என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவில் புனரமைப்பு பணி நடந்தது.
    • கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கால்கோள் விழாவுடன் தொடங்கியது.

    வடவள்ளி,

    கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. மிகவும் தொன்மையான இந்த கோவில் குமரன் குட்டை கருப்பராயன் என்று அழைக்கப்படுவது உண்டு.

    மருதமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் முதலில் கருப்பராயனை வழங்கி சென்று வந்தனர். காலப்போக்கில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதன் மூலம் கோவில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

    மேலும் பக்தர்கள் வழிபட முடியாத அளவிற்கு பல்கலைகழக மதில் சுவர் எழுப்பப்பட்டது. இதையடுத்து மக்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்று பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து கோவிலை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவில் புனரமைப்பு பணி நடந்தது.

    தற்போது பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கால்கோள் விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து முதல் கால யாக பூஜை, கணபதி ஹோமம், நவ வேள்வியும் நடந்தது. தொடர்ந்து 2-வது கால யாகம், கருப்பராயன் வேள்வியும், கருவறை உயிர் பூப்பு பூசை, கருப்பராயன் திருமேனி நிலை நிறுத்துதல் நடைபெற்றது.

    சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. 12 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து கருப்பராயன் சுவாமிக்கு நன்னீராட்டு மற்றும் அலங்காரம்நடந்தது. கோவை மாவட்டத்தில் முதல்முறையாக கருப்பராயன் கோவில் குடமுழுக்கு விழாவை பெண்கள் புனித நீர் ஊற்றி செய்து வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது. இதை பல்கலைக்கழக ஊழியர்கள் பலரும் வரவேற்று உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படும்.
    • சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் தென்மாவட்ட பஸ்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இன்னும் ஒருசில பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் மின்சார ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும் மின்சார ரெயில் நிலையம் மற்றும் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து பயணிகள் எளிதாக பஸ்நிலையத்துக்குள் வரும் வகையில் ஆகாய நடைபாலமும் அமைக்கப்பட உள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய போலீஸ் நிலையமும் அமைக்கப்படுகிறது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் வெளியூரில் இருந்து வரும் பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துடன் நிறுத்தப்பட உள்ளது. சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களை சென்னை நகருக்குள் விடக்கூடாது என்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு கடிதமும் எழுதி உள்ளனர்.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படும். சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் தென்மாவட்ட பஸ்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து வெளியூர் பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துடன் நிறுத்தப்படுவதால் சென்னை மற்றும் புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் கிளாம்பாக்கத்தில் இறங்கி பல பஸ்கள் மாறி தங்கள் வசிப்பிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆட்டு இறைச்சியை கம்பியிலிருந்து எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பெரிய மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி அங்காளஈஸ்வரி. இவர்களது மகன் பால்பாண்டி (வயது 16). அந்த அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அங்காளஈஸ்வரி ரங்கசாமி என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். தோட் டத்தில் உள்ள ஆடு இறந்து போனது. இதனையடுத்து ரங்கசாமி ஆட்டை அங்காள ஈஸ்வரியிடம் கொடுத்து அவர் ஆட்டை உப்பு கண்டம் போட்டு வீட்டில் உள்ள கம்பியில் காய வைத்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வம், அவரது மகன் பால்பாண்டி ஆகியோர் கம்பியில் காய வைக்கப்பட்டு இருந்த ஆட்டு இறைச்சியை எடுத்தனர். அப்போது திடீரென 2 பேரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடிய செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்தனர்.
    • புனிதவதி, சத்யா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

    கடலூர்:

    கடலூர் - மடப்பட்டு சாலையில் 230 கோடி மதிப்பீட்டில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலை விரிவாக்க பணிக்காக ஏற்கனவே நெடுஞ்சாலைத்து றையினரால் வரையப்பட்ட குறியீடுகள் வரை ஆக்கிரமி ப்புகள் அகற்றப்படாமல் இருந்து வந்ததால் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அரசியல் கட் சியினர் மற்றும் சமூக அமைப்பினர்கள் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்சாலை திட்ட கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி, தனி தாசில்தார் (நில எடுப்பு) தமிழ்ச்செல்வி மற்றும் சர்வேயர் முன்னிலையில் நெல்லிக்குப்பம் வர சித்தி விநாயகர் கோவிலில் இருந்து திரவுபதி அம்மன் கோவில் வரை சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு பணிகள் நடைபெற்றன. அப்போது ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி, சத்யா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

    இதனை தொடர்ந்து கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் அரசு வரைபடம் மூலம் அளவீடு பணிகளில் ஈடுபட்டு குறியீடு வரையப்பட்டது. அப்போது ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சரியான முறையில் அளவீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டதை அனைவரும் ஏற்று வரவேற்றனர். பின்னர் அவர் கூறுகையில், கடலூர் மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணிக்காக அரசிடம் இருந்து அனுமதி பெற்று அதற்கான நிதி பெற்று பணிகள் சரியான முறையில் அளவீடு செய்துசாலை விரிவாக்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டம் நிறைவேற்றுவதன் மூலம் விபத்து இல்லாமலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்படக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதன்படி அனைத்து பணிகளும் நடைபெற்ற வருகின்றது. தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததை தொடர்ந்து மீண்டும் உரிய முறையில் அளவீடு செய்து குறியீடு வரையப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் பணி தொடங்கப்பட்டு முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மற்றொருபுரத்திலும் உரிய முறையில் அளவீடு நடைபெற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்றதும், மிகப் பழமை வாய்ந்ததுமான சுகவ னேஸ்வரர் கோவில் உள்ளது.
    • விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்றதும், மிகப் பழமை வாய்ந்ததுமான சுகவ னேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி யது. இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.

