என் மலர்

    ஆரோக்கியம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினமும் ஏதாவது ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
    • எந்த கீரையில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

    கீரை வகைகள் மனிதனுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றன. இதில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

    புதினா, கொத்தமல்லி... புதினா கீரையில் போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்சியம் 200 மி.கி., இரும்புச் சத்து 15.6 மி.கி., வைட்டமின்கள் ஏ,பி,சி சிறிதளவு உள்ளன. இது ரத்த சோகையைப் போக்க வல்லது.

    கொத்தமல்லி கீரையில் கால்சியம் 184 மி.கி., இரும்புச் சத்து 1042 மி.கி., வைட்டமின் ஏ 8,918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி,சி, உள்ளன. இது பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்கும்.

    * முளைக்கீரையில் இரும்புச் சத்து 22.9 மி.கி., கால்சியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும் திறனுள்ளது.

    * அகத்திக் கீரையில் கால்சியம் 1,130 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 3.9 மி.கி., வைட்டமின் ஏ 5,400 மைக்ரோ கிராம் உள்ளன. வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன.

    * பொன்னாங்கண்ணி கீரையில் இரும்புச் சத்து 1.63 மி.கி, கால்சியம் 510 மி.கி, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன.

    * பசலைக் கீரையில் வைட்டமின் ஏ 5,580 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து 1.14 மி.கி., பொட்டாசியம் 306 மி.கி போன்றவை உள்ளன.

    * வெந்தயக் கீரையில் கால்சியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2,340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93 மி.கி. உள்ளன.

    * புளிச்ச கீரையில் இரும்புச் சத்து 2.28 மி.கி, வைட்டமின் ஏ 2,898 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன.

    * முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ 6,780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்சியம் 440 மி.கி., பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி போன்றவை உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். இது பார்வைக் கோளாறுகளை தடுக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெலிதான தோற்றத்தைக் கொடுப்பதால் இளம்பெண்கள் இதை விரும்பி அணிகின்றனர்.
    • ஷேப்வேர்களை அடிக்கடி பயன்படுத்துவது பெண்களின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஷேப்வேர் அணியும் பெண்கள் அசவுகரியம் காரணமாக கழிவறைகளை பயன்படுத்தாமலேயே இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகலாம். இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரித்து, பாதிப்பை ஏற்படுத்தும். கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெறுவதற்காக, தற்போதைய இளம்பெண்கள் தேர்ந்தெடுக்கும் பல வழிமுறைகளில் ஒன்று 'ஷேப்வேர்'. இது வயிறு, இடுப்பு, தொடைகள் போன்ற பகுதிகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி, அவற்றின் அளவு அதிகரிக்காமல் தடுக்கும் உள்ளாடை வகையாகும். மெலிதான தோற்றத்தைக் கொடுப்பதால் இளம்பெண்கள் இதை விரும்பி அணிகின்றனர். எனினும், ஷேப்வேர்களை அடிக்கடி பயன்படுத்துவது பெண்களின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்.

    நுரையீரல் பாதிப்பு: ஷேப்வேர், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை சுருக்குவதன் மூலம் ஏற்படும் அழுத்தம் நுரையீரலை சென்றடைகிறது. இதனால் நுரையீரல் செயல்பாடு பாதிப்படைந்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். நுரையீரலின் இயக்கம் குறைந்தால் சுவாசப் பிரச்சினை உருவாகும்.

    ரத்த ஓட்டம்: இறுக்கமான ஷேப்வேர் சில சமயங்களில் சருமத்திலும், தசைகளிலும் மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்கிறது. இவ்வாறு அழுத்தம் ஏற்பட்ட இடங்களில் அதிக ரத்த ஓட்டம் தேவைப்படும். அதனால், இதயம் அதிகமான ரத்தத்தை அந்த இடத்திற்கு விரைவாகச் செலுத்தும். தொடர்ச்சியான மற்றும் வழக்கமான ரத்த ஓட்டம் மாறி, ரத்தத்தில் தேவையற்ற ரத்தக் கட்டிகள் உருவாகுவதற்கு இது காரணமாக அமைகிறது.

    சிறுநீரகப் பிரச்சினை: ஷேப்வேர் அணியும் பெண்கள் அசவுகரியம் காரணமாக கழிவறைகளை பயன்படுத்தாமலேயே இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகலாம். இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரித்து, பாதிப்பை ஏற்படுத்தும்.

    கால்களில் உணர்வின்மை: ஷேப்வேர் தொடைகளில் அணியும்போது ஏற்படும் சுருக்கத்தின் அழுத்தம் தசைகளை இறுக்கி நரம்புகளை அழுத்துகிறது. இதனால் கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. கால்களில் உணர்வின்மை, கூச்சம், தசைப் பிடிப்புகள் முதலியவை உருவாகின்றன. மேலும் இது கால்களில் வீக்கத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

    செரிமானக் கோளாறு: ஷேப்வேர் உடலின் நடுப்பகுதியில் உள்ள தசைகளை மட்டுமில்லாமல், உள் உறுப்புகள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. அந்த அழுத்தம் காரணமாக வயிற்றுப் பகுதியில் உள்ள பெருங்குடல் வழியாக உணவு செல்லும் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. 'இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய்' ஷேப்வேர் பயன்படுத்துபவர்கள் அனுபவிக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும்.

    தசைகள் வலுவிழக்கிறது: ஷேப்வேர் அணியும்போது ஏற்படும் அழுத்தம், தசைகளை தளர்த்தி, அவற்றின் செயல்பாட்டை குறைத்து, பலவீனப்படுத்தி வலுவிழக்கச் செய்கிறது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோதுமை ரவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
    • கோதுமை ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1/4 கப்

    வெல்லம் - 1/2 கப்

    பால் - 1 கப்

    உப்பு - 1 சிட்டிகை

    நெய் - 1 தேக்கரண்டி

    முந்திரிப்பருப்பு - தேவையான அளவு

    ஏலக்காய் - 1

    செய்முறை

    குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    அதே குக்கரில் கோதுமை ரவையை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

    அடுத்து அதில் கப் - 1 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3-4 விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்.

    கோதுமை ரவை மிருதுவாக வெந்தவுடன், வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்து கரைக்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் வெந்த கோதுமை ரவையுடன் வடிகட்டி சேர்த்து கலக்கவும். 1/2 கப் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.

    குறைந்த தீயில் 5 நிமிடம் பாகு சுண்டும் வரை கொதிக்க விடவும்.

    பாலை, மெதுவாக சேர்த்து கலக்கவும்.

    ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் சூடு செய்யவும்.

    அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஆரிய பிறகு கெட்டியாகும் அதனால் அதற்கு தகுந்தவாறு அடுப்பை அணைக்கவும்.

    இப்போது சூப்பரான கோதுமை ரவை பாயாசம் ரெடி.

    தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.

    பாயசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், சிறிது காய்ச்சிய பால் சேர்த்து சரி செய்து கொள்ளவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    https://www.maalaimalar.com/cinema

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடலில் பித்தம் அதிகமானால், இளநரை ஏற்படும்.
    • நெல்லிக்காய் தலைப்பகுதியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    நெல்லிக்காய் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்,

    வெந்தயப் பொடி, கறிவேப்பிலைப் பொடி - தலா 1 டேபிள்ஸ்பூன்,

    தயிர் - 1/2 கப்.

    செய்முறை:

    நெல்லிக்காய் பவுடருடன், வெந்தயப் பொடி, கறிவேப்பிலைப் பொடி மற்றும் தயிர் சேர்த்துக் கலந்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். அரை மணி நேரத்துக்கு மேல் ஊறவைக்கக் கூடாது.

    பலன்கள்:

    * உடலில் பித்தம் அதிகமானால், இளநரை ஏற்படும். நெல்லிக்காயில் உள்ள குளிர்ச்சித்தன்மை, சிறுவயதில் ஏற்படும் நரைப் பிரச்னையைப் போக்கும். நெல்லிக் காய் முடியின் கருமை தன்மையைத் தக்கவைப்பதோடு, அடர்த்தியையும் அதிகரிக்கும்.

    * நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், செல்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்து, முடி உதிர்வதைத் தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். அது மட்டுமின்றி இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கனிமச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள், முடியின் வேர்ப்பகுதியை வலிமைப்படுத்தி, தலைப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

    * நெல்லிக்காய் தலைப்பகுதியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். தலைமுடிப்பரப்பில் உள்ள பாக்டீரியாவை அழிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால், பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்றவை தடுக்கப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
    • குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது.

    குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

    அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது. காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது.

    அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம். உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும்.

    இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும். அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.

    அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உத்தித திரிகோணாசனம் கால்களைப் பலப்படுத்தும் அருமையான ஆசனம்.
    • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை இந்த ஆசனம் மேம்படுத்துகிறது.

    நாம் இதுவரை அர்த்த திரிகோணாசனம், திரிகோணாசனம் மற்றும் பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உத்தித திரிகோணாசனம். வடமொழியில் 'உத்தித' என்றால் 'நீட்டுதல்' என்று பொருள், அதாவது, இது காலை நன்றாக நீட்டிய நிலையில் செய்யப்படும் திரிகோணாசனம், அதாவது, உத்தித திரிகோணாசனம். இது ஆங்கிலத்தில் Extended Triangle Pose என்று அழைக்கப்படுகிறது.

