என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
- குளிர்காலம் தொடர்பான சரும பிரச்சினைகள் கவலைக்கு காரணமாக இருக்கும்.
- சருமத்தில் க்ரீம் பூசுவதால் ஈரப்பதமான சருமமாக மாறாது.
குளிர்காலம் நெருங்க நெருங்க, சரும பராமரிப்பு குறித்த கவலைகள் பெண்களை ஆட்கொள்ளும். வறண்ட சருமம், மெல்லிய தோல், உதடு வெடிப்பு உள்பட குளிர்காலம் தொடர்பான பல்வேறு சரும பிரச்சினைகள் அந்த கவலைக்கு காரணமாக இருக்கும். இதற்கிடையே குளிர்கால சரும பராமரிப்பு பற்றி பல கட்டுக்கதைகளும் உலவுகின்றன. அத்தகைய கட்டுக்கதைகள் குறித்தும், உண்மை நிலவரம் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
சருமத்தில் அதிக கிரீம் தடவினால் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்
உண்மை: உதடோ, சருமமோ எந்த அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தாலும் குறைவாகவே பூச வேண்டும். அதிகம் பூசுவதால் ஈரப்பதமான சருமமாக மாறாது. மாறாக தோல் சுவாசிக்க முடியாமல், இறுதியில் சருமம் சேதமடையக்கூடும். குறிப்பாக குளிர்காலத்தில் சருமங்களை பராமரிப்பதற்கு இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அடர் தன்மை கொண்ட கிரீம்களை பயன்படுத்துவதை விட லோஷன்களை பயன்படுத்துவது ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.

குளிர்காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க எண்ணெய் உதவும், மாய்ஸ்சுரைசர் தேவையில்லை
உண்மை: வறண்ட மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமங்களுக்கு இடையே ஒருசில மாறுபாடுகள்தான் இருக்கிறது. வறண்ட சருமத்தை ஒப்பிடும்போது எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்கவைக்க மென்மையான தன்மை கொண்ட லோஷன் தேவைப்படும். ஒவ்வொரு சரும வகையும் வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படும். குளிர்ந்த காற்று சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும். இதற்கு எண்ணெய் சருமமும் விதிவிலக்கல்ல.
அதனால் குளிர்காலத்தில் எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க எதுவும் பயன்படுத்த வேண்டியதில்லை என்பது தவறானது. சருமத்தின் தன்மைக்கு ஏற்ப சம நிலையை பராமரிக்கும் தன்மை கொண்ட மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவது நல்லது. அவை ஈரப்பதத்தை பராமரிப்பதற்கும், புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் உதவும்.

குளிர்காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்கலாம்
உண்மை: பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சீரான உணவை உண்பது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. குளிர்காலத்திலும், இந்த உணவுகள் சருமத்தை பாதுகாக்கக்கூடிய அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளை வழங்குகின்றன. எனவே அவற்றை தவிர்க்கக்கூடாது.
குளிர்காலத்தில் லிப் பாம்களை அதிகமாகப் பயன்படுத்துவது உதடு வெடிப்பு பிரச்சினையை சரி செய்யும். உண்மை: உதட்டுக்கு லிப் பாம்களை அதிகமாக போடுவது பிரச்சினைக்குத்தான் வித்திடும். உதடுகள் வறண்டு போயிருந்தால் அதன் மீது படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றாமல் லிம் பாம் உபயோகிப்பது பயனற்றது. எப்போதும் லிப் பாமை ஒரு அடுக்கு மட்டுமே போடுவது போதுமானது. முதலில் இறந்த செல்களை நீக்க உதவும் 'லிப் ஸ்கிரப்'களை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு லிப் பாமை தடவ வேண்டும்.
பெரும்பாலான லிப் பாம்களில் சருமத்திற்கு தீங்கையும், நீரிழப்பையும் ஏற்படுத்தும் வண்ணங்கள் அல்லது வாசனை திரவியங்கள் கலந்திருக்கக்கூடும். குளிர்கால உதடு பராமரிப்புக்கு, இயற்கை எண்ணெய் கொண்டு தயார் செய்யப்பட்ட நெய் பயன்படுத்துவது நல்லது. தரமான லிப் பாமும் பயன்படுத்தலாம்.
குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதற்கு சிறந்த வழி
உண்மை: குளிர் சமயத்தில் சுடு நீர் குளியல் உடலுக்கு ஆறுதல் அளிக்கும். ஆனால் சருமத்தில் படர்ந்துள்ள இயற்கை எண்ணெய் பசைகளை அகற்றி சருமத்தை உலர்வடைய செய்துவிடும். சருமத்திற்கு எரிச்சல் உணர்வையும் உண்டுபண்ணும். அதிக சூட்டை உணரவைக்காத வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அதிகப்படியான ஈரப்பத இழப்பை தடுக்கும். இருப்பினும் சுடு நீர் குளியல் போடுவதாக இருந்தால் அதிக நேரம் குளிக்கக்கூடாது.
குளிர்காலத்தில் இறந்த செல்களை அகற்றும் செயல்முறையை தவிர்க்க வேண்டும்
உண்மை: கோடைகாலம் சரும பராமரிப்புக்கு சிறந்த நடவடிக்கையாக கருதப்படுகிறது. குளிர்காலத்திற்கும் முக்கியமானது. இருப்பினும் அடிக்கடி எக்ஸ்போலியேட் செய்வது சருமத்திற்கு வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை அகற்றாமல் இறந்த சரும செல்களை அகற்றும் தன்மை கொண்ட மென்மையான எக்ஸ்போலியண்ட்களை தேர்வு செய்யவும்.
குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் அவசியம் இல்லை
உண்மை: சன்ஸ்கிரீன் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து சருமத்தை பாதுகாக்கும். இந்த கதிர்கள் சருமத்தின் தோலை நேரடியாக பாதிக்கும். குளிர்காலத்தில் கருமேகங்கள் உலவும் என்றாலும் புற ஊதாக்கதிர்கள் வெளிப்படாமல் இருக்காது. அது மேகங்கள் வழியாக ஊடுருவி சருமத்தை பாதிக்கவே செய்யும். எனவே குளிர்கால சரும பராமரிப்பு வழக்கத்திலும் சன்ஸ்கிரீன் இடம் பெறுவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
அடர் தன்மை கொண்ட மாய்ஸ்சுரைசர்கள் எப்போதும் சிறந்தவை
உண்மை: குளிர்காலத்தில் ஈரப்பதத்தை பராமரிப்பதற்கு உதவும் மாய்ஸ்சுரைசர் அடர் தன்மை கொண்டிருந்தால் சிறந்தது என்பது சரியானது அல்ல. அத்தகைய மாய்ஸ்சுரைசர்கள் சில சமயங்களில் சரும துளைகளை அடைத்துவிடும். வேறு சில சரும பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, உங்கள் சரும வகைக்கு ஏற்ற ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுப்பது சரியானது. ஹைலூரோனிக் அமிலம், கிளிசரின் அல்லது செராமைடுகள் போன்ற சேர்மங்கள் கொண்ட மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாம்.
- வீட்டிலேயே கிரீம் பயன்படுத்தி அழகுபடுத்தி கொள்வார்கள்.
- தேன் முகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் ஆசைப்படுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக முகம் பளபளப்பாக இருப்பதற்காக ட்ரை செய்கின்றனர். இதற்காக பார்லருக்கு சென்று முகத்தை அழகுபடுத்திக் கொள்கின்றனர். சிலநபர்கள் வீட்டிலேயே கிரீம் பயன்படுத்தி அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் நீங்கள் இப்படி காசு கொடுத்து செலவு செய்து முகத்தை அழகுபடுத்தினாலும் சிறிது நேரத்திற்கு மட்டுமே முகத்தை அழகாக வைத்துக்கொள்ள முடியும். எனவே இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம் வாங்க...
கற்றாழை-எலுமிச்சை
கற்றாழை மற்றும் எலுமிச்சையில் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி முகத்தை பளபளப்பாக மாற்றுகிறது. ஒரு பவுலில் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டுமுறை பயன்படுத்த வேண்டும்.

கற்றாழை-தேன்
கற்றாழை மற்றும் தேன் கலந்து முகத்தில் தேய்க்கும் போது அது முகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் தேன் கலந்து இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின்னர் முகத்தை கழுவிவிடவும்.

