என் மலர்

    விளையாட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி மற்றும் அகமது மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அசலங்கா 91 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டாவில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசாங்க - கருரத்ணே களமிறங்கினர். 4 ரன்கள் இருந்த போது கருரத்ணே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெண்டிஸ் 11 ரன்னிலும் மேத்யூஸ் 12 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    84 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. இதனையடுத்து அசலங்கா - டி செல்வா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படித்திய டி செல்வா 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சனகா 17 ரன்னிலும் தசுன் ஹெமந்தா 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அசலங்கா 91 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    இறுதியில் இலங்கை அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி மற்றும் அகமது மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஹூப்பர் விளையாடி உள்ளார்.
    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்றுக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார்.

    10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கு சூப்பர் லீக் மூலம் புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது.

    அதன்படி தகுதி சுற்று போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் 4 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா, 'பி' பிரிவில் முன்னாள் சாம்பியன் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றை அடையும்.

    இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு வெண்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹூப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தகுதி சுற்றுக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார்.

    15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடி உள்ளார். 329 சர்வதேச போட்டிகளில் விளையாடி 10,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஹூப்பர் பல்வேறு நிலைகளில் பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.

    56 வயதான அவர் பிக் பாஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராகவும் கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆன்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
    • 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    16-வது ஐபிஎல் தொடரின் தொடரின் இறுதி போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின.

    இதில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதனை சென்னை வீரர்கள் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடினர்.


    இந்நிலையில் சிஎஸ்கே கோப்பையை வென்றதை சென்னை அணி வீரர்கள் பஸ் மற்றும் ஓய்வு அறையில் கொண்டாடிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் அவர்களை புதிய பந்தில் ஆட வைப்பது முக்கியமானதாக இருக்கும்.
    • நான் எப்போதும் ஸ்டீவன் சுமித் பக்கம் இருப்பேன். அவரது சாதனை சிறப்பானது என்று நினைக்கிறேன்.

    சிட்னி:

    உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 7-ந்தேதி லண்டன் ஓவரில் தொடங்குகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் விராட் கோலியை விரைவில் அவுட் ஆக்குவது முக்கியமானது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் 4-வது இடத்தில் பேட்டிங் செய்கிறார்கள். எனவே அவர்களை முடிந்த வரை சீக்கிரம் அவுட் ஆக்குவது அந்தந்த அணிகளுக்கு முக்கியத்துவமாக இருக்கும்.

    தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் அவர்களை புதிய பந்தில் ஆட வைப்பது முக்கியமானதாக இருக்கும். நான் எப்போதும் ஸ்டீவன் சுமித் பக்கம் இருப்பேன். அவரது சாதனை சிறப்பானது என்று நினைக்கிறேன். ஆனால் இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்.

    கடந்த 3 தொடர்களிலும் ஆஸ்திரேலியாவைவிட இந்தியா சிறப்பாக விளையாடி உள்ளது. எந்த இடத்தில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயமாக இருக்காது. இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 56.2 ஓவர்களில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் 5 விக்கெட்டும், ஜாக்லீச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    லண்டன்:

    இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 56.2 ஓவர்களில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் 5 விக்கெட்டும், ஜாக்லீச் 3 விக்கெட்டும், மேத்யூ போட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்தின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு ஜாக் கிராவ்லி-பென் டக்கெட் ஜோடி 109 ரன்கள் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்தனர்.

    கிராவ்லி 56 ரன்னில் அவுட் ஆனார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 25 ஓவரில் ஒரு விக்கெட் இழப் புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 60 ரன்னுடனும், ஒலிபோப் 29 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஸ்லோவோக் கியாவின் அலெக்ஸ் மோல்கன் மோதினர்.
    • கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்ரு 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவை வீழ்த்தினார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 22-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஸ்லோவோக் கியாவின் அலெக்ஸ் மோல்கன் மோதினர்.

    இதில் ஸ்வெரேவ் 6-4, 6-2, 6-1 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் அடுத்த சுற்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாபோவுடன் மோதுகிறார்.

    அதுபோல டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜெண்டினா), மார்கோஸ் ஜிரோன் (அமெரிக்கா) நிக்கோலஸ் ஜாரி (சிலி) ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜூலியா கிராபரை வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்ரு 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் ஓசியன் டோடினை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜடேஜாவுக்கு தமிழ் பாட்டு மிகவும் பிடிக்கும் என்று அஸ்வின் ஒரு வீடியோவில் கூறியிருந்தார்.
    • சென்னையில் நடந்த போட்டி ஒன்றில் ஜடேஜா மைதானத்தில் இருந்த போது DJ அந்த பாட்டை போட்டு அவரை மகிழ்வித்தார்.

    2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி (மாலை 3மணி) தொடங்குகிறது. இதனையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா. அவர் லண்டனில் டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஒரு தமிழ் பாட்டு மிகவும் பிடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸ்வின் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார். ஜடேஜாவுக்கு வானத்தைப் போல படத்தில் இடம் பெற்ற 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என்ற பாடல் மிகவும் பிடிக்கும் என்று 'நானும் அவரும் ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணும் போது அவர் அந்த பாட்டை தான் போட்டு கேட்பார்' என்றும் தெரிவித்து இருந்தார்.


    இதனையடுத்து சென்னையில் நடந்த போட்டி ஒன்றில் ஜடேஜா மைதானத்தில் இருந்த போது DJ அந்த பாட்டை போட்டு அவரை மகிழ்வித்தார்.

    இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சென்னை ரசிகர்கள் அதனை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.


    https://www.instagram.com/ravindra.jadeja/

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் சக நாட்டு வீராங்கனை லிண்டா நோஸ்காவுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் லியூவுடன் மோதினார். இதில் 6-4, 6-0 என்ற செட்

    கணக்கில் வென்று ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அணி ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
    • 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா 4வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    சலாலா:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடைபெற்றது.

    இன்று நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது.

    போட்டியின் ஆரம்பம் முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் அங்கட் பீர் சிங் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் அரிஜித் சிங் ஹுண்டால் ஒரு கோலும் அடித்தனர்.

    பாகிஸ்தான் தரப்பில் ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் அப்துல் பஷாரத் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    ஏற்கனவே 2004, 2008 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் எம்.எஸ்.டோனி அனுமதிக்கப்பட்டார்.
    • நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் இடது முழங்காலில் வலியுடனேயே டோனி விளையாடி வந்தார்.

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசனில் முதல் முறையாக 3 நாட்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

    இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

    சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது. அந்த காயத்துடன் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இறுதிப்போட்டி வரை அவர் வலியுடனே விளையாடினார்.

    இதையடுத்து, முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக டோனி இன்று மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், எம்.எஸ்.டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print