    இரவு நேரத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை ஒட்டி சுகவனேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணியளவில் சுகவனேஸ்வ ரருக்கும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவி யங்களால் சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது.

    தொடர்ந்து உற்சவ மூர்த்தியான சுகவனேஸ்வ ரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு பட்டு ஆடைகள் உடுத்தி பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், ராஜகணபதி கோவில் முன்பு உள்ள, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை எழுந்தருளினார்.

    இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க அர்ச்ச னைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு திருத்தே ரோட்டம் தொடங்கியது. அங்கு கூடியிருந்த பக்தர் கள் நமச்சிவாயா நமச்சி வாயா என கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்த தேரானது ராஜகண பதி கோவிலில் தொடங்கி, 2-வது அக்ரஹாரம், சின்ன கடைவீதி, முதல் அக்ரஹாரம் வழியாக பவனி வந்து மீண்டும் ராஜ கணபதி கோவில் அருகே வந்தடைந்தது.

    தேர் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருத்தேர் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, இன்று அந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு மாத காலமாக ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்ட மேட்டுப்பாளையம்-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை நேற்று முதல் திறக்கப்பட்டது.
    • அவதிக்குள்ளாகி வந்த நிலையில் உள்ளூர் வாசிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை இரு பாதைகளும் ஒருவழிப்பாதைகளாக மாவட்ட நிர்வாகம் சார்பாக மாற்றியமைக்கப்பட்டது,

    கோவை-மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்லும் வாகனங்கள் காட்டேரி-குன்னூர் வழியாகவும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம்-கோவை ஈரோடு என செல்லும் வாகனங்கள் ஊட்டியிலிருந்து கோத்தகிரி வழியாகவும் செல்ல ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் வாகனங்களை கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டு, மேட்டுப்பாளையம் மலைப்பாதை மேல் நோக்கி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது,

    மாவட்டத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவடைந்த நிலையில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஒரு மாத காலமாக ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்ட மேட்டுப்பாளையம்-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை நேற்று முதல் திறக்கப்பட்டது.

    இதனால் அனைத்து வாகனங்களும் கீழ்நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக உள்ளூர் வாகனங்கள் கூட செல்ல அனுமதிக்காமல் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் உள்ளூர் வாசி களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதுகுறித்து மேத்யூ மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
    • மேத்யூவின் வீட்டின் அருகே வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்பவர் தான் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அட்டடி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது உறவினர் ஒருவர் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மேத்யூ தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டில் உள்ள பீரோவை பார்த்தார்.

    அப்போது அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் மாயமாகி இருந்தது. இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்டு மர்மநபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மேத்யூ மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மேத்யூவின் வீட்டின் அருகே வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்பவர் தான் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆரோக்கிய மேரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோகுல்ராஜ் இறப்பு விவகாரம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
    • கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நேரில் வரவழைத்து விசாரித்தனர்.

    சென்னை:

    சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாா். அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், கோகுல்ராஜ் இறப்பு விவகாரம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    அவர்கள் விசாரணைக்கு பின்பு, இது தொடர்பாக சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இந்த கொலை வழக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இங்கு 2 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜோதிமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவர் மீதான வழக்கு மட்டும் நாமக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண், குமார் என்ற சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    மேலும் அவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சம்பத்குமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பின்னர் ஓரிரு நாட்கள் கழித்து முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    அந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர், இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நேரில் வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர் கோகுல்ராஜ் கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கோகுல்ராஜ் தன்னுடைய வகுப்பு தோழர் மட்டும்தான். வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும், வாக்குமூலம் அளித்தார்.

    அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததாக கூறி, அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குபதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை ஐகோர்ட்டின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று சுவாதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது.

    இதற்கிடையே தண்டனை பெற்றவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அதன் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் கூறுகையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

    மேலும் 5 பேர் விடுதலையில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.
    • இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    இப்பள்ளி, கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் மாண வர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், கைடுகள் மற்றும் எழுதுப் பொருட்கள், புத்தகப் பை, டிபன் கேரியர்கள் போன்றவை விற்பனையும் களை கட்ட தொடங்கி யுள்ளன.

    சேலத்தில் உள்ள ஸ்டேஷ னரி கடைகளில் சிவகாசி, மதுரை உள்ளிட்ட பகுதி களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நோட்டு புத்தகங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நோட்டு புத்தகங்கள் மட்டு மின்றி உரைநடை (கைடு) புத்தகங்கள் விலையும் உயர்ந்துள்ளது. விலை குறைவாக உள்ள உரைநடை நூல்கள், நோட்டு புத்தகங்களில் உள்ள தாள்களின் தரம் சற்று குறைவாகவே இருப்பதால் பெற்றோர்கள் விலை அதிகம் உள்ள நோட்டு புத்தகங்கள், கைடுகள் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்திய சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர்.

    கடலூர்:

    புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்த சகோதரிகளை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தினம் தோறும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் 2 பெண்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சமத்துவபுரத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி அமுதா (வயது 50), முருகன் மனைவி பூமாதேவி (45) என்பதும், சகோதரிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதா, பூமாதேவி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 108 மது பாட்டில்கள் மற்றும் 30 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin