காண்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது. என்னை மனதில் வைத்து நான் வாழ்க்கையில் வெற்றி பெற்றதை வைத்து இங்கு சில ஆலோசனை சொல்கிறேன்.

    டாக்டர் ஜி.பக்தவத்சலம்

    டாக்டர் ஜி.பக்தவத்சலம்

    வெற்றி பெறுவது என்பது தேர்தலில் நின்று எம்.பி., எம்.எல்.ஏ.வாக பதவி வகிப்பது மட்டுமல்ல. மற்றவர்கள் நம்மை பாராட்டும் படியாக நாம் நடந்து கொள்வது தான் வெற்றி. ஒரு ஆசிரியர் இருக்கிறார், அமைதியாக கற்றுக்கொடுக்கிறார், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுகிறார்கள். இது தான் வெற்றி. வீட்டில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். 2 குழந்தைகளையும் வளர்த்து, படிக்க வைத்து அவர்கள் நல்ல பணிக்கு சென்று நன்றாக இருக்கிறார்கள் என்றால் அதுதான் பெற்றோருக்கு வெற்றி. இதில் பணம் பெரிதாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பணம் அதிகமாக சேர்ப்பது தான் வெற்றி என்று யாராவது சொன்னால் அது தவறு. பணக்காரர்கள் நிறைய பேர் மனதில் நிம்மதி இல்லாமலேயே இருக்கிறார்கள்.

    இதுபோல நமக்கு மட்டும் அமைதி கிடைத்தால் போதாது, நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நம்மால் அமைதி கிடைக்க வேண்டும். நீங்கள் நன்றாக இருந்து மற்றவர்கள் கஷ்டப்பட்டால் அது அமைதி கிடையாது. இன்றைக்கு இருக்கும் நாம் நாளைக்கு இருப்போமோ, இருக்க மாட்டோமா என்பது யாருக்கும் தெரியாது. எனவே இந்த குறைந்த ஆயுள் காலத்தில் மற்றவர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் நாம் செய்யும் செயல்களே நிம்மதியை தரும்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமாக மூன்று விஷயங்கள் தேவை. ஒன்று மகிழ்ச்சி, 2-வது பிறரை நேசிக்கும் அன்பு, 3-வது அமைதி. இதில் அமைதி மிக முக்கியம். அமைதியை நோக்கி செல்லும்போது மன அழுத்தம் வராது. பணத்தை நோக்கி மட்டுமே பயணிக்கும் போதோ அல்லது வேறு எதாவது அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணிக்கும் போதோ வழியில் நிறைய தடங்கல்கள் வரும். அப்போது மன அழுத்தம் வரும். எதையாவது எதிர்பார்த்து அது நடக்கவில்லை என்றால் மன அழுத்தம் வரும். எதையும் எதிர்பார்த்து வேலை செய்யாதீர்கள், நீங்கள் செய்ய வேண்டிய வேலையை திருப்தியுடன் கடமையாக செய்யுங்கள், சந்தோஷமாக, பூரணமாக செய்யுங்கள். அப்படி செய்யும் செயல்கள் கண்டிப்பாக வெற்றியை தேடித்தரும். ஈடுபாடின்றி அரைகுறையாக செய்யும் பணிகள் நமக்கு கெட்ட பெயரை கொண்டு வரும்.

    மன அழுத்தம் நீங்க, தூக்கம் வருவதற்காக சிலர் மாத்திரை சாப்பிடுவார்கள். அது தற்காலிக தீர்வையே தரும். நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் தியானம் தான் சிறந்தது. வீட்டில் தாயார் அதிகாலை 4 மணிக்கே எழுந்து முழு மனதுடன் நமக்காக சமையல் செய்கிறார். அந்த சமையல் நன்றாக வருகிறது. அந்த அதிகாலை வேளையில் நாமும் எழுந்து பழகலாம். நான் எப்போதுமே அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை உள்ள நேரத்தை அமிர்த வேளை என்பேன். அந்த சமயத்தில் எந்தவித சத்தமும் இருக்காது. வாயு மண்ட லத்தில் ஓசோன் அதிகமாக இருக்கும். அந்த அதிகாலை வேளையில் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்யலாம், மூச்சுப்பயிற்சி செய்யலாம். அப்போது நமது உடலுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். கண்களை மூடி 30 நிமிடம் தியானம் செய்யும் போது மனதில் உள்ள துக்கம் எல்லாம் காணாமல் போய் விடும். அந்த சமயம் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனும் நமக்கு உத்வேகத்தை அளிக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் நம் மனதில் உதிக்கும்.

    காரில் உள்ள பெட்ரோல் டேங்க் காலியாக இருக்கிறது. டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்புகிறோம். அன்றைய பொழுது முழுவதும் காரில் பயணிக்கிறோம். அதேபோல அமைதி என்ற டேங்க் மனதில் காலியாக இருக்கிறது. அதற்காக அதிகாலையில் தியானத்தால் அந்த டேங்கை நிரம்புகிறோம். அதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் நிச்சயம் நம் மனம் அமைதியுடன் பயணிக்கும். நாம் செய்யும் செயல்கள் சிறக்கும். தியானத்துடன் சேர்த்து சிறிய உடற்பயிற்சிகளும் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். தியானம் செய்யும் முதல் 2, 3 நாட்கள் நமக்கு என்னவெல்லாமோ ஞாபகத்துக்கு வரும். பிறகு நாட்கள் செல்ல பழகி மனம் ஒருநிலைப்பட்டு விடும். தியானம், மூச்சுப்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் நம்மை நெருங்காது. ஆஸ்துமா போன்ற பல நோய்களும் வராது.

    தூக்கமின்மையும் மன அழுத்தத்துக்கு காரணம். எனவே இரவில் வெகுநேரம் கண் விழித்து டி.வி.யோ, சினிமாவோ பார்க்க கூடாது. செல்போனை நோண்டிக்கொண்டே இருக்க கூடாது. இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்து விட வேண்டும். 10 மணிக்குள் படுத்து தூங்கி விட வேண்டும். இப்படி பழக்கத்தை ஏற்படுத்தினால் உங்களை எழுப்ப அலாரம் தேவையில்லை. அதிகாலை 4 மணிக்கு நீங்களாகவே எழுந்து வேலையை தொடங்கி விடுவீர்கள். தூங்குவதற்கு முன்பு இனிமையான இசையை கேட்கலாம். செல்போன், டி.வி.க்கு ஓய்வு கொடுத்து விட்டு குழந்தைகளுடன் பேசி மகிழ்ச்சியாக பொழுதை கழியுங்கள். நம்மைச் சுற்றி ஒரு வட்டம் அமைத்துக்கொண்டு அதற்குள் எதையும் உள்ளே வரவிடக்கூடாது. அதாவது, அலுவலகப் பிரச்சினைகளை வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது, வீட்டுப் பிரச்சினை களை வேலைக்குள் கொண்டு செல்லக்கூடாது. இதனால் இருதரப்பிலும் இருந்து வரும் மன அழுத்தத்தை தவிர்க்கலாம். கோபத்தை தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் யாரிடமும் கோபப்பட கூடாது.

    உடல் உழைப்பு அதிகம் எனில் 8 முதல் 10 மணி நேரமும், உடல் உழைப்பு இல்லாத நிலையில் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமும் நிம்மதியான தூக்கம் அவசியம். இதனால் உடல் புத்துணர்ச்சியாகும். மன அழுத்தம் நம்மை நெருங்கவே நெருங்காது.

    தொடர்புக்கு:

    info@kghospital.com

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனம் தளராத விடாமுயற்சி எந்த சூழ்நிலையிலும் வெற்றி தரும். இது ஹெலன் கெல்லர் என்ற அபூர்வ பெண்மணி உலகிற்குக் காட்டிய உண்மை.
    • 2021-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களுள் கர்நாடகாவைச் சேர்ந்த 72 வயதான துளசி கவுடாவும் ஒருவர்.

    தடைகள் உண்டு எனில் அவற்றை அகற்றும் விடைகளும் உண்டு!

    நவீன உலகில் அன்றாடம் பிரச்சினைகளைச் சந்திக்காதவரே இல்லை. இன்னும் உடல் குறைபாடுகளைக் கொண்டிருந்தாலோ சொல்லவே வேண்டாம். அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.

    ஆனால் விதி என்று இவற்றைச் சொல்லி அனுபவித்துத் துன்பப்படுவதை விட இதை மாற்றும் வழி உண்டா? உண்டு என்று நிரூபித்திருப்போர் ஏராளம். அவர்களில் சிலர் இதோ!

    அபூர்வப் பெண்மணி ஹெலன் கெல்லர்

    ஹெலன் கெல்லர்: ஒரு அபூர்வப் பெண்மணி (தோற்றம் ஜூன் 27,1880 மறைவு ஜூன் 1, 1968)

    மனம் தளராத விடாமுயற்சி எந்த சூழ்நிலையிலும் வெற்றி தரும். இது ஹெலன் கெல்லர் என்ற அபூர்வ பெண்மணி உலகிற்குக் காட்டிய உண்மை.

    19 மாதக் குழந்தையாக இருந்தபோது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார். அவரால் பேசவும் முடியவில்லை.

    ஹெலனின் தாயார் அவரை மசாசூசெட்சில் (அமெரிக்கா) பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்தார். அங்கு ஆன்னி சல்லிவன் என்ற கண் பார்வை இழந்த ஒரு ஆசிரியை அவருக்கு ஒவ்வொரு பொருளையும் தடவிப் பார்க்கச் சொல்லி அதன் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.

    பல வருட கால கடுமையான உழைப்பிற்குப் பின்னர் ஆங்கிலத்தை முழுவதுமாகக் கற்றதோடு, பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம், லத்தீன், கண் பார்வையற்றோருக்கான பியிலி ஆகிய மொழிகளில் அவர் தேர்ந்தார்.

    1904-ம் ஆண்டில் அவர் பட்டம் பெற்றார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து முதலில் பட்டம் பெற்ற பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.

    எனது வாழ்க்கை சரிதம் என்ற மனதை உருக்கும் ஒரு புத்தகத்தை எழுதியதோடு மொத்தம் 14 புத்தகங்களை அவர் எழுதினார்.

    30 நாடுகளுக்குப் பயணம் செய்து அனைவருக்கும் உத்வேகம் ஊட்டினார்; பெண்களின் உரிமைக்காகப் போராடினார்.

    87-ம் வயதில் அவர் மறைந்தார். 1964-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி பி.லிண்டன் ஜான்சன் அவருக்கு அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.

    நெஞ்சம் தளராது உற்சாகத்தோடு தனது அனைத்துக் குறைகளையும் புறம் தள்ளி வெற்றி பெற்ற வீராங்கனை அவர்.

    சரி, இவர் போலல்லாது கண் பார்வையும் செவிப் புலனையும் தக்க ஆதரவையும் கொண்டுள்ள ஆயிரக் கணக்கானோர் எப்படி எல்லாம் முன்னேறலாம்?!.

    தன் தடைகளை அகற்றி அவற்றைப் போக்கப் பல விடைகளைத் தந்தவர் ஹெலன் கெல்லர் என்பதே உண்மை!

    மலைகளை நகர்த்திய மா மனிதன்!

    மனித மனத்தில் ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று உறுதியாகிவிட்ட பட்சத்தில் முடியாதது ஒன்றும் இல்லை.

    இதற்கு உதாரணம் தசரத் மஞ்சி (Dasjrath Manjhi). (தோற்றம் 14-1-1929 மறைவு 17-8-2007)பீகார் மாநிலத்தில் கயாவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஜெஹ்லௌர்.

    அதில் வாழ்ந்தவர் தசரத் மஞ்சி. ஒரு துயரமான சம்பவம் அவர் வாழ்க்கையில் 1959-ல் நிகழ்ந்தது. அவரது மனைவி பல்குனி தேவி மலையில் இருந்து கீழே விழ பலத்த காயம் பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அந்த மலைப் பகுதியில் சாலையே இல்லை. அவர் இறந்து போனார். அப்போது மனதிற்குள் ஒரு உறுதியை எடுத்தார் தசரத். இந்த மலையை வெட்டி ஒரு சாலை அமைப்பது என்ற முடிவு தான் அது. அவரிடம் மூன்று ஆடுகள் தாம் இருந்தது. அதை விற்று ஒரு சுத்தியலையும் உளியையும் வாங்கினார். வேலையை ஆரம்பித்தார்.

    மலையை வெட்டி ஒரு ரோடு போடுவது தான் அவரது கனவு. 22 வருடங்கள் இடைவிடாது உழைத்தார் - தனி ஆளாக! 1960-ல் அவர் ஆரம்பித்த பாதை 1982-ல் முடிந்தது.

    ஆரம்பத்தில் பைத்தியக்காரன் என்று அவரை எள்ளி நகையாடிய அனைவரும் அவரது உறுதியைப் பார்த்து வியந்தனர்.

    அவர் இருந்த இடத்திலிருந்து ஆச்பத்திரி 55 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அயராமல் உழைத்து 110 மீட்டர் நீளமும் 9.1 மீட்டர் அகலமும் உள்ள ஒரு சாலையை அவரே அமைத்து முடித்தார். மலையின் சரிவில் பக்கவாட்டில் அவர் இந்த சாலையை அமைத்து முடித்தார். இந்த சாலையால் 55 கிலோ மீட்டர் தூரமானது 15 கிலோ மீட்டர் தூரமானது.

