என் மலர்

    இயற்கை அழகு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்பிளில் உள்ள நீர்ச்சத்து சருமத்தின் வறட்சியைத் தடுத்து, ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள உதவும்.
    • ஆப்பிளில் உள்ள சாலிசிலிக் அமிலம் பிம்பிளைக் குறைக்க உதவியாக இருக்கும்.

    ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை தக்க வைக்க உதவும். ஆப்பிளில் உள்ள காப்பர், சருமத்தைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் ஏ, சருமத்தை புற்றுநோய் செல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

    சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, சரும செல்களின் ஆரோக்கியத்தையும், சருமத்தின் மென்மைத்தன்மையையும் அதிகரிக்க ஆப்பிளை எப்படி பயன்படுத்துவது என்று காண்போம்.

    ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான அழுத்தத்தைக் குறைத்து, சோர்வை நீங்கி, புத்துயிர் அளிக்கவும் செய்யும். உங்கள் முகத்தின் பொலிவை உடனடியாக அதிகரிக்க நினைத்தால், இந்த மாஸ்க்கைப் போடுங்கள்.

    * ஆப்பிள் - 1

    * தண்ணீர் - 1 கப்

    முதலில் ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி முதல் முறை செய்யும் போதே, முகத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

    ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இயற்கையாகவே சருமத்திற்கு பிரகாசத்தை வழங்க உதவும். இதில் உள்ள டானிக் அமிலம், மென்மையான சருமத்தைப் பெற உதவும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

    1 ஆப்பிள் தோல்

    1 டீஸ்பூன் தேன்

    ஆப்பிளின் தோலை நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்ததும், முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல் கட்டுவதிலும் கம்ப்யூட்டரின் உதவியுடன் செய்யக்கூடிய நவீன முறைகள் உள்ளன.
    • ஈறு நோய் உள்ளவர்கள் அனைத்து வயதிலும் இருப்பார்கள்.

    மதுரையை சேர்ந்த நளா பல் மருத்துவமனை டாக்டர் ஜெ.கண்ணபெருமான் கூறியதாவது:-

    உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ளத்தில் தன்னம்பிக்கைக்கும் பற்களின் ஆரோக்கியம் மிக அவசியம். வாய் தான் உடலின் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. சர்க்கரை நோய், ரத்தசோகை, வயிறு மற்றும் குடல் பிரச்சினைகள் போன்ற பல உடல் உபாதைகளை வாயின் ஆரோக்கியத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதே போல் உடலுக்கு பற்களின் தேவை பல பரிமாணங்களில் இருக்கும். உணவை நன்றாக சாப்பிடுவதற்கு, தடையின்றி பேசுவதற்கு, அழகாக சிரிப்பதற்கு என பற்களின் பயன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

    இம்பிளான்ட் நிரந்தர பற்கள்

    இம்பிளான்ட் என்பது டைட்டானியம் என்னும் உலோகத்தால் ஆனது. இது பற்களின் வேர் பகுதிக்கு பதிலாக செயலாற்றக்கூடியது. . இம்பிளான்ட் பொருத்துவதால் மற்ற பற்களுக்கோ உடலுக்கோ எந்த விதமான பக்கவிளைவுகளும் வராது. இம்பிளான்ட் பொருத்தி அதன் மேல் நிரந்தர பற்கள் கட்டுவதன் மூலம் இயற்கை பற்கள் போன்ற பலமான பற்களை பெறலாம்.

    யார் செய்து கொள்ளலாம்?

    இம்பிளான்ட் நிரந்தர பல் கட்டும் சிகிச்சை வயதானவர்களுக்கு தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் பல் கட்ட வேண்டிய தேவை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

    இளம் வயதினருக்கு முக அழகிற்கும் சிரிப்பிற்கும் தேவைப்படும். அலுவலகம் செல்பவர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு சரியாக பேசுவதற்கு தேவைப்படும். வயதானவர்களுக்கு நன்றாக சாப்பிட தேவைப்படும். இதில் எது குறைந்தாலும் வாழ்க்கை முறையில் பல அசவுகரியங்களை சந்திக்க நேரிடும்.

    சொத்தை பற்கள், ஆடும் பற்கள், விளையாடும் பொழுதோ அல்லது கீழே விழுந்தோ உடையும் பற்கள் என பல விதமான சூழ்நிலையில் பல் கட்டும் சிகிச்சை தேவைப்படும். ஈறு நோய் உள்ளவர்கள் அனைத்து வயதிலும் இருப்பார்கள். ஈறு நோயால் வலி வராது. ஆனால் மெதுவாக பரவி பற்களை ஆட செய்து விடும். இது ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வரும். மரபு வழியாகவோ அல்லது வாழ்க்கை முறை மற்றும் சரியான கவனிப்பு இல்லாததால் பலருக்கும் ஈறு நோய் மற்றும் பற்களில் பாதிப்பு வருகிறது. எனவே எந்த வயதிலும் பற்களின் தேவை உள்ளவர்கள் இம்பிளான்ட் பற்கள் பொருத்தும் சிகிச்சையை செய்து கொள்ளலாம்.