    உத்தித திரிகோணாசனம் கால்களைப் பலப்படுத்தும் அருமையான ஆசனம். வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளையும் இந்த ஆசனம் மேம்படுத்துகிறது.

    பலன்கள் :

    நுரையீரலைப் பலப்படுத்துகிறது. கழுத்து மற்றும் முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. கழுத்து மற்றும் தோளில் உள்ள இறுக்கத்தைப் போக்குகிறது. தோள்களை விரிக்கிறது. முதுகுவலியைப் போக்குகிறது. இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது; இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது

    சீரணத்தை மேம்படுத்துகிறது. வாயுத் தொல்லையைப் போக்குகிறது. மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் வலியைப் போக்குகிறது. மன அழுத்தைத்தைப் போக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் மூன்று முதல் நான்கு அடி இடைவெளி விட்டு நிற்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். கைகள் தோள்களுக்கு நேராக இருக்க வேண்டும். உள்ளங்கைகள் தரையைப் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். இடது கால் பாதத்தை சற்று வலது புறமாகத் திருப்பவும். வலது பாதத்தை 90 degree கோணத்தில் வெளிப்புறம் திருப்பவும்.

    மூச்சை வெளியேற்றியவாறே மேல் உடலை வலது பக்கமாக சாய்க்கவும். வலது கையால் வலது கணுக்காலைப் பற்றவும். மாறாக, வலது கையைத் தரையிலும் வைக்கலாம். இடது கையை மேல் நோக்கி உயர்த்தவும். இடது கையை இடது தோளுக்கு நேராக உயர்த்தவும். தலையை இடது கை கட்டை விரலைப் பார்க்கும் வண்ணம் திருப்பவும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், நிமிர்ந்து மாற்றுப் பக்கம் செய்யவும். தொடர் பயிற்சியில் நேரத்தை ஒரு நிமிடமாக அதிகரிக்கலாம்.

    தீவிர முதுகுத்தண்டு கோளாறுகள், இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோடைகாலத்தில் கிடைக்கும் முலாம் பழத்தில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று குளுகுளு முலாம் பழம் கிரனிதா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    முலாம் பழம் - 1 (நடுத்தர அளவு)

    எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி

    தண்ணீர் - 1 கப்

    சர்க்கரை - ½ கப்

    ஐஸ் கட்டிகள் - 8

    செய்முறை:

    முலாம் பழத்தை சுத்தம் செய்து, அதன் மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.

    சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சி ஆற வைக்கவும்.

    பின்பு நறுக்கிய முலாம் பழம், எலுமிச்சம் பழச்சாறு, சர்க்கரை பாகு ஆகியவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

    அரைத்த கலவையை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்றாக மூடி, பிரீசரில் வைக்கவும்.

    ஒரு மணி நேரம் கழித்து, முள்கரண்டி கொண்டு அதை முழுவதுமாகக் கிளறவும்.

    பின்னர் அந்த முலாம் பழக் கலவையை அழகான பவுலில் போட்டு, அதன்மேல் தேன் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • ஆண்டுக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    நீரிழிவு நோயை போல இதய நோயால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' எனப்படும் கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் ஏற்படும் மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் கை, கழுத்து, தாடை பகுதியில் வலி, மார்பில் குத்துவது போன்ற வலி, தலைச்சுற்றல், பதற்றம், வியர்வை போன்ற மாரடைப்புகளுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாது.

    இரைப்பை பகுதியில் அசவுகரியம் ஏற்படுவதுபோல் சாதாரணமாக தெரியும். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரு சில அறிகுறிகள் வெளிப்பட்டாலும் சாப்பிட்ட உணவு ஏதோ ஒத்துக்கொள்ளவில்லை என்று வாயு தொல்லை, அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சினையாகத்தான் பலரும் கருதுகிறார்கள்.

    பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள் இத்தகைய அறிகுறிகளை எளிதில் உணரமாட்டார்கள். ஏனெனில் அவர்களின் நரம்புகள் வலி பற்றிய அறிகுறிகளை சட்டென்று வெளிப்படுத்தாது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவது மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாமலேயே சில சமயங்களில் மாரடைப்பு ஏற்படக்கூடும்.

    'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்படுவது எப்படி தெரியும்?

    வயிற்றின் மேல் பகுதியிலோ அல்லது மார்பின் மையப் பகுதியிலோ இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண அறிகுறிகளோ, வலியோ 20 முதல் 25 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியம். ஈ.சி.ஜி. பரிசோதனை எடுத்துக்கொள்வதும் முக்கியமானது. அதன் மூலமே நோய் பாதிப்புக்கான அறிகுறிகளை கண்டறிந்துவிடலாம். டிரோபோனின் டி பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.