    இந்திய அரசு இவரை கவுரவித்து ஒரு தபால்தலையை 26-12-2016இல் வெளியிட்டது. பீஹார் அரசும் அவரைக் கவுரவித்தது.

    2015-ல் மஞ்சி - மலை மனிதர் - Manji – The Mountain Man-என்ற பெயரில் அவரைப் பற்றி ஒரு திரைப்படமும் தயாரிக்கப்பட்டது.

    இந்த சாலையின் மூலம் அவரது கிராமம் வெளி உலகுடன் இணைக்கப்படவே பள்ளி, ஆஸ்பத்திரி வசதி கிராம மக்களுக்குக் கிடைத்தது; வேலை வாய்ப்புகளும் உருவாயின.

    2007இல் அவர் இறந்த போது பீகார் அரசு அவரது இறுதிச் சடங்கில் அரசு மரியாதைகளைச் செய்து கவுரவித்தது.

    முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு தசரத் மஞ்சி ஒரு சிறந்த உதாரணம்!

    மரங்களின் நாயகி!

    2021-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களுள் கர்நாடகாவைச் சேர்ந்த 72 வயதான துளசி கவுடாவும் ஒருவர். அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இவரைப் பற்றிய செய்திகள் சுவையானவை; ஆச்சரியகரமானவை.

    உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஹளகி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ஹொன்னளி என்ற கிராமத்தில் வாழ்பவர்.

    30000 மரங்களை அவர் இதுவரை நட்டிருக்கிறார்!மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளிட்ட தாவர வகைகளில் இவரது ஞானம் அபாரமானது. காடு பற்றிய என்சைக்ளோபீடியா இவர். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தனது கணவனை 17-ம் வயதிலேயே இழந்து விதவையானார். பின்னர் தன்னார்வலராக வனத் துறையில் சேர்ந்தார். சில காலம் கழித்த பின்னர் இவரது வேலை வனத்துறையால் உறுதிப் படுத்தப்பட்டது.

    அறுபது ஆண்டுகளாக 30000 மரங்களை இவர் நட்டிருக்கிறார்.

    நீரின் தரம் அதிகரிக்க வேண்டுமா, நீர் வளம் சிறந்து இருக்க வேண்டுமா அப்போது மரங்கள் அதிகமதிகம் தேவை என்பதே இவரது தாரக மந்திரம். அதே போல மண் வளம் சிறக்கவும் காடுகளே காரணம் என்கிறார் இவர்.

    சுற்றுப்புறச் சூழல் சிறக்கவும், காற்றின் நச்சுத் தன்மை நீங்கி அது சுத்தமாக இருக்கவும் காடுகள் இன்றியமையாதது என்று கூறும் இவர் மரங்களின் பால் அலாதி அன்பு கொண்டவர்.

    தினமும் நூற்றுக் கணக்கான மரங்களை அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் வெட்டித் தள்ளுகிறோம். அதே அளவோ அதற்கு அதிகமாகவோ மரங்களை நட்டு வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமை அல்லவா என்று கேட்கிறார் இவர்.

    மரங்களின் பால் இவர் கொண்டுள்ள அன்பைப் பார்த்த மக்கள் இவருக்கு 'விருட்ச தேவி' என்ற செல்லப் பெயரைச் சூட்டி அழைக்கின்றனர்.

    மனம் போன போக்கில் மரங்களை வெட்டி காடுகளை அழித்து இயற்கைச் செல்வத்தை மனித குலம் அழிக்க முற்படும் போது அதைத் தடுத்து விழிப்புணர்வை ஊட்டும் துளசிகள் நிறைய பேர் நமது நாட்டிற்குத் தேவை அல்லவா!

    இயற்கையை அழித்தால் வரும் தடைகள் ஏராளம்! அந்தத் தடையைப் போக்கும் விடையாக அமைகிறார் துளசி!

    கல்லூரியில் படிக்க 2500 மைல் நடந்தவர்!

    கயிரா : தோற்றம் : 1942 மறைவு 14-10-2012

    ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நியாசா லேண்டில் மப்லே என்ற கிராமத்தில் பிறந்தது ஒரு ஆண் குழந்தை. அந்தக் குழந்தையின் பெயர் லெக்சன் கயிரா. பிறந்தவுடன் குழந்தையை அதன் தாயார் டிடிமு ஆற்றில் தூக்கி எறிந்து விட்டார். ஏனென்றால் குழந்தையை வளர்ப்பதற்குப் போதுமான வசதி அவரிடம் இல்லை. அண்டை அயலார் அலறி அடித்துக் கொண்டு குழந்தையை ஆற்றிலிருந்து காப்பாற்றினர். அன்றிலிருந்து அந்தக் குழந்தையின் பெயரில் டிடிமு சேர்ந்து அவர் லெக்சன் டிடிமு கயிரா ஆனார். பள்ளிப் படிப்பை முடித்த லெக்சனுக்குச் சிறந்த கல்லூரியில் படிக்க ஆசை. அவரது பள்ளியில் இருந்த குறிக்கோள் வாசகம் : நான் முயற்சி செய்வேன் - (I will Try)- என்பது.

    தனது தாயாரிடம் சென்று, "அம்மா. நான் அமெரிக்கா சென்று கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். உனது ஆசியும் அனுமதியும் வேண்டும்" என்றார்.அம்மாவிற்கு அமெரிக்கா என்றால் அது எங்கு இருக்கிறது என்பதே தெரியாது. அவர், " ஆஹா! அதற்கென்ன! தாராளமாகப் போய் வா" என்று ஆசி கூறி அனுமதி தந்த அவர், "எப்போது கிளம்பப் போகிறாய்?" என்றார்.

    அவருக்கு அமெரிக்கா எங்கு இருக்கிறது என்பது தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை ஊகித்த கயிரா பரபரப்புடன் "நாளைக்கே" என்றார். மறுநாளே கிளம்பிவிட்டார்.

    கிழக்கு ஆப்பிரிக்காவின் நியாசா லேண்டில் இருந்து கெய்ரோ 3000 மைல் தூரத்தில் இருந்தது. அதை நான்கு நாட்க ளில் அடைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த கயிரா ஐந்து நாட்கள் கழித்து 25 மைல் தூரம் மட்டுமே நடந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.

    காட்டு வழியாகவும் குக்கிராமங்கள் வழியாகவும் ஆங்காங்கு கிடைத்த வேலைகளைச் செய்து பசியாறி ஒரு வருடம் நடந்து கொண்டே இருந்த கயிரா உகாண்டா நாட்டை வந்தடைந்தார். அங்கு செங்கல் சூளை ஒன்றில் வேலை கிடைத்தது. கம்பாலாவில் அமெரிக்க கல்லூரிகளைப் பற்றிய விவரம் அடங்கிய டைரக்டரி அவருக்குத் தற்செயலாகக் கிடைத்தது.

    வாஷிங்டனில் உள்ள மவுண்ட் வெர்னானில் உள்ள ச்காகிட் கல்லூரியில் ச்காலர்ஷிப் கேட்டு விண்ணப்பித்தார். மூன்று வாரங்களில் கல்லூரியில் இடம் தருவதாகவும் கூடவே ஒரு வேலையும் தருவதாகவும் பதில் வந்தது.

    திரும்பவும் நடக்க ஆரம்பித்தார் கயிரா. அவரது ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் ஏழ்மை நிலையையும் கேட்டு பரிதாபப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரி கல்லூரி நிர்வாகத்திற்கு அவரைப் பற்றி விளக்கமாக கடிதமொன்றை அனுப்பினார்.

    உடனே அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் நிதி திரட்ட ஒரு சிறப்பு உதவி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து 1700 டாலர் சேர்த்து அவருக்கு அனுப்பினர். ஒரு வழியாக நடையாய் நடந்து அவர் ச்காகிட் கல்லூரியை அடைந்த போது அவருக்கு அங்கு ஒரு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. "உனக்கு என்ன ஆசை?" என்று கேட்ட போது எனது நாட்டிற்குப் பிரதம மந்திரி ஆக வேண்டும் என்று ஆசை என்றார்.

    அனைவரும் நகைத்தனர். கயிரா சொல்லக் கூடாத எதையேனும் சொல்லி விட்டோமோ என்று திகைத்தார். அங்கு படித்தார்; தேர்ந்தார். 'தி லூமிங் ஷேடோ' என்ற நாவலை எழுதினார். இங்கிலாந்தை தனது வசிப்பிடமாகக் கொண்டு கேம்பிரிட்ஜில் பேராசிரியராகப் பணி புரிய ஆரம்பித்தார்.

    தனது வாழ்க்கை வரலாற்றை 'ஐ வில் டிரை' என்ற தலைப்பிட்டு ஒரு நூலாக எழுதினார். அது உலகெங்கும் பரபரப்பாக விற்பனையானது. அவர் பெயரில் அவரது நாட்டில் ஒரு பள்ளியும் சிம்பம்பா என்ற கிராமத்தில் துவக்கப்பட்டது. 2016-ல் அவரது அச்தி அங்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    வாழ்க்கையே தடைக் கல்லாக இருந்தாலும் அதைப் படிக்கட்டுக் கல்லாக மாற்றிய கயிராவின் லட்சிய வாசகம் - நான் முயற்சி செய்வேன் என்பது தான்!

    இடும்பைக்கு இடும்பை படுப்பர்

    தங்களுக்குத் துன்பம் அளிக்க வந்த தடைகளை எல்லாம் எதிர்கொண்டு துன்பம் கண்டு பயப்படாதிருத்தல், மனம் தளராமை, உற்சாகம், குறிக்கோளை அடைய இடைவிடா உழைப்பு உள்ளிட்டவற்றை தங்களது விடைகளாக அளித்த இவர்கள் நமது வாழ்க்கைக்கான வழிகாட்டிகள்!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோளறு பதிகத்தில் உள்ளார்ந்து பொதிந்திருக்கும் மந்திர ஆற்றல் முழுவதும் அதை அருளிய ஞானசம்பந்தப் பெருமானின் தவ ஆற்றலே.
    • மந்திரங்களின் பலனை அடைய அவை முதலில் எந்த மொழியில் தோன்றினவோ அதே மொழியில்தான் ஓத வேண்டும்.

    பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன. அவற்றில் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு திருப்பதிகம்.

    எதைத் தொகுத்தாலும் பத்துப் பத்தாகத் தொகுப்பது தமிழில் உள்ள மரபு. திருக்குறளில் ஒவ்வோர் அதிகாரமும் பத்துப் பத்து குறட்பாக்களைத் தாங்கியுள்ளதைக் காணலாம்.

    பக்தி இலக்கியத்தில் பத்துப் பாடல்களின் தொகுப்பு பதிகம் எனப்படுகிறது. கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம் போன்றவை பத்தின் தொகுப்புகளே.

    சில பதிகங்களில் பத்திற்குப் பிறகு மிகையாக ஒரு பாடல் இருக்கும். அந்தப் பதினொன்றாம் பாடல், மேற்சொன்ன பத்துப் பாடல்களைப் படிப்பதால் கிட்டும் பயனை விவரிக்கும். அதைப் பலச்ருதி எனச் சொல்வதுண்டு.

    கோளறு பதிகத்திலும் அதன் பயனைச் சொல்கிற பதினொன்றாம் பாடல் உண்டு.

    'தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி

    வளர்செம்பொன் எங்கும் திகழ

    நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து

    மறைஞான ஞான முனிவன்

    தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து

    நலியாத வண்ணம் உரைசெய்

    ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்

    அரசாள்வர் ஆணை நமதே!'

    கோளறு பதிகத்தை ஓதுபவர்கள் வானில் அரசாள்வர் என ஆணையிட்டுச் சொல்கிறார் ஞானசம்பந்தர்.

    தமிழில் எத்தனையோ பதிகங்கள் இருந்தாலும், கோளறு பதிகம் நமது பக்தி இலக்கியத்தை அலங்கரிக்கும் புகழ்பெற்ற பதிகங்களில் ஒன்று. அதில் வரும் சொற்கள் ஒவ்வொன்றும் மந்திர சக்தி நிறைந்தவை.

    'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

    மறைமொழி தானே மந்திர மென்ப'

    என்கிறது தொல்காப்பியம். தவச்சக்தி நிறைந்தவர்கள் ஒரு சொல்லை ஆணையிட்டுச் சொல்கிறபோது, அது மந்திரமாகி விடுகிறது.

    அதை ஏராளமானோர் ஓதி ஓதி காலம்காலமாகப் பயனடைவதால், அதில் உறைந்திருக்கும் மந்திர ஆற்றல் விழிப்படைந்து பலருக்கும் எளிதில் பயனளிக்கக் கூடிய நிலையை அடைகிறது.

    கோளறு பதிகத்தில் உள்ளார்ந்து பொதிந்திருக்கும் மந்திர ஆற்றல் முழுவதும் அதை அருளிய ஞானசம்பந்தப் பெருமானின் தவ ஆற்றலே.

    கோளறு பதிகம் தமிழ் மந்திரம் என்பதால் அதைத் தமிழில் ஓதித்தான் பலன் அடைய முடியும். மொழிபெயர்த்து இன்னொரு மொழியில் சொல்வதால் பொருளைப் புரிந்து கொள்ளலாமே அன்றி மந்திர பலனை அடைய முடியாது.

    மந்திரங்களின் பலனை அடைய அவை முதலில் எந்த மொழியில் தோன்றினவோ அதே மொழியில்தான் ஓத வேண்டும். ஏனெனில் மந்திரங்களின் ஆற்றல் அவற்றின் பொருளில் இல்லை. ஒலியில் உள்ளது.

