என் மலர்
பெண்கள் உலகம்
- மாப்பிள்ளை வீட்டார்கள் விலைபேசி மங்கையை மணம் முடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
- சில ஆண்கள் ஆதிக்க வெறியினால் சமுதாயத்தில் பெண்கள் அடையும் இன்னல்களுக்கு அளவில்லை.
மனித வாழ்க்கையானது இளமைப்பருவம், முதுமைப்பருவம் என இருப்பருவங்களாக வகுக்கப்படுகின்றன. அதில் ஆணும் சரி, பெண்ணும் சரி வாழ்வின் பெரும்பகுதியினை இல்லற வாழ்க்கைக்கே செலவு செய்கின்றனர். துணைவியாக வரும் பெண் தன் துணைவனை பெற்றுக்கொள்ள குறிப்பிட்டதொரு பகுதி செல்வத்தை கொடுக்க வேண்டியுள்ளது. அதனை நாம் வரதட்சணை என்கிறோம்.
வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளை குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. திருமணம் என்பது இரு மனங்கள் சேர்ந்து வாழ வேண்டும். இதனை வியாபாரத்தின் நோக்கில் கொண்டு சென்று வரதட்சணை என்னும் பெயரில் பல கொடுமைகள் அரங்கேறுகின்றன.
மாப்பிள்ளை வீட்டார்கள் விலைபேசி மங்கையை மணம் முடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல ஏழை எளிய பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வரதட்சணை கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
குடும்பத்தில் அன்றாட நடக்கும் வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணையின் காரணமாக மரணமடைகிறாள். தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணை குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல சட்டம் பேசும் சமுதாயத்துடன் இணைந்து வாழ பெண்கள் முடிவெடுத்தாலும் சில ஆண்கள் ஆதிக்க வெறியினால் சமுதாயத்தில் பெண்கள் அடையும் இன்னல்களுக்கு அளவில்லை. பெண்கள் வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் தங்கள் தோளில் சுமந்துகொண்டு நல்லதொரு குடும்பத்தை உருவாக்குகிறாள். ஒவ்வொரு நிமிடமும் இவர்கள் செய்யும் பணிகள் ஏராளம். பெண்கள் தங்களது வாழ்வில் தனக்கென இல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களுக்காக அர்ப்பணிக்கின்றார்கள்.
பெண் சிசுக்கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதற்கு வரதட்சணை கொடுமையே முக்கிய காரணமாக உள்ளது. பெண் குழந்தை பிறந்து ஆளானால் பல்லாயிரக்கணக்கான சீர் வரிசைகளுடன் கணவன் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயக் கடமை பெற்றோருக்கு இருக்கின்றது. பிற்காலத்தில் தங்கள் மகளுக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்ற அச்சத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பிறந்தவுடனேயே பெண் குழந்தைகளை கொன்று விடுகிறார்கள். இவ்வாறு ஈவு இரக்கமின்றிய செயல்களுக்கு வித்திடுவதாய் வரதட்சணை கொடுமை அமைந்துள்ளது.
வரதட்சணை கொடுத்து மாப்பிள்ளைகளை மணமுடிக்க முடிந்தாலும் பல பெண்கள் ஆண்களுக்கு உரிமையுடன் வாழ முடியவில்லை. வீட்டில் கொத்தடிமையாகவே நடத்தப்படுகிறார்கள். கூலியின்றி வாழ்நாள் முழுவதும் வேலை செய்யும் ஒரு பெண்ணாகவே நடத்தப்படுகிறார்கள். இவர்களின் இந்த நிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பது வேதனைக்குரியது.
சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் முக்கிய கொடுமை, வரதட்சணை மற்றும் ஏழ்மையை கருத்தில் கொண்டு இளம் பெண்கள் வயது முதிர்ந்த பல ஆண்களுக்கு மனைவியாகவும் மற்றும் இரண்டாம் தாரமாகவும் வாழ்க்கையை நடத்தும் கொடுமைகள் உருவாகின்றன. வரதட்சணை கொடுமை சமுதாயத்தில் பெரும் ஆலமரவேர் போல பரவி பல்வேறுபட்ட தீமைகளுக்கு புகலிடமாக இருந்து வருகின்றது. இதற்கு காரண கர்த்தாவாக இருக்கும் சமுதாயமே இக்கொடுமைகளை போக்க வேண்டும்.
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றும், 'தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை' என்றும் பெண்ணாகிய தாயை போற்றும் சமுதாயம் ஒரு விஷமுடைய காயையும் விட கேவலமாக பெண்களை நடத்துகின்றது. இது மாற்றமடைய வேண்டும். சமுதாயத்தில் உள்ள ஆண்கள், பெண்களை மதிக்கவும், ஒரு நல்ல தோழனாகவும், உறுதுணையாகவும் இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு துயரம் கொடுக்கக்கூடாது. ஒரு நல்ல ஆண்மகனின் அடையாளம் பெண்மையை கலங்காது இறுதிவரை பாதுகாப்பதே.
வரதட்சணை கொடுமையை அகற்றுவோம்!
பெண்களை மதிப்போம்!
சமுதாயத்தை உயர்த்துவோம்!
- பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக்கூடாது.
- சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொ ண்டு சமைக்கக் கூடாது.
வீட்டில் பெண்கள் அதிகமாக நேரத்தை செலவிடும் இடம் சமையலறை. பரபரப்பாக சமையல் செய்வது, மற்ற வேலைகளை முடித்த களைப்போடு சமையல் வேலைகளில் ஈடுபடுவது என அவர்கள் மேற்கொள்ளும் வேலைக்கு ஏற்றவாறு, அந்த அறையின் அமைப்பு மற்றும் வசதிகள் இருக்கவேண்டும்.
தண்ணீர், மின்சாரம், நெருப்பு இவை மூன்றையும் ஒன்றாக பயன்படுத்தும் இடம் என்பதால், சமையல் அறையில் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.:-
பெரும்பாலான வீடுகளில் 'டை ல்ஸ்' பதிக்கப்பட்ட தரை உள்ளது. இதில், எந்த வகையான திரவங்கள் சிந்தினாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எதிர்பாராமல், அதில் கால் வைக்க நேர்ந்தால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே , கீழே சிந்தும் திரவங்களை அவ்வப்போ து துடைத்து, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டில்கள் ஏதேனும் உடைந்தால், அதைத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
தீ அணைக்கும் கருவி:
சமையல் அறையில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், பர்னர்கள் அல்லது பிளம்பீட் டெசர்ட் ஆகியவற்றில் இருந்து தீப்பிழம்புகள் வந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சமைக்கும் பாத்திரத்தில் திடீரென தீப்பற்ற நேர்ந்தால், அதில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இது தீயை மேலும் அதிகரிக்கக்கூடும்.
பாத்திரத்தை ஒரு தட்டை போட்டு மூடி, அதன் மீது சிறிது பேக்கிங் சோடாவைப் போடலாம். இதனால், தீ உடனடியாக கட்டுக்குள் வரும். சமையல் அறையில், தீயணைக்கும் கருவியை வைத்திருப்பதும், அதைக்கையாளத்தெரிந்திருப்பதும் அவசியம்.
சமையல் உபகரணங்கள்:
கத்தி, அரிவாள், அரிவாள்மனை போன்ற கூர்மையான பொருட்களை சமையல் அறையின் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.
பாத்திரங்களில் திருகுகள் உள்ள கைப்பிடிகள் தளர்வாக இருப்பதைக் கவனித்து உடனே அவற்றை சரி செய்வதன் மூலம், விபத்துகளைத் தவிர்க்கலாம்.
தினசரி கவனம்:
தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலிய வற்றை நன்றாக சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியில் உள்ள சேப்டி வால்வையும் சரிபார்ப்பது அவசியம். அடுப்பை அணைப்பதோடு, எரிவாயு சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும். குழம்பு தாளிக்கும் போது, குமிழ் வைத்த மூடியால் மூடியபடி தாளித்தால், கடுகு போன்ற பொருட்கள் தெறித்து விழுந்து சூடுபடாமல் இருக்கும்.
சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொ ண்டு சமைக்கக் கூடாது. இது எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது. மேலும், குழந்தைகள் அடுப்பிறகு அருகில் சென்று கேஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக்கூடாது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் மூடி உள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம். பாத்திர அலமாரிகளோ , மற்ற பொருட்களோ அடுப்பிற்கு மேல் பகுதியில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதை எடுக்க முயலும் போது, ஆடையில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. ஆடையில் நெருப்பு பற்றினால், உடனே உடலைச்சுற்றி கம்பளியை போர்த்தி, நெருப்பை அணைக்கலாம்.
- வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க சிம்னியை சுத்தம் செய்வது எவ்வளவு அவசியம் என்பது புரியும்.