    இது இரத்தத்தில் உள்ள டிரோபோனின் ஐபுரோடீன்களின் தன்மையை அளவிடும். இந்த புரதங்கள் இதய தசை சேதமடைவதை சுட்டிக்காட்டும். இதயம் எவ்வளவு சேதமடைகிறதோ, அந்த அளவுக்கு ரத்தத்தில் ட்ரோபோனின் டி அளவு அதிகமாக இருக்கும்.

    இதுபோன்ற அசவுகரியம் தோன்றினாலோ, சிறிது நேரத்திற்கு பிறகு மறைந்தாலோ இவை இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

    35 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் எக்கோ கார்டியோகிராம் ஆகியவை அதில் உள்ளடங்கி இருக்க வேண்டும். நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு கொண்டவர்கள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் கொண்டவர்கள், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்கள், ஏற்கனவே இதய நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. முதல் முறை 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டது தெரியாமலேயே கடந்து சென்றுவிட்டால், இரண்டாவது முறை ஏற்படும்போது கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீச்சல் பயிற்சி மாதவிலக்கு கோளாறுகளை குணமாக்குவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
    • எல்லா வயது பெண்களும் நீச்சலை கற்றுக் கொள்ளலாம்.

    உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் செயல்பட வைக்கும் பயிற்சி நீச்சல் ஆகும். எல்லா வயது பெண்களும் நீச்சலை கற்றுக் கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் செய்யக் கூடிய பயிற்சிகளில் நீச்சல் பிரதானமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். சிறு வயதில் இருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் வலுவாகவும், ஆரோக்கியம் சீராகவும் இருக்கும்.

    உடல் பருமனை குறைக்க உதவும் பயிற்சிகளில் நீச்சல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சராசரியாக ஒரு மணி நேரம் பெண்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்போது, அவர்களது உடலில் 400 கிலோ கலோரி எரிக்கப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து எடை சீராகிறது. தினமும் நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கு, வயிற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினை படிப்படியாக குறையும்.

    மெனோபாஸ் காலங்களில் உடல் சோர்வு, வெறுப்பு, எதிலும் ஈடுபாடு ஏற்படாத மனநிலை, கவலை போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அந்த சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக நீச்சல் பயிற்சி அமைகிறது. தினமும், அரைமணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் மனம் லேசாகிறது. நீந்தும்போது மனச்சிதறல் நீங்கி, மனம் ஒருநிலை அடைந்து, அமைதி ஏற்படும். அதன் மூலம் இரவில் ஆழ்ந்த உறக்கம் கண்களை தழுவும்.

    நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சினைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் சீராவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பிரசவத்துக்கு தயாராகும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் பிரசவ கால நெருக்கடிகள் அகன்று, சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.

    நீச்சல் நல்ல மூச்சுப்பயிற்சியாக அமைகிறது. அதன் மூலம் நுரையீரல் வலுப்பெற்று சுவாச பிரச்சினைகள் நீங்குவதுடன், மன அழுத்தமும் குறைகிறது. நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்போது இதயம் சீராக இயங்குவதால், ரத்த ஓட்டமும் சீராகும். அதன் மூலம் முதுகு, மூட்டுகள், தண்டுவடம் ஆகியவை வலுவாகின்றன. நீச்சல் பயிற்சி காரணமாக குடல் இயக்கம் சீரடைவதால், செரிமான சக்தி தூண்டப்பட்டு, அஜீரண கோளாறு அகலும். பசியைத் தூண்டச் செய்வதுடன், மலச்சிக்கல் பிரச்சினையும் நீங்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேமியா, ரவையில் உப்புமா மட்டுமல்ல பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    சேமியா - 2 கப்

    ரவை - 1/2 கப்

    பாசிப்பருப்பு - 1/2 கப்

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நெய் - தேவையான அளவு

    மிளகு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    முந்திரி - 10

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    கறிவேப்பிலை

    செய்முறை:

    * வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

    * அதே வாணலியில் சேமியாவையும், ரவையையும் தனித்தனியாகச் சூடு வரும்படியாக வறுத்துக்கொள்ளவும்.

    * பாசிப்பருப்பை நன்றாக கழுவி விட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் குழையாமல் வேக வைக்கவும்.

    * ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்த பின் ஒரு பங்கு சேமியா & ரவைக்கு இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு மூடி வைக்கவும்.

    * பாசிப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்குத் தண்ணீர் ஊற்றவேண்டாம்.

    * தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

    * மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.

    * சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * ரவை போட்டு நன்றாக கிளறிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

    * ருசியான ரவா சேமியா பொங்கல் தயார்.

    * இதற்கு சாம்பார் அருமையான இணையாகும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo