என் மலர்

    ஆட்டோமொபைல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வால்வோ C40 மாடலின் விலை, XC40 ரிசார்ஜ் மாடலை விட அதிகமாகவே இருக்கும்.
    • தோற்றத்தில் இந்த கார் XC40 ரிசார்ஜ் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    வால்வோ நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடல் C40 ரிசார்ஜ்-ஐ இந்திய சந்தையில் ஜூன் 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் இது வால்வோ நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். ஏற்கனவே வால்வோ நிறுவனம் XC40 ரிசார்ஜ் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

    புதிய எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடலின் டூயல் மோட்டார் கொண்ட ஆல்வீல் டிரைவ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய C40 மாடலின் விலை ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்தியாவில் தற்போது வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலின் விலை ரூ. 56.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் வால்வோ நிறுவனத்தின் CMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இந்த கார் XC40 ரிசார்ஜ் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    காரின் உள்புறம் 9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், ஏர் பியூரிஃபயர் சிஸ்டம் மற்றும் ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேடிஎம் நிறுவனம் தனது 390 அட்வென்ச்சர் மாடலில் லோ-சீட்-ஹைட் வேரியண்டை அறிமுகம் செய்தது.
    • புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலிலும் 249சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலின் லோ-சீட்-ஹைட் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் விலை ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    சில வாரங்களுக்கு முன்பு தான், கேடிஎம் நிறுவனம் தனது 390 அட்வென்ச்சர் மாடலில் லோ-சீட்-ஹைட் வேரியண்டை அறிமுகம் செய்து இருந்தது. தற்போதைய 250 அட்வென்ச்சர் மாடலின் சீட் உயரம் 855 மில்லிமீட்டர்கள் ஆகும். தற்போதைய 250 அட்வென்ச்சர் மாடல் லோ-சீட்-ஹைட் வேரியண்டில் 834 மில்லிமீட்டராக உள்ளது.

    இதுதவிர புதிய மாடலின் மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் 249சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 29.6 ஹெச்பி பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட், எல்இடி இண்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன.

    சஸ்பென்ஷனுக்கு இந்த மாடலில் 43mm அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேகிங்கிற்கு முன்புறம் 320mm சிங்கில் டிஸ்க், பின்புறம் 230mm சிங்கில் டிஸ்க் வழங்கப்படுகிறது. இத்துடன் டியுபுலர் ஸ்ப்லிட் டிரெலிஸ் ஃபிரேம் வழங்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெர்சிடிஸ் EQB 300 4மேடிக் மாடலுக்கு மாற்றாக புதிய EQB 350 4மேடிக் மாடல் அறிமுகம்.
    • மெர்சிடிஸ் EQB 350 4மேடிக் மாடல் மணிக்கு அதிகபட்சம் 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் EQB 350 4மேடிக் மாடலை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 77 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக இதே EQB காரின் 300 4மேடிக் மாடல் இந்தியாவில் ரூ. 74 லட்சத்து 50 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட EQB 300 4மேடிக் மாடலுக்கு மாற்றாக புதிய EQB 350 4மேடிக் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 66.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்கள் 288 ஹெச்பி பவர், 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. 300 4மேடிக் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய 350 4மேடிக் மாடல் 130 நியூட்டன் மீட்டர் டார்க் அளவுக்கு அதிக இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மெர்சிடிஸ் EQB 350 4மேடிக் மாடல் மணிக்கு அதிகபட்சம் 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்கிறது.

    இதில் உள்ள பேட்டரியை 100 கிலோவாட் டிசி சார்ஜர் மூலம் 10-ல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 32 நிமிடங்களே ஆகும். இதனுடன் வழங்கப்படும் 11 கிலோவாட் வால் பாக்ஸ் சார்ஜர் காரை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி 25 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 423 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    இந்த காரில் MBUX டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 64 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், பவர்டு முன்புற இருக்கைகள், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்ப்லிட் எல்இடி டெயில் லைட்கள், 18-இன்ச் டுவின் ஸ்போக் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எண்ட்ரி லெவல் மாடலான ஒலா S1 ஏர் விலை மட்டும் மாற்றப்படவில்லை.
    • டாப் எண்ட் மாடலான ஒலா S1 ப்ரோ விலை மாறி இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த ஃபேம் 2 திட்டம் நேற்றுடன் ரத்தாகி விட்டது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விலை அதிகரிக்க துவங்கி விட்டது. அதன்படி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 மற்றும் S1 ப்ரோ மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.

    தற்போதைய விலை உயர்வில் எண்ட்ரி லெவல் மாடலான ஒலா S1 ஏர் விலை மட்டும் மாற்றப்படவில்லை. மிட் ரேன்ஜ் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் ஒலா S1 மாடல் 2 கிலோவாட் ஹவர் மற்றும் 3 கிலோவாட் ஹவர் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

    இது அதன் முந்தைய வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் அதிகம் ஆகும். டாப் எண்ட் மாடலான ஒலா S1 ப்ரோ விலை தற்போது ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுவும் அதன் முந்தைய விலையை விட ரூ. 15 ஆயிரம் அதிகம் ஆகும். எண்ட்ரி லெவல் ஒலா S1 ஏர் மாடலின் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று மாறி உள்ளது.