    தற்காலத்தில் ஏராளமான அன்பர்களுக்குப் பயனளிக்கக் கூடிய தமிழ் மந்திரப் பனுவல்களில் கோளறு பதிகம், கந்த சஷ்டி கவசம் இரண்டும் மிக முக்கியமானவை.

    ஒருவருக்கு கிரகக் கோளாறுகளால் ஏற்படக் கூடிய எல்லா இன்னல்களையும் கோளறு பதிகத்தை ஓதித் தடுத்துவிடலாம். கோளறு பதிகம் தன்னை ஓதும் பக்தர்களைச் சுற்றி ஒரு கவசம் போல் நின்று, கோள்களால் நேரும் தீய பாதிப்புகளைத் தடுத்து அவர்களைக் காப்பாற்றுகிறது.

    ராகு காலத்தில் ஒரு செயலைச் செய்தே ஆக வேண்டிய சூழல் தோன்றினால், மனத்திற்குள் முழு கோளறு பதிகத்தை அல்லது அதன் முதல் பாடலை ஒரே ஒருமுறை ஜபிப்பதன் மூலம் ராகு காலக் கெடுதல்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

    பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் போன்ற ஆன்மிகத் தமிழறிஞர்கள் கோளறு திருப்பதிகத்தின் மேல் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்கள். தாங்கள் அதை ஓதியதோடு, மற்றவர்களையும் அதை ஓதிப் பயனடையச் சொல்லி வழிகாட்டினார்கள்.

    அண்மைக் காலத்தில் வாழ்ந்த நூற்றாண்டுத் தவமுனிவரான காஞ்சிப் பரமாச்சாரியார், கோளறு பதிகத்தின் சிறப்பைப் பற்றிப் பலமுறை பேசியிருக்கிறார்.

    இந்திய சீனப் போர் நடந்துகொண்டிருந்த 1960 ஐ ஒட்டிய ஆண்டுகளில், ஏழு கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரும் சூழல் நேர்ந்தது.

    இத்தகைய சூழல் நாட்டை பாதிக்கும் என்பதால், அன்பர்கள் கோளறு பதிகத்தை நாள்தோறும் ஓத வேண்டும் எனப் பரமாச்சாரியார் அறிவுறுத்தினார்.

    அப்போது ஏராளமானோர் கோளறு பதிகத்தை ஆலயங்களில் மட்டுமல்லாது அவரவர் இல்லங்களிலும் விடாமல் ஓதினர். கோளறு பதிகத்தை அச்சிட்டு இலவச வினியோகம் செய்த அன்பர்களும் பலர்.

    கோள் என்ற சொல் நவக்கிரகங்களைக் குறிக்கும் பொதுச் சொல். அறு என்றால் பாதிப்பிலிருந்து விடுபடுவது எனப் பொருள். கோள், அறு என்ற இரு சொற்களும் இணைந்து கோளறு திருப்பதிகம் எனப் பெயர் பெற்றது. உண்மையிலேயே ஆன்மிக உலகில் 'பெயர்பெற்ற' பதிகம்தான் இது.

    கோளறு பதிகத்தை அருளிய திருஞான சம்பந்தர் இளம் வயதிலேயே பாடல்கள் அருளிய மாமேதை. ஆண்பனை மரத்தைப் பெண் பனைமரமாக்கிக் காய்க்கச் செய்தது, பாம்பு தீண்டி இறந்த பூம்பாவையின் எலும்பிலிருந்து மீண்டும் பூம்பாவையை 'மட்டிட்ட புன்னை' என்று தொடங்கும் பதிகம் பாடி உயிர்பெற்று வரச் செய்தது என அவர் நிகழ்த்திய அற்புதச் செயல்கள் பல..

    சோழ வளநாட்டில் ஏழாம் நூற்றாண்டில் சீர்காழியில் தோன்றியவர். சிவபாத இருதயர் அவரது தந்தை. பகவதி அம்மையார் அவரது தாய்.

    மூன்று வயதுக் குழந்தை சம்பந்தரை அழைத்துக் கொண்டு சீர்காழி சிவன் கோவிலுக்குச் சென்றார் தந்தை. குளக் கரையில் குழந்தையை அமரச் செய்துவிட்டு நீராடினார்.

    குளத்துத் தண்ணீரில் அவர் மூழ்கியபோது, அவர் தலை நீருக்குள் மறைய, அவரைக் காணாது திகைத்தது குழந்தை. அதற்குப் பசியும் எடுத்தது. எனவே 'அம்மா அப்பா' என்று கூறி அந்தக் குழந்தை பெருங்குரலெடுத்து அழத் தொடங்கியது.

    குழந்தையின் அழுகுரல் கேட்டு அம்மையும் அப்பனுமான பார்வதியும் சிவனும் ஆலயத்திலிருந்து வெளிப்பட்டனர்.

    குழந்தையின் மேல் கொண்ட அன்பால், உண்ணாமுலையாளாகிய பார்வதி, ஒரு கிண்ணத்தில் ஞானப்பால் தோன்றுமாறு செய்தாள். அந்தப் பாலை சம்பந்தக் குழந்தைக்குப் பாசமும் பரிவும் பொங்கத் தானே ஊட்டினாள்.

    பசியடங்கிய குழந்தை அழுகையை நிறுத்தியது. குழந்தையின் உதட்டில் பாலின் மெல்லிய கீற்று. அதைத் துடைப்பதா வேண்டாமா?

    பார்வதி கேள்விக் குறியோடு பரமசிவனைப் பார்த்தாள். முக்கண்ணன் அந்தப் பாலைத் துடைக்க வேண்டாம் எனக் கண்ணாலேயே சமிக்ஞை செய்தான்.

    அம்பலத்தில் உறைபவன், நிகழ்ந்த அற்புதத்தை அம்பலப்படுத்த நினைத்தான் போலும். பார்வதியும் சிவனும் காட்சியை விட்டு மறைந்தார்கள்.

    நீராடி முடித்துவிட்டுக் கரையேறி வந்தார் தந்தை. குளப்படிக்கட்டில் அமர்ந்திருந்த குழந்தையின் உதட்டோரம் பாலிருக்கக் கண்டு வியந்தார். உண்மையிலேயே குழந்தைக்கு அப்போது பால்வடியும் முகம்தான்!

    உதட்டில் உள்ள பாலைப் பற்றிக் குழந்தையிடம் அதட்டி வினவினார்.

    குழந்தை ஆள்காட்டி விரலால் கோபுரத்தைச் சுட்டிக் காட்டியது. பாலைப் புகட்டியவள் பார்வதி தேவிதான் என்பதைச் சைகையாலேயே புலப்படுத்தியது.

    அதுமட்டுமல்ல, மூன்று வயதேயான அந்த தெய்வீகக் குழந்தையின் உதடுகளில் இருந்து தமிழ்ப் பாடல் ஊற்றெடுத்துப் பெருகத் தொடங்கியது.

    அன்னை பார்வதியின் அருட்கடாட்சம் தமிழ்ப் பாடலாய்ப் பொங்கி வெளிப்பட்டது. ஞானசம்பந்தரின் முதல் பாடல் அப்போது அவர் அருளியதுதான்.

    'தோடுடைய செவியன் விடை யேறியோர்

    தூவெண் மதிசூடி

    காடுடைய சுடலைப் பொடிபூசி என்

    உள்ளம் கவர் கள்வன்

    ஏடுடைய மலரான்முனை நாட் பணிந்து

    ஏத்த அருள்செய்த

    பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான்

    இவன் அன்றே'

    சீர்காழி அவ்விதம் திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற தலமாயிற்று.

    மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி ஒருமுறை ஞானசம்பந்தரை மதுரைக்கு வருமாறு அழைப்பு அனுப்பினாள். திருவாதவூரில் இருந்த ஞான சம்பந்தர் அழைப்பை ஏற்று மதுரைக்குப் புறப்பட்டார்.

    ஆனால் அந்த நாள் பயணத்திற்கு ஏற்ற வகையில் அமைந்த நல்ல நாள் அல்ல. எனவே பயணம் மேற்கொள்ள வேண்டாமென நாவுக்கரசர் ஞான சம்பந்தரைத் தடுத்தார்.

    கலகலவென நகைத்த ஞான சம்பந்தர் இறைவன் அடியார்களுக்கு எல்லா நாளும் நல்ல நாள்தான் என்று கூறி அதை மெய்ப்பிக்கும் விதமாய்ப் பத்துப் பாடல்களையும் பாடி அருளினார்.

    பாடல்களின் இறுதியில் அந்தப் பாடல்களைப் பாராயணம் செய்வதால் கிரக தோஷங்கள் அகலும் என்றும் அதைப் பாராயணம் செய்யும் அடியவர்கள் வானில் அரசாள்வர் இது தமது ஆணை என்றும் பலச்ருதியாகவும் ஒரு பாடல் எழுதினார்.

    இந்தப் பாடல்களின் தொகுப்பே கோளறு பதிகம்.

    கிரக நிலையால் நாள் சரியில்லை என்று தோன்றினால் அப்போது கோளறு பதிகத்தைப் பாடி எந்தப் பாதிப்பும் இல்லாமல் செய்துகொள்ளலாம்.

    முழுப் பாடலையும் பாராயணம் செய்ய இயலவில்லை என்றால் முதல் பாடலை வாசித்தாலும் போதுமானது. அந்த முதல் பாடல் இதோ:

    'வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்

    மிக நல்ல வீணை தடவி

    மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்

    உளமே புகுந்த அதனால்

    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்

    வியாழன் வெள்ளி

    சனிபாம்பிரண்டு முடனே

    ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல

    அடியாரவர்க்கு மிகவே!'

    கோள்களின் இயக்கம் நம் வாழ்வை பாதிக்கிறது. வாழ்வைக் கணிக்கும் ஜோதிடக் கலை, கோள்களை ஆதாரமாகக் கொண்டே வடிவமைக்கப் பட்டுள்ளது. கோள்கள் நன்மையும் செய்யும். தீமையும் செய்யும்.

    கோள்களால் ஏற்படக் கூடிய தீமையைத் தடுக்க வல்லது கோளறு பதிகம். காலம் காலமாக அன்பர்களால் ஓதப்படும் கோளறு பதிகத்தை நாமும் ஓதி நலம் பெறலாம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.comகோளறு பதிகமும் ஞான சம்பந்தரும்...

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எள்ளின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே துவங்கிவிட்டதாக நூல்கள் தெரிவிக்கின்றன.
    • தமிழர்களின் உணவாக மட்டுமின்றி, ஆன்மீகம், சடங்கு என அனைத்திலும் எள்ளிற்கு தனி இடம் உண்டு.

    "கொழுத்த உடலுக்கு கொள்ளு, இளைத்த உடலுக்கு எள்ளு" என்பது நாடறிந்த பழமொழி. அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகளுள் இளைத்த உடலினருக்கு உடல் எடையைக் கூட்ட உதவும் முக்கிய மூலிகை கடைச்சரக்கு 'எள்ளு' தான். இது உலக அளவில் பல ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் சிறப்புடையது.

    நமது பாரம்பரிய உணவான எள்ளு பொடியில் துவங்கி, வெளிநாட்டினரின் துரித உணவான பீட்சா, பர்கர் வரை எள்ளு அனைவரின் உணவிலும் இடம் பிடித்துள்ளது. இன்று ரொட்டி, பிஸ்கட் போன்ற மாப்பண்டங்கள் அனைத்தின் மேலேயும் எள்ளு விதைகள் தூவப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வழக்குமுறை நேற்று இன்று துவங்கியது இல்லை என்கிறது வரலாறு.

    எள்ளின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே துவங்கிவிட்டதாக நூல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தின் கல்லறைகளில், ரொட்டித்துண்டுகள் மீது எள்ளு தூவப்படும் குறிப்புகள் உள்ளதாக அறியப்படுகிறது. தமிழர்களின் உணவாக மட்டுமின்றி, ஆன்மீகம், சடங்கு என அனைத்திலும் எள்ளிற்கு தனி இடம் உண்டு.

    எள்ளிற்கு மட்டுமல்லாது, எள் எண்ணெய்க்கும் வரலாற்று சான்றுகள் உண்டு. பாபிலோனியப் பேரரசில் கி.மு. 18 ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை எள்ளின் எண்ணெயானது வாசனை திரவியங்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. பண்டைய எகிப்தியர்களும் எள்ளினை மருந்தாகப் பயன்படுத்தியதாகவும், சடங்குகளுக்கு பயன்படுத்தியதாகவும், வரலாறு தெரிவிக்கின்றது. பாரம்பரிய சீன மருத்துவத்தில் மூல நோய், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இருமல், மாதவிடாய் வலி, வயிற்றுப்புண், முடி உதிர்தல் போன்ற நோய்நிலைகளுக்கு எள்ளு விதைகள் பயன்படுத்தப்படுகிறது.

    இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க எள்ளின் விதைகளில் கிட்டதட்ட 20 சதவீதம் உடலின் வளர்ச்சிக்கு தேவையான புரதச் சத்தும், 50 முதல் 60 சதவீதம் கொழுப்புச் சத்துக்களும் உள்ளது. எள்ளில் கூடுதலாக நார்ச்சத்தும், உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, தையமின், ரிபோபிளேவின், நியாசின் போன்ற வைட்டமின்களும் உள்ளன. மேலும் செம்புச் சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், போலிக் அமிலம், மாங்கனீசு மற்றும் சோடியம் போன்ற பல அவசியமான கனிம உப்புகளின் கூடாரமாக எள்ளு உள்ளது.

