என் மலர்
தொழில்நுட்பம்
- எலான் மஸ்கிற்கு என்ன ஆச்சு, நீண்ட நேரமாக டுவிட் இல்லையே என்ற கேள்வி எழத்தது.
- எலான் அக்கவுண்டில் இருந்தே பதிவுகள் வெளியாகாததற்கு காரணம் அவர் தற்போது இருக்கும் இடம் தான்.
டுவிட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் சமீப காலமாக அடிக்கடி டுவிட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சுமார் 48 மணி நேரமாக எலான் மஸ்க் அக்கவுண்டில் இருந்து டுவிட் எதுவும் காணப்படவில்லை. எலான் மஸ்கிற்கு என்ன ஆச்சு, நீண்ட நேரமாக டுவிட் எதுவும் பதிவிடவில்லையே என்ற கேள்விகள் எழத்துவங்கியது.
திடீரென டுவிட்டர் உரிமையாளர் அக்கவுண்டில் இருந்தே பதிவுகள் வெளியாகாததற்கு காரணம் அவர் தற்போது இருக்கும் இடம் தான். எலான் மஸ்க் சென்றிருக்கும் நாட்டில் டுவிட்டர் சேவையை பயன்படுத்த முடியாது. எலான் மஸ்க் தற்போது சீனா சென்றிருக்கிறார். அங்கு டுவிட்டர் தளத்தை பயன்படுத்த முடியாது என்பதால், அவர் டுவிட் எதுவும் செய்யவில்லை.

இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து எலான் மஸ்க் ஒவ்வொரு நாளும் பலமுறை டுவிட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சமயங்களில் ஒன்றிரண்டு டுவிட்களையேனும் பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் 2022 முதல் எலான் மஸ்க் நீண்ட நேரம் டுவிட் செய்யாமல் இருந்தது இதுவே முதல் முறை ஆகும்.
அப்போது டுவிட்டரை வாங்குவதில் எலான் மஸ்க் குறியாக இருந்தார். இதன் காரணமாக அவர் அதிக டுவிட்களை மேற்கொள்ளவில்லை. தற்போது சீனாவில் இருப்பதால் எலான் மஸ்க் டுவிட் செய்வதை நிறுத்தி வைத்துள்ளார். சீனாவில் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் என பல்வேறு வெளிநாட்டு சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் உள்ளது.
- கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் சாம்சங் மற்றும் சோனி நிறுவன கேமரா சென்சார்கள் உள்ளன.
கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்டின் ஒரு யூனிட் உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் விலை தெரியவந்துள்ளது.
ஆய்வு நிறுவன தகவல்களின் படி கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் உபகரணங்கள் விலை 469 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 38 ஆயிரத்து 650 வரை செலவாகும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் அதிக தொகை பிராசஸர், டிஸ்ப்ளே மற்றும் கேமரா சப்-சிஸ்டம் உள்ளிட்டவைகளுக்கு செலவாகிறது. ஒட்டுமொத்த செலவீனங்களில் 34 சதவீத தொகையை பிராசஸர் மட்டுமே எடுத்துக் கொள்கிறது.

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் TSMC-யின் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்படுகிறது. குவால்காம் நிறுவனம் கைரேகை சென்சார் ஐசி, பவர் மேனேஜ்மெண்ட் ஐசி, ஆடியோ கோடெக், ஆர்.எஃப். பவர் ஆம்ப்லிஃபயர்கள், வைபை+ ப்ளூடூத், ஜிபிஎஸ், சப்-6 ஜிகாஹெர்ட்ஸ் டிரான்ஸ்-ரிசீவர் உள்ளிட்டவைகளை டிசைன் செய்துள்ளது.
கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கான 256 ஜிபி NAND ஃபிளாஷ், 6.8 இன்ச் குவாட் HD+ 120Hz டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, LTPO தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை சாம்சங் நிறுவனமே வழங்குகிறது. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் சாம்சங் மற்றும் சோனி நிறுவன கேமரா சென்சார்கள் உள்ளன.

இதில் சோனி 12MP அல்ட்ரா வைடு (IMX564), 10MP டெலிபோட்டோ மற்றும் பெரிஸ்கோப் டெலிபோட்டோ IMX574, சாம்சங் 200MP வைடு ஆங்கில் S5KHP2 மற்றும் 12MP செல்ஃபி கேமரா உள்ளிட்ட சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் உபகரணங்கள் கட்டணம் இந்திய மதிப்பில் ரூ. 38 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைத்து விடுகிறது.
எனினும், இந்த கட்டணம் அதன் விற்பனை விலையை விட பலமடங்கு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி பரவலாக எழும். ஸ்மார்ட்போனின் உபகரண கட்டணங்கள் தவிர அசெம்பில், விளம்பரம், டிசைனிங், வாடிக்கையாளர் சேவை என பல்வேறு விஷயங்களுக்கான செலவீனங்கள் உள்ளன. இவற்றை பெரும்பாலும் நிறுவன அதிகாரிகள் தவிர பொது மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வாய்ப்புகள் குறைவு தான்.
இதுவே ஸ்மார்ட்போனின் உபகரணங்கள் விலை மற்றும் விற்பனை விலை இடையே பெருமளவு வித்தியாசம் இருப்பதற்கான காரணம் ஆகும்.
- ஏப்ரல் மாத வாக்கில் சியோமி நிறுவனத்தின் சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- சியோமி 13 அல்ட்ரா மாடலின் சர்வதேச வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை ஏப்ரல் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. சியோமியின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் சியோமி 13 அல்ட்ரா சர்வதேச வெளியீட்டு தேதி தெரியவந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஜூன் 8-ம் தேதி சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சியோமி 13 அல்ட்ரா மாடலை வாங்குவோருக்கு மூன்று மாதங்கள் யூடியூப் பிரீமியம் சந்தா, 6 மாதங்களுக்கு 100 ஜிபி கூகுள் ஒன் சந்தா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் சியோமி 13 அல்ட்ரா மாடல் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வேரியண்டில் கிடைக்கும் என்றும் ஐரோப்பிய சந்தையில், இதன் விலை 1299 யூரோக்கள் அல்லது 1499 யூரோக்கள் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி 13 அல்ட்ரா அம்சங்கள்:
6.73 இன்ச் 3200x1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் AMOLED, HDR10+ டிஸ்ப்ளே
2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU
12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
16 ஜிபி ரேம், 512 ஜிபி, 1 டிபி மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14
50MP பிரைமரி கேமரா, 1 இன்ச் சோனி IMX989 சென்சார்
50MP சோனி IMX858 அல்ட்ரா வைடு லென்ஸ்
50MP சோனி IMX858 டெலிபோட்டோ கேமரா
50MP சோனி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஹைரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
50 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC23) நிகழ்வுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் நடத்தப்படுகிறது.
- இந்தியாவில் இருந்து தேர்வாகி இருக்கும் ஆஸ்மி ஜெயின், மற்ற டெவலப்பர்களுக்கு உதவேகமாக திகழ்கிறார்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்சின் வெற்றியாளர்களை அறிவித்து இருக்கிறது. அடுத்த வாரம் WWDC23 நிகழ்வு துவங்க இருக்கும் நிலையில், இதுபற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முறை WWDC23 ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேல்ஞ்சில் இந்திய மாணவர் ஆஸ்மி ஜெயின் தேர்வாகி இருக்கிறார்.
மார்டா மிஷெல் கலிண்டோ மற்றும் யெமி அகெசின் உடன் ஆஸ்மி ஜெயின் இந்த ஆண்டுக்கான ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்சில் வெற்றி பெற்று இருக்கிறார். சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC23) நிகழ்வுக்காக ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்சை நடத்தி வருகிறது. இந்தியாவில் இருந்து தேர்வாகி இருக்கும் ஆஸ்மி ஜெயின், நாட்டின் மற்ற டெவலப்பர்களுக்கு உதவேகமாக திகழ்கிறார்.

இந்த திட்டம் இளம் டெவலப்பர்கள் தங்களின் கோடிங் திறன் மற்றும் வித்தியாசமாக திட்டங்களை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் டெவலப்பர்கள் இன்டராக்டிவ் பிளேகிரவுண்ட், செயலி அல்லது இதர மென்பொருள்களை ஆப்பிள் நிறுவனத்தின் ப்ரோகிராமிங் லாங்குவேஜ்- ஆன ஸ்விஃப்டில் உருவாக்க வழி செய்கிறது.
ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் வெற்றியாளர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில் WWDC நிகழ்வில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதை கொண்டு டெவலப்பர்கள் தொழில்நுட்ப துறை தலைவர்களை சந்தித்தல், கலந்துரையாடல் அமர்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் டெவலப்பர் சந்தா, பிரத்யேக WWDC ஜாக்கெட் மற்றும் இதர ஆப்பிள் சாதனங்களை பெறலாம்.
- ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
- அமேசான் மற்றும் Mi வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று மாறியது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் Mi வலைதளங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 12 5ஜி மாடலின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 17 ஆயித்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது கூடுதலாக கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
அமேசான் மற்றும் Mi வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று மாற்றப்பட்டு உள்ளது. பயனர்கள் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும். இதை சேர்க்கும் போது ரெட்மி நோட் 12 5ஜி மாடலின் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.
ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு, மாத தவணை முறை பரிவர்த்தனைகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி நெட்பேங்கிங் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய சியோமி மற்றும் ரெட்மி போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.
இதேபோன்று ரெட்மி நோட் 12 5ஜி மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றை முறையே ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் ரூ. 18 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். ரெட்மி நோட் 12 5ஜி மாடல்: ஃபிராஸ்டெட் கிரீன், மேட் பிளாக் மற்றும் மிஸ்டிக் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்யலாம்.
- இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.
வாட்ஸ்அப் செயலியில் கம்பேனியன் மோடு (companion mode) பெயரில் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.10.76 வெர்ஷன் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சம் நான்கு ஐபோன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும்.
புதிய கம்பேனியன் மோடு அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இந்த அம்சம் கொண்டு வாட்ஸ்அப் செயலி இரண்டாவது சாதனத்திலும் இயங்க செய்ய, வலதுபுறம் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.
அடுத்து லின்க் டிவைஸ் (link device) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இனி கியூஆர் கோடு திரையில் தோன்றும். வாட்ஸ்அப் பயன்படுத்தும் பிரைமரி சாதனத்தில், செட்டிங்ஸ் மற்றும் லின்க்டு டிவைசஸ் (linked devices) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதற்காக ஐபோனில் கேமராவை இயக்குவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
இவ்வாறு செய்த பின் இரண்டு சாதனங்களிலும் வாட்ஸ்அப் சின்க் செய்யப்பட்டு விடும். பிரைமரி சாதனத்தில் இண்டர்நெட் இணைப்பு இல்லாத சமயத்திலும், இரண்டாவது சாதனத்தில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும். இரண்டாவது ஐபோனில் வாட்ஸ்அப் வீடியோ / ஆடியோ அழைப்புகளை மேற்கொண்டு மற்ற அம்சங்களை இயக்கலாம்.
சில சாட்கள் முழுமையாக லோடு ஆகாமலோ அல்லது, கால் லாக்ஸ் சரியாக தெரியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். நான்கு சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போதிலும், அனைத்தும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்து உள்ளது.
- ரியல்மி நிறுவனம் சிறப்பு பரிசுகளை வழங்கும் போட்டிகளை தனது வலைதளத்தில் நடத்தி வருகிறது.
- இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதமே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
ரியல்மி நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து தனது ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் ஜூன் 8-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
வெளியீட்டு தேதி அடங்கிய போஸ்டரில், ரியல்மி நிறுவனத்தின் புதிய விளம்பர தூதர் ஷாருக் கான் இடம்பெற்று இருக்கிறார். புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 200MP சாம்சங் நிறுவனத்தின் ISOCELL HP3 பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் சூப்பர்ஜூம் கேமரா, 4x லாஸ்லெஸ் ஜூம் மோட், சூப்பர் க்ரூப் போர்டிரெயிட் மற்றும் ஒன் டேக் போன்ற கேமரா அம்சங்கள் வழங்கப்படுகிறது.

முன்னாள் GUCCI ப்ரிண்ட்ஸ் டிசைனர் மேடியோ மெனோட்டோ மற்றும் ரியல்மி டிசைன் ஸ்டூடியோ உடன் ரியல்மி கூட்டணி அமைத்து புதிய ஸ்மார்ட்போனின் டிசைனை உருவாக்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதமே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி இதன் அம்சங்கள் ஏற்கனவே அம்பலமாகி இருக்கின்றன.

புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை அடுத்து, ரியல்மி நிறுவனம் சிறப்பு பரிசுகளை வழங்கும் போட்டிகளை தனது வலைதளத்தில் நடத்தி வருகிறது. அதன்படி ரியல்மி பயனர்கள் அந்நிறுவன வலைதளத்தில் Notify Me பட்டனை க்ளிக் செய்து ரூ. 100 மதிப்புள்ள, 10 ஆயிரம் ரியல்மி காயின்களை பெற்றுக்கொள்ள முடியும். இத்துடன் ரூ. 1000 மதிப்புள்ள ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, தேர்வு செய்யப்பட்ட அக்சஸரீக்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் வெளியீட்டு நிகழ்வு ஜூன் 8-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இந்த நிகழ்வு புது டெல்லியின் இந்திரா காந்தி ஸ்டேடியம் வளாகத்தில் நடைபெறுகிறது. அறிமுக நிகழ்வு ரியல்மி அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களைில் நேரலை செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- 2020 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ஏ.ஆர். பற்றிய தகவலை சூசகமாக தெரிவித்தது.
- WWDC நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி சார்ந்த அறிவிப்புகளை வெளியிடலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC 2023) ஜூன் 5 ஆம் தேதி துவங்குகிறது. இந்த நிகழ்வில் மென்பொருள் சார்ந்த புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் சுவாரஸ்யம் நிறைந்த அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரியவந்துள்ளது.
அதன்படி 2023 WWDC நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆக்மெண்டெட் ரியாலிட்டி (AR) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) சார்ந்த அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிகிறது. இது ஆப்பிள் வரலாற்றில் மிக முக்கிய மைல்கல் அறிவிப்பாக இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் ஆக்மெண்டெட் ரியாலிட்டி (ஏ.ஆர்.) சார்ந்த தகவல்களை மிக ரகசியமாக WWDC வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளது. 2020 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ஏ.ஆர். பற்றிய தகவலை சூசகமாக தெரிவித்தது. அப்போது முதல் இவ்வாறு சூசகமாக தெரிவிப்பதை ஆப்பிள் வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான சூசக தகவலை காண, ஆப்பிள் ஈவன்ட்ஸ் (Apple Events) வலைப்பக்கத்தினை ஐபோன் அல்லது ஐபேட் சாதனத்தில் திறக்க வேண்டும். அங்கு ஆப்பிள் மார்ஃபிங் லோகோவை தட்டினாலே ஏ.ஆர். பற்றிய தகவலை பார்க்க முடியும். இதில் ஆப்பிள் மார்ஃபிங் லோகோ, ஜூன் 5, 2023 தேதி உள்ளிட்ட தகவல்கள் அழகாக கண் முன் வந்து செல்கிறது.
பயனர்கள் ஆப்பிள் லோகோவினை, அவர்கள் விரும்பும் வகையில் சுழற்றவும், திரையில் மென்மையாக கிள்ளி அதனை இழுக்கவும், சுருக்கவும் முடியும். இதுதவிர ஏ.ஆர். லோகோவை கிரே நிற பேக்கிரவுண்டில் அழகாக சுழல்வது போன்று பார்க்கலாம்.
- சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.
- சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது.
தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் நடத்தப்படும் TSPSC தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏழு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவர் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. உதவியோடு இயங்கும் சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பதில்களை பெற்றதோடு, அவற்றை ப்ளூடூத் இயர்போன் மூலம் மற்ற தேர்வர்களுக்கும் தெரிவித்துள்ளார். சாட்ஜிபிடி போன்று அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு, வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் நாட்டிலேயே முதல் முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு பேருக்கு பதில் அனுப்பிய பூலா ரமேஷ் என்ற நபரை புலனாய்வு படையினர் விசாரணை செய்தது.
ரமேஷ் என்ற நபர், தேர்வு தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே வினாத்தாளை எடுத்து, சாட்ஜிபிடி சேவை மூலம் பதில்களை பெற்றுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு தேர்வர்களும், தேர்ச்சி பெறுவதற்காக ஆளுக்கு ரூ. 40 லட்சம் வரை வழங்க தயாராக இருந்துள்ளனர். அதன்படி மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் ரமேஷ் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட உதவியிருக்கிறார்.
தொடர்ந்து இலவசமாகவே கிடைப்பதால், ஏ.ஐ. டூல்களால் ஏற்படும் அபாயம் குறித்த கவலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. சாட்ஜிபிடி மற்றும் மைக்ரோசாஃப்ட் பிங் உள்ளிட்ட ஏ.ஐ. டூல்கள் தற்போது செயலி வடிவிலேயே கிடைக்கின்றன. ஏ.ஐ. டூல்கள் ஏராளமான பலன்களை வழங்கும் போதிலும், இவை ஏற்படுத்தும் அபாயங்களும் அதிகமாகவே உள்ளன.
- இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின.
- போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு நள்ளிரவில் மீண்டும் தொடங்கப்பட்டது.
டாடா ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மூலம் புதிய உலக சாதனை படைத்து இருப்பதாக ஜியோசினிமா தெரிவித்து உள்ளது.
ஜியோசினிமா செயலியில் டாடா ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 3.2 கோடி பேர் பார்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது. எனினும், இடையில் மழை குறுக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு நள்ளிரவில் மீண்டும் தொடங்கப்பட்டது.

நள்ளிரவு 1 மணி அளவிலும் ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். இதன் மூலம் ஜியோசினிமா, நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற 2019 ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியினை அதிகம் பேர் பார்த்தனர்.
கடந்த மே 23-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியினை 2.5 கோடி பேர் பார்வையிட்டது அதிகமாக இருந்தது. தற்போது நேற்றைய போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டு இருக்கிறது.