search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • கருத்தரிப்பு நிகழவில்லை எனில் மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.
    • இருவருக்கும் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மலட்டுத்தன்மை என்பது கணவன் மனைவி இருவரும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டாலும் தொடர்ந்து ஒரு வருடங்கள் வரை கருத்தரிப்பு நிகழவில்லை எனில் அது கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.

    இந்த கருவுறாமை என்பது பெண்ணின் பிரச்சனை மட்டுமல்ல. ஆண்களும் மலட்டுத்தன்மையை கொண்டிருக்கலாம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் என இருவருக்குமே கருவுறுதல் அல்லது மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்

    ஒழுங்கற்ற மாதவிடாய்

    மாதவிடாய் இல்லாமல் போவது

    ஹார்மோன் பிரச்சனைகள்

    ஃப்லோபியன் குழாய் அடைப்பு

    செலியாக் நோய்

    சிறுநீரக நோய்

    எக்டோபிக் கர்ப்ப்பம்

    இடுப்பு அழற்சி நோய்

    பிட்யூட்டரி சுரப்பி கோளாறுகள்

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்

    சிக்கிள் செல் இரத்த சோகை

    எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பாலிப்கள்)

    தைராய்டு நோய்

    அதிக வயதை கொண்டிருத்தல்

    உடல் பருமன் அல்லது மிக குறைவான எடை கொண்டிருப்பது

    இனப்பெருக்க அமைப்பை சேதப்படுத்தும் சில பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் இருப்பது.

    ஆண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்

    வெரிகோஸ் வெயின் பிரச்சனை (விரிவாக்கபட்ட நரம்புகள்)

    விந்தணுக்கள் வைத்திருக்கும் சாக்

    மரபணு கோளாறுகள் (சிஸ்டிக், ஃபைப்ரோசிஸ்)

    இறுக்கமான ஆடைகள் அணிவதால் விந்தணுக்கள் அதிக வெப்பத்தை சந்திதல்

    விந்தணுக்கள் குறைவாக இருப்பது (டெஸ்டோஸ்ட்ரான் அளவு குறைவது)

    முன் கூட்டிய விந்து வெளிபாடு

    விந்தணுக்களின் வடிவம், இயக்கம், அது உள் செல்லும் நேரம் போன்ற குறைபாடு

    மருத்துவ நிலைமகள் மற்றும் மருந்துகள் எடுத்துகொள்வது.

    • கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம்.
    • எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும்.

    கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம். வாரம் இருமுறை, கேழ்வரகில் செய்த உணவுகளை சாப்பிட்டுவந்தால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை இனிப்பு உருண்டையாக செய்துகொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு மாவு- 1 கப்

    நிலக்கடலை - 1/4

    தேங்காய்த்துருவல் - 1/2 கப்

    வெல்லம் (பொடித்தது) - 1/2 கப்

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    உப்பு - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் கேழ்வரகு மாவை மிதமான தீயில் வறுத்து, ஒரு பாத்திரத்தில் ஆறவிடவும். பிறகு நிலக்கடலையை வறுத்து தோலை அகற்றிவிட்டு, மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கரகரப்பாக திரித்து, ஆறவைத்த கேழ்வரகு மாவுடன் சேர்க்க வேண்டும். கூடவே தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும்.

    பின்னர் ஏலக்காயை பொடித்துப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரையை அரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து, கொதித்து சர்க்கரை கரைந்ததும் இறக்கி வடிகட்டி இந்த மாவுடன் ஊற்றவும். நன்றாக கிளறி சப்பாத்தி மாவு பக்குவத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் மாவினை உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். மிகவும்சுவையான, சத்தான கேழ்வரகு உருண்டகளை குழந்தைகள் உள்பட அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


    • கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம்.
    • புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம். இதற்கு சில உணவுகளையும், நீர் பானங்களையும் உள் பருக வேண்டும். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது. இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

    கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அதோடு அதிக அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு இன்றி உடலை பாதுகாக்க வேண்டும்.

    கோடைக் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கோடைகாலத்தில் அதிக தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெயிலில் செல்வதால் தோல்களில் அலர்ஜி, உடலில் தடிப்புகள், முகத்தில் பருக்கள், உடல் முழுது வியர்க்குரு போன்றவை ஏற்படும். இவற்றை தடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.

     அழகு நிலையங்கள் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே அரிசி மாவு, கடலை மாவு, தயிர் முதலியவற்றைப் பயன்படுத்தி இயற்கை முறையில் உங்கள் முகம் மற்றும் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

     வாரம் இமுறை வேப்பிலைகள் உடன் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து நீராடினால் தலைச்சூடு குறைந்து தலைமுடி குளிர்ச்சியாகவும் நறுமணத்துடன் காணப்படும்.

     அவ்வப்போது நெல்லிக்காயை, ஒரு துண்டு இஞ்சி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாறாக குடித்து வரவும் இதன் மூலம் ரத்தசோகை குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.

    சோற்றுக் கற்றாழையை அவ்வப்போது முகம், கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி சற்று நேரம் கழித்து நீராடவும் உடல் குளிர்ச்சியாகவும் பொலிவும் காணப்படும்.

    கோடையில் விலை உயர்ந்த குளிர்பானங்களை வாங்குவதை தவிர்த்து தயிர் மோர் பயன்படுத்தலாம் அதில் வெந்தயம் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

    இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

     ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பட்டுப்போல பளப்பளப்பாக இருக்கும்.

    இதனை தொடர்ந்து செய்யும்போது வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும்.

    கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. முகம் வறண்டு போகாமல் தடுக்க இவை உதவுகின்றன.

     மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவலாம். எலும்பிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையை இணைத்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தக்காளிப் பழத்தையும், சர்க்கரையையும் இணைத்து அதன் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பளப்பளவென மாற்றம் அடையும்.

    • அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன்.
    • மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும்.

    அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். மட்டன் தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வகைகளில் செய்யலாம். அதிலும் மட்டனில், அரைத்த மசாலா சேர்த்து செய்யப்படும் மட்டன் கோலா உருண்டை சாப்பிடவே அட்டகாசமாக இருக்கும். அதை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    மட்டன் (வெள்ளாட்டு இறைச்சி) -1கிலோ

    மிளகாய்த் தூள் 12 கிராம்

    மஞ்சள் தூள் - 4 கிராம்

    உப்பு -தேவைக்கு ஏற்ப

    நறுக்கிய பச்சை மிளகாய்- 10 கிராம்

    நறுக்கிய பூண்டு - 20 கிராம்

    நறுக்கிய கொத்தமல்லி - 30 கிராம்

    எலுமிச்சைச் சாறு- 5மி.லி.

    எண்ணெய் - கால் லிட்டர்

    அரைக்க

    துருவிய தேங்காய் 25 கிராம்

    லவங்கப்பட்டை 2 கிராம்

    கிராம்பு, கசகசா - 10 கிராம்

    வறுத்த உளுந்தம்பருப்பு - 15 கிராம்

    செய்முறை:

    முதலில் மிக்சியில், சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சியை அரைத்து எடுக்கவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலவையை கலந்துகொள்ளவும்.

    பின்னர் மிக்சியில் தேங்காய்த் துருவல், லவங்கப்பட்டை, கிராம்பு, கசகசா, வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை அரைத்த இறைச்சியுடன் சேர்த்து கலக்கவும்.

    கடைசியாக, உருண்டை பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்து எடுத்தால் சுவையான கோலா உருண்டை, உங்களை ருசிக்க கூப்பிடும்.

    • சில பெண்களுக்கு முழங்கை கருப்பாக இருக்கும்.
    • குளிக்கும்போது எவ்வளவு சுத்தம் செய்தாலும் அந்த கருப்பு அகலாது.

    சில பெண்களுக்கு முழங்கை கருப்பாக இருக்கும். குளிக்கும்போது எவ்வளவு சுத்தம் செய்தாலும் அந்த கருப்பு அகலாது. சிலர், சந்தையில் விற்கப்படும் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி பார்ப்பார்கள். ஆனால் இந்த சந்தை தயாரிப்புகளில் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருக்கலாம். எனவே, முழங்கை 'கருப்பை எப்படி வீட்டு தயாரிப்பு மூலம் சரி செய்யலாம் என தெரிந்துகொள்வோம்.

     முதலில் ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு கடலை மாவு எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை வெட்டி சாறு எடுத்து, அதனுடன் கலக்கவும். இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்த பிறகு, வெட்டிய எலுமிச்சையை அதில் தோய்த்து முழங்கையில் தேய்க்கவும். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் அதை உலரவிடுங்கள்.