    எள்ளு விதைகளில் மூன்று வகைகள் உண்டு. அவை யாவன? கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகும். மூன்றுக்கும் சமமான மருத்துவ குணங்கள் உண்டு. எள்ளின் விதைகள் இனிப்பு சுவையும், வெப்ப வீரியத் தன்மையும் உடையதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. வெப்பத்தன்மை உடையதால் சித்த மருத்துவ உடல் தத்துவக் கூறுகளான வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் பித்தத்தைக் கூட்டி வெப்பத்தை அதிகரிக்க கூடியது. எள்ளு ரத்த விருத்தியைத் தரும் என்றும், கண் பார்வையை அதிகரிக்கும் என்றும் சித்த மருத்துவம் கூறுவது கூடுதல் சிறப்பு.

    எள்ளின் மருத்துவ தன்மைக்கு 'செசாமின்', 'செசாமினால்' ஆகியன முக்கிய வேதிக்கூறுகளாக உள்ளன. எள்ளினை இளவறுப்பாக வறுத்து பயன்படுத்த அதில் உள்ள 'செசாமினால்' எனும் வேதிப்பொருளின் மருத்துவ தன்மை அதிகமாவதாக நவீன அறிவியல் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எள்ளினை வறுத்துப் பொடியாக்கி உணவில் பயன்படுத்தும் முறையை தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பது வியப்பளிக்கும் ஒன்று.

    எள்ளின் சிறப்பு என்னவெனில் உடலுக்கு அவசியமான கனிம சத்துக்களில் கால்சியம் சத்தின் அளவு, பாலில் உள்ள கால்சியம் சத்தின் அளவுக்கு நிகராக உள்ளது குறிப்பிடத்தக்கது. தினசரி 30 கிராம் அளவு எள்ளுப் பொடியோ, அல்லது எள்ளு உருண்டையோ எடுத்துக்கொள்ள உடலுக்கு தேவையான கால்சியம் கிடைத்து எலும்புகள் பலம் பெறும். மூட்டுகள் வலுவடையும். மூட்டுக்கள் தேய்மானத்தைத் தடுக்கும்.

    எள்ளு விதைகளில் தாவர ஈஸ்ட்ரோஜன் சத்துக்கள் உள்ளபடியால், மெனோபாஸ் எனும் கடைசி மாதவிடாய்க்கு பின்னர் பெண்களுக்கு மிகச்சிறந்த நன்மை பயக்கும் உணவாக உள்ளது. மேலும், பிள்ளைபேற்றுக்குப் பின்னர் தாய்ப்பால் சுரப்பை அதிகமாக்க எள்ளு சேர்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகச்சிறந்த பயன் தரும். வயது வந்த மகளிர்க்கு நாட்டு கோழி முட்டையுடன், எள் எண்ணெய் சேர்த்து கொடுப்பது இன்றும் நம் நாட்டு மரபு.


    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மாதவிடாயின் போது சரிவர ரத்தக்கசிவு இல்லாத பெண்கள், எள்ளினை வறுத்துப் பொடித்து வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ள உதிரசிக்கலை போக்கும். அல்லது எள்ளுவை நீரில் ஊறவைத்து எடுத்துக்கொண்டாலும் நன்மை பயக்கும். அதே போல் முறையான மாதவிடாய் சுழற்சிக்கு, மாதந்தோறும் பூப்பூக்கசிவு முடிந்த அடுத்து ஐந்து நாட்கள் எள்ளு உருண்டையை எடுத்துக்கொள்வது நல்லது.

    எள்ளினை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் 'எள்ளு லேகியம்' மூல நோய்க்கு சிறந்த மருந்து என்கிறது சித்த மருத்துவம். எள்ளினை அரைத்து சுண்டைக்காயளவு வெண்ணெயில் கலந்து சாப்பிட ரத்தம் கசியும் மூல நோய் தீரும் என்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது. எள்ளு இயற்கையாக செரிமானத்தைத் தூண்டி, மலமிளக்கியாகவும் செயல்படக்கூடியது.

    நமது உடலில் உள்ள செல்கள் சிதைவினால் உண்டாகும் வயது முதுமையைத் தடுக்க எள்ளு உதவும் என்று சித்த மருத்துவம் மட்டுமல்லாது, நவீன அறிவியலும் கூறுகின்றது. எள்ளில் சக்தி வாய்ந்த வைட்டமின் வகையைச் சார்ந்த வைட்டமின்- ஈ உள்ளது என்கிறது நவீன அறிவியல். இது உடல் செல்கள் சிதைவினை தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்பட்ட தொற்றா நோய்நிலைகளான புற்றுநோய், இதயநோய்கள் வராமல் தடுக்கும் என்பதும், வயது மூப்பு அடையாமல் தடுக்கும் என்பதும் கூடுதல் சிறப்பு.

    எள்ளினைப் பற்றி பேசும்போது எள்ளின் நெய் அதாவது எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) பற்றி பேசாமல் கடந்து விடமுடியாது. நல்ல எண்ணெய் என்ற பெயருக்கு ஏற்ப, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மட்டுமே செய்யும் தன்மை இதற்குண்டு. இது தமிழர்களின் ஆன்மீகத்தோடும், கலாச்சாரத்தோடும், வாழ்வியலோடும் ஒன்றிணைந்து பிரிக்க முடியாது உள்ளது. நல்லெண்ணெய். வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தும் ஆலிவ் எண்ணெய்க்கு சற்றும் குறைவில்லாத சத்துக்களும், மருத்துவ குணமும் கொண்டுள்ளது என்பது கூடுதல் செய்தி.

    இன்றைய நவீன வாழ்வியலில் பெரும்சவாலாக இருக்கும் நோய்நிலைகளுள் ரத்த அழுத்தமும், இதய நோய்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இவற்றை மையப்படுத்தி தான் இன்று எண்ணெய் வணிகம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. உண்மையில், எள்ளெண்ணெய் (நல்லெண்ணெய்) அதிகரித்த ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும், இதயத்தைப் பாதுகாப்பதாகவும் உள்ளது என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள். எனவே, உயர் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களும், உணவில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இதயத்தின் நலம் காக்க உதவும்.

    எள்ளினை உணவில் சேர்த்துக்கொள்வது ரத்தத்தில் உள்ள கொலஸ்டீரால் மற்றும் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பின் அளவு குறைவதாக உள்ளதை எலிகளைக் கொண்டு சீனாவில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ரத்த சுற்றோட்ட மண்டலத்தைச் சீராக்கி மாரடைப்பு, பக்கவாதம் வரவிடாமல் தடுக்கும் தன்மையும் எள்ளிற்கு உண்டு.

    அதே போல் பெண்களின் இறுதி மாதவிடாய்க்கு பின்னர் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால், பெரும்பாலான பெண்களுக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதாக உள்ளது. இந்நிலையில் பெண்கள் எள்ளு சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாக உள்ளது என்று தைவானில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    எள்ளில் உள்ள 'செசாமின்' எனும் வேதிப்பொருள் எலிகளில் மார்பக புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுப்பதாக ஜப்பான் நாட்டின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் எலிகளில் நடைபெற்ற ஆய்வில் எள்ளெண்ணெய் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான 'செசாமால்' ஆகியன புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியை தடுப்பதாக உள்ளதாகவும் ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. ஆக, இனி விளம்பரங்களுக்கு அடிமையாகாமல், எள்ளெண்ணெய்க்கு மாறுவது ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும்.

    எள்ளில் உள்ள வேதிப்பொருட்கள் உடலில் வீக்கத்தை உண்டாக்கும் பல்வேறு நொதிகளைத் தடுத்து வீக்கத்தைக் குறைப்பதாக உள்ளது. நீரிழிவு நோயிலும் எள் எண்ணெயின் பங்கு அளப்பரியது. நீரிழிவிற்கான மருந்துகளோடு நல்லெண்ணெய், சேர்த்து எடுத்துக்கொண்ட எலிகளில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கணிசமாக குறைவதை சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆக, உணவில் நல்லெண்ணெயை சேர்ப்பது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். கூடுதலாக நீரிழிவு நோயில் உண்டாகும் பின்விளைவுகளை தடுக்கவும் உதவும்.

    ஆனால், எள்ளு விதைகள் அதிக அளவு புரதச்சத்தைக் கொண்டுள்ளதால் ஒவ்வாமை உள்ளவர்களும், அதே போல் அதிக அளவு ஆக்ஸாலிக் அமிலம் கொண்டுள்ளதால் சிறுநீரக கற்கள் உள்ளவர்களும் அளவோடு பயன்படுத்துவது நல்லது. அதே போல், எள்ளு அதிக அளவில் எடுத்துக்கொள்ள கர்ப்பம் தரித்த பெண்களுக்கு கருச்சிதைவை உண்டாக்கும் என்றும் சித்த மருத்துவம் எச்சரிக்கின்றது. எள்ளு பித்தத்தை அதிகம் கூட்டி, மருந்தை முறிக்கும் என்பதால் சித்த மருந்துகளுக்கு பத்தியப் பொருளாகவும் சொல்லப்பட்டுள்ளது.

    மண்ணில் விதைக்கப்படும் சிறிய விதைகள் தான், பெரிய பெரிய மரங்களுக்கு அடித்தளம். அதுபோல் நாம் உணவில் சேர்க்கும் சிறிய எள்ளு விதைகள், தலவிருட்சமாய் ஆரோக்கியம் பெருகி வளருவதற்கு அடித்தளம். இனி, நொறுக்குத் தின்பண்டங்களாக இருந்தாலும் சரி, பொரிக்கும் பண்டங்களாக இருந்தாலும் சரி, எள் எண்ணெயை பயன்படுத்துவது ஆரோக்கியத்தின் வேருக்கு நீர் ஊற்றுவது போன்றது. அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்குகளில் ஒன்றாகிய எள்ளினை உணவில் சேர்ப்பது நிச்சயம் உடல் நலத்தை பாதுகாக்கும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணம் என்பது பருவ வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் நடத்த மேற்கொள்ளப்படும் வாழ்க்கை ஒப்பந்தம்.
    • ஒரு மனிதன் அவனுடைய பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் எப்படி இருப்பான் என்பதை ஜனன ஜாதகத்தைக் கொண்டு அறிய முடியும்.

    திருமணம் என்பது பருவ வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் நடத்த மேற்கொள்ளப்படும் வாழ்க்கை ஒப்பந்தம். குடும்பம், இல்லற இன்பம், இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. ஒரு மனிதன் அவனுடைய பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் எப்படி இருப்பான் என்பதை ஜனன ஜாதகத்தைக் கொண்டு அறிய முடியும். பனிரெண்டு பாவகங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுத்தி காலங்களில் தான் தூண்டப்படுகின்றன. அதன் அடிப்படையில் ஜாதகனின் வயதிற்கு ஏற்ப இல்வாழ்க்கை சக்கரம் சுழன்று செயல்பட திருமணம் அவசியம். நிரந்தரமான ஒரு வாழ்க்கை துணையால் மட்டுமே மனிதனை முழுமையடையச் செய்ய முடியும். திருமணமே ஜாதகரை சிறப்பு பெற்ற மனிதனாக உயர்த்துகிறது. திருமணம் என்ற இல்லற பந்தத்தில் ஈடுபடும் போதே ஒரு மனிதனின் கர்மா முழு வீச்சில் செயல்படுகிறது. வினை இல்லாமல் விளைவு இல்லை. ஜாதகரின் வினைப்பதிவில் உள்ள சுப கர்மா நல்லதை நடத்தும்.

    ஒரு குற்றம் நல்லதை தடுக்கும். அதன் அடிப்படையில் ஜாதகரின் 21 தலைமுறை முன்னோர்கள் செய்த பாவ, புண்ணியமே உரிய வயது திருமணம், காலம் தாழ்ந்த திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலையையும் தீர்மானிக்கிறது. மனிதர்களுக்கு மன உளைச்சலை தருவதில் திருமணம்,திருமணத்தடை பெரும் பங்கு வகிக்கிறது. உலக மக்கள் தொகையில் ஆண்களின் விகிதாச்சாரம் அதிகமாகவும், பெண்களின் விகிதாச்சாரம் குறைவாகவும் இருப்பதால் திருமணத்தடை மிகுதியாக உள்ளது. ஜோதிட ரீதியாக திருமணத்தடை என்றவுடன் பலர் 2-ம்மிடமான குடும்ப ஸ்தானத்தையும், 7-ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும் பெண்களுக்கு எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானத்தையும் பார்க்கிறார்கள்.அதே போல் தோஷ ரீதியாக செவ்வாய், ராகு/கேது மட்டுமே திருமணத்தை தடை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திருமணத்தை எந்த கிரகம் தடை செய்தாலும் பதியை சுமப்பவர்கள் ராகு/கேது, செவ்வாய் மட்டும்தான் என்பது நாம் அறிந்த உண்மை. ஒருவரின் திருமணத்தை நிர்ணயிப்பதில் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2,7,8க்கும், செவ்வாய், ராகு, கேதுக்களுக்கும் சில சம்பந்தம் இருந்தாலும் மாலையிடும் பாக்கியத்தை வழங்குவதில் 3ம் பாவகமே முக்கியத்துவம் வகிக்கிறது. இந்த கட்டுரையில் மூன்றாம் பாவகத்திற்கும் திருமணத்திற்கும் உள்ள சம்பந்தத்தையும் அதற்கான பரிகாரங்களையும் காணலாம்.