கற்றாழை-சர்க்கரை
சர்க்கரை எக்ஸ்போலியேட்டாக பயன்படுகிறது. ஒரு பவுலில் கற்றாலை ஜெல் ஒரு ஸ்பூன், சர்க்கரை சிறிதளவு சேர்த்து கலக்கி இந்த பேக்கை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் வைத்திருந்து பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை தினமும் செய்து வாருங்கள் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகத்தை பளபளப்பாக இருப்பதை நீங்களே பார்க்கலாம்.
- வெங்காய சாறை எடுத்து தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது.
- மன அழுத்தத்தை குறைப்பது முடி உதிர்தலைக் குறைக்க உதவும்.
முடி உதிர்வு பிரச்சினை என்பது இப்போது எல்லோரையும் கவலை அடையச்செய்யும் விஷயமாகும். ஒவ்வொரு தடவையும் தலை சீவும் போது நிறைய முடிகள் கொட்டினால் என்ன செய்வது? முடி உதிர்தலுக்கு உடனடி தீர்வு இல்லை என்றாலும், அன்றாட வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் அதிக முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். முடி உதிர்தலுக்கான பிற காரணங்கள் மருத்துவ நிலைமைகள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மரபியல் கூட இருக்கலாம். இருப்பினும், சுத்தமான உணவு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது முடி உதிர்தலைக் குறைக்க உதவும்.
முடி உதிர்தலைக் குறைக்க ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உட்கொள்வது மிக முக்கியம். உங்கள் புரதத்தை அதிகரிப்பதை உறுதிசெய்து, உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இறைச்சி, மீன், கொட்டைகள், பெர்ரி மற்றும் பச்சை இலை காய்கறிகள் போன்ற உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். தடுக்கும் வழிகள்:
* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்.
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* தலைமுடி நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது, அடர்த்தியாகும். தலைமுடி நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது; அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டையின் வெள்ளைக் கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதேபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும். அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
- உடலில் தேவையற்ற முடியின் வளர்ச்சியை நீக்க பயன்படுத்தப்படுகிறது.
- முடி அகற்றுவதற்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு பரிசு.
பொன்னதரம் என்பது மஞ்சள் நிற கல் ஆகும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் உடலில் தேவையற்ற முடியின் வளர்ச்சியை நீக்க பயன்படுத்தப்படுகிறது. முடி அகற்றும் பயன்பாட்டிற்காக இந்த கல் நசுக்கப்பட்டு தூள் செய்யப்படுகிறது, இது முடி அகற்றுவதற்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு பரிசு.

உதட்டுக்கு மேல், முகம் மற்றும் கை, கால்களில் உள்ள தேவையில்லாத, வேண்டாத முடிகளை நிரத்தரமாக நீக்குவதற்கு இந்த பொன்னதரத்தை எடுத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் பால் அல்லது ரோஸ்வாட்டர் சேர்த்து குழைத்து எடுத்து அதனை எங்கெல்லாம் தேவையில்லாத, வேண்டாத முடிகளை நீக்க வேண்டுமோ அந்த இடங்களில் தினமும் இரவு மற்றும் வாரத்திற்கு 2 முறை நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்துவரும்போது நிரந்தர தீர்வு கிடைக்கும்.

பொன்னதரத்தின் பயன்கள்
* ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில், முகத்திலுள்ள முடியை அகற்றுவதற்கான சிறந்த தீர்வாக பொன்னதரம் கருதப்படுகிறது.
* உயர் தரம் கொண்ட பொன்னதரம் தூள் உடல் மற்றும் முகம் இரண்டிலும் தேவையற்ற முடியை அகற்றுவதற்கான சிறந்த தயாரிப்பு ஆகும். இது போன்ற ஒரு சிறந்த மற்றும் இயற்கையான முடி அகற்றுதல் தயாரிப்பை நீங்கள் பயன்படுத்துவதால் ஒரு வாரத்தில் அதன் பலனைப் பெறுவீர்கள்.
* பெரும்பாலான அழகுசாதனப் பொருட்களில் ரசாயனங்கள் உள்ளன, அவை பயன்படுத்திய பிறகு வலி அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். ஆனால், பொன்னதரம் ஒரு இயற்கை தயாரிப்பு, இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. பயன்பாட்டிற்குப் பிறகு மென்மையான மற்றும் மிருதுவான தோலை நீங்கள் உணருவீர்கள்.
* முடி நீக்கும் இயற்கை தயாரிப்பு தோல் எரிச்சலில் இருந்து உங்களை விடுதலை அளிக்கிறது.
* இது எந்த வலியையும் ஏற்படுத்தாமல் அதன் வேரிலிருந்து முடியை நீக்குகிறது.
* கரடுமுரடான முடியை கூட எந்த இடையூறும் இல்லாமல் அகற்ற பொன்னதரம் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்பாட்டில் உள்ளது.
* தேவையற்ற முடியை அகற்ற பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தும் ரேஸர் சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஆனால் உண்மை என்னவென்றால், இயற்கையின் பண்புகளைக் கொண்ட இந்த பொன்னதரம் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
* பொன்னதரம் என்று அழைக்கப்படும் அழகான முடி அகற்றும் தூள் இயற்கையாகவே தேவையற்ற முடியை பாதுகாப்பாகவும், எளிதாகவும், மென்மையாகவும் நீக்குகிறது. இந்த நிலையான தயாரிப்பு உடலில் தேவையற்ற முடியை அகற்ற இயற்கையான மற்றும் நிரந்தர தீர்வாக இருக்கும்.
* எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் வீட்டிலேயே தேவையற்ற உடல் முடியை அகற்றவும், குறைந்த விலையில் தரமான வெளியீட்டை வழங்கவும் இந்த தயாரிப்பு உங்களை அனுமதிக்கிறது.
- சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பெரும் தொல்லையாக இருக்கின்றது.
- இயற்கையிலேயே பல பொருட்கள் நம் அழகை பாதுகாப்பதற்கு உள்ளன.
இன்று பலருக்கும் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பெரும் தொல்லையாக இருக்கின்றது. அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து யோசித்து பல ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை உபயோகிக்கிறோம்.
ஆனால், இயற்கையிலேயே பல பொருட்கள் நம் அழகை பாதுகாப்பதற்கு உள்ளன. அவற்றில் ஒன்று செம்பருத்தி பூ. செம்பருத்தியைக்கொண்டு எவ்வாறு சருமத்தை பாதுகாக்கலாம் எனப் பார்ப்போம்...
தேவையானபொருட்கள்
மைசூர் பருப்பு- 25 கிராம்
பாதாம்- 25 கிராம்
செம்பருத்தி பூ- 10
தயிர்- ஒரு ஸ்பூன்
விட்டமின் ஈ கேப்ஸ்யூல்- 1
தேன் ஒரு ஸ்பூன்
செய்முறை:
மைசூர் தால் பருப்பு மற்றும் பாதாம் இவற்றை ஒரு மிக்சி ஜாரில் பொடித்துக்கொள்ள வேண்டும். அதனை தனியாக ஒரு டப்பாவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதே மிக்சி ஜாரில் செம்பருத்தி பூ மற்றும் தயிர், ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். அந்த பேஸ்ட்டில் ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள பாதாம், மைசூர் பருப்பு பொடி மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஃபேஸ் பேக் அளவுக்கு கலந்துகொள்ள வேண்டும்.

இந்த செம்பருத்து ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை தடவி அரைமணிநேரம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சென்று பொலிவாக இருக்கும். இதையே தொடர்ந்து பயன்படுத்தி வரும் போதும் நல்ல மாற்றத்தை நீங்களே உணரலாம்.
பொதுவாக மலர்களின் நிறம் என்பது நறுமணத்தை மட்டும் கொண்டிருக்காது. வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களையும் கொண்டுள்ளது. இந்த ஃபேஸ் பேக் உங்கள் கன்னங்களை இளஞ்சிவப்பு நிறத்தில் வைக்கும் என்பதை உணர்வீர்கள்.
- தொடை இடுக்குகளில் சருமத்தின் நிறம் கருமையாக காணப்படும்.
- உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
தொடைகளின் உள்பகுதி மற்றும் தொடை இடுக்குகளில் சருமத்தின் நிறம் கருமையாக காணப்படுவது சந்திக்கும் பிரச்சினையாகும். நடக்கும்போது இரண்டு தொடைகளும் உராய்வது ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக அதிகப்படியாக மெலனின் உற்பத்தி ஆவது என இதற்கு பல காரணங்கள் உள்ளன.
உடல் பருமன் பிரச்சினை கொண்டவர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இதை போக்குவதற்கு ஏராளமான அழகு பராமரிப்பு பொருட்கள் விற்கப்படுகின்றன. இருந்தாலும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே பாதுகாப்பானது. உங்கள் சமையல் அறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே, தொடைப்பகுதியில் இருக்கும் கருமையை நீக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...
தொடைப் பகுதியில் மட்டுமின்றி. உடலின் மற்ற இடங்களில் படிந்துள்ள கருமையையும் போக்கும் ஆற்றல் எலுமிச்சை சாறுக்கு உண்டு. இதில் உள்ள வைட்டமின் சி சத்து, கருமை நிறத்தை மறையச் செய்வதோடு. சேதமடைந்த சரும செல்களையும் சீர்படுத்தும்.
அரை முடி எலுமிச்சம் பழச்சாறு, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை சருமத்தில் கருமை இடங்களில் பூசவும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து அந்த இடத்தை மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் மிருதுவாக தேய்த்து சுத்தம் செய்யவும்.
பேக்கிங் சோடாவில் இயற்கையாகவே பாக்டீரியாவை அழிக்கும் சக்தி உள்ளது. இது சருமத்தின் கடினத் தன்மையை போக்கி மிருதுவாக்கும். சொரசொரப்பான மேற்புற தோலை நீக்கி மென்மையாக்கும். பேக்கிங் சோடாவை சம அளவு தண்ணீருடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவை மென்மையான கிரீம் பதத்துக்கு வந்ததும், அதை சருமத்தில் கருமை உள்ள இடங்களில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்யவும்.
ஆப்பிள் சிடார் வினிகருடன் பேக்கிங் சோடாவை கலந்து பயன்படுத்தினாலும் சருமத்தில் உள்ள கருமை மறையும். 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் கலந்து பசை போல தயாரிக்கவும். இதை தொடையின் உள்புரம் கருமை உள்ள பகுதியில் பூசவும். நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யவும். இது கருமை நிறத்தை போக்கி
சருமத்தின் இயற்கையான பொலிவை மீட்டுத் தரும்.
உருளைக்கிழங்கில், நுண்ணுயிர் எதிர்ப்பு திறன்கள் உள்ளன. இதில் நிறைந்துள்ள
வைட்டமின் சி, இறந்த சரும செல்களை எளிதாக நீக்கும். மேலும் உருளைக் கிழங்கில் இருக்கும் 'கேடகோலேஸ்' என்ற நொதி சருமத்தின் அடர் கருமை நிறத்தை எளிதில் நீக்கி அது மீண்டும் உருவாகாமல் தடுக்கும்.
உருளைக் கிழங்கில் இருந்து சாறு எடுத்து சருமத்தின் மீது பூசலாம். இல்லாவிடில் உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி அதை சருமத்தின் மீது நேரடியாக
தேய்க்கலாம். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமத்தில் படிந்துள்ள கருமை நீங்குவதை காணலாம்.
சொரசொரப்பாக இருக்கும் தோலை மிருதுவாக மாற்ற மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் ஆகியவை சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டவையாகும்.
- தலைமுடியை பராமரிக்கவும் நீளமாக வளர உதவி செய்யும்.
- இயற்கையாகவே சிவப்பு நிறத்தையும் கொடுக்கும் ஒரு மூலிகைப்பொருள்.
தலைமுடியை பராமரிக்கவும் நீளமாக வளர உதவி செய்யவும் இயற்கை நமக்கு கொடுத்த அற்புத பொருள்தான் இந்த வேம்பாளம்பட்டை என்று சொல்லலாம். பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த பட்டையை தலைமுடிக்கு, சருமத்துக்கு மட்டுமின்றி உணவுக்கு இயற்கையாகவே சிவப்பு நிறத்தையும் கொடுக்கும் ஒரு மூலிகைப்பொருள். இதை வைத்து எண்ணெய் தயாரித்து தலையில் தேய்த்து வர முடி உதிர்தல் நின்று நீளமாக வளரும். இளநரை வராமல் தவிர்க்க முடியும்.
எல்லோருக்குமே முடி காடு மாதிரி நல்ல அடர்த்தியாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்கிறது, ஆனால் இன்று நாம் சாப்பிடும் உணவு முறை பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தினால் தலைமுடி உதிர்வது என்பது சகஜமாக போய்விட்டது.
தலைமுடி தானே போனால் போகட்டும் என்று அலட்சியமாக விட்டவர்கள் பலரும், நாளடைவில் முன்கூட்டியே யோசித்து இருக்கலாமோ? முன்கூட்டியே கவனித்து இருக்கலாமோ? என்று புலம்புவதையும் காண முடிகிறது. எனவே தலை முடி அதிகமாக உதிர ஆரம்பித்தால் ஆரம்பத்திலேயே இந்த விஷயத்தை நீங்கள் கடைப்பிடித்து வருவதனால் உடனடியாக கட்டுப்படுத்தி விட முடியும்.
அப்படியே முடி இழந்த பின்பும் கவலை இல்லாமல் இந்த எண்ணெய்யை தடவி பாருங்கள், நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும். மீண்டும் உதிர்ந்த இடத்தில் முடியை வளர வைக்கக்கூடிய சக்தி இந்த வேம்பாளம்பட்டைக்கு உண்டு.
இது நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும். தலைமுடி உதிர்வு, தலைமுடி அடர்த்தி குறைதல், நீண்ட வளர்ச்சி இன்மை, நரைமுடி, இளநரை ஆகிய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து கட்டக்கூடிய அற்புதமான எண்ணெய்யை எப்படி தயாரிப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்
தேவையான பொருட்கள்:
வெட்டிவேர்- 50 கிராம்
வெந்தயம்- ஒரு ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 500 லிட்டர்
வேம்பாலைப்பட்டை-5
ஆமணக்கு எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெட்டிவேர், வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். இதனை டபுள் பாய்லிங் முறையில் சூடுபடுத்த வேண்டும். அதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதில் வெட்டிவேர், வெந்தயம் போட்ட பாத்திரத்தை உள்ளே வைத்து சூடுபடுத்த வேண்டும்.
நன்றாக தேங்காய் எண்ணெய் சூடான பிறகு இறக்கி அதில் வேம்பாலை பட்டை மற்றும் 2 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து அதில் ஒரு வேம்பாலைப்பட்டை போட்டு அப்படியே ஒருநாள் முழுவதும் வைக்க வேண்டும். அதன்பிறகு தலைக்கு தேய்க்கலாம்.
வேம்பாளம்பட்டை தலைமுடியின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து முடி உடைதலைத் தடுக்கிறது. அதோடு உடல் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதால் முடியை வலிமையாக்கி தலைமுடியின் பல்வேறு அடுக்குகளுக்குள் எண்ணெய் சென்று தலைமுடிக்குத் தேவையான ஊட்டத்தையும் வலிமையையும் கொடுக்கும்.
- மஞ்சள் நிற பூக்களை உடைய ஒருவகையான கொடி தாவரமாகும்.
- தரையில் படர்ந்து வளரக்கூடியது.
முதியார் கூந்தல் என்பது வெள்ளை நிறம் கலந்த மஞ்சள் நிற பூக்களை உடைய ஒருவகையான கொடி தாவரமாகும். தரையில் படரக்கூடியது, இது செம்மண் நிலங்களிலும் மற்றும் புதர்களிலும் தானாக வளரக்கூடிய ஒரு கலைச் செடியாகும். இதை சவுரிக்கொடி என்றும், அவ்வையார் கூந்தல் என்றும், பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதனுடைய கொடி மிகவும் நீளம் நீளமாக படர்ந்து வளரக்கூடியது. அதனால் இதை பெண்களின் கூந்தலுடன் ஒப்பிடலாம். எனவே இது முதியார் கூந்தல் என்று அழைக்கப்படுகிறது.
கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பயன்படும் மிகமுக்கிய பயனாக பார்க்கப்படுகிறது.
முதியார் கூந்தல் எண்ணெய் தயாரிக்கும் முறை:
முதியார் கூந்தல் தைலம் தயாரிப்பதற்கு ஒரு முழு முதியார் கூந்தல் கொடியை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதன் பூ, காய், வேர், இலை, கொடி அனைத்தையும் எடுத்து அதனுடன் நீர் சேர்த்து அரைத்து அந்த கலவையை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள கலவையின் சம அளவுக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டு நன்றாக காய்ச்ச வேண்டும். தேங்காய் எண்ணெயின் நிறம் பச்சையாக மாறும் வரை காய்ச்சி பின் ஆற வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த எண்ணெய்யை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும். தலை சீவும் போது கூந்தல் வேருடன் உதிர்வதை தடுக்கும். கூந்தல் மிக நீளமாக வளரும். பொடுகுத் தொல்லையில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அலங்காரத்திலும் கவனம்.
- முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
காலையில் எழுந்தது முதலே வீட்டு வேலைகளை வேகமாக முடிப்பதற்கு சுழலும் குடும்ப தலைவிகள் தங்கள் உடல் நலனிலும் அக்கறை காட்டுவது அவசியம். அப்போதுதான் சோர்வின்றி எந்த வேலையையும் மேற்கொள்ள முடியும். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் செல்லும் பெண்களாக இருந்தால் உடல் நலனுடன் மற்றொரு கவலையும் எட்டிப்பார்க்கும். தங்களால் நேர்த்தியாக அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அலங்காரத்திலும் கவனம் செலுத்துவதற்கு செய்ய வேண்டிய திட்டமிடல்கள் குறித்து பார்ப்போம்.
இரவிலே தயாராகுங்கள்:
காலையில் எழுந்ததுமே சமையல் வேலை, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்புவது, கணவருக்கும், குழந்தைகளுக்குமான மதிய உணவு தயார் செய்வது என கவனம் முழுவதும் வேலையின் மீதுதான் பதிந்திருக்கும். அதுவே மன நெருக்கடிக்கும் உள்ளாக்கும்.
அதிலும் வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவியாக இருந்தால் அவசர கதியில் புறப்பட வேண்டியிருக்கும். அதனால் கவன சிதறல்கள் ஏற்படும். ஒருசில வேலைகளை செய்து முடிக்க முடியாமல் போகலாம். அவசரத்தில் தவறு நடக்கலாம்.
அதனால் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். முந்தைய தினம் இரவே `நாளை என்ன சமையல் செய்ய வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், அதற்கு ஏற்ற அலங்கார பொருட்கள் என்னென்ன? என்பதை தேர்வு செய்து வைத்துவிட வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 15 நிமிடங்கள்தான் செலவாகும். மறுநாள் காலையில் வேலைகளை சுலபமாக முடித்துவிட்டு நீங்களும் பணிக்கு செல்ல தயாராகிவிடலாம். காலை நேர பரபரப்பையும், தேவையில்லாத டென்ஷனையும் தவிர்த்துவிடலாம். சருமமும் சோர்வுக்கு ஆளாகாது. அலங்காரத்திற்கும் போதுமான நேரம் செலவிட்டு விடலாம்.
ஜடை பின்னல்:
இரவில் தூங்க செல்லும்போது இறுக்கமாக ஜடை பின்னுவதை தவிர்க்க வேண்டும். கூந்தல் முடி தளர்வாக இருக்கும்படி பின்னுவதுதான் சரியானது. காலையில் எழுந்திருக்கும்போது சிக்குமுடி பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும். சிரமமின்றி எளிமையாக கூந்தல் அலங்காரம் செய்து கொள்வதற்கும் வழிவகை செய்யும். சிகை அலங்காரம் செய்வதற்கு போதுமான நேரம் இல்லாவிட்டால் சிறிதளவு லோஷனை கூந்தலில் தடவலாம். அப்படி செய்தால் அலங்காரத்திற்கு அதிகம் சிரமப்பட வேண்டியிருக்காது.
ஐ லைனர்:
தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்பவர்களின் கண்களைச் சுற்றி கருவளையங்கள் காணப்படும். ஐ லைனர் உபயோகித்து இதை அழித்து விடலாம். வீட்டில் அலங்காரம் செய்வதற்கு நேரம் இல்லையெனில் கைப்பையில் அலங்கார பொருட்களை வைத்துக்கொள்ளலாம். அலுவலகம் செல்லும் வழியிலோ, அலுவலகம் சென்ற பிறகோ எளிமையான ஒப்பனையை செய்துவிடலாம். அதற்கான சூழல் இல்லாதபட்சத்தில் பளிச்சிடும் நிறம் கொண்ட லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். அது அலங்காரம் இல்லாமலே உங்களை அழகாக காண்பிக்கும்.
இரவு நேர குளியல்:
இரவில் சாப்பிட்டுவிட்டு சமையல் அறை வேலைகளை எல்லாம் முடித்த பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இந்த குளியல் தூக்கம் கண்களை தவழ வைக்கும். மறுநாள் உற்சாகத்துடன் இயங்க உதவி புரியும்.
- இளம் பருவத்திலேயே வயதான தோற்றத்திற்கு ஆளாகிறார்கள்.
- மது உடல் உறுப்புகளை பலவீனப்படுத்திவிடும்.
வாழ்வின் இறுதிக்கட்டமான முதுமை பருவத்தை எதிர்கொள்வதை யாராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. ஆனால் சில தவறான வாழ்க்கை பழக்கங்களால் பலரும் விரைவாகவே முதுமைக்கு தள்ளப்படுகிறார்கள். இளம் பருவத்திலேயே வயதான தோற்றத்திற்கு ஆளாகிறார்கள். அதற்கு வித்திடும் பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
உணவை தவிர்ப்பது
பிசியான வேலை, வாழ்க்கை முறை, இரவு நேர வேலை, காலையில் தாமதமாக எழுவது போன்ற காரணங்களால் சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ, உணவை தவிர்த்தாலோ உடலில் மாற்றம் உண்டாகிவிடும். உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காமல் பலவீனமாகிவிடும். வயது அதிகரிப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகிவிடும்.
தேநீர் பழக்கம்
தேநீர் மற்றும் காபியில் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் அவற்றை குறிப்பிட்ட அளவிற்கு உட்கொண்டால் மட்டுமே நன்மைகளை பெற முடியும். அதிகமாக டீ மற்றும் காபி உட்கொள்வது விரைவாகவே முதுமையாக்கி விடும். பருவகால உணவுகள் பருவகால உணவுகளை கட்டாயம் உட்கொள்ள வேண்டும். அவை இயற்கை முறையில் பயிரிடப்படுவதாக இருந்தால் அதிகம் சாப்பிட வேண்டும். அவற்றுள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பிட்ட பருவத்தில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளும்போது உடல் நலம் மேம்படும். விரைவாகவே வயதாகும் அறிகுறி எட்டிப்பார்க்காது.
மதுப்பழக்கம்
மது உடல் உறுப்புகளை பலவீனப்படுத்திவிடும். தொடர்ந்து மது அருந்தினால் உங்களுக்கு வேகமாகவே வயதாகிவிடும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். வயது அதிகமான நபர் போல் தோற்றமளிக்க செய்து முதுமையை எட்டவைப்பதுடன் ஆயுளையும் குறைத்துவிடும்.
உடல் செயல்பாடு இல்லாமை
நீரிழிவு நோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு உடற்பயிற்சியின்மையே காரணம். நடைப்பயிற்சியை கூட தவிர்ப்பது உடலை பலவீனப்படுத்திவிடும். பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு கூட இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துவது நல்லதல்ல. அதனை நடைப்பயிற்சிக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். வயது அதிகரிக்கும்போது உடல் செயல்பாடும் அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் வயது இன்னும் அதிகரித்துவிட்டது போன்ற தோற்றம் உண்டாகிவிடும்.
மனஅழுத்தம்
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் கூட மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். சின்ன விஷயத்திற்கு கூட மணிக்கணக்கில் அது பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி மனதை பாழ்படுத்துகிறார்கள். மன அழுத்த பாதிப்பில் இருந்து சட்டென்று மீளாவிட்டால் மனதை மட்டுமல்ல உடலையும் சேதப்படுத்திவிடும். வயதாவதை துரிதப்படுத்திவிடும்.
உணவு கட்டுப்பாடு
மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே டயட் போன்ற உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றுவது நலம். அதனை முறையாக பின்பற்றாவிட்டால் உடலில் அதிக அழுத்தம் ஏற்பட்டு தேய்மானம் ஏற்படும். வயது அதிகரித்துவிட்ட உணர்வையும் உண்டாக்கிவிடும்.
புகைப் பிடித்தல்
மது அருந்துவது போல், புகை பிடிப்பதும் ஆரோக்கியத்தை மோசமாக்கும். முதுமையை வேகப்படுத்தும்.
உணவுப் பழக்கம்
உண்ணும் உணவு சத்தானதாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையை உடல் எதிர்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும். வளர்சிதை மாற்ற செயல்பாடு குறைந்துபோய்விடும். உடல் எடை அதிகரிக்க தொடங்கி, பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். வயதும் அதிகரித்தது போல் உடல் தோற்றம் மாறிவிடும்.