- சமையலறை சுவர்களை அழகாக வைத்திருக்க உதவும் சிம்னியை சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
வீட்டின் மற்ற அறைகளைக் காட்டிலும் சமையலறை சுவறில் வேகமாக கறை படிவதற்கு வாய்ப்பு அதிகம். காரணம், புகை மற்றும் நீராவி. சமைக்கும் போது உருவாகும் புகை மற்றும் நீராவியை சிறப்பாக வெளியேற்றி, சுவர்களின் வண்ணத்தை பாதுகாக்கும் கருவி சிம்னி. அதுமட்டும் அல்ல மிளகாய் நெடியால் வீட்டில் உள்ளவர்களுக்கு இருமல் தும்மல் ஏற்படாமல் காப்பாற்றுவதும் சிம்னி தான். மற்ற வீட்டு உபயோக கருவிகளை சுத்தம் செய்வது போல இதையும் சுத்தம் செய்வது அவசியம். சமையலறை சுவர்களை அழகாக வைத்திருக்க உதவும் சிம்னியை சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
சமைக்கும் போது உருவாகும் புகை மற்றும் நீராவியை வெளிவேற்றுவது தான் சிம்னியின் வேலை. இவற்றை வெளியேற்றும் போது புகை மற்றும் நீராவியில் இருக்கும் நீர்த்துளிகள், கரி துகள்கள், எண்ணெய் பிசுபிசுப்பு இவை சிம்னியில் உள்ள நுண்ணிய துளைகள் கொண்ட பல அடுக்கு வலைகளில் வடிகட்டப்படும். இப்படி சேரும் இந்த அழுக்கினால் இரண்டு தீமைகள் நேரும். ஒன்று, நோய் கிருமி மற்றும் பூஞ்சை காளான் உருவாகும். இதனால் வீட்டில் உள்ள வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இரண்டு, சிம்னி வழியாக புகை வெளியேறுவது தடைபடும். வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க சிம்னியை சுத்தம் செய்வது எவ்வளவு அவசியம் என்பது புரியும்.
சரி, எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சிம்னி சுத்தம் செய்ய வேண்டும்?
பொதுவாக 2 மாதத்திற்கு ஒரு முறை சிம்னியில் உள்ள வடிகட்டும் வலைகளை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு வேலை நீங்கள் அதிகம் எண்ணெய் மற்றும் கார சாரமான உணவு வகைகளை அடிக்கடி சமைப்பவராக இருந்தால், மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் சார்க்கோள் பில்டர் சிம்னி பயன்படுத்தினால் 6 மாத்திற்கு ஒரு முறை பில்டரை மாற்ற வேண்டும். இனி சிம்னியை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
சிம்னியை சுத்தம் செய்ய அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சிம்னியில் உள்ள வடிகட்டிகள், வலைகள், தட்டைகள் மற்றும் அதன் மூடி இவற்றை சுத்தம் செய்தால் போதும். நீங்கள் எந்த பாகத்தை சுத்தம் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தேவைபடும் பொருட்கள் மாறுபடும். சிம்னியின் மூடியை சுத்தம் செய்கிறீர்கள் என்றால் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா தேவைப்படும். பில்டர் சுத்தம் செய்ய வேண்டுமானால், அதில் உள்ள கரையின் அளவை பொறுத்து சுத்தம் செய்யும் பொருட்கள் வேறுபடும். ஓரளவு கரை இருந்தால் பாத்திரம் துலக்க பயன்படும் லிக்விட் போதும். விடாப்பிடியான கரை இருந்தால் பெயிண்ட் தின்னெர் தேவைபடும். மூடியை சுத்தம் செய்வதை பார்ப்போம்.
மூடியை சுத்தம் செய்ய வினிகர் பயன்படுத்தலாம். முதலில் டவல்/பேப்பரால் வினிகரில் நன்றாக நனைத்து மூடியின் மூளை முடுக்கெல்லாம் தடவுங்கள். இரண்டு நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு சுத்தமான நீரில் ஒரு துணியை நனைத்து நன்றாக அழுத்தி துடையுங்கள். மூடி மேல் படிந்த கறை அகன்று விடும். இன்னும் கறை போகாமல் இருந்தால் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா பவுடரில் தேவையான அளவு நீர்/வைட் வினிகர் சேர்த்து மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை மூடி மீது தடவி 5 நிமிடம் கழித்து ஈர துணியால் துடைத்து விடுங்கள். இப்போது மூடி நன்றாக சுத்தம் ஆகியிருக்கும்.
பில்டர் மாறும் வலைகளை சுத்தம் செய்ய உங்களுலுக்கு ஒரு டப் தேவைப்படும். முதலில் 2 கப் வினிகர், 2-3 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிது உப்பு தூவுங்கள். டப்பில் சூடு நீர் ஊற்றி நிரப்புங்கள். பில்டர் மற்றும் வலைகளை அதில் முழ்கச் செய்யுங்கள். 2 மணி நேரம் அப்படியே விடுங்கள். பிறகு வெளியே எடுத்தது சுத்தமான நீரால் நன்றாக துடையுங்கள். இன்னும் கறை மற்றும் பிசுபிசுப்பு உள்ளதா? கவலை வேண்டாம். இப்பொது பில்டர் மற்றும் வலைகளை ஒரு பெரிய ஸ்டீல் பத்திரத்தில் போட்டு நீர் நிரப்பி , டிஷ் வாஷ் லிக்விட் ஊற்றி, 30 நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள்.
எண்ணெணை பிசுபிசுப்பு கரை எல்லாம் அகன்று விடும். 30 நிமிடம் கழித்து குளிர்ந்த பின் ஒரு துணியால் நன்றா அழுத்தி துடையுங்கள். பில்டர் மற்றும் வலை சுத்தம் ஆகிவிடும். இந்த முறையில் வேகமாக கறைகளை நீக்கலாம். விடாப்பிடியான கறை மற்றும் எண்ணெணை பிசுக்கை விரைவாக நீக்க ஒரு வழி உள்ளது. அது தான் பெயிண்ட் தின்னெர் பயன்படுத்துவது. பில்டர் மற்றும் வலைகளின் கறை மீது பஞ்சு/துணியால் வினிகர் நனைத்து தடவுங்கள். கறை வலுவாக இருக்கும் இடங்களில் சில துளிகள் வினிகர் தெளியுங்கள். சில நிமிடத்தில் கத்தி அல்லது வேறு ஏதாவது கருவி கொண்டு சுரண்டி எடுத்து விடுங்கள். ஒரு முக்கிய தகவல். வினிகர் விரைவாக ஆவியாகிவிடும்; நெடி அதிகம் இருக்கும். அதனால் இதை செய்யும் போது காற்றோட்டமான இடத்தில் செய்யவும். இப்பொது விடாப்பிடி கறையும் நீங்கி விடும்.
மேலே கூறிய வழிகளை பின்பற்றி உங்கள் சிம்னியை சுத்தம் செய்து குடும்ப உறுப்பினர்கள் உடல் நலத்தை பேணி பாதுகாக்கவும். சமையலறை சுவற்றின் அழகையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
- மின்சாரம் சிக்கனமாக இருக்க எல்இடி பல்புகளை உபயோகப்படுத்துவது நன்மை தரும்.
- 90 சதவீத கட்டிடங்கள் எம் சாண்ட்கொண்டு கட்டப்படுபவை தான்.
வீட்டின் முக்கிய பகுதி தரை. மணல் தரையானது சிமெண்ட் தரையாக மாறி, மொசைக் என்பது நாகரிகத்தின் வளர்ச்சியாக கருதப்பட்ட காலம் எல்லாம் மலையேறி தற்போது மார்பில் கிரானைட் என்பதே அனைவராலும் விரும்பப்படுகிறது. இதன் விலை மிக அதிகம் என்பதால் மார்பிள் கிரானைட் போன்று தோற்றத்தை தரவல்ல வெட்ரிஃபைடு டைல்ஸ் என சொல்லப்படும் செயற்கை டைல்ஸ்கள் அதிக அளவு உபயோகப்படுத்தப்படுகிறது. தற்போதைய புதிய செய்தி என்னவென்றால் இத்தகைய வெட்ரிஃபைடு டைல்ஸ்கள் இரண்டுக்கு இரண்டு அடி அளவு உடையதாக விற்பனைக்கு வந்தன.
தற்போது இவை இரண்டுக்கு நான்கு அடி, இரண்டுக்கு ஆறு அடி என பெரிய அளவிற்கு வருவதால் வீட்டில் கூடங்களில் புழங்கும் அறைகளில் தரையில் இத்தகைய டைல்ஸ்கள் பதிக்கப்படுகிறது. இவை அதிக இணைப்புகள் இல்லாமல் இருப்பதால் தரை பார்ப்பதற்கு அழகாகவும் சிறப்பான தோற்றம் உடையதாகவும் இருக்கும். மேலும் இவைகளை பதிக்கும் பொழுதும் மேடு பள்ளம் இல்லாமல் சமநிலையோடு பிற்காலத்தில் ஒரு டைல்ஸ் ஏறி ஒரு டைல்ஸ் இறங்கி என்பது மாதிரியான பிரச்சனைகள் தவிர்க்கும் படியாக அருமையாக பதிக்கப்படுகிறது.
எம் சாண்ட் (கருங்கல் ஜல்லி மணல்) தன்மை குறித்து இன்னமும் கூட மக்கள் இது எந்த அளவுக்கு திறமான கட்டுமானத்தை தரும் என யோசிக்கின்றனர். அவ்வாறு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சில வருடங்களில் கட்டப்படும் கட்டிடங்களில் 90 சதவீத கட்டிடங்கள் எம் சாண்ட் கொண்டு கட்டப்படுபவை தான். 10 சதவீதம் கூட ஆற்று மணல் அருகே கிடைக்கக்கூடிய கட்டிடங்கள் மட்டுமே. எம் சாண்ட் வாங்கும் பொழுது பார்த்து அவற்றின் தரத்தை பொறியாளருடன் கலந்தாலோசித்து வாங்குவது நலம்.
ஒரு வீட்டின் மாதாந்திர செலவில் மிக முக்கிய பங்கு வகிப்பது மின்சார செலவு. இதை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் புது வீடு கட்டும்பொழுது மின்சாரம் சிக்கனமாக இருக்கும் படியாக எல்இடி பல்புகளை உபயோகப்படுத்துவது நன்மை தரும். தற்போது பல வகையான மாடல்களில் பார்ப்பவர்களின் கண்களை கவரும் வண்ணம் ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற வண்ணம் எல்இடி பல்புகள் கிடைக்கின்றன இவற்றின் விலை சற்றே கூடுதலாக இருப்பினும் இவற்றின் நீண்ட கால பயன்பாட்டை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மின்சார சிக்கனத்திற்கு பெரிதும் உதவுவதால் மாதாந்திர செலவுகளில் மிச்சம் பிடிக்கலாம்.