    மூன்றாம் பாவகம்

    ஒருவருக்கு வெற்றியைத் தருவது ஜனன கால ஜாதகத்தின் லக்னத்திற்கு மூன்றாமிடமான உப ஜெயஸ்தானம், சகாய ஸ்தானம் முயற்சி ஸ்தானம். லக்ன பாவத்தின் பாவத் பாவமான மூன்றாமிடம் ஒருவருக்கு வளர்ச்சியை கொடுக்கும் பாவகம். ஆக ஒருவர் வாழ்வில் அனைத்து விதமான சகாயமும் பெற்றிட மூன்றாமிடம் பலமாக இருப்பது மிக அவசியம். அத்துடன் ஆபரணம் மற்றும் கழுத்து, ஒப்பந்தத்தை குறிப்பது மூன்றாமிடமாகும். ஒருவருக்கு கழுத்து எனும் மூன்றாமிடம் சுபத்துவம் பெற்றால் விரைவில் மாலையிடும் யோகம், திருமண ஒப்பந்தம் கிட்டும். மூன்றாமிடம் பலம் குறைந்தால் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8 சுபத்துவம் பெற்றாலும் காலம் தாழ்ந்தே திருமணம் நடைபெறும். திருமண ஒப்பந்தத்தை குறிக்கும் மூன்றாமிடம் பலம் பெற்றால் மட்டுமே ஆண், பெண் இருவரும் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட முடியும்.மூன்றாமிடமான கழுத்து ஸ்தானம் பலம் (எட்டாமிடத்திற்கு எட்டு) பெற்றால் மட்டுமே பெண்ணில் கழுத்தில் ஏறும் தாலி பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.

    சுபமாக சுப மங்கலத்தோடு வாழ்பவள் சுமங்கலி. நமது தமிழ் கலாச்சாரத்தில் சாஸ்திரங்களில் திருமாங்கல்யத்திற்கு உள்ள மகத்துவமே தனிதான். திருமணச் சடங்கின் முக்கிய அம்சம் ஆண் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டி விடுவது தான். எல்லாச் சூழ்நிலையிலும் உனக்கு ஆதரவாக இருப்பேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு தான் ஆண் பெண்ணிற்கு தாலி கட்டுகிறான். ஒரு பெண் தீர்க்க சுமங்கலியாக மரணமடைந்தால் அவளை தெய்வமாக வழிபடுவார்கள். சுமங்கலித்துவம் நிறைந்த பெண்கள் வாழும் குடும்பம் ஒரு கோவிலாகும். பெண்களுக்கு இத்தகைய பாக்கியத்தை வழங்குவது சுய ஜாதகத்தின் மூன்றாமிடமாகும்.

    அதனால் தான் திருமணத்திற்குப் பார்க்கப்படும் நட்சத்திரப் பொருத்தத்தில் ரஜ்ஜுப் பொருத்தம் மிக முக்கிய பொருத்தமாக கருதப்படுகிறது. 3-ம் இடத்தில் நிற்கும் கிரகம் சம சப்தமாக 3-ம் இடத்தைப் பார்க்கும். 9-ல் நிற்கும் கிரகம் 3-ம் இடத்தைப் பார்க்கும். எனவே மூன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் நவகிரகங்களுக்கான பரிகாரங்கள் திருமண வாழ்க்கையை சுமூகமாக்கும்.

    சூரியன்

    ஒருவருக்கு சமுதாய அங்கீகாரம் வழங்குவதில் சூரியன் முன்னிலை வகிக்கிறது. 3ம் பாவகத்துடன் சூரியன் சுப சம்பந்தம் பெற்றால் தந்தை வழி உறவுகள் மூலம் திருமண ஒப்பந்தம், மாலையிடும் பாக்கியம் உரிய வயதில் கிடைக்கும். சூரியன் அசுப பலம் பெற்றால் தந்தை, தந்தை வழி உறவுகள் திருமண ஒப்பந்தமிட தடையாக இருப்பார்கள். எளிதில் மணமாலை கழுத்தில் ஏறாது. சூரியனை பலப்படுத்த 9 ஞாயிற்று கிழமை செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து நவகிரக சூரிய பகவானை வழிபட வேண்டும்.

    சந்திரன்

    3-ல் சந்திரன் சுப வலுப்பெற்றால் தாய் வழி உறவுகள் மூலம் மிக இள வயதில் திருமணம் நடக்கும். 3-ல் உள்ள அசுப சந்திரன் சிலருக்கு வயது முதிர்ந்த பிறகு மணமாலையை அணிவிக்கும் அல்லது தாய் வழி உறவுகளால் திருமணத்தை தடை செய்யும். சந்திரன் அவசரத் தன்மை நிறைந்த கிரகம் என்பதால் 3ம்மிடத்துடன் சந்திரன் சம்பந்தம் பெற்றால் அவசரத்திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் (ஒப்பந்தம்) செய்யாமல் உடனே திருமணம் போன்ற சம்பவங்கள் நடக்கும்.எவ்வளவு துரிதமாக திருமணம் நடந்தததோ அவ்வளவு வேகமாக திருமண பந்தம் முடிந்துவிடும். வெகு சிலருக்கு பல முறை மண மாலை ஏறி இறங்கும். 9 திங்கட்கிழமை அல்லி மலர்களால் நவகிரக சந்திர பகவானை வழிபட திருமண பந்தம் நிலைக்கும்.


    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

     செவ்வாய்

    மூன்றாமிடத்துடன் செவ்வாய் சுப வலுப்பெற்றால் சுய முயற்சியால், உடன் பிறந்தவர்கள் ஆதரவால் திருமண ஒப்பந்தம் நடைபெறும். ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது பழமொழி. செவ்வாய் விவேகமற்ற வேகம், கோபத்திற்கு காரக கிரகம். மூன்றாமிடத்துடன் செவ்வாய் அசுப சம்பந்தம் பெற்றால் கோபத்தால் நல்ல வரனை தவறவிடுவார்கள் அல்லது விவேகமின்றி பொருந்தாத வரனை தேர்வு செய்து பின்நாளில் வருந்துவார்கள். மூன்றாமிட செவ்வாயால் திருமண ஒப்பந்தம் தடைபடுபவர்கள் 9 செவ்வாய்க்கிழமை நவகிரக செவ்வாய் பகவானை செண்பக மலர்களால் அர்ச்சித்து வழிபட சுப பலன் உண்டாகும்.

    புதன்

    சுய ஜாதகத்தில் மூன்றாமிடத்துடன் புதன் சம்மந்தம் பெற்றால் தாய் மாமன் மூலம் இளம் வயதில் திருமணம் நடக்கும். புதன் காதல் கிரகம், இரட்டைத் தன்மை நிறைந்த கிரகம். மூன்றாமிடத்துடன் புதன் அசுப சம்பந்தம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். சிலருக்கு இரண்டு முறை திருமண ஒப்பந்தம் நடக்கும். அதாவது நிச்சயித்த திருமணம் தடைபடும் அல்லது மறு விவாகம் நடைபெறும். மூன்றாமிட புதனால் திருமணம் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் ஒன்பது புதன் கிழமை தவன இலைகளால் அல்லது வெண்காந்தல் மலர்களால் நவகிரக புதனை வழிபட வேண்டும்.

    குரு

    சுய ஜாதகத்தில் மூன்றாமிடத்துடன் குரு சுப பலம் பெற்றால் பெற்றோர்கள் பெரியோர்கள் ஆசிர்வாதத்தால் உரிய வயதில் திருமணம் நடைபெறும். குரு அசுப கிரக சம்பந்தம் பெற்றால் குலப் பெருமை பேசி நல்ல வரனை ஒதுக்குவார்கள். வயது முதிர்ந்த பிறகு வரனுக்கு ஏங்குவார்கள். குருவை பலப்படுத்த 9 வாரம் வியாழக்கிழமை நவகிரக குரு பகவானை செண்பகம் அல்லது முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    சுக்ரன்

    திருமணத்திற்கு களத்திரகாரக கிரகம் சுக்ரன். சுய ஜாதகத்தில் சுக்ரன் எந்த நிலையில் மூன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றாலும் உரிய வயதில் அத்தை, பெரியம்மா உதவியுடன் ஆடம்பர திருமணம் நடக்கும். சுக்ரன் அழகு, ஆடம்பரத்திற்கு காரக கிரகம் என்பதால் சிலர் அழகு, ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வரன் தேடிக் கொண்டே இருப்பார்கள். அல்லது அத்தை, பெரியம்மா போன்ற குடும்பத்து முக்கியப் பெண்களால் திருமணம் தடைபடும்.சுக்கிரனால் மணமாலை ஏந்துவதில் தடை இருப்பவர்கள் 9 வெள்ளிக்கிழமை நவகிரக சுக்கிரனை மல்லிகை, வெண் தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

    சனி

    சனி மந்த கிரகம். எந்த செயலையும் காலம் தாழ்த்தியே நடத்துவார்.லக்னம், மூன்று, ஒன்பதாமிடத்துடன் சம்பந்தம் பெறும் சனி திருமணத் தடையை ஏற்படுத்துவதில் வல்லவனுக்கு வல்லவன்.கொடுமை, கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை ஜிங்கு, ஜிங்குனு ஆடுச்சாம் என்ற பழமொழிக்கு ஏற்ப பல ஜோதிடரிடம் ஜாதகம் காட்டியும் திருமணத் தடைக்கான காரணத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாத சூட்சம பிரச்சினை இருக்கும். சிலருக்கு இளம் வயதில் காதல் கலப்பு திருமணம் நடந்து விவாகரத்து கிடைக்காமல், மறு விவாகத்திற்கும் செல்ல முடியாமல் இருப்பதற்கு மூன்றாமிட சனியே காரணம். சனி பகவானால் திருமணத்தடை இருப்பவர்கள் 9 சனிக்கிழமை நீல மலர்களால் சனி பகவானை வழிபட வேண்டும்.

    ராகு

    ராகு பகவான் தனக்கு சொந்த வீடு இல்லாத காரணத்தால் தான் நிற்கும் வீட்டை சொந்த வீடாக பாவித்து பலன் தருவார். ராகு தான் இணைந்த கிரகத்தின் காரகத்துவ பலனையும் இணைத்து பிரமாண்ட பலனைத் தருவார். ராகு தான் நின்ற வீட்டு பலனை பெரிது படுத்துவார். எனவே 3-ம் பாவகத்துடன் ராகு சம்பந்தம் பெற்றவர்களுக்கு எளிதில் திருமணம் நடக்கும். ஆனால் கழுத்தில் தாலி இருக்காது. மாடர்ன் மங்கையாக தாலியை கழட்டி வைத்து வாழும் பெண்களுக்கு மூன்றாமிடத்திற்கு ராகு சம்பந்தம் இருக்கும். அல்லது பேன்சியாக அடிக்கடி தாலிச் செயினை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அல்லது தாலி மார்வாடி கடையில் அடமானத்தில் வாழும். இது போல் நவகிரகங்களின் லீலைகள் மனிதர்களை வியக்க வைக்கும். அதுவும் ராகுவின் செயல்பாடு திருமண வயதினரை திக்கு முக்காடச் செய்யும். வாலிப முறுக்கில் உல்லாசமாக இளம் பெண்களை திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றுபவர்களுக்கும் 3 ல் ராகு இருக்கும். மூன்றாமிடத்துடன் ராகு சம்பந்தம் பெறுபவர்கள் அடிக்கடி மந்தாரை மலர்கள் சாற்றி நவகிரக ராகுபகவானை வழிபடுவது நல்லது.

    கேது

    சனிக்கும், ராகுவுக்கும் சளைத்தவர் அல்ல கேது. சனி பகவான் காலம் தாழ்த்தியாவது பலன் தருவார். ராகு பகவான் இன்பமோ, துன்பமோ தாராளமாக வழங்குவார். கேது பகவான் கர்ம வினைக்கு ஏற்ற பலனை வழங்குபவர். கேது தான் நின்ற பாவக பலன்களை சுருக்குவார் என்பதால் காலம் தாழ்ந்து திருமணம் நடக்கும். சிலருக்கு கேதுவால் ஏற்படுத்தப்படும் அனைத்து திருமண ஒப்பந்தங்களும் சட்டச் சிக்கல் நிறைந்தவைகளாக இருக்கும். திருமணத்திற்கு பிறகு தாலியைக் கழற்றி வீசுபவர்கள் ஜாதகத்தில் 3ல் சனி, ராகு, கேது சம்பந்தம் இருக்கும். 3ம்மிட கேதுவால் திருமணம் அமைவதில் சிரமம் இருப்பவர்கள் கதம்ப மாலை அணிவித்து நவகிரக கேது பகவானை வழிபட வேண்டும்.

    ஒரு ஜாதகத்தில் மூன்றாம் அதிபதி, மூன்றாம் இடத்தில் நின்ற கிரகம், பார்த்த கிரகத்தினை கொண்டு திருமண முயற்சியில் ஈடுபட வேண்டும். ஜாதகத்தில் மூன்றாமிடத்துடன் குரு , சுக்கிரன், சந்திரன், புதன் சம்பந்தம் இருப்பவர்களுக்கும் கழுத்தில் எளிதில் மண மாலை ஏறிவிடும். எனவே கழுத்தில் திருமணமாலை ஏறவும், திருமண பந்தத்தில் ஈடுபடவும் மூன்றாம் பாவக வலிமை அவசியம். எனவே திருமணம் தொடர்பான 1,2,7,8க்கு மட்டும் பரிகாரம் செய்யாமல் 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களுக்கும் பரிகாரம் செய்து பயன் பெற வாழ்த்துக்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிக மிக அதிகமாக தொலைத்தொடர்பையும் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளையும் பயன்படுத்தும் நாட்டில் இந்த தாக்குதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
    • அதிக முன்னேற்றம் கண்டவர்கள் என அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் தென் கொரியாவைச்சொல்லலாம்.

    "ஸைபர் பாம் போடப்போகிறோம்"

    இப்படிக்கு அமெரிக்கா....!"

    "ஆம்! நாங்கள் ஸைபர் ஆயுதங்களை ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத கும்பலுக்கு எதிராகப்பயன்படுத்துகிறோம்!" என்று ஒப்புக்கொண்டுள்ளது அமெரிக்கா.

    ஸைபர் போர், ஸைபர் ஆயுதம் என்றால்..?

    இன்னொரு நாட்டின் டிஜிட்டல் கம்ப்யூட்டர்களையும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் முடக்கிச்சீரழிப்பது ஸைபர் போர்.

    இதனால் என்ன ஆகும்?

    பகை நாட்டின் முக்கிய செயல்பாடுகளைத்தடுக்கும். உதாரணமாக அந்நாட்டின் மின்சார உற்பத்தியைத்தடுத்து அவர்களின் மின் ஆலைகளை செயலிழக்கச்செய்யமுடியும்.

    இது ஏன் மிக முக்கியமானது?

    ஒரு நாட்டின் சக்தியையே முடக்கிவிட முடியும். மிக மிக அதிகமாக தொலைத்தொடர்பையும் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளையும் பயன்படுத்தும் நாட்டில் இந்த தாக்குதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    இது போலெல்லாம் நடக்குமா?

    நடந்திருக்கிறது. மேலும் நடக்கும்!

    எங்கே?

    உக்ரையினில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஈரானில். வேறு சில நாடுகளிலும் நடந்திருக்கலாம். ஆனால் விஷயம் அமுக்கப்பட்டிருக்கும்!

    இதெல்லாம் யார் நடத்துகிறார்கள்..

    பல நாடுகள் இந்த ஸைபர் போர் டெக்னிக்குக்களில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். அதிக முன்னேற்றம் கண்டவர்கள் என அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் தென் கொரியாவைச்சொல்லலாம்.

    ஸைபர் போர் என்பது எங்கெல்லாம் தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுகிறதோ அதை டிஜிட்டல் முறையில் தாக்கி செயலிழக்கச்செய்வது. இப்படிச்செய்வது வெறும் கம்ப்யூட்டர்களை அல்ல. அவற்றால் இயக்கப்படும் எந்திரங்கள், மிலிட்டரி செயல்பாடுகள், ஏன் ஒரு பெரிய அணைக்கட்டின் நீர் திறக்கும் செயல் பாட்டையே குழப்ப முடியும். யோசித்துப்பாருங்கள், என்ன ஆகும்! அணுசக்தி உலைக்களனைக்கூட இப்போது கம்ப்யூட்டர்களும் தொலைத்தொடர்பு சாதனங்களும்தானே இயக்குகின்றன. அவற்றை டிஜிட்டல் தாக்குதல் மூலம் சிதைத்தால்..யோசித்துப்பாருங்கள்.

    விபரீதம்!

    இன்னும் கொஞ்சம் மென்மையான முறையில் எதிரி நாட்டைப்பற்றி பொய்ச்செய்திகள் பரப்புதல், troll என்று சொல்லப்படும் முறையில் திட்டமிட்டு பெரிய அளவில் செய்திகளையோ மறுப்பையோ வலைதளங்களிலும் சமூக மீடியாக்களிலும் தொடர்ந்து பரப்பி மக்களின் அபிப்பிராயத்தைக்கலைக்கும் அல்லது திரிக்கும் வகையில் செயல்படுவது கூட ஸைபர் போர்தான்.

    நாம் மேலும் மேலும் தகவல் தொடர்பு சாதனங்களையும் டிஜிட்டல் வழிமுறைகளையும் பயன்படுத்த ஆரம்பிக்க, எல்லா இயக்கங்களும் – தொழிற்சாலைகள், மின்சார உற்பத்தி, வங்கிக்கணக்கு வழக்கு, பணப்பரிவர்த்தனை – ஒயர்லெஸ்ஸிலும் இண்டர்னெட்டிலும் உலாவப்போக, இந்த ஸைபர் போரில் அடிபடும் சாத்தியங்கள் அதிகமாகின்றன. இவற்றின் முடிவு பொருளாதாரத்தையே சீர்குலைப்பதாக முடியக்கூடும்.

    2010 ஆம் ஆண்டு ஈரானின் அணுஆயுத பிராஜக்டை டிஜிட்டலாக தகர்த்த அமெரிக்க-இஸ்ரேலிய முயற்சி ஒரு ஸைபர் போர்தான் என்று ஒப்புக்கொள்கிறார்கள். Stuxnet என்னும் malware அனுப்பி உலைக்களனை நிகழ்த்தும் மையநீக்கிகளை குளறுபடி செய்தார்கள் என்று பேசப்பட்டது.

    ஸைபர் போர் நடந்தது பற்றி பராபரி செய்திகள் உலாவுகின்றன.

    2013இல் பெயர் தெரியாத ஒரு நாடு (இரண்டெழுத்து முதல் எழுத்து சை, கடைசி எழுத்துனா நடுவில் ஒன்றுமே வராது!) அமெரிக்காவின் எல்லா பர்சனல் கம்ப்யூட்டர்களின் BIOSஐ தாக்கிய முயற்சி தோற்கடிக்கப்பட்டது என்கிறது அமெரிக்கா.

    2014 இல் Sonyயின் தகவல் டேட்டாபேஸ் ஊடுருவப்பட்டது, செய்தது வட கொரியா என்பதும் கிசு கிசுவே.

    போன கிறிஸ்துமஸுக்கு முன்பு உக்ரெயின் மின்சார உற்பத்தி ஆலைகள் டிஜிட்டல் தாக்குதலுக்கு உள்ளாயின.

    போன மார்ச்சில் இரான் அமெரிக்காவில் நியூயார்க்கின் அணையின் செயல்பாட்டை தாக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டிற்று.

    தீவிரவாத இயக்கமான ISIS இந்த சைபர் திறமைகளை வளர்த்துக்கொண்டு வருகிறது என்று சொல்லப்பட்டாலும் Stuxnet போன்ற malwareகளை த்தயாரிக்க மிக மிக அதிக செலவு ஆகும். அந்த அளவு செலவுகளை அவர்களால் இப்போதைக்கு செய்யமுடியாது என்பது நொண்டிச்சமாதானமா என்பது எதிர்காலத்தில்தான் நமக்குத்தெரியவரப்போகிறது. சாதாரண Hackersகளால் நாட்டின் முக்கிய பாதுகாப்புச்செயல்பாடுகளை ஊடுருவ அவ்வளவு சுலபத்தில் முடியாது.

    இந்த ஸைபர் போர்களில் தாக்குபவர்களை சீக்கிரமாக அடையாளம் காணுதலும் கஷ்டமே. என்னதான் Digital Forensic இயல் முன்னேற்றம் அடைந்தாலும் தாக்குதலின் மூலத்தைக்கண்டு பிடிப்பது ரிஷி மூலம் நதி மூலம் போலத்தாம் என்கிறார்கள் விற்பன்னர்கள்.

    மேரிலாண்ட் யூனிவர்ஸிடியைச்சேர்ந்த ப்ரொஃபசர்கள் Richard Forno மற்றும் Anupam Joshi இது பற்றி விலாவரியாக எழுதியிருக்கின்றனர்.

    "அமெரிக்காவின் ஸைபர் போர் தந்திரங்கள் ரகசியமானவை. ஆனாலும் எங்களுக்குக்கிடைத்த செய்திகளை வைத்துக்கொண்டு ஆராய்ந்து இந்த வியசத்தை எழுதியிருக்கிறோம்" என்கிறார்கள் இந்த விற்பன்னர்கள்.

    சாதாரண சிக்னல ஜாம் செய்வதில் இருந்து நாட்டையே ஸ்தம்பிக்கச்செய்வது வரை ஸைபர் போர்முறைகள் பெருகியும் கூரியதாகவும் ஆகி வருகின்றன. ஆக இன்றைய ஜேம்ஸ் பாண்டுகள் துப்பாக்கியுடன் அழகிய பெண்களுடன் நாடு விட்டு நாடு அலைய வேண்டியதில்லை. குளிருக்கு அடக்கமாக தத்தம் வீட்டிலேயே உட்காந்துகொண்டு சக்தி வாய்ந்த கம்பியூட்டர் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் இன்னொரு நாட்டில் நெட்வொர்க்கில் புகுந்து, ஊடுருவி நாசவேலைகளைச்செய்ய முடியும்.

    மூன்றாம் உலக யுத்தம் பானிப்பட்டிலோ வாடர்லூவில்லொ நடக்கப்போவதில்லை. வான் வெளியில் கண்ணுக்குத்தெரியாமல் நடக்கும். உங்களை மாதிரி என்னை மாதிரி ஆசாமிகள் தான் கூண்டோடு முடங்கி செயலிழந்து திண்டாடபோகிறோம்.

    சைபரீஸ்வரோ ரக்ஷது!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இருவரும் நடுவர் என்ற பணியையும் தாண்டி அவர்களாகவே காட்சிக்கு தகுந்தாற் போல் நடிப்பது, ஆடுவது என்று அந்த நிகழ்ச்சியை களைகட்ட வைத்தார்கள்.
    • முதல் முறையாக இந்த சீசனில்தான் யானைக்கு உண்மையான யானையையே வரவழைத்து இருந்தோம்.

    அனுபவம்தான் பாடம் கற்று தரும் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் மானாட மயிலாட முதல் சீசனை தொடங்கும் போது சின்னத்திரையில் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற தயக்கத்துடனேயே சென்றேன்.

    ஆனால் அந்த சீசனில் கிடைத்த அனுபவம்தான் புதிய எண்ணங்களுக்கு வழி காட்டியது.

    முதல் சீசனில் ஒரு காட்சிக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஒவ்வொரு பொருட்களாக எடுத்து வைப்போம். அவைதான் காட்சிகளின் பின்னணியில் இருக்கும். அதை பார்க்க பார்க்க இதையே இன்னொரு ஷெட்டாக அமைத்தால் என்ன என்று நினைத்தேன்.

    முதல் சீசனில் கிடைத்த அந்த அனுபவம்தான் 2-வது சீசனை மேலும் பிரமாண்டமாக செய்ய உதவியது. ஏற்கனவே முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. ஏனெனில் சின்னத்திரையில் இப்படி புதுமையான காட்சிகள் இடம் பெற்றது ரசிகர்களுக்கும் புதுமையாக தெரிந்தது. அவர்களும் அதை பார்த்து ரசித்தார்கள்.

    இந்த சீசனில்தான் ஒரு ஷெட்டுக்குள் இன்னொரு ஷெட்டு போடும் யுக்தியை கையாண்டோம். நடிகைகள் குஷ்புவும் ரம்பாவும் நடுவர்களாக இருந்தார்கள். இருவருமே திரையில் ஜொலித்த நட்சத்திரங்களாக இருந்ததால் அவர்களுடைய பங்களிப்பும் இந்த நிகழ்ச்சியில் அதிகமாகவே இருந்தது.

    இருவரும் நடுவர் என்ற பணியையும் தாண்டி அவர்களாகவே காட்சிக்கு தகுந்தாற் போல் நடிப்பது, ஆடுவது என்று அந்த நிகழ்ச்சியை களைகட்ட வைத்தார்கள். அது மிகப்பெரிய பொழுதுபோக்கு விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்தது.

    இந்த சீசனில்தான் கல்லூரி மாணவர் பாலா-பிரியதர்ஷினி ஜோடி, லோகேஷ்-சுஜி பாலா ஜோடி, கணேஷ்-ஆர்த்தி ஜோடி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி போன்றவர்கள் போட்டியாளர் களாக களம் இறங்கினார்கள்.

    பின்னர் பிரியதர்ஷினி மிகப்பெரிய தொகுப்பாளினியாக மாறினார்.

    நீர்வீழ்ச்சி காட்சிக்காக குற்றாலம் நீர்வீழ்ச்சியை போல் ஒரு நீர்வீழ்ச்சி ஷெட்டையே அமைத்து இருந்தோம். அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும்... செடி, கொடிகள் படர்ந்து கிடக்கும். குற்றாலத்தை பார்த்தவர்களுக்கு நிஜமான குற்றால அருவியை கண்முன்பு பார்த்தது போல் இருக்கும். அந்த அருவியில் ஆடிவிட்டு வெளியே வரும் போது தண்ணீரில் நனைந்ததால் தரைகள் வழுக்கும். அதையெல்லாம் தாக்குப்பிடித்து தான் போட்டியாளர்கள் நிகழ்ச்சிகளில் நடித்தார்கள்.

    ஏற்கனவே ரம்பா, குஷ்புவின் காஷ்டியூமை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவு பிரமாண்டமாக காஷ்டியூம் போட்டு இருப்பார்கள். அதிலும் இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது அந்த காட்சிக்கு தகுந்தாற்போல் அவர்களின் காஷ்டியூமும் இருக்கும். நீர்வீழ்ச்சி பின்னனியில் பசுமையாக இருக்கும். எனவே அவர்களும் கிராமத்து ஸ்டைலில் பச்சை கலர் காஸ்டியூமில் சும்மா நச்சென்று நிகழ்ச்சியில் வந்து அமர்ந்து ரசிகர்களை கவர்ந்தார்கள்.

    முதல் முறையாக இந்த சீசனில்தான் யானைக்கு உண்மையான யானையையே வரவழைத்து இருந்தோம். அந்த யானை ரம்பாவுக்கு மாலை போட்டு வரவேற்கும். அதேபோல் குஷ்புவுக்கும் மாலை போட்டு வரவேற்கும்.

    காஷ்மீர் பனி முகடுகளை போல பனிக்கட்டிகளால் மலை முகடுகளுடன் ஒரு ஷெட் அமைத்திருந்தோம். அதில் "புது வெள்ளை நிலா" என்ற பாடலுக்கு போட்டியாளர்கள் ஆடிய காட்சி காஷ்மீர் பனி சிகரத்தில் ஆடுவது போன்ற ஒரு உணர்வையே ரசிகர்களுக்கு கொடுத்தது.

    இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களும், தங்களின் முழு திறமையையும் அர்ப்பணிப்புடன் செய்ததும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. யாருமே இதை ஒரு போட்டி என்பதாக மட்டும் கருதவில்லை.

    அதற்கு ஒரு உதாரணம் ஆன்மீக சுற்று என்று ஒரு ரவுண்டு வைத்திருந்தோம். அதில் நாயகி மொட்டை தலையுடன் வரவேண்டும் என்பதால் ஆர்த்தி நிஜமாகவே தலையை மொட்டை அடித்துக்கொண்டார். அதை பார்த்து நாங்களே பிரமித்து போனோம்.

    இப்போது தம்பதிகளாக இருக்கும் ஆர்த்தியும், கணேசும் காதலர்களாக மானாட மயிலாட சீசனில்தான் அறிமுகமானார்கள். அவர்கள் காதலும் வளர்ந்தது. பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை தொடங்கினார்கள் என்பது சுவாரசியமானது.

    மகிழ்ச்சிகரமான தருணங்கள் இருந்தது என்பதை போல, துயரமான தருணமும் உண்டு. இந்த நிகழ்ச்சியில் ரஞ்சித்-ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி மிக பிரமாண்டமாக ஆடியது. செமி பைனலுக்கும் அந்த ஜோடி வந்தது. அந்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் சகோதரர் மரணம் அடைந்துவிட்டார். நாங்கள் எல்லோருமே அவரது வீட்டுக்கு சென்றிருந்தோம். மறுநாள் ஷூட்டிங்கில் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. அந்த துக்கத்திலும் அதை நினைவுபடுத்தி கண் கலங்கினார். அப்போது நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறினோம். உங்கள் திறமை ஒரு போதும் தோற்று போகாது. நிச்சயம் அடுத்த சீசனில் உங்களுக்கு வாய்ப்பு தருவோம் என்றோம். அதேபோல் 3-வது சீசனில் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தோம்.

    இந்த சீசனில் தான் கயிற்றில் தொங்கியபடி ஆடும் காட்சிகளை அறிமுகம் செய்தோம். கயிறை பிடித்து தொங்கி அந்த ரதத்தில் ஆட வேண்டும். மிகவும் திரிலிங்காக இருக்கும் அந்த காட்சிகளை போட்டியாளர்கள் துணிச்சலாக நடித்து பெயர்வாங்கினார்கள்.

    ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களைகட்டிய 2-வது சீசனில் முதல் பரிசு பாலா-பிரியதர்ஷினி ஜோடிக்கும், 2-வது பரிசு லோகேஷ்-சுஜி ஜோடிக்கும், 3-வது பரிசு கணேஷ்-ஆர்த்திக்கும் கிடைத்தது. இந்த சீசன் முடிவில் தான் ஆர்த்தி வந்து என்னிடம் சொன்னார். மேடம் நாங்கள் (கணேஷ்-ஆர்த்தி) காதலித்து வருகிறோம். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்றார்கள். உங்களை நாங்கள் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம். சூப்பர். உங்கள் திருமண வாழ்வு சிறப்பாக அமைய எங்கள் வாழ்த்துக்கள் என்று எல்லோரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னோம்.

    3-வது சீசன் அனுபவம் பற்றிஅடுத்த வாரம் சொல்ல வருகிறேன்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரோக்கியமான, சத்தான உணவு மிக அவசியம். தவறான உணவுகள் சக்தியினை இழக்கச் செய்யும்.
    • அன்றாடம் 20 நிமிடம் நடைபயிற்சி, உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, தியானம் செய்வது சக்தியினைக் கூட்டும்.

    சக்தி: இது இல்லாவிட்டால் எதுவும் செய்ய முடியாது. பிரபஞ்சமே ஸ்தம்பித்து விடும். காலையில் சக்தியோடு வேலைக்கு செல்லும் மனிதன் மாலையிலேயே சக்தி இல்லாமல் துவண்டு விடுகின்றான். ஆக மனிதனுக்கு தொடர்ந்து இயங்க தொடர் சக்தி பல வழிகளில் அவனுக்கு கிடைக்க வேண்டும்.

    அப்படி மனிதனுக்கு சக்தி கொடுப்பவை எவை எவை என்று தெரியுமா?

    சூரிய ஒளி- உடலில் சூரிய ஒளி பட வேண்டும். சுட்டெரிக்கும் வெயில் என்று பொருள் கொள்ளக் கூடாது. காலை, மாலை சூரிய ஒளியில் நடப்பதே நம் உடலுக்கு சக்தி கொடுக்கும்.

    சுத்தமான காற்று- மாசு, தூசு படிந்த காற்றினை சுவாசிப்பது பல நோய்களை உருவாக்கி சக்தி இழக்கச் செய்யும். சுத்தமான காற்று மனிதனுக்கு மிக அவசியம். திறந்த வெளி, பூங்கா இங்கெல்லாம் சென்றாலே உடல் சக்தி பெறும்.

    * ஆரோக்கியமான, சத்தான உணவு மிக அவசியம். தவறான உணவுகள் சக்தியினை இழக்கச் செய்யும்.

    தேவையான அளவு நீர்- சுமார் 2 முதல் 2½ லிட்டர் நீர் மற்றும் மோர் போன்றவை குடிக்க உடலில் நச்சுகள் வெளியேறும். உடல் சக்தி பெறும்.

    உடற் பயிற்சி- அன்றாடம் 20 நிமிடம் நடைபயிற்சி, உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, தியானம் செய்வது சக்தியினைக் கூட்டும்.

    * அவ்வப்போது ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்வதும் உடலை சுத்தமாக்கி, ரத்த ஓட்டத்தினை சீராய் வைக்கும். ஆனால் ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்யும்போது வயிறு காலியாய் இருப்பது நல்லது.

    * சுய அக்கறை சுய கவனிப்பு அவசியம். பிறர் வந்து தன்னை கவனிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது.

    * முறையான தூக்கம் 7 முதல் 8 மணி நேரம் அவசியம்.

    * இனிமையான, மென்மையான இசை சிறிது நேரம் கேட்பது அவசியம். (இவை அனைத்தும் சக்தியினைக் கூட்டும்) நமது சக்தியினை குறைப்பவை எவை என்று தெரியுமா?

    * அதிக நேரம் டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் இவற்றில் மூழ்கி இருப்பவர்கள் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள்.

    * பயம், சந்தேகம், ஸ்ட்ரெஸ் இவை உடல் சக்தியினை வெகுவாய் இழக்க வைக்கும்.

    * மிக அதிக சிந்தனையிலேயே இருப்பவர்கள் சக்தியே இல்லாது தொய்ந்து இருப்பர்.

    * இருக்கும் இடம் சுத்தமற்று, முறையாய் இல்லாமல் இருந்தால் சக்தி குறையும்.

    * தண்ணீர் குறைவாய் குடித்தால் சோர்ந்து இருப்பர்.

    * தேவையான அளவு உணவு இல்லாவிடில் பலவீனமாய் இருப்பர்.

    * மிக அதிகமாக வேலை செய்பவர்கள், ஓய்வின்றி உழைப்பவர்கள். இவர்கள் சோர்ந்து விழுந்து இருப்பார்கள்.

    * தேவையான அளவு உடற்பயிற்சி இல்லாவிடில் சக்திேய இருக்காது.

    * தவறான உணவுகள் சக்தியினை உடலில் இல்லாமல் செய்து விடும்.

    * எப்போதும் கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கி வருத்தத்திலேய இருப்பவர்கள் சக்தி இன்றியே இருப்பர்.


    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    * பலர் காலை முதல் இரவு வரை உட்கார்ந்த இடத்திலேயே இருப்பார்கள். இவர்கள் வேளை தவறாது உணவு உட்கொண்டாலும் மிகவும் சோர்வாய் நடப்பதற்கு கூட பிறரின் சக்தி கொண்டு நடப்பார்கள்.

    * கற்பனை உலகத்தில் வாழ்பவர்கள், சரியில்லாத குறிக்கோள்கள் உடையவர்கள், எந்த ஒரு முயற்சியும் செய்யாது இருப்பவர்கள் சக்தி இன்றியே இருப்பர்.

    ஆக சக்தியின்மை இன்றி வாழ்வு இல்லை. அதனை நன்கு கூட்டிக் கொண்டு ஆரோக்கியமாக வாழும் வழி முறைகளை பின்பற்ற வேண்டும்.

    மேலும் சில வழிமுறைகள் நம் உடல் சக்தி இழக்காமல் இருக்க அறிவோம்.

    * மனிதனுக்கு கோபம் வருகிறது, அந்த கோபத்தில் வாய் கட்டுப்பாடு என்பது இல்லாமல் போய் விடுகின்றது. இந்த செயல் கோபம் அடைபவர். அவரால் பாதிக்கப்படும் எதிராளி இருவரையும் ஆழ் மனதில் புண்ணாய் பாதித்து விடுகின்றது. எவ்வளவு சக்தியினை உடல் இதனால் இழக்கின்றது. இதனை எப்படி தவிர்ப்பது?

    * கோபம் பொங்கி எழுகின்றதா? வார்த்தைகளை கொட்டி விடுவோம் என்பது போல் இருக்கின்றதா? முதலில் அந்த இடத்தினை விட்டு நகர்ந்து விடுங்கள். தொலைபேசியில் பேச வேண்டி இருப்பின் போனை வைத்து விடுங்கள். அமைதியாய் பேசாமல் இருந்து விடுங்கள். இல்லையெனில் சற்று வேகமாய் நடைபயிற்சி செய்யுங்கள். வயதிற்கேற்ப ஸ்கிப்பிங், நீச்சல் செய்யலாம். வீட்டை சுத்தம் செய்யலாம். வாயை மட்டும் திறக்கக் கூடாது. இதில் நம் சக்தி கூடும். பிரச்சினைகள் பெரிதாகாது. உறவுகள் பலப்படும்.

    சிறுநீரகம்- சிறுநீரக பாதிப்பு என்பது உலக அளவில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகின்றது. ஆனால் சில வாழ்க்கை முறை ஆரோக்கியமான மாறுதல்கள் சிறுநீரகத்தினை பாதுகாக்க உதவும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. அவைகள் என்ன என்று பார்ப்போம். * சிகப்பு அசைவம் இரும்பு சத்து நிறைந்ததுதான். ஆனால் இதனை மிக அதிகமாக உட்கொள்பவர்களுக்கு சிறுநீரகத்தினை பாதிக்கும் விஷம் ஆகின்றது. ஆக சிகப்பு அசைவத்தினை மிக அளவோடே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * சோடா, காற்றுடைய பானங்கள் இவைகளை தாகம் எடுக்கும் நேரத்தில் அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர். சிலர் பழக்கத்தின் காரணமாக இவ்வாறு எடுத்துக் கொள்கின்றனர். சிறுநீரகத்தினை பாதுகாக்க பொதுவில் இவைகளை தவிர்த்து சுத்தமான நீர் எடுத்துக் கொள்ளலாம்.

    * மிக அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதனை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

    * அதிகமாக வலி நிவாரண மாத்திரைகளை உபயோகிப்பதனை, டாக்டர் அறிவுரையின்றி தானே மாத்திரைகள் எடுத்துக் கொள்வதனை தவிர்க்க வேண்டும்.

    * மது என்பது வேண்டவே வேண்டாம்.

    * சீறுநீர் வெளிப் போக்கினை அடக்கி வைத்திருப்பது தவறு.

    * அதிகமாக வெண்ணை உபயோகம் தவிர்க்க வேண்டும்.

    * ஒரு கப் காபி போதும் என்று கூறுகின்றனர்.

    * மூன்று, நான்கு கப் காபி உபயோகிப்பவர்கள் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    * செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்த்து விட வேண்டும்.

    * 7 அல்லது 8 மணி நேர ஆழ் தூக்கம் அவசியம்.

    * 2 முதல் 2½ லிட்டர் நீர் அவசியம்.

    * புகை பிடிப்பது சிறு நீரகத்தினை வெகுவாய் பாதிக்கும்.

    * உயர் ரத்த அழுத்தம் பற்றி கூடுதல் கவனம் அவசியம்.

    * சத்து மாத்திரைகள், சத்து உணவு இவற்றினை மருத்துவர் அறிவுரைபடியே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * கடும் உடற்பயிற்சிகள் வேண்டாமே.

    * முறையாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ, பழக வேண்டும்.

    * அதிக சர்க்கரை கூடாது.

    * பழங்கள், காய்கறிகள் உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * ஆலிவ் எண்ணை பயன்படுத்த வேண்டும்.

    இதே போன்று நாம் பாதுகாப்பாய் இருக்க நமது நிணநீர் மண்டலத்திற்கும் கவனம் கொடுக்க வேண்டும். இதனை உடலின் கழிவு மண்டலம் எனலாம். நிண நீர் மண்டலம் மந்தமாக செயல்பட்டால் பல உடல் நல பாதிப்புகள் ஏற்படும். நிண நீர் மண்டலத்தினை நன்கு செயல்பட வைக்க.

    * பழங்கள் உண்ண வேண்டும். காலை உணவிற்கு முன்போ அல்லது மாலையிலோ எடுத்துக் கொள்ளலாம்.

    * நன்கு நீர் அதாவது தேவையான அளவு நீர் குடிப்பது நிணநீர் மண்டலத்தினை ஆரோக்கியமாய் செயல்பட வைக்கும்.

    * வாரம் ஒருமுறை நன்கு எண்ணை தேய்த்து உடலினை மசாஜ் செய்து கொள்ளலாம்.

    * முறையான உடற்பயிற்சி, இளம் வயதினர் ஓடும் பயிற்சி போன்றவை செய்வது நிணநீர் மண்டலத்தினை நன்கு இயங்கச் செய்யும்.

    * கிரீன் டீ, மூலிகை டீ இவை நல்லது.

    * வெது வெதுப்பான நீர், சாதா நீர் இதில் மாறி மாறி ஷவர் குளியல் எடுத்துக் கொள்ளலாம்.

    * கொட்டை, விதைகள் இவற்றினை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

    * உலர்ந்த சருமத்தில் உலர்ந்த துண்டு கொண்டு வட்ட முகமாக மென்மையாக தேய்த்து விடலாம்.

    * மூச்சுப் பயிற்சி நன்மை பயக்கும். உடலில் கழிவு தேங்காது இருப்பதே மிகப்பெரிய ஆரோக்கியம். இதனை கருத்தில் கொண்டு சிறிது கவனம். அன்றாடம் நம் உடலுக்கு கொடுத்தாலே போதும். நோயின்றி இருக்கலாம். மேலும் கூடுதலாக ஆரோக்கியத்திற்காக கீழ்க்கண்ட முறைகளையும் பயிற்சி செய்யலாம்.

    * மனம் பல விஷயங்களை அதிகமாக சிந்தித்துக் கொண்டே இருக்கின்றதா? எண்ணங்களை எழுதி விடுங்கள். மனம் அமைதிப்படும்.

    * மனம் சதா கவலைப் படுகின்றதா? கண்டிப்பாய் தியானம் பழகுங்கள்.

    * ரொம்ப சோம்பலாகவே இருக்கின்றீர்களா? அதிகம் டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் பார்ப்பதனைக் குறைத்து விடுங்கள்.

    * சோகம் மனதினை கவ்வுகின்றதா? ஏதேனும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

    * கோபம் வருகின்றதா? நல்ல இசை கேட்கலாம்.

    * மன உளைச்சல் மனதினை சங்கடம் செய்கின்றதா? வீட்டினுள் இருந்தால் கூட 15 நிமிடம் நடந்து பாருங்களேன்.

    அதிசயம்- இன்று நாம் காணும் அசாத்திய செயல்களை அசாத்திய இயற்கையினை, அசாத்திய மருத்துவ முன்னேற்றத்தினை அதிசயம் என்கின்றோம். கடும் நோயில் ஒருவர் பிழைக்கும் பொழுதும் அதிசயம் என்கின்றோம். மிக ஆரோக்கியமாகக் கருதப்பட்ட நபர் திடீரென மறையும் பொழுதும் அதிசயம் தான் என்கின்றோம். ஆனால் வாழ்வே அதிசயம்தான். ஒவ்வொரு பிறப்பும் ஒரு அதிசயம்தான். ஆக நாமும் நம்மை சுற்றி நிகழும் ஒவ்வொன்றும், சூரிய உதயம் முதல் இரவு வரை கூட அன்றாட அதிசயம்தான். நம் மனதில் ஒன்றை உருவாக்கி அதனை சதா நினைத்து அந்த ஒன்று உயிர் பெற்று நிகழ்வதும் அதிசயம்தான். எனவே ஒவ்வொரு நொடியும் நான் நலமாக வாழ்கிறேன் என்று நினைக்கலாமே.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுநீர் மடை திறந்த வெள்ளம் போல சிறுநீர்ப்பையில் இருந்து வெளியேறி யூரித்ரா எனும் வெளியேற்றக் குழாய் வழியே வெளியேற்றப்படும்.
    • பொதுவாக நம்மைப் போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வெப்ப மண்டல நாடுகளில் உடலில் வியர்வை மிக அதிகமாக வெளியேறும்.

    பொதுவாக நீர்க்கடுப்பு என்று கூறப்படும் அறிகுறி சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றால் ஏற்படுவதாகும்.

    அது என்ன சிறுநீர்ப்பாதை?

    நமது உடலில் ரத்தத்தை வடிகட்டி உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் தேவையற்ற விசயங்களை வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் 24 X 7 ஓய்வின்றி செய்து வருகின்றன.

    நமக்கிருக்கும் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றில் பத்து லட்சம் என மொத்தம் இருபது லட்சம் நெஃப்ரான்கள் (நுண்ணிய ரத்த வடிகட்டிகள்) இருக்கின்றன.

    அதில் இருந்து உருவாகும் சிறுநீர், அங்கிருந்து தொடங்கும் யூரிடர் எனப்படும் இரண்டு சிறுநீர்க் குழாய்கள் மூலம் சிறுநீர்ப்பையை வந்தடைகின்றன.

    சிறுநீர்ப்பையில் சிறுநீர் சிறிது சிறிதாக சேகரிக்கப்படும்.

    சிறுநீர்ப்பை என்பது சுருக்குப் பை கற்பனை செய்து கொள்ளலாம்.

    அதன் கொள்ளளவை எட்டியதும் நமக்கு மூளையில் இருந்து அலாரம் அடிக்கும் "ஏலேய் உடனே கழிப்பறை சென்று கடமையை நிறைவேற்று" என்று சமிக்ஞை செய்யும் .

    கழிப்பறை சென்று சிறுநீர் கழிக்க தயாரானதும் அந்த சுருக்குப் பை போன்ற தசை அமைப்பு லேசாக சுருக்கை அவிழ்க்கும்.

    சிறுநீர் மடை திறந்த வெள்ளம் போல சிறுநீர்ப்பையில் இருந்து வெளியேறி யூரித்ரா எனும் வெளியேற்றக் குழாய் வழியே வெளியேற்றப்படும்.

    இத்தகைய அமைப்பை "சிறுநீர்ப்பாதை" என்கிறோம் .

    இந்தப் பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றை "சிறுநீர்ப்பாதை தொற்று" என்று அழைக்கிறோம்.

    இதில் இந்த வெளியேற்றக் குழாயும் சிறுநீர்ப்பையும் தொற்று கண்டால் அது கீழ் சிறுநீர்ப்பாதை தொற்று.

    அதுவே சிறுநீர்க் குழாய் மற்றும் சிறுநீரகங்களில் தொற்று ஏற்படுவது மேல் சிறுநீர்ப்பாதை தொற்றாகும்.

    கீழ் சிறுநீர்ப்பாதையில் தொடங்கும் தொற்றை கவனிக்காமல் விட்டால் அது மெல்ல மேலேறி சிறுநீரகங்கள் வரை செல்லும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

    பொதுவாக நம்மைப் போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வெப்ப மண்டல நாடுகளில் உடலில் வியர்வை மிக அதிகமாக வெளியேறும்.

    எனவே நீர் அருந்துவது சரியாக பராமரிக்கப்பட வேண்டும்.

    சரியாக நீர் அருந்தாமல் விட்டால் சிறுநீரின் நீர்ப்புத்தன்மை குறைந்து விடும். இதனால் கிருமித் தொற்று ஏற்படும் நிலை உருவாகும்.

    சிறுநீர் கழிக்கும் போது லேசான வலி, எரிச்சல் தோன்றுவது, சிறுநீர் கழித்து முடிக்கும் தருவாயில் அடிவயிற்றில் கனமாக கவ்வுவது போன்ற வலி ஏற்படுவதை நம் பகுதிகளில் "நீர்க்கடுப்பு" என்கிறோம்.

    பொதுவாக இந்த நிலையில் நீர்ச்சத்தை அதிகரிப்பது, இளநீர் பழச்சாறுகள் எலுமிச்சை சாறு அருந்துவது போன்றவற்றை செய்தால் சரியாகும்.

    எனினும் பலர் பயணங்களில் சிறுநீர் கழிக்கும் இச்சை தோன்றினாலும் சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்க மாட்டார்கள்.

    குறிப்பாக பெண்கள் சரியான சுத்தமான கழிப்பறை வசதி இருக்காது என்பதால் சரியாக தண்ணீரும் அருந்த மாட்டார்கள்.

    சிறுநீரையும் அடக்கி வைப்பார்கள் .

    இதனாலேயே சிறுநீர்த் தொற்றுக்கு அதிகமாக ஆளாவார்கள்.

    கூடவே பெண்களின் சிறுநீர்ப்பாதை வெளியே சென்று முடியும் இடத்தின் அருகிலேயே இனப்பெருக்க உறுப்பான யோனியும் முடியும். அதற்கு வெகு அருகில் ஆசன வாயும் உள்ளது.

    அதுபோக பெண்களின் சிறுநீர்ப்பாதை ஆண்களின் சிறுநீர்ப்பாதையை விட குறிப்பாக யூரித்ரா எனும் சிறுநீர் வெளியேற்றக் குழாயின் நீளம் சிறியதாக இருப்பதால் ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    எவ்வாறு சிறுநீர்ப்பாதை தொற்றை ஏற்படாமல் தடுப்பது?

    ஆண்களைப் பொருத்தவரை கட்டாயம் ஒருநாளைக்கு இரண்டு லிட்டர் சிறுநீர் - அதிலும் வெளிர் மஞ்சள் நிறத்தில் செல்லுமாறு அளவு - நீர் அருந்த வேண்டும் (3 முதல் 4 லிட்டர்)

    சிறுநீர் கழிக்கும் இச்சையை அடக்கி வைப்பது தவறு.

    முதியோரில் ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்துக்கு முறையான சிகிச்சை எடுக்க வேண்டும்.

    கேதிடர் எனும் செயற்கை சிறுநீர்க் குழாய் போடப்பட்டிருந்தால் அதை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையேனும் மாற்றிவிட வேண்டும் .

    பெண்களைப் பொருத்தவரை பொதுக் கழிப்பிடங்களில் இந்தியன் டைப் கழிப்பறைகளில் குதப்பகுதி நேரடியாக கழிப்பறையில் படாதவாறு சிறுநீர் கழிப்பது தொற்று ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும்.

    வெஸ்டர்ன் டைப் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டிய நிலை வந்தால் டாய்லெட் பேப்பர் / நியூஸ் பேப்பர் போன்றவற்றை விரித்து அதில் அமர்ந்து சிறுநீர் கழிக்கலாம்.

    கையில் ஆல்கஹால் சானிடைசர் ஸ்ப்ரே கொண்டு சென்று கழிக்க அமரும் இடத்தில் அடித்து பின் அமரலாம்.

    பொதுக்கழிப்பறையில் உள்ள நீரைக் கழுவ பயன்படுத்தாமல் வெட் வைப்ஸ் வைத்து சிறுநீர்ப்பாதையை சுத்தம் செய்து முறையாக அதை அப்புறப்படுத்தலாம்.

    கழிப்பறையில் இருந்து வெளியே வந்ததும் கைகளை சேனிடைசர் கொண்டு சுத்தமாக கழுவி விட வேண்டும்.

    மலம் கழிக்கும் போது ஆசன வாயை முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் நோக்கி கழுவ வேண்டும்.

    ஆசன வாயில் தொடங்கி முன்பக்கம் நோக்கி கழுவினால் மலத்தில் இருக்கும் சில கிருமிகள் சிறுநீர்ப்பாதை மற்றும் இனப்பெருக்கப் பாதைக்குள் புகுந்து பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும்.

    உடலுறவு கொள்வதற்கு முன்னும் பின்னும் கட்டாயம் சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீர் கழித்த பின் சில டம்ளர் நீர் அருந்துவது நல்லது.

    வல்வா எனும் பெண்ணுறுப்பை கட்டாயம் சோப் / கிருமி நாசினி போன்றவற்றை உபயோகப்படுத்தி சுத்தப்படுத்தக் கூடாது.

    அந்தப் பகுதிக்கென்றே பிரத்யேகமாக நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன.

    உபயோகிக்கும் சோப் /சாம்பூ போன்றவை அந்த பாக்டீரியாக்களை இல்லாமல் செய்து தீங்கு விளைவிக்கும் தொற்றுகள் ஏற்பட வழிவகுத்துவிடும்.

    அடிக்கடி சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் நிலையில் இணையருக்கு கிருமித் தொற்று இருக்கிறதா என்பதை அறிந்து அதை குணப்படுத்த வேண்டும்.

    * சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் /வலி/ கடுப்பு

    * சிறுநீர் குறைவாக செல்லுதல்

    * குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல்

    * அடிவயிற்று வலி போன்றவை முக்கிய அறிகுறிகள்.

    மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றினால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    • Whatsapp