    பல் பிரச்சினை காரணமாக பல் செட் போட்டுகொண்டு சாப்பிட அவதிப்படுவார்கள், பொது இடங்களில் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் சங்கடப்படுவார்கள். ஒரு சில பற்கள் முதல் பற்களே இல்லாதவர்கள் என எல்லா தரப்பினரும் எந்த தயக்கமுமின்றி இம்பிளான்ட் நிரந்தர பற்கள் பொருத்தும் சிகிச்சை செய்து கொள்ளலாம்.

    இம்பிளான்ட் சிகிச்சையின் நவீன புரட்சி

    இன்றைய நவீன சிகிச்சை முறையில் ஐரோப்பிய இம்பிளான்ட்கள் மிகவும் முக்கியமானதாகும். எலும்பு தேய்ந்து போனதால் நிரந்தர பல் கட்ட முடியாமல் பல் செட் போடுபவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இம்பிளான்ட்கள் உள்ளன. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, இருதய நோய், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு சிகிச்சை முறையில் சில மாற்றங்களை செய்தால் எந்த தடையுமின்றி இவர்கள் அனைவரும் இம்பிளான்ட் சிகிச்சையின் மூலம் நிரந்தர பற்கள் பெறலாம்.

    பல் கட்டுவதிலும் கம்ப்யூட்டரின் உதவியுடன் செய்யக்கூடிய நவீன முறைகள் உள்ளன. பற்களின் அளவை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் நிரந்தர பற்களை நம் வாய்க்கேற்ப துல்லியமாக வடிவமைத்து கொடுத்துவிடும். அதேபோல் கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்படும் நிரந்தர பற்கள் செராமிக் மற்றும் ஜிர்க்கோனியா போன்ற அதி நவீன பொருட்களால் செய்யப்படுகின்றன. இவை மிக லேசானதாகவும் அதே சமயம் அதிக பலம் உள்ளதாகவும் இருக்கும். எனவே பல் கட்டிய உணர்வே இல்லாமல் இயற்கை பற்கள் போலவே இருக்கும்.

    இம்பிளான்ட் நிரந்தர பற்கள் பொருத்தியவர்கள் விரும்பியதை சாப்பிட முடியும். மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியும். இதனால் உடலின் ஆரோக்கியம் வெகுவாக முன்னேறும். அதே போல் பேசுவது, சிரிப்பது அனைத்திலும் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ஒன்றிணைந்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை கூந்தல் உதிர்வு.
    • கூந்தல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.

    தினமும் குளிப்பது பல் துலக்குவது போல தினமும் இரண்டு தலை சீவ செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் முடி ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

    காலை ஒரு முறை இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு முறை என தினமும் இரண்டு முறை தலை முடியை சீவினால் தலைமுடி பாதுகாப்பாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்

    தினமும் இரண்டு முறை தலை சீவினால் இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள ஆகியவை சுத்தமாகும்.

    மேலும் தலைமுடியை சீவினால் அது முடியின் அளவை அதிகரிக்கப்பதோடு, தலைமுடி ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

    என்னதான் அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக்கூடாது.டவலால் நன்கு துடைத்து ஈரம் போய் தலைமுடி காய்ந்த பின்பு நல்ல தரமான சீப்புகளால் தலைசீவ வேண்டும்

    மாதம் ஒரு முறை கூந்தலின் அடிப்பகுதியை ட்ரிம் செய்து கொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்

    இரவு படுக்கும்முன் கூந்தலை மென்மையாக வாரிவிட்டு படுக்க வேண்டும்.இது தலைமுடி நன்கு வளர உதவும்

    கூந்தலை ப்ளீச் செய்வது கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பட்ஜெட்டிற்கு ஏற்ப கிளோசட்டின் வடிவமைப்பை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
    • அவரவரின் தேவைக்கு ஏற்ப பொருட்களின் எண்ணிக்கையும் வகைகளும் மாறுபடும்.

    இன்றைய உலகில் ஒரு வீட்டில் இருக்கும் எல்லோருமே, அதாவது கணவன் மனைவி குழந்தைகள் என்று அனைவருமே, வெளியில் செல்பவராகவே இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வோராக இருந்தால் அவர்களின், வீட்டில் அணியும் உடைகள் வெளியில் அணியும் உடைகள் மற்றும் குழந்தைகளின் வீட்டில் அணியும் உடைகள் பள்ளிக்கு அணிந்து செல்லும் சீருடைகள் என்று வகை வகையாக துணிகளை வைக்க வேண்டிய சூழல். அடுத்து திருமண விழாக்கள், வரவேற்புகள், கெட்-டு-கெதர் பார்ட்டி என்று விழாக்களுக்கு அணிந்து செல்ல வேண்டிய ஆடம்பர ஆடைகள் ஒரு பக்கம்.

    இந்த ஆடைகளுக்கு ஏற்ற அணிகலன்களும் காலணிகளும் தலை அலங்காரங்களும் என்று அவற்றிற்கும் ஓர் பட்டியல் உண்டு. இப்படி எல்லோருக்கும் எல்லாவற்றிற்குமாக நாம் ஓர் இடத்தை தேர்வு செய்து பொருட்களை அடுக்கி வைக்க வேண்டி உள்ளது. அந்த வகையில் க்ளோசட் (Closet), வார்ட்ரோப் என்று அழைக்கப்படும் அலமாரிகள் இன்றைய காலகட்டத்தில் வீடுகளில் அத்தியாவசியமாக அமைக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது அப்படி நாம் வீட்டிற்கு அமைக்கும் இந்த வார்ட்ரோப் அல்லது க்ளோசெட்களை எப்படி அமைக்க வேண்டும் எவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை கீழ் வருமாறு பார்ப்போம்.

    இடத்தை மற்றும் அளவை தேர்வு செய்வது:

    நம் வீட்டில் அமைக்க விரும்பும் க்ளோசட்டை எங்கெங்கு அமைக்க விரும்புகிறோம் என்பதையும் அதன் அளவு எவ்வளவு என்பதையும் முதலில் திட்டமிட்டு கொள்ள வேண்டும். க்ளோசெட்டின் அளவில் எவ்வளவு பொருட்களை நாம் வைக்க முடியும் என்பதையும் முடிவு செய்து கொள்ள வேண்டும். குடும்ப நபர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் தேவையையும் மனதில் கொண்டு இந்த அளவை நாம் தேர்வு செய்து கொள்வது நல்லது.

    வாழ்க்கை முறை:

    ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் வேறு வேறானவை. சிலர் வீடு, அலுவலகம், எப்போதாவது விழாக்களுக்கு சென்று வருவது என்று இருப்பார்கள் மற்றும் சிலர் வாரத்தில் இரு நாட்களாவது கேளிக்கைகளுக்கும் விழாக்களுக்கும் வெளியில் சென்று வருவதற்கும் நேரத்தை செலவு செய்பவர்களாக இருப்பார்கள். எனவே அவரவரின் தேவைக்கு ஏற்ப பொருட்களின் எண்ணிக்கையும் வகைகளும் மாறுபடும். எனவே உங்கள் குடும்பத்தின் வாழ்க்கை முறை எப்படி என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப உங்கள் பொருட்களை அடக்கக்கூடிய அளவிற்கான க்ளோசட்டை திட்டமிடுவது நல்லது.

    களோசெட்டிற்கான செலவு :

    கிளோசெட் அமைக்க நீங்கள் ஒதுக்க விரும்பும் தொகையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப பொருட்களினால் ஆன க்ளோசட்டை அமைப்பது நல்லது. மரத்தினால் ஆன க்ளோசெட் மரத்தின் விலை மற்றும் கார்பெண்டர் கூலி என்று சற்றே விலை கூடுதலாக ஆகலாம். இதுவே பிளாஸ்டிக் பாலியூரிதேன் போன்ற செயற்கை பொருட்களால் ஆன களோசெட் எனும் போது அது ஆயத்த மாடல்களில் கிடைக்கும். இவற்றின் விலையும் குறைவாக இருப்பதோடு இதை நிர்மானிப்பதற்கான செலவும் குறைவாகவே இருக்கும். எனவே அவரவரின் பட்ஜெட்டிற்கு ஏற்ப கிளோசட்டின் வடிவமைப்பை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

    கிளோசெட் டிசைன்கள்:

    நெடுக்காக மேலே அடுக்கக் கூடியதாக கூரையின் மட்டத்திற்கு களோசெட்டை அமைத்துக் கொண்டு ஏழடி உயரம் வரையில் துணிகளை மற்றும் அணிகலன்களை அடுக்கி வைக்க கூடிய தட்டுகளை அமைத்துக் கொள்ளலாம். மீதி உள்ள பகுதியை லாப்ட் போன்று எப்போதாவது எடுக்கக்கூடிய பொருட்களை அடுக்கி வைக்க உபயோகித்துக் கொள்ளலாம். இவ்வாறு கிளோசெட் அமைக்கும் பொழுது இடத்தின் அளவும் நமக்கு குறைவாகவே தேவைப்படும். கிளோசெட்டின் உள்ளே துணிகளை ஹேங்கர் மூலம் தொங்க விடுவது நிறைய இடத்தை மிச்சப்படுத்த உதவும். இதே போல் க்ளோசட்டின் உள்ளே காலணிகளை வைக்க வேண்டும் என்றால் அதற்கான பிரத்தியேக ராக்குகளை அமைத்து அதில் காலணிகளை அடுக்கிக் கொள்ளலாம்.

    சிறு பொருட்களை அதாவது உள்ளாடைகள் ஷால்கள் போன்ற சிறிய ஆடைகளையும் குட்டி குட்டி ஆபரணங்களையும் சிறு சிறு பெட்டிகள் அல்லது கூடைகளில் போட்டு ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் பொழுது இடம் மிச்சப்படுவதோடு பொருட்களும் சிந்தாமல் சிதறாமல் அடுக்கடுக்காய் அழகாய் காட்சியளிக்கும். க்ளோஸ் செட்டிங் உள்ளே அமைக்கக்கூடிய சிறு அறைகள் மற்றும் பொருட்களை சேமிக்கும் இடங்களை கம்பிகள் கொண்ட ராக்குகளாக அமைக்கும் பொழுது அடைச்சலாக தெரியாமல் பார்க்க எளிமையாகவும் அதே நேரத்தில் துணிகளை மற்றும் பொருட்களை காற்றோட்டமாக சேமிக்கவும் உதவும். கிளோசெட்டின் உள்ளே மடக்கி நீட்டிக்கொள்ளக்கூடிய ஹேங்கர்களை உபயோகிப்பது நன்மை பயக்கும். இவற்றை தேவைக்கேற்ப அதிகப்படுத்திக் கொள்வதும் தேவையில்லாத நேரங்களில் மடக்கி வைத்துக் கொள்வதும் இடத்தை சேமிக்க உதவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காற்றில் இருக்கும் தூசிகள் கலந்து உருவாகும் அழுக்கு, ஸ்கால்ப் முழுவதும் படியும்.
    • இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றலாம்.

    சீரான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு 'ஸ்கால்ப்' எனப்படும், தலைப்பகுதியில் இருக்கும் சரும அடுக்கை சுகாதாரமான முறையில் பராமரிப்பது முக்கியம். ஸ்கால்ப் பகுதியில் மயிர்க்கால்கள், செபேசியஸ் எனும் எண்ணெய் சுரப்பிகள் மற்றும் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து உற்பத்தியாகும் வியர்வை மற்றும் எண்ணெய்யுடன் காற்றில் இருக்கும் தூசிகள் கலந்து உருவாகும் அழுக்கு, ஸ்கால்ப் முழுவதும் படியும். இதை அவ்வப்போது சரியான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் கிருமித் தொற்று, தலைமுடி வறட்சி, முடி உதிர்வு, பொடுகு, பேன் தொல்லை, தோல் தடிப்பு, அழற்சி, பூஞ்சைத் தொற்று, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பல பிரச்சினைகள் உண்டாகும். இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். அவை:

    ரசாயனம் இல்லாத ஷாம்பு: ஸ்கால்ப் பகுதியில் இருக்கும் செபேஷியஸ் சுரப்பியில் சுரக்கும் இயற்கையான எண்ணெய், தலைமுடி வறட்சி அடையாமல் பளபளப்பாக இருக்க உதவும். ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருக்கும் சல்பேட், இந்த எண்ணெய்யை நீக்கி வறட்சியை உண்டாக்கும். பாரபின் வீக்கம், அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, நாம் பயன்படுத்தும் ஷாம்பு இந்த எண்ணெய்யை முற்றிலும் நீக்கக் கூடிய ரசாயனங்கள் இல்லாமலும், மென்மையாகவும், ஸ்கால்ப் பகுதிக்கு நீரேற்றம் அளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஷியா பட்டர் கலந்த ஷாம்பு இதற்கு உதவும்.

    ஸ்கால்ப்பை சுத்தப்படுத்துதல்: நாம் வெளியில் செல்லும்போது சுற்றுச்சூழல் மற்றும் வாகனங்கள் மூலம் வரும் மாசு, இறந்த சரும செல்கள், அழுக்கு போன்றவை ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய்யுடன் கலந்து சருமத் துளைகளை அடைத்துவிடும். இது ஸ்கால்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை அதிகரித்து, நோய்த்தொற்றை உண்டாக்கும். இதைத் தவிர்ப்பதற்கு வாரம் இரண்டு முறை தலைக்கு குளித்து ஸ்கால்ப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    புற ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாத்தல்: முகம், கை, கால்களைப் போல ஸ்கால்ப்பும் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்படும். எனவே, வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது தலைப்பகுதியை மூடியவாறு செல்வது நல்லது. ஸ்கால்ப்புக்கு தனியாக தயாரிக்கப்படும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.

    'ஸ்கால்ப்' ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 'மாஸ்க்' : மரச்செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட விளக்கெண்ணெய்யை மிதமாக சூடுபடுத்தி ஸ்கால்ப் முழுவதும் தடவவும். பின்பு விரல் நுனியால் வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும். 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் நன்றாகக் கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் தடவவும். பின்னர் ஸ்கால்ப் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்யவும். 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு, 1 முட்டை, ½ கப் தயிர், இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விரல் நுனிகள் மூலம் எடுத்து ஸ்கால்ப் முழுவதும் தடவவும். பின்பு, சூடான தண்ணீரில் நனைத்துப் பிழிந்த துண்டை தலையை மூடியவாறு கட்டிக்கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரும்புள்ளிகள், முகப்பரு, கருவளையம் போன்ற சருமப் பிரச்சினைகளை தீர்க்கும்.
    • பீட்ரூட்டில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை சிறப்பாக பராமரிக்க உதவுகின்றன.