புது வீட்டிற்க்காக வாங்கக்கூடிய மின்சார ஒயர்களில் நீங்கள் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது தரமான ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற எலக்ட்ரிக்கல் ஒயர்களை அந்தந்த தேவைக்கு ஏற்ற படி தகுதி வாய்ந்த மின்சார பொறியாளரின் ஆலோசனைப்படி தீ விபத்தின் போது பாதுகாப்பை தரவல்ல 'பயர் ப்ரூப்' ஒயர்களாக வாங்க வேண்டும். இது பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் எழாமல் தடுக்கும்.
தளத்திற்கு மேல் முன்பெல்லாம் செங்கல் ஜல்லியுடன் கடுக்காய் வெல்லம் போன்றவற்றை சேர்த்து மரக்கட்டைகளால் அடித்து அதன் மேல் சதுரவோடு பதிப்பார்கள். இது சூரிய வெப்பத்தை தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கும். மொட்டை மாடிக்கு கீழே அமைந்துள்ள வீட்டில் அதிக அளவு வெப்பத்தை தராமல் தடுக்கும். இப்போது இதற்கு மாறாக கூலிங் டைல்ஸ் எனப்படும் டைல்கள் பதிக்கப்படுகின்றன. இவை சூரிய வெளிச்சத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் 30 சதவீத வெப்பத்தை பிரதிபலித்து விடுகிறது. இதனால் வீட்டிற்குள் வெப்பம் அதிக அளவு இறங்காது. இத்தகைய டைல்ஸ்களில் தரமானவற்றை பார்த்து வாங்கி நீங்கள் உங்கள் வீடுகளில் பதிக்கலாம்
- பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது இல்லை.
- பெண்களின் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும்.
பெண்கள் ஒவ்வொரு பருவங்களுக்கு ஏற்றவாறு பொறுப்புகளும் அதிகரிப்பதால் பல பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது இல்லை. ஒரு பெண் பூப்பு அடையும் காலம் தொடங்கி, மகப்பேறு காலம், கடைப்பூப்பு காலம் என அனைத்து நிலைகளிலும் உடல் அளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை எதிர்கொள்கிறாள்.
பெண்கள் பூப்பு எய்திய காலம் தொடங்கி அவர்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும். இச்சத்து குறைவினால் உடல் சோர்வு, தலைவலி, மூச்சுவிட சிரமம், உடல் வீக்கம், முடி உதிர்வு, முறையற்ற மாதவிடாய் போன்ற பல குறிகுணங்கள் ஏற்படும். பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கீரை வகைகள், கறிவேப்பிலை, நெல்லிக்காய், அத்திப்பழம், முழு உளுந்து, கருப்பட்டி, ஈரல் வகைகள் இவைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களினால் அதிகரித்த பசி, எதிலும் நாட்டம் இன்மை, கோபம் போன்றவை ஏற்படலாம். பெரும்பாலான பெண்கள், இத்தகைய நேரத்தில் சத்தான உணவினை தவிர்த்து பாஸ்ட்புட்களை உண்பது உடல்நலத்தினை பாதிக்கும் செயலாகும். இத்தகைய உணவுப் பழக்கவழக்கங்களினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி பெரும்பாலான பெண்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பிரச்சினை, சினைப்பை நீர்கட்டி, கருப்பை தசைக்கட்டி போன்றவைகளால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படலாம்.
முறையற்ற மாதவிடாய் உள்ளவர்கள் எள்ளு மற்றும் கருஞ்சீரகத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் அந்த நீரினைப் பருகிவரலாம். மேலும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஐந்து நாட்களுக்கு மேல் அதிகப்படியான உதிரப்போக்கு உள்ளவர்கள் துவர்ப்புச் சுவை உடைய அத்திப் பிஞ்சு, மாதுளைப் பிஞ்சு, மாதுளை தோல் கஷாயம், வாழைப்பூ போன்றவற்றை உணவில் சேர்த்து வரலாம்.
கர்ப்பப்பை வாயில் சதை வளர்ச்சி இருந்தால் ஒரே மாதத்தில் இரண்டு முறைகூட மாதவிடாய் ஏற்படும். உடலில் கொழுப்பு சேர்வதால் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வாயில் சதை வளர்வதைத் தூண்டும். ஒப்பீட்டு அளவில் இந்தப் பிரச்னை மிகச் சிலருக்கே ஏற்படுகிறது.
- ஒருசில பெண்கள் தொடர்ச்சியாக இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
- இது ஒரு சில பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் தொற்றினால் ஏற்படலாம்.