    முன்னதாக ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், பெட்ரோல் மோட்டார்சைக்கிள் குறித்து நகைச்சுவையாக மீம் போடுவோருக்கு ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருந்தார். இதுபற்றிய அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த டிசம்பர் மாதம் அர்னால்ட் உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
    • எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.

    டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறார். இவர் பெர்னார்டு அர்னால்டை பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

    மே 31-ம் தேதி அர்னால்டு LVMH பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்ததை தொடர்ந்து, பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பிரெஞ்சு வியாபாரியான 74 வயது பெர்னார்ட் மற்றும் எலான் மஸ்க் இடையே உலகின் பணக்காரர் யார் என்பதில், இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே கடும் போட்டி நிலவி வந்தது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர்னால்ட் எலான் மஸ்க்-ஐ கடந்து உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார். தொழில்நுட்ப துறையில் பெரும் சரிவு நிலை நிலவி வந்த போது, அர்னால்ட் உலகின் முதல் பணக்காரர் ஆனார். லூயிஸ் விட்டன், ஃபெண்டி மற்றும் ஹெனசி போன்ற பிராண்டுகளை நிறுவியவர் அர்னால்ட்.

    கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது.

    மறுபக்கம் எலான் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறார். இதில் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை ஆகும். ஆஸ்டினை சேர்ந்த எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அர்னால்ட்-ன் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டாலர்கள் ஆகும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ பார்த்த காவல் துறையினர், காரின் பதிவு எண் கொண்டு புஷ்அப் எடுத்த நபரை பிடித்தனர்.
    • வைரல் வீடியோவில் விதிமீறலில் ஈடுபட்ட காரை காவல் துறை பறிமுதல் செய்தது.

    ஓடும் காரின் மீது மர்ம நபர் ஒருவர் புஷ்அப் எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வைரல் வீடியோவில் உள்ள நபர் எவ்வித தயக்கமும், பயமும் இன்றி சர்வசாதாரணமாக ஓடும் காரின் மீது புஷ்அப் எடுக்கிறார்.

    அதே காரில் இவருடன் பயணம் செய்தவர்கள் கார் ஜன்னலின் வெளியே தங்களது தலையை நீட்டுவது போன்ற காட்சிகளும் வைரல் வீடியோவில் இடம்பெற்று இருந்தன. வைரல் வீடியோவினை டுவிட்டரில் பகிர்ந்த பயனர் ஒருவர், அதனை குருகிராம் போக்குவரத்து காவல் துறை, குருகிராம் காவல் துறை துணை ஆய்வாளர் மற்றும் குருகிராம் காவல் துறையினரை டேக் செய்தார்.

    இவரது செய்கை புஷ்அப் எடுத்த நபருக்கு வினையாக அமைந்து இருக்கிறது. வைரல் வீடியோவை பார்த்த காவல் துறையினர், அதில் உள்ள காரின் பதிவு எண் கொண்டு புஷ்அப் எடுத்த நபரை பிடித்தனர். பொது இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நபருக்கு போக்குவரத்து காவல் துறையினர் ரூ. 6 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் உயிருக்கும், அடுத்தவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் குருகிராம் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வைரல் வீடியோவில் விதிமீறலில் ஈடுபட்ட காரை பறிமுதல் செய்த காவல் துறையினர், காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
    • மிக குறைந்த வேகத்தில் செல்லும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஹோண்டா காப்புரிமை பெற்றது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்று இருக்கிறது. புதிய ஸ்கூட்டர்கள் டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: என்று அழைக்கப்படுகின்றன. இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வினியோக துறை சார்ந்த பணிகளுக்கானவை ஆகும்.

    புதிய டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன. இவை குறைந்த வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும்.

    ஹோண்டா டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் பிரத்யேக தோற்றம் கொண்டிருக்கின்றன. இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஒற்றை சீட் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் போஷ் நிறுவனத்தின் ஹப் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்கூட்டர்கள் மணிக்கு அதிகபட்சமாகவே 25 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும்.

    மிக குறைந்த வேகத்தில் செல்லும் என்பதால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவற்றுக்கு சாலை வரியும் செலுத்த வேண்டாம். ஹோண்டா டேக்ஸ் e: மாடலில் ஹை-சீட் ஹேண்டில்பார், வட்ட வடிவம் கொண்ட ஒற்றை ஹெட்லேம்ப், டெலிஸ்கோபிக் முன்புற சஸ்பென்ஷன், முன்புறம் டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள், டியூபுலர் ஸ்பைன், ஒற்றை சீட் மற்றும் பேட்டரி பேக் உள்ளது.

    ஹோண்டா ஜூமர் e: மாடலில் சற்றே தடிமனாக காட்சியளிக்கும் வெளிப்புற ஃபிரேம், வட்ட வடிவிலான இரண்டு ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்குகள், டூயல் சைடு ரியர் காயில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்கூட்டர்களும் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.

    இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எனினும், ஹோண்டா டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 வாக்கில் ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய குளோஸ்டர் ஸ்பெஷல் எடிஷன் மாடல் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • எம்ஜி குளோஸ்டர் ஸ்பெஷல் எடிஷன் மாடல் 2WD மற்றும் 4WD டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது குளோஸ்டர் எஸ்யுவி-யின் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எம்ஜி குளோஸ்டர் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் விலை ரூ. 40 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் 2WD மற்றும் 4WD என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இத்துடன் 6 மற்றும் 7 சீட்டர் வடிவில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி வெளிப்புறம் மெட்டல் பிளாக் பெயின்ட் மற்றும் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிலேட்கள், ORVM-கள், டோர் பேனல்கள், ஹெட்லைட் கிலஸ்டர் உள்ளிட்டவைகளில் ரெட் கார்னிஷ் செய்யப்பட்டு உள்ளது.

    இத்துடன் முன்புற ஃபெண்டரில் 'பிளாக்ஸ்டார்ம் பேட்ஜிங்' பின்புறம் டெயில்கேட்டில் 'குளோஸ்டர்' லெட்டரிங் இடம்பெற்று இருக்கிறது. டெயில்கேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிளாக்டு-அவுட் கிரில், ஹெக்சகோனல் மெஷ் பேட்டன் உள்ளது. இவைதவிர புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்மோக்டு டெயில்கேட்கள், விண்டோ மற்றும் ஃபாக் லேம்ப் சரவுண்ட்கள் வழங்கப்படுகிறது.

    உள்புறத்தில் டேஷ்போர்டு மற்றும் இருக்கை மேற்கவர்கள் பிளாக் ஃபினிஷ் மற்றும் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் டேஷ்போர்டு மற்றும் செண்டர் கன்சோல் பட்டன்கள், ஸ்டீரிங் வீல், மேட், டோர் பேட் உள்ளிட்டவைகளில் ரெட் பிராகாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய எம்ஜி குளோஸ்டர் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் பிஎஸ் 6 2 விதிகளுக்கு ஏற்ற 2.0 லிட்டர் டீசல் எஞ்சின், டர்போ மற்றும் டுவின் டர்போ ஆப்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இரண்டு எஞ்சின்களும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கொண்டுள்ளன. இந்திய சந்தையில் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 43 லட்சத்து 08 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாடா பன்ச் மாடல் விரைவில் எலெக்ட்ரிக் வடிவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த கார் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை மெல்ல வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க தொடங்குகிறது. தற்போது இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 75 சதவீத பங்குகளுடன் முன்னணி இடத்தில் உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் மற்ற நிறுவனங்கள் கால்பதிக்க டாடா நிறுவனமும் காரணமாக இருந்து வந்துள்ளது.

    சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க துவங்கி இருக்கும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும் அடுத்த எலெக்ட்ரிக் கார் டாடா பன்ச் EV என்றே கூறலாம். இந்த காரின் ப்ரோடக்ஷன் ரெண்டர்கள் வெளியாகி உள்ளன.

    இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்து வரும் டாடா பன்ச் மாடல் விரைவில் எலெக்ட்ரிக் வடிவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த கார் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. முன்னதாக இந்த கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

    அதன்படி இந்த காரின் முன்புறம் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி டிஆர்எல் பொனெட் லைனின் கீழ் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த காரின் கிரில் பகுதி ரிடிசைன் செய்யப்பட்டு, முழுமையாக பிளான்க்டு ஆஃப் செய்யப்பட்டு EV பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. காரின் பின்புறம் ரியர் வைப்பர், ஹை மவுண்ட் ஸ்டாப் லேம்ப், எல்இடி டிரை-ஏரோ டெயில் லைட்கள் உள்ளன.

    பவர்டிரெயின் மற்றும் அம்சங்களின் படி பன்ச் EV மாடல் டியாகோ EV மாடலின் மேல் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. விலையை பொருத்தவரை டாடா பன்ச் EV மாடல் ரூ. 9 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் கிளாசிக் 350.
    • ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடல் இந்தியாவில் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை மாற்றி இருக்கிறது. இதில் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிளாசிக் 350 மாடல் இடம்பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய கிளாசிக் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 080 என்று மாறி இருக்கிறது. முன்னதாக இந்த மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 092 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    விலை விவரங்கள்:

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ரெடிட்ச் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 092

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஹல்சியான் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 1 லட்சத்து 95 ஆயிரத்து 191

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஹல்சியான் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 2 லட்சத்து 02 ஆயிரத்து 094

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் ரூ. 2 லட்சத்து 13 ஆயிரத்து 852

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 டார்க் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரத்து 285

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 க்ரோம் ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 755

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    விலை தவிர இந்த மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டுவின் பல்பு-டைப் பைலட் லேம்ப்கள், வளைவான ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் ரக சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களில் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகின்றன.

    இதில் உள்ள 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்சின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whats