search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • மத்திய பட்ஜெட்டில் செல்போன் மற்றும் முக்கிய பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
    • அப்போது பேசிய நிதி மந்திரி, இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என கூறினார்.

    பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார்.

    அப்போது பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன்களுக்கான விலையை ஆப்பிள் நிறுவனம் 3 முதல் 4 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்மூலம் குறைந்தது 5,000 முதல் 6,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும்.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 ஆகியவற்றின் விலையில் 3,000 ரூபாய் குறைக்கப்படுகிறது.

    புதிய விலை விவரங்கள்:

    ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 53 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 93 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 900

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 6,000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜியோ அதன் ஜியோ ஏர் ஃபைபர் திட்டங்களில் புதிய இலவச சலுகையை அறிவித்துள்ளது.
    • இலவச சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

    ஜியோ ஒரு புதிய ஃப்ரீடம் ஆஃபரை (Freedom Offer) அறிவித்துள்ளது. அதில் ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களில் 30 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.

    ஜியோ அதன் ஜியோ ஏர் ஃபைபர் (JioAirFiber) திட்டங்களில் புதிய இலவச சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை பெறுவோருக்கு 30 சதவீதம் தள்ளுபடியை ஜியோ வழங்குகிறது. இதன் மூலம் ரூ.1000 கட்டண சலுகையை வழங்குகிறது. ஆனால் இந்த சலுகை புதிய பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

    நீங்கள் ஏற்கனவே இருக்கும் ஜியோ ஏர் ஃபைபர் பயனராக இருந்து, புதிய திட்டத்தை வாங்கினால் அல்லது வேறொரு திட்டத்தை மேம்படுத்தினால், நீங்கள் இந்த ஆஃபருக்குத் தகுதிபெற மாட்டீர்கள். ஜியோ வழங்கும் 30 சதவீத தள்ளுபடியானது ரூ.1,000 இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகும். மேலும் இது புதிய பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    நீங்கள் இப்போது ஜியோ ஏர் ஃபைபர் சேவைக்கு முன்பதிவு செய்திருக்கிறீர்கள், இன்னும் உங்களுக்காக பிராட்பேண்ட் இணைப்பு இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் இந்த சலுகையை பெறலாம்.

    இலவச சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்தச் சலுகை ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 15 வரை வழங்கப்படுகிறது.

    • ரெனோ 12 ப்ரோ 5ஜி மாடல் ஜூலை 18 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது.
    • ஒப்போ ரெனோ 12 மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக ரெனோ 12 ப்ரோ 5ஜி மாடல் ஜூலை 18 ஆம் தேதி விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது ரெனோ 12 விற்பனைக்கு வந்துள்ளது.

    இந்தியாவில் ரெனோ 12 மாடல் சன்செட் பீச், மேட் பிரவுன் மற்றும் ஆஸ்ட்ரோ சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 32,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட், ஒப்போ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

    புது ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் அதிகபட்சம் 9 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் 3 மாத யூடியூப் பிரீமியம் மற்றும் கூகுள் ஒன் சந்தா வழங்கப்படுகிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை ரெனோ 12 மாடலில் 6.7 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர், மாலி G615 MC2 GPU, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த கலர் ஓஎஸ் 14.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    • ஆப்பிள் இந்த அம்சத்திற்காக ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
    • உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் குழந்தைகளுக்கு அவர்களின் சுதந்திரத்தை கொடுக்கும்.

    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் ஃபார் யுவர் கிட்ஸ் (For Your Kids) அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் ஃபார் யுவர் கிட்ஸால் உங்கள் குழந்தைகளுடன் தொடர்பில் இருக்கவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் முடியும்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியை கண்காணிக்கவும், மேலும் ஆப்பிள் வாட்ச்சின் மற்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்த அனுமதிக்கும்.

    இதன் மூலம் உங்கள் குழந்தைகள், தகவல்கள் மற்றும் போன் அழைப்புகள் மற்றும் நீங்கள் வழக்கமாக ஆப்பிள் வாட்சில் பெறும் அனைத்து உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அம்சங்களையும் பெறலாம்.

     

    இந்த அம்சம் இப்போது இந்தியாவில் வழங்கப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் SE மற்றும் ஆப்பிள் வாட்ச் 4 அல்லது அதற்குப் பிறகு வெளியான மாடல்களில் இந்த அம்சம் வேலை செய்யும். வாட்ச் ஓஎஸ் 7 அல்லது அதற்குப் பிறகு வந்த இயங்குதளங்கள் மற்றும் ஐஓஎஸ் 14 அல்லது அதற்குப் பிறகு வெளியான ஓஎஸ் கொண்ட ஐபோன் மாடல்களில் இந்த அம்சம் இயங்கும்.

    தற்போது, ஆப்பிள் இந்த அம்சத்திற்காக ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதாவது, இந்த அம்சம் செயல்பட, நீங்கள் ஆப்பிள் வாட்சுக்கான புதிய ஜியோ இணைப்பைப் பெற வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் அமைக்க, குறைந்தபட்சம் பெற்றோரில் ஒருவராவது ஐபோன் பயனராக இருக்க வேண்டும்.

    உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் குழந்தைகளுக்கு அவர்களின் சுதந்திரத்தை கொடுக்கும். அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கவும் அனுமதிக்கும்.

    ஆப்பிள் வாட்சிலிருந்து குழந்தைகள் எந்த தொடர்பை இணைக்கிறார்களோ அதனை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும். அதே போல் தங்கள் குழந்தைகளின் இருப்பிடத்தை ஐபோனில் இருந்து கண்காணிக்க முடியும்.

    • லிமிட்டெட் எடிஷன் மாடல் இருவித நிறங்களில் கிடைக்கும் என தகவல்.
    • சியோமி 14 சிவி கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

    சியோமி நிறுவனம் தனது சியோமி 14 ஸ்மார்ட்போனினை லெய்கா பிராண்டு கேமரா சென்சார்களுடன் குரூயிஸ் புளூ டூயல் ஸ்லைஸ் எடிஷன், மேட்சா கிரீன் நானோ-டெக் வீகன் லெதர் எடிஷன் மற்றும் ஷேடோ பிளாக் கிளாசிக் மேட் எடிஷன் போன்ற வெர்ஷன்களில் விற்பனை செய்து வருகிறது. இவை கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

    இந்த நிலையில், சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் பான்டா டிசைன் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனுடன் ரெட்மி பேட் SE 4ஜி மற்றும் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி போன்ற சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் மிரர் கிளாஸ் மற்றும் வீகன் லெதர் வெர்ஷன் கொண்டிருக்கும். இத்துடன் பின்க், மோனோக்ரோம் மற்றும் புளூ எடிஷன்களும் விற்பனைக்கு கிடைக்கும். சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் தொடர்பாக அந்நிறுவனம் டீசர்களை வெளியிட்டு வருகிறது.

    இந்திய சந்தையில் சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் மாடல் ப்ளிப்கார்ட், Mi வலைதளங்கள் தவிர Mi ஹோம் ஸ்டோர் மற்றும் இதர விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூன்று புது ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • இரு ரீசார்ஜ்கள் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தான் தனது ரீசார்ஜ்களின் விலையை உயர்த்தியது. விலை உயர்வு காரணமாக பாதிக்கப்பட்ட பயனர்களில் பலர் வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில், ஜியோ நிறுவனம் புதிய பிரீபெயிட் ரீசார்ஜ்களை அறிவித்து இருக்கிறது.

    புதிய ரீசார்ஜ்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களுக்கான சந்தா வழங்குகிறது. இத்துடன் ஜியோ சாவன் ப்ரோ சந்தாவும் வழங்கப்படுகிறது. ஜியோவின் புதிய ரீசார்ஜ்களின் விலை ரூ. 329, ரூ. 949 மற்றும் ரூ. 1049 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    பலன்களை பொருத்தவரை ஜியோ ரூ. 329 சலுகையில் தினமும் 1.5 ஜிபி 4ஜி+டேட்டா, ஜியோ சாவன் ப்ரோ சந்தா உள்ளிட்ட பலன்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 949 சலுகை தினமும் 2 ஜிபி 4ஜி+, அன்லிமிட்டெட் 5ஜி+ டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஜியோ ரூ. 1049 சலுகையில் தினமும் 2ஜிபி 4ஜி+ மற்றும் அன்லிமிட்டெட் 5ஜி+ டேட்டா, சோனிலிவ், ஜீ5 சந்தா உள்ளிட்ட பலன்கள் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ்களில் வழங்கப்படும் இலவச டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். 

    • ஐபோன் 16 பயனாளர்களுக்கு எளிதாக படம் மற்றும் வீடியோ எடுக்க கீழ் வலதுபுறத்தில் புதிய கேப்சர் பட்டன் சேர்க்கப்படுகிறது.
    • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஒரு சூப்பர் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    பாரம்பரியத்தை பின்பற்றி இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என்ற 4 வகையான ஐபோன்களை செப்டம்பரில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் 16 மாடலில் ஆப்பிள் நிறுவனம் பார்டர் ரிடக்ஷன் ஸ்டிரக்சர் எனும் (BRS) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் பெசல் அளவை குறைத்து டிஸ்பிளே அளவை அதிகரிக்கும். ப்ரோ மாடல்கள் இன்று வரை எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    ஐபோன் 16 பயனாளர்களுக்கு எளிதாக படம் மற்றும் வீடியோ எடுக்க கீழ் வலதுபுறத்தில் புதிய கேப்சர் பட்டன் சேர்க்கப்படுகிறது. இந்த பட்டன் புகைப்படம் எடுக்க மற்றும் வீடியோகிராஃபி அனுபவத்தை மேம்படுத்தும்.

    இந்த ஆண்டு ஆப்பிள் தனது என்ட்ரி லெவல் ஐபோன் 16-ஐ மாத்திரை வடிவில் உயர்த்தப்பட்ட மேற்பரப்பில் கேமரா சென்சார்களை செங்குத்தாக பொருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் வைடு மற்றும் அல்ட்ரா வைடு கேமராக்களுடன் தனித்தனி வளையங்கள் உள்ளன.

    ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் மேம்படுத்தப்பட்ட 48MP அல்ட்ரா வைட் கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது லோ-லைட் சூழலிலும் சிறப்பான புகைப்படம், வீடியோக்களை எடுக்க உதவும். இத்துடன் அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டு 48MP தரத்தில் ProRAW ரெசல்யூஷனில் பதிவு செய்ய அனுமதிக்கும்.

    கூடுதலாக, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஒரு சூப்பர் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஆப்டிகல் ஜூம் திறன்களை 5x ஆக உயர்த்துகிறது. இது தற்போதைய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் மட்டுமே வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • டீசரின் படி புதிய Z9s மாடல் ஐகூ 12 போன்ற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.
    • வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    கடந்த வாரம் Z9 லைட் அறிமுகத்தை தொடர்ந்து புதிய ஐகூ Z9s வெளியீட்டை ஐகூ உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஐகூ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மர்யா வெளியிட்டுள்ளார்.

    இதனை சீரிஸ் என்று ஐகூ குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து, Z9s வரிசையில் Z9s Pro மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. டீசரின் படி புதிய Z9s மாடல் ஐகூ 12 போன்ற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

    இதில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் ரிங் எல்இடி பிளாஷ் ஆகியவை இடம்பெற்றுள்ளது. ஐகூ Z9 ப்ரோ சமீபத்தில் BIS சான்றிதழைப் பெற்றுள்ளதால், இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் Z9 சீரிசில் விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் 12GB + 256GB மெமரி ஆப்ஷன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.

    வரும் வாரங்களில் புதிய ஐகூ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உட்பட கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும்.

    • இரட்டை மாத்திரை வடிவ கேமரா கட்அவுட்களுடன் கூடிய அசத்தலான வடிவமைப்பை காட்டுகிறது.
    • பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல் கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மற்றும் பிக்சல் 9 ப்ரோவின் வெளியீட்டு விவரங்களை கூகுள் ஒருவழியாக வெளியிட்டது. கூகுள் நிறுவனம் பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் 13-ந் தேதி வெளியிட உள்ளது.

    கூகுள் எக்ஸ் தளத்தில், வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டது. டீஸர்களின் படி புது சாதனங்கள் ஜெமினி ஏஐ வசதி கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது.

    அதிகாரப்பூர்வ டீசர்களின் படி இரட்டை மாத்திரை வடிவ கேமரா கட்அவுட்களுடன் கூடிய அசத்தலான வடிவமைப்பை காட்டுகிறது. கேமராக்கள் பின்புற பேனலின் மேல்-இடது மூலையில் செவ்வக வடிவம் கொண்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்வானது இந்திய நேரப்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு 10.30-க்கு நடைபெற உள்ளது. இந்த தகவலைத் தவிர, வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய வேறு எந்த தகவலையும் கூகுள் வெளியிடவில்லை. இருப்பினும், ஆன்லைனில் புது சாதனங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டீசரில் ஸ்மார்ட்போனின் உள்பக்க திரையில் கேமராவை வெளிப்படுத்தவில்லை. என்றாலும், திரையின் இடது பக்கத்தில் பஞ்ச்-ஹோல் ரக செல்பி கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்பிடுகிறது.

    பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல் அப்சிடியன் (Obsidian) மற்றும் போர்சிலைன் (Porcelain) கலர்களில் கிடைக்கிறது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை 256 GB மாடலுக்கு EUR1,899 (தோராயமாக ரூ. 1,68,900) மற்றும் 512 GB மாடலுக்கு EUR 2,029 (தோராயமாக ரூ. 1,80,500) ஆகும்.

    பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல் கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது. இதன் பேனலில் டிரிபிள் ரியர் கேமராக்கள், ஃபிளாஷ் மற்றும் லேசர் ஆட்டோஃபோகஸ் கொண்ட சிறிய கேமரா உள்ளது.

    வரவிருக்கும் பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ XL ஆகியவை ஒரே மாதிரியான மூன்று 50MP பின்புற கேமரா அமைப்பை பகிர்ந்து கொள்ளும். ஆனால் திரை அளவு மற்றும் பேட்டரி திறன் ஆகியவற்றில் வேறுபடும். இது பயனர்களுக்கு நிலையான மற்றும் பெரிய மாடலுக்கு இடையே தேர்வை வழங்குகிறது.

    பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் அப்சிடியன் (Obsidian), போர்சிலைன் (Porcelain), ஹசல் (Hazel) சேஜ் கிரீன், (sage green) மற்றும் பின்ர் (Pink) போன்ற கலர்களில் கிடைக்கிறது.

    இதன் எதிர்பார்க்கப்படும் விலைகள் 128 ஜிபிக்கு EUR1,099 (தோராயமாக ரூ. 97,500), 256 ஜிபிக்கு EUR1,199 (தோராயமாக ரூ. 1,06,400), மற்றும் 256 ஜிபிக்கு EUR1,329 (தோராயமாக ரூ. 1,18,000). இதுதொடர்பான விரிவான தகவல்கள் வெளியீட்டின்போது, கூகுள் பிக்சல் வாட்ச் 3 ஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நத்திங் போன் 2a போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும்.
    • இந்த மாடலிலும் க்ளிம்ப் இன்டர்பேஸ் வழங்கப்படும்.

    நத்திங் நிறுவனம் விரைவில் தனது புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. நத்திங் போன் 2a பிளஸ் என அழைக்கப்படும் புது மாடல் வருகிற 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போன் வெளியீடு தொடர்பான டீசர்களை நத்திங் நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசர்களில் புதிய நத்திங் போன் 2a பிளஸ் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் நத்திங் போன் 2a போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    தோற்றத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் நிலையில், நத்திங் போன் 2a பிளஸ் மாடலில் டிமென்சிட்டி 8300 அல்லது ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் என இரண்டில் ஒன்று வழங்கப்படும் என்று தெரிகிறது. ஒரே டிசைன் தவிர நத்திங் போன் 2a பிளஸ் அளவில் சற்று பெரியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடலிலும் க்ளிம்ப் இன்டர்பேஸ் வழங்கப்பட்டு இருக்கும்.

    புதிய பிளஸ் ரக மாடல் நத்திங் போன் 2 மற்றும் மிட் ரேஞ்ச் போன் 2a மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    • அமேசன் நிறுவனம் இன்றும் முதல் நாளை வரை மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
    • அமேசான் 11,101 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது.

    அமேசான் நிறுவனம் இன்றும் முதல் நாளை வரை மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அமேசான் "பிரைம் டே" என பெயரிட்டு தள்ளுபடியை அறிவித்துள்ளது. அமேசான் சந்தாதாரரர்கள் இந்த சலுகையை பெற முடியும்.

    ஐ-போன் 13 அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் 59,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அமேசான் 11,101 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. இதனால் 48799 ரூபாய்க்கு அமேசானில் வாங்க முடியும். எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கார்டுகள் வைத்திருப்பவர்கள் மேலும் 750 ரூபாய் வரை சலுகை பெறலாம். 128GB ஸ்டோரேஜ், ஏ15 பயோனிக் சிப் பிராசரர், 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே வசதி கொண்டதாகும்.

    • கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் பாதிப்பு.
    • பாதிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு.

    விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த பாதிப்பு விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

    மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த பாதிப்பு ஏற்பட என்ன காரணம் என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பாதிப்பை பயனர்கள் தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் கிரவுட்ஸ்டிரைக் ஈடுபட்டுள்ளது. பாதிப்பு சரி செய்வது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    ×