    அதையடுத்து, தண்ணீரில் பருத்தி துணியை நனைத்து முழங்கையை சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரத்துக்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.

    கடலை மாவை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

    கடலை மாவின் தன்மையானது. சருமம் மென்மையாவதற்கும். கருத்துப் போகாமல் இருப்பதற்கும் உதவுகிறது. எந்த வகையான தோல் நோய்த்தொற்றையும் தடுக்க கடலைமாவு உதவியாக இருக்கிறது. முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தம் செய்யவும், கடலைமாவை பயன்படுத்தலாம்.

     எலுமிச்சையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

    எலுமிச்சையானது பிளீச்சிங் விளைவைக் கொண்டுள்ளது. இது சருமத்தின் கருமையை நீக்க உதவுகிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமம் கருமையாவதை தடுத்து, தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. பொதுவாக, சுத்தமான சருமத்தைப் பெற தினமும் சரியான கவனிப்பு மிகவும் முக்கியம்.

    ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி கடலை மாவு தண்ணீர் விட்டு கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி வர சருமம் மென்மையாகும்.

    குளிக்கும்போது கடலை மாவு தேய்த்துக் குளித்தால் முகம் வழுவழுப்பாகும், சுருக்கம் ஏற்படாது. இளமையாக தோன்றலாம்.

    இரண்டு தேக்கரண்டி கடலை மாவுடன், 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர், 4 தேக்கரண்டி பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும். 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது. பொலிவிழந்த சருமம் இளமை பெறும்.

    • ஷீர் குருமா ஒரு முகலாய டிஷ்
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டெசட்

    தேவையான பொருட்கள்

    கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர்

    சேமியா - முக்கால் கப்

    பேரீச்சைப் பழம் -10

    முந்திரி பருப்பு - கால் கப் (நறுக்கியது)

    பாதம் பருப்பு - கால் கப் மெல்லியதாக நறுக்கியது

    பிஸ்தா - 2 ஸ்பூன் நறுக்கியது

    சாரை பருப்பு - ஒரு ஸ்பூன்

    காய்ந்த திராட்சை - 15

    சர்க்கரை - கால் கப்

    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    ரோஸ் எசன்ஸ் - 2 சொட்டு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முக்கால் கப் சேமியாவை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    இப்போது அதே கடாயில் மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 பேரீச்சை பழங்களை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை 2 நிமிடங்களுக்கு நன்றாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து இதில் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இதில் 15 காய்ந்த திராட்சையை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 லிட்டர் முழு கொழுப்பு பாலை சேர்த்து காய்ச்ச வேண்டும். பால் ஒரு கொதி வந்ததும் அதில் வறுத்த சேமியாவை சேர்க்க வேண்டும். சேமியா வெந்ததும் இதனுடன் கால் கப் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

    பின்னர் இதில் கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். இரண்டு சொட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து, பின்னர் வறுத்த பேரீச்சைப்பழம், திராட்சை, பருப்பு வகைகளை சேர்க்க வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அடுப்பை சிம்மில் வைத்து சேமியாவை வேக வைத்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான ஷீர் குருமா தயார்.

    இதை சூடாக சாப்பிடலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் பறிமாறலாம். இதன் சுவை அபாரமாக இருக்கும்.

    • குறைவான நேரத்தில் ஒரு மொறு மொறு மொறு ஸ்நாக் ரெசிபி.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்

    உருளைக்கிழங்கில் சமைக்கும் அனைத்து ரெசிபிகளையும் நாம் விரும்பி சாப்பிடுவோம். இப்போது உருளைக்கிழங்கை வைத்து குறைவான நேரத்தில் ஒரு மொறு மொறு மொறு ஸ்நாக் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த ரெசிபி மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட பெஸ்ட் ஸ்நாக் ரெசிபியாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஸ்நாக்கை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த ஸ்நாக் ரெசிப்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 3

    சில்லி ஃப்ளேக்ஸ்- ஒரு ஸ்பூன்

    சாட் மசாலா அரை ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை- ஒரு கைப்பிடி

    உப்பு- சுவைக்கேற்பவாறு

    மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்

    தனியா தூள்- கால் ஸ்பூன்,

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சில்லி ஃப்ளேக்ஸ், சாட் மசாலா, கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து வடை போல் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது இரண்டு பிரட்டை எடுத்து தோசைக்கல்லில் சேர்த்து டோஸ்ட் செய்ய வேண்டும். இந்த பிரட் பொன்னிறமாக மாறும் அளவு டோஸ்ட் செய்து எடுத்து ஆற விடவும். பின்னர் இந்த பிரட்டை துண்டுகளாக்கி மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துகளை ஒரு தட்டுக்கு மாற்றிக் கொள்ளவும்.

    வேறொரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சோளமாவு சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அரை டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் தயாரித்த வடையை இதனுள் சேர்த்து எடுத்து பின் இதை பிரட் துகளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் தயார். இந்த ஸ்நாக் சாப்பிடுவதற்கு மொறு மொறுவென இருக்கும்.

    • பழ எசென்ஸ் விட்டு லட்டு பிடித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
    • தேங்காய்க்கு பதில் கசகசாவை அரைத்து மோர்க்குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.

    * இஞ்சியுடன் ஏலக்காயை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். டீ தயாரிக்கும்போது கொதி வந்த பின்பு இதை ஒரு டீஸ்பூன் அளவிற்கு போட்டு பருகவும். டீ சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    * மோர்க் குழம்பு செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக கசகசாவை சேர்த்து அரைத்து மோர்க்குழம்பு செய்தால் கெட்டியாக, சுவையாக இருக்கும்.

    * பொட்டுக்கடலை உருண்டை பிடிக்கும்போது வறுத்த வேர்க்கடலையையும், பொடித்த முந்திரியையும் சேர்த்துப் பிடித்தால் சுவையாக இருக்கும்.

    * லட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு பழ எசென்ஸ் விட்டுப் பிடித்தால் லட்டு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    * முட்டையை வேக வைக்கும் போது சில சமயங்களில் வெடிப்பு ஏற்பட்டு வெள்ளைக்கரு வெளியே வரக்கூடும். அப்படி வெளியில் வராமல் இருக்க வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை சேர்க்கவும். இதனால் முட்டையின் ஓடு வெடித்தாலும் உள்ளே இருப்பவை வெளியில் வராது.

    * பூசணிக்காய் மீந்துவிட்டால் அதை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் அடுத்த நாள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

    * முட்டை கெடாமல் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் மூழ்கும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அந்த முட்டை கெட்டு விட்டது. அது தண்ணீரில் மூழ்கினால் அந்த முட்டையை சமைப்பதற்கு பயன்படுத்தலாம்.

    * ஒரு கப் அளவு பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து காய்கறி சாலட் செய்யும்போது சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை நன்றாக இருக்கும். உடல் நலத்திற்கும் ஏற்றது.

    * பச்சை மிளகாயில் உள்ள காம்பு பாகத்தை நீக்கி விட்டு அதை பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு பிரெஷ் ஆக இருக்கும்.

    * பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டால் சாதம் உதிரி உதிராக இருக்கும்.

    • வட்லப்பம் என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு பொருளாகும்.
    • ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமான உணவாகும்.

    வட்லப்பம் என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு பொருளாகும். இது ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமான உணவாகும். இது அங்கு வாழும் தமிழ் மக்களால் விரும்பி உண்ணப்படும் அற்புதமான உணவாகும். இது அனைத்து விழாக்களின் போதும் செய்து அனைவரும் உண்பார்கள். இதன் சுவை அமோகமாக இருக்கும். ஈசியாக செய்யக்கூடியது.

    பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கருப்பட்டி வட்லப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சுவையில் சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி முட்டை- 4

    தேங்காய் பால்- அரை கப்

    சர்க்கரை- ஒரு ஸ்பூன்

    கருப்பட்டி- 1½ கப்

    உப்பு- ஒரு சிட்டிகை

    ஏலக்காய் தூள்- அரை ஸ்பூன்

    செய்முறை:

    கருப்பட்டி வட்லப்பம் செய்ய முதலில் மிக்சி ஜாரில் தேங்காய்களை ஏலக்காயை சேர்த்து நன்கு அரைத்து முதல் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    முட்டையை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் கருப்பட்டியை சேர்த்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரையும் வரை சுட வைக்க வேண்டும்.

    பின்னர் தேங்காய்ப்பால், கருப்பட்டி கரைசல், அரைத்த சீனி எல்லாவற்றையும் நன்றாக கலந்து கரைந்ததும் வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்.

    அதன்பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் அடித்து வைத்த முட்டை, தேங்காய் பால் கலவையில் கருப்பட்டி கரைந்த நீரினை கலந்து எடுத்து ஊற்றிக்கொள்ள வேண்டும்.

    தண்ணீர் சூடானதும் இட்லி பாத்திரத்தினுள் இந்த கலவையை வைத்து மூடி வைக்க வேண்டும். 25 நிமிடம் வட்லபத்தை வேகவிட வேண்டும்.

    வட்டிலப்பம் வெந்ததும் ஒரு கரண்டியால் வட்லபத்தை குத்தி எடுத்து பார்த்தால் கரண்டியில் வட்லப்பம் ஒட்டாமல் இருக்க வேண்டும். இப்பொழுது சுவையான கருப்பட்டி வட்டலப்பம் தயார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும்.
    • முதல் மூன்று மாதங்களில் இருந்து தொடங்குகிறது.

    கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். இது முதல் மூன்று மாதங்களில் தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பத்தின் பிற்பகுதியில், இன்னும் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.

     அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள்:

    ஹார்மோன் மாற்றங்கள்

    கர்ப்பத்தின் தொடக்கத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உடலில் ரத்த ஓட்டம் மற்றும் திரவத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. அதற்கு மேல், உங்கள் சிறுநீரகங்கள், உங்கள் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்ற கடினமாக உழைக்கின்றன.

    அதிக திரவம் கொண்ட சிறுநீரகங்களுடன், சிறுநீர்ப்பை கருப்பையை அழுத்தினால், அதை அடிக்கடி காலி செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இதனால் தான் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்கிறார்கள்.

    வயிறு மற்றும் கருப்பை வளர்தல்

    உங்கள் கர்ப்ப காலம் தொடரும் போது, உங்கள் உடல் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மாறத் தொடங்குகிறது. அதேநேரத்தில், உங்கள் வளர்ந்து வரும் கருப்பை வயிற்று குழிக்குள் உயர்ந்து, உங்கள் சிறுநீர்ப்பையின் அழுத்தத்தை குறைக்கிறது.

    இந்த காரணங்களுக்காக, இரண்டாவது ட்ரிமெஸ்டரில் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்லுவார்கள். மேலும் உங்கள் கருப்பையில் உங்கள் கருவில் உள்ள குழந்தை இடுப்புக்குள் மூழ்கி சிறுநீர்ப்பையில் அழுத்துவதால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஏற்படும்.

    சிறுநீர் பாதை நோய் தொற்று

    அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் ஒரு பகுதியா அல்லது சிறுநீர் பாதை நோய் தொற்று என்று பல பெண்கள் கவலைப்படுகிறார்கள்.

    சிறுநீர் பாதை நோய் தொற்று என்றால், சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் உணர்வு, காய்ச்சல், சிறுநீர் அடர்த்தியாக இருப்பதைக் காணலாம் அல்லது கழிப்பறையில் ரத்தத்தைப் பார்க்கலாம். சிறுநீர் கழிப்பதற்கான வலுவான தூண்டுதலையும் நீங்கள் உணரலாம், ஆனால் சில துளிகள் மட்டுமே வெளியே வரும்.

    பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் 6 முதல் 24 வாரங்கள் வரை சிறுநீர் பாதை நோய் தொற்று ஆபத்தை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் வளர்ந்து வரும் கருப்பை சிறுநீர் பாதையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

    உங்களுக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், மருத்துவரை அணுகலாம். ஏனெனில் இந்த நோய்த்தொற்றுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும்.

    கர்ப்ப கால நீரிழிவு

    கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது சில சமயங்களில் கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம், பொதுவாக கர்ப்பத்தின் இது ஒரு தற்காலிக நீரிழிவு நோயாகும். கர்ப்பத்தின் 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில் கர்ப்ப கால நீரிழிவு நோயை மருத்துவர்கள் பொதுவாக பரிசோதிப்பார்கள்.

    கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டால், குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படாது, மேலும் நீங்கள் குழந்தையை பெற்றெடுத்த பிறகு நீரிழிவு பொதுவாக மறைந்துவிடும்.

    தொடர்ச்சியான தாகம், குமட்டல் அல்லது சோர்வுடன் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால், உங்கள் மருத்துவரை தாமதிக்காமல் அணுகவும்.

    மேலும் சில காரணங்கள்:

    கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக நிறைய தண்ணீர் அல்லது பிற திரவங்களை இரவு நேரத்தில் குடிப்பது. கர்ப்ப காலத்தில் காஃபின் அதிகம் குடிப்பது.

    • மாதவிடாய் இல்லாத நாட்களில் யோனி ரத்தப்போக்கு ஏற்படுவதை குறிக்கும்.
    • கருச்சிதைவு அல்லது எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுவதற்கான அறிகுறி.

    ஸ்பாட்டிங் என்பது வழக்கமான மாதவிடாய் இல்லாத நாட்களில் யோனி ரத்தப்போக்கு ஏற்படுவதை குறிக்கும். ரத்தக்கசிவு என்பது புள்ளி ரத்தப்போக்கு. இது சிறிய அளவிலான ரத்தத்தை உள்ளடக்கியது. கழிவறையை பயன்படுத்திய பிறகு உங்கள் உள்ளாடையில் அல்லது கழிப்பறை பேப்பரில் இதை கவனிக்கலாம். பெரும்பாலும் இதை பேண்டி லைனர் கொண்டே கண்டறிந்துவிடலாம்.

    மாதவிடாய் ஏற்படுவதை தவிர வேறு நேரத்தில் ரத்தபோக்கு ஏற்படுவது அசாதாரண ரத்தப்போக்கு அல்லது மாதவிடாய்க்கு இடையில் ரத்தப்போக்கு என்று சொல்லப்படுகிறது. ரத்தக்கசிவு புள்ளிகள் என்றாலும் சில நேரங்களில் இது தீவிர பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

    புள்ளியிடுதல் கவலைப்பட வேண்டியது அல்ல. உங்களுக்கு அதிக ரத்தப்போக்கு அல்லது இடுப்புவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் இது கருச்சிதைவு அல்லது எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

    அண்டவிடுப்பின் ரத்தக்கசிவு என்பது உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது கருப்பை முட்டையை வெளியிடும் போது ஏற்படும் லேசான ரத்தப்போக்கு ஆகும். இது பொதுவாக மாதவிடாய்க்கு 14 நாட்களுக்கு முன்பு நிகழ்கிறது.

    அண்டவிடுப்பின் புள்ளிகள் வெளிர் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக இருக்கலாம். மற்றும் உங்கள் சுழற்சியின் நடுவில் 1 முதல் 2 நாட்கள் வரை நீடிக்கும்.

    கர்ப்பப்பை பரிசோதனை அவசியமா?

    கருத்தரிப்பை எதிர்நோக்கி இருந்தால் அதற்கான வயதை கொண்டிருந்தால் வீட்டிலேயே ரத்தப்பரிசோதனை செய்து உறுதி செய்யலாம்.

    உங்கள் சோதனை எதிர்மறையாக இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

    மாதவிடாய்க்கு இடையில் ஸ்பாட்டிங் விவரிக்க முடியாத அளவுக்கு இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை சந்தியுங்கள். இது பெரும்பாலும் கவலைப்பட ஒன்றுமில்லாதது. தானாகவே சரியாகிவிடக்கூடும். ஆனால் சிலசமயங்களில் அது தீவிரமான ஒன்றின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

    • எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறைகளை பார்க்கலாம்.
    • தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.

    இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும்.

    இதன் மூலம் அழகான, பளிச் என்ற சருமத்தை பெற முடியும். அந்த வகையில் தற்போது எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.

    * அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும். மேலும் முகத்தில் எண்ணெய் வழியும் போதெல்லாம் துணியை கொண்டு துடைக்கவும். முகத்திற்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பாசிப்பயறுதமாவு போட்டு கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

    * தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும். அடிக்கடி பீட்ரூட் தக்காளி சாறு குடித்து வந்தால் சருமத்திற்கு நல்லது. முதலில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிருங்கள்.

    * தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை சர்க்கரையில் தேய்த்து முகத்தில் தடவுங்கள். பின்பு இன்னொரு பகுதியில் கஸ்தூரி மஞ்சளில் தேய்த்து அதையும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை 3 முறை செய்து வர வேண்டும்.

    * துளசி, வேப்பிலை, புதினா மூன்று இலைகளையும் சமஅளவு எடுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மிருதுவான பேஸ்ட்டில் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஃபேஸ் பேக் ரெடி. முகத்தை சோப்பு கழுவிவிட்டு, அதன்பின் இந்த பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

    இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர கடுமையான முகப்பருக் கூட மறையத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல், எண்ணெய் பசை சருமும் குறைந்து பளிச்சென்று காணப்படும்.

    ×