என் மலர்
லைஃப்ஸ்டைல்
- தலைக்கு அதிகமாகக் குளிக்க வைக்கக் கூடாது.
- சருமம் தாங்கும் அளவிற்குத்தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.
பொதுவாகக் குழந்தைகளைத் தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாகக் குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் என பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இதுபோன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
* குழந்தைகளைக் கோடைக்காலத்தில் குளிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதில் குழந்தைகளின் சருமம் தாங்கும் அளவிற்குத்தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.
* பச்சிளம் குழந்தை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். பச்சிளம் குழந்தை என்றால் முதலில் அந்த தண்ணீரை நம் கைகள் வைத்து வெதுவெதுப்பாக உள்ளதா என பார்க்க வேண்டும்.
* அதற்குப் பிறகு தான், குழந்தைகளின் காலில் ஊற்றி அதற்கு சரியாக இருந்தால் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். இல்லை என்றால் அதில் சிறிதளவு குளிர்ந்த நீர் சேர்த்து குளிக்க வைக்கலாம்.
* ஆறு மாத குழந்தை என்றால் அந்த குழந்தையை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு குளிக்க வைக்கலாம். ஆனால் சூடான நீராக இருந்தால் முதலில் நம்மால் தாங்க முடியும் என்றால் மட்டும் குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம்.
* பச்சிளம் குழந்தை மற்றும் ஆறுமாதம், ஒரு வருட குழந்தையாக இருந்தாலும் அதிக நேரம் குளிக்க வைத்தால் தூக்கம் நன்றாக வரும் மற்றும் உடலுக்கு நல்லது என சொன்னால் அது சரியில்லை. எந்த குழந்தையாக இருந்தாலும் 5-ல்இருந்து 7 நிமிடங்களுக்குள் குளிக்க வைக்க வேண்டும்.
* கோடைக்காலத்தில் ஆறு மாதங்கள் ஆன குழந்தையாக இருந்தால் மிகவும் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. சாதாரண வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த நீரை பயன்படுத்தலாம்.
* குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு அல்லது வீட்டில் உள்ள கடலைமாவும் பயன்படுத்தி குழந்தைகளை குளிக்க வைக்கலாம்.
* ஆறுமாதம் ஆன குழந்தை என்றால் கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளின் தலைக்கு என கடைகளில் விற்கும் ஷாம்பு அல்லது வீட்டில் தயாரிக்கும் ஷாம்பு கூட பயன்படுத்தலாம்.
* குழந்தைகளின் தலைக்கு குளிக்க வைக்கும் போது முகத்தில் தண்ணீர் வராமல் இருக்க கண்களுக்கு மேல் உள்ள இடத்தில் கைகள் வைத்து குளிக்க வைக்க வேண்டும்.
* தலைக்கு குளிக்க வைத்த பிறகு, உடலுக்கு குளிக்க வைக்க வேண்டும். சளி பிடித்து இருந்தால் அதிகமாக தலைக்கு குளிக்கவைக்க கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் தலைக்கு குளிக்க வைப்பதை தவிர்க்கலாம்.
- ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும்.
- அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது.
மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு.
இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான். சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சினை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும்.
காரணம்:
இந்த நோய்க்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது. பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம். ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது. மரபணு மூலமாக, பரம்பரை பரம்பரையாக கூட வரலாம். அதேபோல ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இதனை அன்றாடம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வராமல் தடுக்க முடியும்.
வைட்டமின்கள்:
பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு தேவைப்படும் சக்திகளில் முதன்மையானது வைட்டமின் டி. கருப்பை கோளாறுகள் வருவதற்கான காரணங்களில் 65 முதல் 85 சதவீதத்தினர் வைட்டமின் டி குறைப்பட்டினால் தான் ஏற்படுகிறது. இதனால் வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக காலை நேர வெயில் படுமாறு உங்களது தினசரிகளை மாற்றிக் கொள்ளலாம். இப்படி செய்வதனால் உங்களது மெட்டபாலிசம் தூண்டப்பட்டு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படாமல் தடுத்திடும்.
ஆப்பிள் சிடர் வினிகர்:
ஒரு கிளாஸ் சூடான நீருடன் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் இரண்டு டீஸ்பூன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இப்படி குடிப்பதனால் உடலில் இன்சுலின் அளவு சீராக இருக்கும். இதனால் கருமுட்டை உற்பத்தியாவதும் மாதந்தோறும் அது உடைவதும் சீராக நடைபெறும்.
தேங்காய் எண்ணெய்:
சுத்தமான தேங்காய் எண்ணெய் மூலமாக கூட கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும். இதற்கு பாக்கெட்டுகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும், அதில் கலக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்களால் தேங்காய் எண்ணெயின் முழுபலன்களும் உங்களுக்கு கிடைக்காது. தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெய்யை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்சிடென்ட் இருக்கிறது. சீரான அளவில் இதனை எடுத்துக் கொண்டால் இன்சுலின் சுரப்பை சீராக வைத்திருக்கும். அதேபோல கெட்ட கொழுப்பு ரத்தத்தில் கலப்பதையும் தடுத்திடும்.
ஆமணக்கு எண்ணெய்:
ஆமணக்கு எண்ணெய்யை லேசாக சூடு படுத்திக்கொள்ளுங்கள். அதில் சுத்தமான பருத்தி துணியை கொண்டு எண்ணெயில் முக்கி அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்திடுங்கள் அப்படியில்லை எனில் ஆமணக்கு எண்ணெயை வயிற்றில் தடவிக்கொண்டு ஹாட்பேக் ஒத்தடம் கொடுக்கலாம். பின்னர் வயிற்றை சுத்தமாக துடைத்துவிடுங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இப்படிச் செய்யலாம். ஆமணக்கு எண்ணெய் சருமத்தில் ஊடுருவும் ஆற்றல் கொண்டது. அதோடு உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் ஹார்மோன் மாற்றம் ஏற்படாது. இதனால் கருப்பை கோளாறுகள் ஏற்படாது.
கிரீன் டீ:
சூடான நீரில் கிரீன் டீ மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் கிரீன் டீ வரை குடிக்கலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் கருப்பை சீராக வேளை செய்வதற்கான ஹார்மோன்களை தூண்டிடும். அதிக எடை கூட கருப்பை கோளாறுகள் வருவதற்கு ஒரு வகை காரணமாக இருக்கிறது. கிரீன் டீ குடிப்பதனால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேராது. இதனால் அதீத உடல் எடையும் தவிர்க்கப்படும்.
கற்றாழை:
கற்றாலை ஜூஸ் காலை உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர வேண்டும். இதனை தினமும் கூட சாப்பிடலாம். கற்றாழையில் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை நீக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு கருப்பை இயங்குவதற்கான ஆற்றலையும் கொடுக்கிறது. மாதவிடாய் பிரச்னை இருப்பவர்கள் இதனை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுத்திடும்.
நெல்லிக்காய்:
ஒரு டம்ளர் நீருடன் அரைகப் நெல்லிக்காய் சாறு கலந்து குடிக்க வேண்டும். இதனையும் நீங்கள் தினமும் குடிக்கலாம். உங்களுக்கு வேறு சில உடல் உபாதைகள் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களை குறைத்து, உடல் பருமனை தடுக்கும். நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்சிடென்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்சைடு டிஸ்முடேஸ் என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்சின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், ரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
சீரகம்:
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம். பசியைத் தூண்டும். சீரகத்தில் இருக்கும் டாக்சின்கள் ரத்ததை சுத்தப்படுத்துகிறது, அதோடு உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது.
வெந்தயம்:
நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கி இருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது.
- சிலர் வாங்கி பயன்படுத்தாமல் விற்றுவிடுகிறார்கள்.
- சமையலுக்கு பயன்படுத்தினால் பித்தத்தை அதிகரிக்கும் என்பதால்தான்.
ரேஷன் கடைகளில் கிடைக்கும் பாமாயில் ஒரு பாக்கெட் விலை ரூ.30-க்கு கொடுக்கப்படுகிறது. இந்த பாமாயில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதை சிலர் வாங்கி பயன்படுத்துகிறார்கள். சிலர் வாங்கி பயன்படுத்தாமல் விற்றுவிடுகிறார்கள். இல்லையெனில் தாளிப்பதற்கு, அப்பளம், வடை சுட பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவே கொடுத்துவிடுகிறார்கள். காரணம் இதை சமையலுக்கு பயன்படுத்தினால் பித்தத்தை அதிகரிக்கும் என்பதால்தான்.
அது மட்டுமல்லாமல் இதில் நிறைய கொழுப்பும் இருப்பதால் இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடல் எடையை கூட்டும், கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இதய வால்வுகளில் அடைப்புகளை ஏற்படுத்தும். எனவே சிலர் இந்த எண்ணெய்யை பயன்படுத்தினால் பித்தம் காரணமாக தலைச்சுற்றல், மயக்கம் வரும் என்றும் கூறுகிறார்கள்.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலில் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. இது மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். விட்டமின் ஏ நிறைய இருக்கிறது. எனவே ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பாமாயிலை வீட்டிலேயே சுத்திகரித்து, அதில் உள்ள பித்தத்தை போக்கிவிடலாம். எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருள்:
ரேஷன் பாமாயில்
புளி- சிறிதளவு
கல் உப்பு- சிறிதளவு
இஞ்சி-சிறிய துண்டு
செய்முறை:
மிதமான தீயில் இரும்பு கடாயை வைத்து அதில் வாங்கி வந்த பாமாயிலை ஊற்றுங்கள். எண்ணெய் சூடாகும் போது இதில் புளியை உருட்டி அதன் நடுவே உப்பை வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த புளியை வடை போல் தட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட வேண்டும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து இஞ்சியை போட வேண்டும். இவற்றையெல்லாம் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அப்படியே கொதிக்கவிடவும்.
புளி, இஞ்சி ஈரத்தன்மை கொண்டிருப்பதால் அது பொறிந்து கொண்டே இருக்கும். இந்த சலசலப்பு அடங்கியதும் எண்ணெய்யை இறக்கி ஆறவிடவும்.
இந்த எண்ணெயில் இருந்த பித்தத்தை இஞ்சி இழுத்துக் கொண்டிருக்கும். அதன்பிறகு புளி, இஞ்சியை எடுத்துவிடலாம். இதை சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். அப்போது எண்ணெயின் நிறம் மாறியிருக்கும்.
இப்போது நீங்கள் ரேஷனில் வாங்கிய பாமாயில் ஆரோக்கியமானதாக மாறிவிட்டது. இனி எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- உடல் எடை அதிகரிப்பு குறித்த கவலை அனைவரிடமும் அதிகரித்துள்ளது.
- தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
உடல் எடை அதிகரிப்பு குறித்த கவலை அனைவரிடமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக 30 வயதை கடந்த பெண்கள் பலருக்கும் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது. உடல் எடையை குறைக்க எப்படி அனைவரும் வாக்கிங், ஜாக்கிங், யோகா போன்றவற்றை செய்யலாமோ அப்படித்தான் கிரீன் டீ குடிப்பதும்.
கிரீன் டீ உடல் எடையை குறைக்க, கொழுப்பை கரைக்க, தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது. கிரீன் டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும், அதை குடிப்பதற்கான சரியான நேரம் குறித்தும் பார்க்கலாம்.
நன்மைகள்
* கிரீன் டீயில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.
* அதே போல் கிரீன் டீ தொப்பை கொழுப்பை குறைக்கவும் கைக்கொடுக்கிறது.
* கிரீன் டீயில் மிகக் குறைந்த அளவு காஃபின் உள்ளது. கிரீன் டீயில் கேடசின் எனப்படும் பாலிபினால் வகை உள்ளது.இந்த கேடசின்கள் ஆன்டிஆக்சிடென்ட்கள் ஆகும். இவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.
* கிரீன் டீயில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் காஃபின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கவும் மற்றும் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
எப்போது குடிக்கலாம்?
* எடை இழப்புக்கு கிரீன் டீ காலை உணவு எடுத்து கொண்ட பிறகு 1 மணி நேர கழித்து கிரீன் குடிக்கவும்.
* அதேபோல் மதிய உணவுக்கு பிறகு 2 மணி நேரம் கழித்து கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 கப் கிரீன் டீ குடிக்கலாம்.
* வெறும் வயிற்றிலும் கிரீன் டீயை அருந்தலாம். சாப்பிட்டு 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு கிரீன் டீ குடித்தால், அது உணவை ஜீரணிக்க உதவும்.
- எலும்புகள் வலுப்பெற சுக்கு களி பெரிதும் உதவுகிறது.
- சுக்கு களி செய்து சாப்பிட்டால் சளி இருமல் குணமாகும்.
சுக்கில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் அடங்கியிருக்கின்றன. சுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். சளி இருமல் என்றால் சுக்கு களி செய்து சாப்பிட்டால் சளி இருமல் குணமாகும்.
அதுமட்டுமில்லாமல் உடலில் செரிமானப்பிரச்சினையை சீராக்குவதற்கும் இந்த சுக்குகளி உதவுகிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்கள் கூட இந்த சுக்கு களியை சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தம், வாந்தி போன்ற பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வினை அளிக்கும்.
குழந்தைகளின் எலும்புகள் வலுப்பெற இந்த சுக்கு களி பெரிதும் உதவுகிறது.மேலும் பிரசவமான பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவாக மாற இந்த களியை செய்து தரலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் இது உதவுகிறது.
தேவையான பொருட்கள்
அரிசி- 1 கப்
சுக்கு -50 கிராம்
ஏலக்காய் - ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய்- 100 கிராம்
கருப்பட்டி வெல்லம் - 200 கிராம்
செய்முறை:
அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். சுக்கு மற்றும் வெல்லத்தை நன்றாக ஈடித்து வைத்து கொள்ள வேண்டும். அதன்பிறகு சுக்கு, ஏலக்காய், அரிசி அனைத்தும் மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு அடி கனமான வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கெட்டிதட்டாமல் கைவிடாமல் நன்கு கிளற வேண்டும். மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். மாவு நன்றாக வெந்த பிறகு அதில் தண்ணீர் சேர்த்து காய்ச்சிய வெல்லக் கரைசலை வடித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு வாணலியில் ஒட்டாமல் வருவதற்கு நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு வரும் வரை நன்றாக கிளற வேண்டும். அதன்பிறகு உருண்டையாக திரண்டு வரும் சமயம் அடுப்பை அணைத்து பரிமாறவும். அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும். மேலும் பிரசவம் ஆன சமயத்தில் இதை தாய்க்கு கொடுப்பார்கள்.
- வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்ட் உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகின்றன.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்ட் உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகின்றன. நெல்லிக்காயை உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி நல்ல அடர்த்தியான கூந்தலையும், முகப்பொலிவையும் பெறலாம்
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய்- 10
நாட்டு சக்கரை அல்லது வெல்லம்- 250
ஏலக்காய் பொடி- ஒரு ஸ்பூன்
நட்ஸ் வகைகள்- தேவையான அளவு
நெய்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காயை வைத்து ஐந்து நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு நெல்லிக்காய்களை துருவி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். நெல்லிக்காய் மற்றும் சர்க்கரை ஒன்று சேர்ந்து திக்கான பதத்திற்கு வரும் வரை கைவிடாமல் கிளறவும்.
இதில் ஏலக்காய் பொடி, மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகளை சேர்த்து கலக்க வேண்டும். கடாயில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.
கைகளில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டலாம். அவ்ளோதான் சுவையான நெல்லிக்காய் லட்டு தயார்.
- இளமையான தோற்றத்தை தருகிறது.
- முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய்யை நீக்கும்.
பீட்ரூட்டில் உள்ள லிகோபேன் மற்றும் ஸ்காலீன் தோல் தொங்கிப்போவதை தடுத்து, இளமையான தோற்றத்தை தருகிறது. மேலும், முகப்பருவை சுற்றி ஏற்பட்டுள்ள புண்களையும், நோய்த்தொற்றையும் குணப்படுத்துகிறது. முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய்யை நீக்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் `சி'யானது சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். இந்த பீட்ருட் நைட் கிரீம் முகத்தில் உள்ள இறந்த செல்களை புதுப்பித்து முகத்திற்கு பொலிவூட்டுகிறது.
தேவையான பொருட்கள்
பீட்ரூட்
கற்றாழை ஜெல்
தேன்
கிளிசரின்
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
செய்முறை:
பீட்ரூட்டை தோல் சீவி, மிக்சியில் தண்ணீர் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து சாறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தேன், கிளிசரின், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும். கலக்கும் போதே கொஞ்சம் கெட்டியாகி வரும். இதை சின்ன டப்பாவில் ஊற்றி வைத்து தினமும் இரவு தூங்குவதற்கு முகத்திற்கு தடவி வந்தால் முகம் வெள்ளையாக மாறும்.
- மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
- மிளகை சுட்டு அதன் புகையினை உள் இழுத்தால் தலைவலி தீரும்.
* சளி தொல்லைக்கு மிளகை நன்றாக பொடித்து அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும்.
* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
* கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாணமுருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.
* மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
* மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலை பாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை உள் இழுத்தால் தலைவலி தீரும்.
* ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.
* மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது.
* மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. நஞ்சை முறுக்கும் தன்மை கொண்டது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி.
- முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.
- முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை.
முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தை தணிக்கவும் வல்லது. முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்து போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. இது நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் 'சி' கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.
- புருவங்கள் அடர்த்தியாக வளர்வதை கண்கூடாக காணலாம்.
- புருவத்தை தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் அடர்த்தியாக பெற சில குறிப்புகள்.
பொதுவாக நம்மில் பலர் நல்ல அடர்த்தியான புருவத்தை பெற ஆசைப்படுவார்கள். ஆனால் அவ்வளவு அடர்த்தியான புருவத்தை எல்லோராலும் பெற முடியாது. அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பெண்கள் அவர்களுக்கு ஏற்ற வடிவில் அடர்த்தியான புருவங்களை உருவாக்கி கொள்கின்றனர். இருப்பினும் பெண்கள் தங்கள் புருவத்தை தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் அடர்த்தியாக பெற சில குறிப்புகள்.
* தேங்காய் எண்ணெய்யை தினமும் புருவங்களின் மீது தடவி வர, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மயிர்கால்கள் வலுபெற்று புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
* விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் புருவங்களில் உள்ள முடிகள் நன்கு அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி வந்தால், உங்கள் புருவ அமைப்பில் நல்ல மாற்றத்தை காண முடியும். உடலும் குளிர்ச்சி அடையும்.
* தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் மென்மையாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் புருவ வளர்ச்சி தூண்டப்படும்.
* கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதை கண்கூடாக காணலாம்.
* முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு காலத்திற்கு செய்து வந்தால், புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதை காண முடியும்.
* வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பின்பு பேஸ்ட் போல அரைத்து, புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதை காணலாம்.