பெண்கள் பூப்பு எய்திய காலம் தொடங்கி அவர்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும். இச்சத்து குறைவினால் உடல் சோர்வு, தலைவலி, மூச்சுவிட சிரமம், உடல் வீக்கம், முடி உதிர்வு, முறையற்ற மாதவிடாய் போன்ற பல குறிகுணங்கள் ஏற்படும். பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கீரை வகைகள், கறிவேப்பிலை, நெல்லிக்காய், அத்திப்பழம், முழு உளுந்து, கருப்பட்டி, ஈரல் வகைகள் இவைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பருவம் அடைந்த பெண்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை வெள்ளைப்படுதல் ஆகும். மாதவிடாய்க்கு முன்னரும், கருவுறும் காலத்திலும் வெள்ளைப்படுதல் என்பது இயல்பான ஒரு நிகழ்வு. ஆனால் ஒருசில பெண்கள் தொடர்ச்சியாக இதனால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு சில பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் தொற்றினால் ஏற்படலாம். ஏனெனில் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும்போது பிறப்புறுப்பு தொற்று நாய் ஏற்பட வழிவகுக்கும்.
இதனால் இடுப்பு வலி, சோர்வு, சிறுநீர் பாதை தொற்று, அடிவயிற்றில் வலி, அதிகரித்த உடல் சூடு போன்றவை ஏற்படும். குமரி என்று அழைக்கப்படும் கற்றாழை வெள்ளைப்படுதலுக்கு மிகச்சிறந்த மருந்து ஆகும். கற்றாழையின் தோல்சீவி அதன் சதைப்பகுதியை தண்ணீரில் நன்றாக கழுவி பழச்சாறு போல அரைத்து குடித்து வரலாம். மதிய உணவில் மோர் சேர்த்து வரலாம்.
மேலும் வெந்தயக் கீரையையோ அல்லது வெந்தயத்தினையோ உணவில் சேர்த்து வரலாம்.வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை பருகலாம். சித்த மருத்துவமனைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தினை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரினைக் கொண்டு பிறப்புறுப்பினை கழுவி வரலாம். இளநீர் உடலை குளிர்ச்சியாக்கும் செய்கை உடையது. எனவே வெள்ளைப்படுதல் தொல்லை இருப்போர் இளநீர் பருகலாம்.
வாரத்தில் 2 நாட்கள் தவறாது எண்ணெய் முழுக்கு செய்தல், பச்சை மிளகாய் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்த்தல், அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல் சூட்டினை தவிர்க்க காட்டனிலான விரிப்பினை பயன்படுத்துதல் போன்றவை உடல் சூட்டினை கட்டுப்படுத்தி வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.
இருப்பினும் கசிவுகள் நிறம்மாறி ஏற்பட்டாலோ, அதிகப்படியான துர்நாற்ற கசிவுகள் ஏற்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். சித்த மருத்துவத்தில் இதற்கான முறையான மருந்துகள் உள்ளன. மேலும் மாதவிடாய் காலத்தில் மாதுளை, ஆப்பிள் போன்ற பழவகைகள், உளுந்து களி, எள் உருண்டை, வெந்தயக் களி போன்ற சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- காய்கறிகள், பழவகைகள், பயறு வகைகளை உண்ணலாம்.
- முதல் மூன்று மாதங்களில் கடல் உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள், குழந்தையின் நலனையும் சேர்த்து ஆரோக்கியமான உணவினை உண்ண வேண்டும். இக்காலத்தில் இரும்புச்சத்து, கால்சியம், போலிக் அமிலம் நிறைந்த உணவுகள் தாய் மற்றும் சேய் இருவரின் நலனுக்கும் நன்மை பயக்கும். முதல் மூன்று மாதங்களில் கடல் உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
மலச்சிக்கல் ஏற்படாதவாறு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழவகைகள், பயறு வகைகள் போன்றவற்றை உண்ணலாம். எளிதில் உணவுச் செரிமானம் ஏற்பட சீரகப்பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். குமட்டல், வாந்தியை நீக்க மாதுளை பழச்சாறு, கறிவேப்பிலை துவையல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இவற்றுடன் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பாவன பஞ்சாங்குல தைலத்தினை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.மேலும் உளுந்து தைலம், குந்திரிக தைலம் போன்றவற்றை இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் தடவி வரலாம். இவை சுகமகப்பேற்றிற்கு உதவி செய்யும்.
மகப்பேற்றிற்கு பின்னர் பெண்களின் உடல் இயல்பான பலமாற்றங்களை அடைந்து கொண்டிருக்கும்.மேலும் இக்காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உளுந்து, வெந்தயம், வெள்ளைப் பூண்டு, பாதாம் பருப்பு இவை பால்சுரப்பிற்கு சிறந்த உணவாகும்.
இவற்றுடன் சித்த மருந்துகளான சவுபாக்ய சுண்டி லேகியம் சதாவேரி லேகியம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவை பிரசவத்திற்கு பின்னரான உதிரப்போக்கினை சீராக்குவதுடன், பால் சுரப்பினையும் தூண்டுவிக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் உடலில் கொழுப்புச் சத்தின் அளவு அதிகரித்தல், பித்தப்பைக் கல் போன்றவை மகப்பேற்றிற்கு பின்னர் பெண்களில் காணப்படுகிறது.
எனவே மைதா மற்றும் எண்ணையில் பொரித்த உணவுகளைத் தவிர்த்தல், சரியான நேரத்தில் அளவுடன் உணவு அருந்துதல், உணவில் பூண்டு, மஞ்சள், பீட்ரூட், கேரட், பப்பாளி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுதல் இவற்றுடன் சித்த மருந்துகளான ஏலாதி, நெருங்சில், கீழாநெல்லி, கிச்சிவி மணப்பாகு போன்றவற்றை மருத்துவரின் அறிவுரையின்படி எடுத்துக்கொள்ளுவதால் பித்தப்பை கல்லினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து வெளிவரலாம்.
- பெண்களை குறி வைத்து அரங்கேறும் கிண்டல், கேலி அத்துமீறல் அதிகமாக இருக்கிறது.
- வார்த்தை, சைகை என்று எந்த வடிவத்திலும் கேலி, கிண்டல் செய்ய கூடாது.
ஒருவர் குண்டாக இருக்கிறாரா? அல்லது ஒல்லியாக இருக்கிறாரா? என்பது முக்கியம்இல்லை. ஆரோக்கியமாக இருக்கிறாரா? என்பது தான் முக்கியம். அது போல் கருப்பாக இருக்கிறாரா? அல்லது சிவப்பாக இருக்கிறாரா? என்பது அவசியம் இல்லை. நல்ல மனநிலையில் இருக்கிறாரா? என்பதே முக்கியம். இனம், மொழி, உருவம், நிறம் போன்றவற்றை வைத்து யாரையும் எடை போட கூடாது. மேலும் அதை அளவீடாக கொண்டு கேலி, கிண்டல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
சாமுத்திரிகா லட்சணம்
உச்சி முதல் பாதம் வரை ஆண் மற்றும் பெண்ணின் உடல் உறுப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது. ஆனால் ஒவ்வொரு மனிதரும் உடல் ரீதியாக தனித்தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒருவரை போல் மற்றொருவர் இருக்கு முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும் குடும்பங்கள், பள்ளிக்கூடங்கள், பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் உருவக்கேலி செய்வது தொடர்கிறது. மேலும் ஒருவரின் உருவம், நடை, உடை, பாவனை போன்றவற்றை பார்த்து உருவக்கேலி செய்வது இன்றளவும் நீடித்து கொண்டு இருக்கிறது. இதனால் சம்மந்தப்பட்ட நபரின் உள்ளார்ந்த மன உணர்வு மற்றும் செயல்திறனை கூட முடக்கி விடுகிறது. அதோடு கேலி செய்பவரின் மனநிலை எந்த அளவில் இருக்கிறது என்பதையும் பிரதிபலிக்கும்.
வார்த்தை, சைகை என்று எந்த வடிவத்திலும் கேலி, கிண்டல் செய்ய கூடாது. ஏன் என்றால் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் மாணவர்கள் படிப்பை பாதியில் விடுதல், தொழிலாளர்கள் பணியில் இருந்து விலகுதல் போன்ற முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சிலர் கேலி, கிண்டல் அவமானத்தால் ஏற்படும் வலியில் வாழ்வை முடித்துக் கொள்ளும் தவறான முடிவை எடுக்க கூடிய நிலைக்கு கூட தள்ளப்படுகின்றனர். எனவே உருவக்கேலி என்பது மனித உரிமை மீறல் ஆகும்.
தன்னம்பிக்கையை இழக்க கூடாது
ஒருவரின் நிறம், உயரம், எடை, கண் பார்வை, முடி என உருவத்தை பார்த்து யார் கேலி கிண்டல் செய்தாலும் கவலைப்பட தேவை இல்லை. எது பலவீனம் என்று கூறுகிறார்களோ அதையே பலமாக்கி முன்னேறியவர்கள் அதிகம் உள்ளனர். எனவே எந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது.
ஒரு மாணவருக்கு உடல் அல்லது மனதளவில் கேடு, அவமானம் அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவது கேலி வதை என்று கூறப்படுகிறது. எனவே தான் கல்வி நிறுவனத்துக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கேலி செய்வது, உடந்தையாக இருப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
எனவே கேலி வதை தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக கல்வி நிறுவன நிர்வாகத்தினர் விசாரணை நடத்த வேண்டும். அது போன்ற குற்றங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான கேலி, கிண்டல் என்பது அவர்களை துன்புறுத்துவதாக கருதப்படுகிறது. அந்த பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளை மீட்டு சரி செய்ய வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமை ஆகும்.
கேலி, கிண்டல்
இது போல் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் ஈவ் டீசிங் எனப்படும் பெண்களை குறி வைத்து அரங்கேறும் கிண்டல், கேலி அத்துமீறல் அதிகமாக இருக்கிறது. அது சில நேரங்களில் பெண்களின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்று விடுகிறது. ஈவ்டீசிங் குற்றங்கள் நிகழ ஆணாதிக்க மனோபாவமே காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஒரு ஆணின் முறை தவறிய நடத்தை அல்லது செயலால் ஒரு பெண்ணுக்கு அச்சம், பயம், அவமானம், தொல்லை மற்றும் உடல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளாவது ஈவ்டீசிங் என்று கூறப்படுகிறது. இந்த குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. செல்போன்கள், இணையதளம் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே பெண்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி, உருவப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடும் நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரகம் பரிந்துரை செய்து உள்ளது.
நாகரிக சமுதாயம்
ஒருவரை கேலி, கிண்டல், அவமதிப்பு செய்வதில் ஈடுபடுபவர்களை தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால் அதையும் தாண்டி கேலி, கிண்டல்களை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும். அது ஒன்று தான் எந்த அவமதிப்பில் இருந்தும் நம் வாழ்வை காத்துக்கொள்ளும் ஒரே வழியாக இருக்கும்.
மேலும் ஒவ்வொருவரும் மனரீதியாக தங்களை உயர்ந்த சிந்தனையுடன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கேலி கிண்டலால் அடுத்தவர்களுக்கு ஏற்படும் வலியை நாம் புரிந்து கொண்டால் அவர்களுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்வோம். அதை நோக்கி செல்வது தான் நாம் நாகரிக சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதற்கு சான்றாக இருக்கும்.
- எதையாவது ஆர்டர் செய்கிறார்கள்.
- தள்ளுபடிக்காக காத்திருக்கிறார்கள்.
இன்று பருப்பு முதல் லேப்டாப் வரை அனைத்தையும் ஆன்லைன் ஷாப்பிங்கிலேயே வாங்கிக்கொள்கிறோம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மாதத்துக்கு இரண்டு முறையாவது பெரும் தள்ளுபடியில் பொருட்களை கொடுத்து வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கின்றன. தள்ளுபடி போதையில் மயங்கி சிலர் தேவையே இல்லையென்றாலும் எதையாவது ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.
இப்படி மாதம் ஒரு ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவர்கள், வாரம் ஒருமுறைக்கு மாறி, கடைசியில் தினமும் எதையாவது ஆர்டர் செய்கிறார்கள். தள்ளுபடிக்காக காத்திருக்கிறார்கள். பொருட்களை வாங்கவில்லையென்றாலும் கூட ஷாப்பிங் தளத்துக்குச் செல்வதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்கின்றனர்.
தினமும் குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது இப்படி அந்த இணையதளங்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர். இந்த மனநிலையை (buying-shopping disorder) ஒருவிதமான குறைபாடு என்று எச்சரிக்கிறது ஹனோவர் மெடிக்கல் ஸ்கூல். இதனால் குடும்பத்தின் அமைதி குலைந்து பொருளாதார ரீதியாக பெரும் சரிவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை யும் செய்கிறது.
- கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடைய விரும்புவோர் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்
- நடந்து செல்லும் தூரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது காற்று மாசுபாடு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.
காற்று மாசுபாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவை 50 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், காற்று மாசுபாட்டிற்கும், கருச்சிதைவுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்து வந்தனர்.
இந்தக் குழு, 2009 முதல் 2017 வரை சீன தலைநகரில் வசிக்கும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது. காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக கருச்சிதைவு ஏற்பட 52 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களால் உருவாகும் நச்சு ரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆய்வின் தலைமை ஆசிரியருமான, லிகியாங் ஜாங், கர்ப்பத்திற்கு முன்னால் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் கருச்சிதைவுகளை தடுக்க அல்லது குறைக்க சாத்தியமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
"கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடைய விரும்புவோர் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும், இது அவர்களின் சொந்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அவர்களின் கருவின் ஆரோக்கியத்திற்கும் கூட அவசியமாகிறது" என தெரிவித்துள்ள பேராசிரியர் ஜாங் மேலும் கூறுகையில், இந்த விவகாரத்தில் இன்னும் தொடர் ஆய்வுகள் தேவை என்று கூறியுள்ளார்.
''காற்றை சுத்தப்படுத்த தற்போது காற்று சுத்திகரிப்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு யாராலும் காற்று மாசிலிருந்து தப்பிக்க இயலாது. மேலும் காற்று சுத்திகரிப்பு கருவிகள் வாங்குவதைப்பற்றி ஏழை எளிய மக்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஏனென்றால் அவை விலை உயர்ந்தவை. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும். நடந்து செல்லும் தூரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்'' என்றார்.
எரிபொருட்களால் உருவாகும் நச்சு ரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.