    சருமப் பொலிவையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் பொருட்களில் ஒன்று பீட்ரூட். இதில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை சிறப்பாக பராமரிக்க உதவுகின்றன. கரும்புள்ளிகள், முகப்பரு, கருவளையம் போன்ற சருமப் பிரச்சினைகளை பீட்ரூட்டைக் கொண்டு எளிதில் குணப்படுத்த முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    இரண்டு பங்கு பீட்ரூட் சாறுடன், ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சம்பழச்சாறு கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், முகம் பளபளப்பாக இருக்கும்.

    ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன், சிறிது சர்க்கரை கலந்து முகத்தில் பூசி மென்மையாக ஸ்கிரப் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கும்.

    பீட்ரூட் சாறுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால் சரும வறட்சி குறையும்.

    இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தால், கருமை மறைந்து விரைவில் உதடு சிவப்பாகும்.

    கடலை மாவு, பீட்ரூட் சாறு, தயிர் இவை மூன்றும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து, சிறிதளவு ரோஜா இதழ் சேர்த்து அரைத்து முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கும். சருமம் மென்மையாகும்.

    முல்தானி மெட்டி பொடியுடன், சிறிதளவு பீட்ரூட் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றித் தடவினால் கருவளையம் மறையும்.

    பீட்ரூட், கேரட், ஆப்பிள் மூன்றையும் சேர்த்து அரைத்து சிறிது கடலை மாவு கலந்து முகத்தில் பேஸ்பேக் போடவும். இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

    பீட்ரூட் சாறுடன் அரிசி மாவு 2 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் நீங்கும்.

    பீட்ரூட் துருவலுடன், வாழைப்பழம் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசினால் சரும வறட்சி நீங்கி பொலிவாகும். அரைத்த பீட்ரூட் விழுதுடன், ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவி ஸ்கிரப் செய்து வந்தால் சருமத்தில் உண்டான கருமை நீங்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நம் ஆரோக்கியத்திலும், அழகிலும் மஞ்சள் முக்கிய பங்கை வகிக்கிறது.
    • மேலும் தோல் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

    பெண்கள் தங்கள் உடலில் உள்ள முடியை நீக்க கெமிக்கல் கலந்த க்ரீம் உள்பட பல்வேறு முறைகளை கடைபிடித்து வருகின்றனர். கெமிக்கல் கலந்த க்ரீமை பயன்படுத்துவதால் பல தீங்குகள் ஏற்படுகின்றன. மஞ்சள் நம் உடலுக்கு பல அற்புதமாக நன்மை வழங்குகிறது. நம் ஆரோக்கியத்திலும், அழகிலும் மஞ்சள் முக்கிய பங்கை வகிக்கிறது. உடலில் தேவையில்லாமல் முளைக்கும் ரோமங்களை இயற்கையான முறையில் நீக்க மஞ்சளைத் தவிர சிறந்த பொருள் வேறெதுவுமில்லை.இந்த நிலையில் மஞ்சள் பூசுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்

    பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும் முறையை மீண்டும் கடைபிடித்தால் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு, நல்லதொரு பாதுகாப்புக் கவசம் கிடைக்கும்.

    தினந்தோறும் மஞ்சள் பூசி குளிப்பதால் உடலில் முடி தோன்றாமல் இருப்பது மட்டுமின்றி தோலில் பாதிப்பு உண்டாகாமல் 'பள பள'வென ஜொலிக்கும் தேகத்தைப் பெறலாம்.

    மேலும் தோல் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மஞ்சள் தேய்த்துக் குளித்து வருவதால் பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகள் நீங்கும். மேலும் ஈரமான இடங்களில் தொடர்ந்து இருப்பதால் உண்டாகும் சேற்றுப் புண் வராமலும் தடுக்கப்படும்.

    சிலர் மஞ்சளை பூசிவிட்டு அதை கழுவிவிட்டு அதன் பிறகு சோப்பு போட்டு பேஸ்வாஷ் செய்வார்கள். அது தவறு. இது போல் நாம் செய்தால் தோலில் உள்ள சிறிய துளைகள் எல்லாம் அடைத்துக் கொள்ளும். மஞ்சளில் இருக்கும் குர்குமின் நமது தோலில் உள்ள துளைகளை திறந்து முகத்தை ஹைட்ரேட் செய்து, மைக்ரோபியல் எஃபெக்ட்டை கிரியேட் செய்யும்.

    முகப்பருக்கள், வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளுக்கு மஞ்சள் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். சோரியாசிஸ் உள்ளிட்ட நோய்களுக்கு கூட மஞ்சளுடன் வேப்பிலையை சேர்த்து அப்ளை செய்து வந்தால் சருமம் பொலிவடையும். சிலர் மஞ்சளுடன் தயிர், லெமன், ஆப்பிள் வினிகர் இப்படி நிறைய சேர்ப்பார்கள். எல்லாவற்றுடனும் இல்லாமல் ஏதாவது ஒரு பொருளுடன் கலந்து முகத்திற்கு போட்டால் அது மிகவும் எஃபெக்ட்டிவ்வாக இருக்கும்.

    எலுமிச்சையுடன் சேர்த்து மஞ்சளை முகத்தில் அப்ளை செய்தால் இறந்த செல்களை அகற்றும். தயிருடன் மஞ்சளை சேர்த்து அப்ளை செய்யும் போது அந்த ஸ்கின்னுக்கு பொலிவையும் கண்டிஷனிங் எஃபெக்ட்டை தரும். ரோஸ் வாட்டருடன் கலந்து மஞ்சளை முகத்தில் தேய்த்தால் கூலிங் எஃபெக்ட்டை கொடுக்கும். சந்தனத்துடன் மஞ்சளை சேர்க்கும் போது டேனிங்கை நீக்கி முகத்தை பொலிவாக்கும்.

    பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் போது இல்லாவிட்டாலும் தினமும் மாலை வேளைகளிலாவது மஞ்சளை முகத்தில் தேய்த்து இயற்கையான அழகை பெறுவோம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரபலங்கள் பலரும் உருவக்கேலிக்கு ஆளாகி உள்ளனர்.
    • பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளன.

    அழகாக தோற்றமளிக்க விரும்புவது மனித இயல்பு. இதற்காக செலவிடுவதற்கு பலரும் தயாராக உள்ளனர். அதை நம்பியே அழகு சாதன வர்த்தக சந்தை உள்ளது. குறிப்பாக பிரபலங்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள அதிகளவு தொகை யை வேண்டுமானாலும் செலவிட தயாராக இருக்கிறார்கள்.

    பாப் இசை உலகின் அரசன் என்று போற்றப்பட்ட மைக்கேல் ஜாக்சன் பிறந்த போது கருப்பு நிறத்திலேயே அவருடைய தோல் இருந்தது. சில ஆண்டுகள் கழித்து அவருடைய தோல் நிறம் மாறியது. இது குறித்து பல கதைகள் உண்டு. ஆனால் மூக்கின் அமைப்பை மட்டும் அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொண்டதாக மைக்கேல் ஜாக்சனே கூறியது குறிப்பிடத்தக்கது.

    இது போல் பிரபலங்கள் பலரும் உருவக்கேலிக்கு ஆளாகி உள்ளனர். இதில் சிலர் தங்களின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து அழகாக்கி உள்ளனர். இதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளன. இதன் மூலம் உதடு, மூக்கு, மார்பகம் உள்பட உடல் உறுப்புகளை விரும்பும் வகையில் சீர் செய்து கொள்ளலாம்.

    பருமனான உடலில் சேர்ந்த கொழுப்பை உறிஞ்சி எடுப்பது, வயிற்றில் தொங்கும் சதையை நீக்குவது, தீக்காய தழும்பு, ஆறாத புண், கை, கால், கழுத்தில் சுருக்கங்கள் ஆகியவற்றை சீரமைக்கும் சிகிச்சைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது போன்ற உடல் உறுப்புகளை சீரமைக்கும் சிகிச்சை எல்லா உடலுக்கும் ஒத்துக் கொள்ள கூடியதாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செம்பருத்தி நம் சருமத்தை பாதுகாப்பதற்கு அதிகமாக உதவுகிறது.
    • கால நிலைக்கு ஏற்றவாறும் சருமம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

    தற்போது கோடை காலம் வந்து விட்டதால் மக்கள் பலரும் சந்திக்கும் ஒரே பிரச்சினை சரும பிரச்சனை தான். அதில் கோடைகாலம் மட்டுமல்லாமல் குளிர்காலம் போன்ற கால நிலைக்கு ஏற்றவாறும் சருமம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

    எந்த செயற்கை இரசாயனமும் இல்லாமல் இயற்கை முறையிலேயே நம்முடைய சருமத்தை நம்மால் பாதுகாக்க முடியும். அதற்கு நமக்கு பெரிதும் பயன்படுவது செம்பருத்தி பூ.

    கிராமப்புறம் மற்றும் பல இடங்களிலும் மிக எளிதாக கிடைக்கக்கூடிய இந்த சம்பவத்திற்கு பிறகு ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதிலும் இந்த செம்பருத்தி நம் சருமத்தை பாதுகாப்பதற்கு அதிகமாக உதவுகிறது. இந்தப் பூவை வைத்து நம் சருமத்தை எப்படிப் பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்.

    செம்பருத்தி பூவை நன்றாக வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் மற்றும் கற்றாலையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    செம்பருத்தி பொடி செய்ய இயலாதவர்கள், அந்தப் பூவை முதல் நாள் இரவே நன்றாக தண்ணீரில் ஊற வைத்து பின்பு காலையில் பேஸ்ட் போன்று அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

    இந்தக் கலவையை முகத்தில் தடவுவதற்கு முன்பு நாம் முகத்தை 5 முதல் 7 நிமிடங்கள் வரை நீராவியில் காட்ட வேண்டும். இதன் மூலம் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும்.

    அதன் பிறகு முகத்தை நன்றாக துடைத்து விட்டு கலந்து வைத்துள்ள பேஸ்டை தடவ வேண்டும். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை இதை வைத்திருக்க வேண்டும்.

    பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அதன் பிறகு ஒரு நாள் வரை நம் முகத்தில் எந்த சோப்பும் பயன்படுத்த கூடாது. அப்பொழுதுதான் கூடுதல் பலன் அளிக்கும்.

    இதை நாம் வாரத்திற்கு ஒருநாள் செய்து வந்தால் நம் முகம் தங்கம்போல மினு மினுக்கும். மேலும் முகத்தில் ஏற்படும் தேமல் படை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெரகோட்டா நகைகளுக்கான வரவேற்பு சூப்பராக இருக்கிறது.
    • இளம் பெண்களின் தேவையை டெரகோட்டா நகைகள்தான் பூர்த்தி செய்கின்றன.

    'சாதாரண களிமண்ணில் என்ன செய்து விட முடியும்..?' என்று கேள்வி கேட்பவர்களுக்கு, தான் உருவாக்கிய 'டெரகோட்டா நகைகள்' மூலமாக அசத்தலாக பதிலளிக்கிறார், ரம்யா நவீன். இவரிடம் சில நூறு ரூபாய்கள் மதிப்புள்ள களிமண்ணைக் கொடுத்தால், அதை பல நூறு லாபம் தரக்கூடிய டெரகோட்டா நகைகளாக மாற்றிவிடுகிறார். அதுதான் இவரது ஸ்பெஷலும்கூட.

    ''அணியும் உடையின் நிறத்திற்கு ஏற்ப, அணிகலன்களும் இருக்க வேண்டும் என்ற இளம் பெண்களின் தேவையை டெரகோட்டா நகைகள்தான் பூர்த்தி செய்கின்றன. ஒருசிலர், வாங்கும் புதிய ஆடைக்கு பொருத்தமான, நகைகளை மேட்சிங்கான கலரில் தயார் செய்ய சொல்கிறார்கள்'' என்று டெரகோட்டா நகை பற்றி பேச ஆரம்பிக்கிறார், ரம்யா நவீன். கோவை பகுதியை சேர்ந்தவரான இவர், முதுகலை (எம்.சி.ஏ.) பட்டம் பெற்றவர். இருப்பினும் இவரது ஆர்வம், டெரகோட்டா நகைகள் பக்கமாகவே திரும்பியிருக்கிறது.

    ''தோழியின் மூலம் அறிமுகமான டெரகோட்டா நகைகளை திருமணத்திற்கு பிறகுதான் முழு மூச்சோடு கையில் எடுத்தேன். ஏனெனில் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையில் நிரம்பியிருந்த தனிமையை விரட்டவும், சமூகத்தில் எனக்கான அடையாளத்தை உருவாக்கவும் அப்படியொரு முயற்சி தேவைப்பட்டது'' என்றவர், 2014-ம் ஆண்டு கணவரின் துணையோடு டெரகோட்டா நகைகளை உருவாக்க தொடங்கினார். ஆரம்பத்தில் டெரகோட்டா நகை வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்திற்கான வகுப்புகளில் சேர்ந்து அதன் நுட்பங்களை தெரிந்துகொண்டதுடன், சிறுசிறு உருவங்களை முயற்சித்து, டெரகோட்டா (சுடுமண்) கலையின் அடிப்படைகளை உணர்ந்து, நகைகளை உருவாக்கினார்.

    ''நெத்திச்சுட்டி, ஜடை அலங்கார பொருட்கள், ஜிமிக்கி கம்மல், காது மாட்டல், லேயர் மாட்டல், சந்திரவாலி கம்மல், நெக்லஸ், கழுத்து அட்டிகை, சொக்கம், ஆரம், கை வங்கி, வளையல், இடுப்பு ஒட்டியாணம்... இப்படி பெண்கள் விரும்பும் நகைகளை, டெரகோட்டா நகைகளாக உருவாக்கினேன்'' என கடந்த 9 ஆண்டுகளில், தான் உருவாக்கிய படைப்புகளை பட்டியலிடும் ரம்யா, திருமணம்-வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான 'ஜூவல் செட்'களை, டிரெண்டியான டிசைனில் உருவாக்கி அசத்துகிறார். குறிப்பாக, அந்தந்த காலகட்டத்தில் டிரெண்டாக இருக்கும் தங்க நகை கலெக்ஷன்களை, அச்சு அசலான டெரகோட்டா நகைகளாக உருவாக்குவதுடன், அதில் பொன் நிற வண்ணங்களை இழைந்தோட செய்து பிரம்மிக்க வைக்கிறார். அதுவே இவரது தனித்துவமும் கூட.

    ''பெரும்பாலான பெண்கள், தங்க நகைகளுக்கு மாற்றாக, டெரகோட்டா நகைகளையே விரும்புகிறார்கள். உடுத்தும் புடவை டிசைன்களுக்கு மேட்சிங்காக, அதே வடிவங்கள், அதே வண்ணங்கள் நகை அலங்கார பொருட்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால்தான் டெரகோட்டா நகைகளுக்கான வரவேற்பு சூப்பராக இருக்கிறது. மயில் வடிவ புடவைக்கு, மயில் வடிவத்திலேயே டெரகோட்டா நகைகளை செய்ய சொல்லி மேட்சிங்காக உடுத்துகிறார்கள். நகை அணிகிறார்கள்'' என்று டெரகோட்டா நகைகளின் தேவையை விளக்கியவர், அதன் உருவாக்க முறை பற்றி பேசினார்.

    ''சில நாள் பயிற்சிக்கு பிறகு, டெரகோட்டா நகைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த நகைகளை செய்வதற்கு பொறுமையும், கிரியேட்டிவிட்டியும் மிக அவசியம்.

    இப்போது பெரும்பாலான டெரகோட்டா நகைக் கலைஞர்கள், மோல்டிங் முறையில் அச்சு வைத்து, கற்கள் பதித்து நகைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் எனக்கு எல்லா நகைகளையும், கற்கள் இன்றி கலை வேலைப்பாட்டுடன் உருவாக்க பிடிக்கும். ஏனெனில் கல் நகைகளில் இருந்து கற்கள் விழுந்துவிட்டால், அந்த நகையே வீணாகிவிடும். அதனால் நான் கற்களை பயன்படுத்துவதில்லை. அதேபோல, இதுவரை நான் மோல்டிங் முறையில் நகைகளை உருவாக்கியதே இல்லை. எதுவாக இருந்தாலும், அதை வெறும் கைகளாலே கலைநயமாக உருவாக்குகிறேன்.

    அப்படி உருவானதை மூன்று நாட்கள் உலர்த்திய பிறகுதான், சுட முடியும். அதற்கு பிறகுதான், பெயிண்ட் வேலைகளும், செயின் கோர்ப்பு வேலைகளும் செய்ய முடியும். இதுவே திருமண நகைகள் என்றால், பெயிண்டிங் மற்றும் பினிஷிங் வேலைப்பாடுகளில் அதீத கவனம் செலுத்த வேண்டியிருக்கும்'' என்று பொறுப்பாக பேசுபவர், வேலைப்பாடுகள் நிறைந்த திருமண நகை செட்டுகளை, 500-க்கும் மேற்பட்ட தனித்துவ டிசைன்களில் உருவாக்கி இருக்கிறார். இதில் ஒருசில டிசைன்கள், ஏராளமான பெண்களால் அதிகம் ரசிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகளும், இவரது கலைப்படைப்புகளின் ரசிகைகளாக மாறி, இவர் உருவாக்கும் சுடுமண் படைப்புகளை விரும்பி அணிகின்றனர்.

    ''என்னுடைய படைப்புகளை நிறைய பிரபலங்கள் பாராட்டி இருக்கிறார்கள். நிறைய அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. பெங்களூருவில் இயங்கும் நிறுவனம் ஒன்று, சிறந்த டெரகோட்டா நகை வடிவமைப்பாளர் என்பதை மையப்படுத்தி இந்தியன் லீடர்ஷிப் விருது வழங்கி கவுரவப்படுத்தியது. இதைவிட, புதுமையான டெரகோட்டா படைப்புகளே என்னை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது'' என்று அகம் மகிழ்பவர், 'டெரகோட்டா' கலையில், நவீன நகைகள் படைக்கும் முயற்சியிலும் களமிறங்கி இருக்கிறார்.

    ''எல்லா பெண்களுக்குள்ளும், ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். பெரும்பாலானோர் அதை 'ஹாபி' என கடந்து விடுகின்றனர். ஆனால் அந்த 'ஹாபி'க்கு பெண்கள் உயிர் கொடுக்கும்போதுதான், 'தொழில்முனைவோர்' என்ற பதவி உயர்வு கிடைக்கும். அத்துடன், குடும்ப பொருளாதாரமும் மேம்படும். அதனால் உங்களோடு வளர்ந்த தனித்திறனை தொழில் ரீதியாக மேம்படுத்த முயலுங்கள்'' என்றவர், வெறும் இரண்டாயிரம் ரூபாய் செலவிலேயே, டெரகோட்டா நகைகளை வடிவமைக்க முடியும் என்று பலருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கிறார். அதோடு தன்னுடைய முயற்சிக்கு துணை நின்ற கணவருக்கும், இரு மகன்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு விடைபெற்றார்.

    டெரகோட்டா தோடுகள் 80 ரூபாயில் இருந்து தொடங்கி, கல்யாண செட் நகைகள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. குறிப்பாக, அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் தமிழர்கள் விரும்பி வாங்கி அணிகிறார்கள்.

    களிமண்ணில் நகைகள் மட்டுமல்ல, பிரிட்ஜ் மேகனெட், பெயர் பலகை... போன்ற புதுமையான பொருட்களையும் செய்ய முடியும்.

    நிறைய களிமண்கள் சந்தையில் இருக்கின்றன. அதில் நான் பெங்களூரு களிமண்ணைத்தான் பயன்படுத்துகிறேன். ஏனெனில் அதை பயன்படுத்துவதும், கையாள்வதும் சுலபம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo