search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
    • இதர வங்கி சார்ந்த சலுகைகளை பெற முடியும்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 11 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து ஒன்பிளஸ் 11 விலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ரூ. 56 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய விலை குறைப்பை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இதில் ரூ. 3 ஆயிரம் விலை குறைப்பு மற்றும் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி கூப்பன் அடங்கும்.

    இதுதவிர விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது அமேசானில் வாங்கும் போது எக்சேன்ஜ் சலுகை அல்லது இதர வங்கி சார்ந்த சலுகைகளை பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் எடர்னல் கிரீன் மற்றும் டைட்டன் பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     


    ஒன்பிளஸ் 11 அம்சங்கள்:

    6.7 இன்ச் 3216x1440 பிக்சல் QHD+ 2.75D flexible curved AMOLED LTPO டிஸ்ப்ளே

    120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, டால்பி விஷன்

    கார்னிங் கொரில்லா கிலாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    8 ஜிபி LPDDR5X ரேம், 128 ஜிபி UFS 4.0 மெமரி

    16 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி, 512 ஜிபி UFS 4.0 மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    48MP அல்ட்ரா வைடு கேமரா

    32MP டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • இந்த டேப்லெட் மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • ரியல்மி பேட் 2 மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பேட் 2 வைபை மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய P1 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் இந்த டேப் அறிமுகமாகி இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி பேட் 2 வைபை மாடலில் 11.5 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    7.2mm அளவில் மிக மெல்லிய மெட்டல் பாடி மற்றும் குளோயிங் ஸ்பைஸ் டிசைன் கொண்டிருக்கும் ரியல்மி பேட் 2 வைபை மாடல் 8360 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

     


    ரியல்மி பேட் 2 வைபை அம்சங்கள்:

    11.5 இன்ச் 2K 2000x1200 LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர்

    Arm Mali-G57 MC2 GPU

    6 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4

    8MP பிரைமரி கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்

    குவாட் ஸ்பீக்கர்கள்

    வைபை, ப்ளூடூத் 5.3, யு.எஸ்.பி. டைப் சி

    8360 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    ரியல்மி பேட் 2 வைபை மாடல் இமேஜினேஷன் கிரே மற்றும் இன்ஸ்பிரிஷேன் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    • ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய P1 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ரியல்மி P1 மற்றும் ரியல்மி P1 ப்ரோ என இரு மாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளது. புதிய ரியல்மி P1 சீரிஸ் மாடல்களில் ஸ்பார்க்லிங் ஃபீனிக்ஸ் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் பேஸ் வேரியண்டில் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர், P1 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன. இத்துடன் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களுடன் ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி மேட் 2 வைபை மற்றும் ரியல்மி பட்ஸ் T110 மாடல்களையும் அறிமுகம் செய்தது.

     


    ரியல்மி P1 அம்சங்கள்:

    ரியல்மி P1 5ஜி மாடலில் 6.67 இன்ச் Full HD+ 2400x1080 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இதில் உள்ள ரெயின்வாட்டர் டச் அம்சம், ஸ்மார்ட்போன் மழையில் ஈரமானாலும் டச் ஸ்கிரீனை பயன்படுத்த வழி செய்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 5.0 ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வழங்கப்படும் என்று ரியல்மி தெரிவித்துள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரியல்மி P1 5ஜி மாடலில் 45 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் IP54 தர வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

     


    ரியல்மி P1 ப்ரோ 5ஜி மாடலில் ஒ.எஸ்., பேட்டரி, சார்ஜிங், செல்ஃபி கேமரா உள்ளிட்டவை P1 5ஜி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர ரியல்மி P1 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 6.7 இன்ச் Full HD+ கர்வ்டு OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    ரியல்மி P1 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பீகாக் கிரீன் மற்றும் ஃபீனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.

    ரியல்மி P1 ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேரட் புளூ, ஃபீனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.

    • பத்து மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.
    • IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    சியோமி நிறுவனம் இரண்டு புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சியோமி சவுண்ட் பாக்கெட் மற்றும் சியோமி சவுண்ட் அவுட்-டோர் என இவை அழைக்கப்படுகின்றன.

    இரு மாடல்களில் சியோமி சவுண்ட் அவுட்டோர் மாடல் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. பெரும்பாலான பைகளில் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இந்த ஸ்பீக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ரப்பர் மற்றும் ஸ்டிராப் இதை கைகளிலேயே சுலபமாக எடுத்து செல்ல வைக்கிறது.

     


    அளவில் சிறியதாக இருந்தாலும், இந்த ஸ்பீக்கர் அதிகபட்சம் 30 வாட் திறனில் ஆடியோவை வெளிப்படுத்துகிறது. இதற்காக இந்த மாடலில் பில்ட்-இன் சப்-வூஃபர், இரண்டு பேசிவ் ரேடியேட்டர்கள் மற்றும் டுவீட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    ப்ளூடூத் 5.4 தொழில்நுட்பம் கொண்டிருக்கும் இந்த ஸ்பீக்கர் 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்து 50 சதவீத சத்தம் வைத்து கேட்கும் படச்சத்தில் இது 12 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

     


    சியோமி சவுண்ட் பாக்கெட் மாடல் அளவில் மிகச் சிறியதாகவும், பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது. 5 வாட் திறனில் ஆடியோவை வெளிப்படுத்தும் இந்த ஸ்பீக்கரிலும் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. இதை 40 சதவீத சத்தத்தில் கேட்கும் போது பத்து மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.

    • பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள் உள்ளன.
    • மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் நோட் 40 ப்ரோ 5ஜி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் இன்பின்க்ஸ் நிறுவனத்தின் சொந்த சீட்டா X1 பவர் மேனேஜ்மெண்ட் சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 108MP பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் மாடலில் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

    முன்னதாக இரு மாடல்களும் மார்ச் மாத வாக்கில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக் மற்றும் வின்டேஜ் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வின்டேஜ் கிரீன் மற்றும் டைட்டன் கோல்டன் நிறங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

    • ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • ரியல்மி வலைதளம் சென்று புதிய விலையில் வாங்கிடலாம்.

    ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த இரண்டு வேரியண்ட்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வங்கி சலுகைகள் சேர்த்து புதிய நார்சோ ஸ்மார்ட்போனினை ரூ. 3 ஆயிரம் வரை குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

    சமீபத்தில் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல்கள் முறையே ரூ. 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

     


    தற்போதைய அறிவிப்பின் படி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்டை பயனர்கள் ரூ. 17 ஆயிரத்து 999 விலையிலும், டாப் எண்ட் வேரியண்டை ரூ. 18 ஆயிரத்து 999 விலையிலும் வாங்கிட முடியும்.

    அந்த வகையில் இரு மாடல்களுக்கும் முறையே ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை பயனர்கள் அமேசான் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளம் சென்று புதிய விலையில் வாங்கிட முடியும்.

    • ஒன்பிளஸ் நிறுவன சாதனங்கள் எதுவும் விற்பனை செய்யப்பட மாட்டாது.
    • ஏராளமான சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவன சாதனங்களை ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த சில்லறை விற்பனையாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மே 1 ஆம் தேதியில் இருந்து நாடு முழுக்க பெரும்பாலான முன்னணி ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் நிறுவன சாதனங்கள் எதுவும் விற்பனை செய்யப்பட மாட்டாது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒன்பிளஸ் டெக்னாலஜி இந்தியா விற்பனை பிரிவு இயக்குநர் ரஞ்சித் சிங்கிற்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தில் விற்பனை தொடர்பாக ஏராளமான சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    இந்தியாவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்யும் போது மிக குறைந்த லாபம் கிடைப்பதாகவும், வாரண்டி தொடர்பான சேவைகளில் கால தாமதம் ஏற்படுவதால் வாடிக்கையாளரகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களால் விற்பனை மோசமாக இருப்பதாக தெரிகிறது.

    இதனால் மே 1 ஆம் தேதி முதல் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 500 ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்வதில்லை என சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதவிர இம்மாத இறுதிக்குள் இந்த பிரச்சினைகள் குறித்து தீர்வு காண இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.
    • தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது.

    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஆப்பிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வழங்குவதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புது அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும். குறிப்பிட்ட சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் இந்த அம்சம் சீராக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் சேவையும் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.

    இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும், கண்டறிய முடியும். தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு பின் வெளியான வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூடுதலாக பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ என தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது. மேலும், காணாமல் போன சாதனம் தொலைந்து போனாலும் அதனை ஃபைண்ட் மை டிவைஸ் மூலம் கண்டுபிடித்துவிட முடியும்.

    புதிய ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கின் நோக்கம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தான் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போன சாதனங்களின் லொகேஷன் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் கூகுள் மற்றும் இதரானவர்கள் லொகேஷன் விவரங்களை இயக்க முடியாது.

    • நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் ட்ரூசின்க் தொழில்நுட்பம் உள்ளது.
    • இதில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் 1.46 இன்ச் ஹைப்பர் விஷன் AMOLED டிஸ்ப்ளே, 466x466 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 600 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மெட்டல் பில்டு கொண்டிருக்கும் நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் சீராக இயங்கும் கிரவுன் உள்ளது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் ட்ரூசின்க் தொழில்நுட்பம் உள்ளது. இதன் மூலம் இடையூறு இல்லாமல் ப்ளூடூத் காலிங் மேற்கொள்ளலாம். இந்த வாட்ச்-இல் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உள்ளது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

     


    நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 அம்சங்கள்:

    1.46 இன்ச் ஹைப்பர் விஷன் AMOLED டிஸ்ப்ளே

    ப்ளூடூத் 5.3

    ட்ரூ சின்க் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி

    150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

    அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    24x7 இதய துடிப்பு மாணிட்டரிங், SpO2, ஸ்லீப் டிராக்கிங்

    100-க்கும் அதிக வொர்க்-அவுட் மோட்கள்

    நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, வானிலை அப்டேட்கள்

    கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல், டைமர்

    ரிமைண்டர், கால்குலேட்டர்

    நாய்ஸ்ஃபிட் ஆப்

    IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் கிளாசிக் பிரவுன், கிளாசிக் பிளாக், விண்டேஜ் பிரவுன், காப்பர் பிளாக், மிட்நைட் பிளாக் மற்றும் காப்பர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் லெதர் ஸ்டிராப் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    • இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் மோட்டோ ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 1.5K pOLED கர்வ்டு டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10+ சப்போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 10MP டெலிபோட்டோ கேமரா, OIS, 50MP செல்ஃபி கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP68 தர டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 125 வாட் வயர்டு மற்றும் 50 வாட் வயர்லெஸ் டர்போ சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் (68 வாட் சார்ஜர்) விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் ரூ. 27 ஆயிரத்து 999 விலையிலும் 12 ஜி.பி. ரேம் (125 வாட் சார்ஜர்) மாடல் ரூ. 31 ஆயிரத்து 999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் பியூட்டி, லூக்ஸ் லாவெண்டர் மற்றும் மூன்லைட் பியல் நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்குவோர் தங்களது பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • சோனி நிறுவனம் விசேஷ கோடை கால சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • ரூ. 13 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சோனி இந்தியா நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 5 (CFI-1208A01R) மாடல்களுக்கு கோடை கால சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகளின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 13 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். இந்த சலுகை ஏப்ரல் 10 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 30 ஆம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட பி.எஸ். 5 மாடல்களுக்கு சோனி இந்தியா நிறுவனம் விசேஷ கோடை கால சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சோனி பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் (CFI-2000 மாடல் க்ரூப் - ஸ்லிம்) மாடலுக்கு பொருந்தாது.

     


    அதன்படி பி.எஸ். 5 மாடல்களுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி போக பி.எஸ். 5 விலை எவ்வளவாக இருக்கும் என்பது ஏப்ரல் 10 ஆம் தேதி விற்பனை துவங்கிய பின்பே தெரியவரும்.

    வாடிக்கையாளர்கள் பி.எஸ். 5 மாடலை அமேசான், க்ரோமா, ப்ளிப்கார்ட், சோனி செண்டர், விஜய் சேல்ஸ், ப்ளின்கிட் மற்றும் இதர விற்பனையாளர்களிடம் சலுகை விலையில் வாங்கிட முடியும்.

    தற்போது சோனி பி.எஸ். 5 மாடலின் ஸ்டாண்டர்டு எடிஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்றும் டிஜிட்டல் மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
    • மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஹூவாய் நிறுவனம் விரைவில் தனது P70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு ஏற்கனவே சில முறை தாமதமாகிவிட்டது. இந்த நிலையில், ஹூவாய் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    அந்த வகையில், ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று நிலைகளில் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுதவிர ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், இதற்கான பணிகள் முழுமை பெற்றுவிட்டதாகவும் சீன தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் Z அல்லது S வடிவில் மூன்றாக மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் அளவு 10 இன்ச் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு BOE பேனல்களை வினியோகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் ஹீன்ஜ் (கீல்) ஹௌலி மற்றும் ஃபுஸ்டா போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்வதாக தெரிகிறது. இந்த சாதனத்தை பெரியளவில் விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் ஹூவாய் ஈடுபட்டு வருகிறது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் ஹூவாய் விஷன் ப்ரோ என்று அழைக்கப்பட இருக்கிறது. இதில் உள்ள டாப் எண்ட் பிராசஸர் பயனர்களுக்கு அசத்தலான அனுபவத்தை வழங்கும்.

    இந்த அணியக்கூடிய சாதனம் அதிநவீன கூலிங் மெக்கானிசம் கொண்டு, பரவலான மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்கள் ஏற்படுத்தும் வெப்ப உணர்வை தடுக்கும். புதிய மடிக்கக்கூடிய சாதனம் மற்றும் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் தொடர்பாக ஹூவாய் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×