என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
- திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
- ஸ்ரீகருடவாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-18 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி இரவு 10.15 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: மகம் நள்ளிரவு 1.18 மணி வரை. பிறகு பூசம்.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் முருகப்பெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடவாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்சுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-பெருமை
மிதுனம்-ஆதரவு
கடகம்-நட்பு
சிம்மம்-உதவி
கன்னி-அன்பு
துலாம்- அன்பு
விருச்சிகம்-பக்தி
தனுசு- பாராட்டு
மகரம்-போட்டி
கும்பம்-தெளிவு
மீனம்-ஆக்கம்
- சங்கரன் மகன் ஐங்கரனை வழிபட்டால் எந்தச் சங்கடங்களையும் தீர்த்துவைப்பான் என்பதில் ஐயமில்லை.
- விநாயகர் கோவிலுக்கு சிதறு தேங்காய் உடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சங்கரன் மகன் ஐங்கரனை வழிபட்டால் எந்தச் சங்கடங்களையும் தீர்த்துவைப்பான் என்பதில் ஐயமில்லை.
நாம் தொடுக்கும் வழக்கு, நியாயமான வழக்காய் இருந்தால் உறுதியாய் நமக்கு வெற்றி கிட்டும்.
விநாயகரை வழிபட ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி திதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தச் சதுர்த்தி திதி எந்தக் கிழமையில் அமைந்தாலும் சரி அன்று வீட்டைத் தூய்மை செய்ய வேண்டும்.
கோமியம், கடல்நீர் ஆகியவற்றைத் தெளிக்க வேண்டும். மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும்.
வீட்டிலுள்ளவர் எல்லோரும் நீராடி, தூய்மையாக இருக்க வேண்டும்.
அவல், பொரி, கடலை, வெல்லம், இளநீர், பசும்பால், தேன், கொழுக்கட்டை, மோதகம், சுண்டல் ஆகியவற்றைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
அருகம்புல், செம்பருத்தி, வெள்ளை எருக்க மலர் ஆகியவற்றைத் தயாராக வைத்துகொள்ள வேண்டும்.
அருகிலுள்ள விநாயகர் கோயிலில் சந்தனக் காப்புச் செய்து கொண்டுவந்த சந்தனத்தை மஞ்சள் தூளுடன் கலந்து, பிசைந்து, பெரிதாகப் பிள்ளையாரைச் செய்து கொள்ள வேண்டும்.
கிழக்கு முகமாக வீட்டின் அறையில் பீடம் அமைக்கப்பட வேண்டும். அதன் மீது முழுவதும் எருக்க மலர்களைப் பரப்ப வேண்டும்.
அதில் அருகம்புல் பரப்பி மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.
பின்பு அதற்கு குங்குமத் திலகமிட்டு, அருகம்புல் மாலை இட்டுச் சுற்றிலும் செம்பருத்தி மலர்களை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
ஐந்து முகக் குத்துவிளக்கில் நெய் ஊற்றி ஏற்ற வேண்டும்.
விநாயகர் பீடத்திற்குக் கற்பூர தீபம் காட்டி, தேங்காய் உடைத்து விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்களையும்,
அஷ்டோத்திர சத நாமாவளியையும் சொல்லி, அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
பின்பு கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.
விநாயகர் கோயிலுக்கு சிதறு தேங்காய் உடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பிரசாதங்களைப் பிறருகுத் தந்த பின்பே வீட்டிலுள்ளவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விநாயகர் பூஜையை ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி அன்று செய்ய வேண்டும்.
இப்படிச் செய்தால் வழக்குகளில் வெற்றிகிட்டும், குடும்ப நிலையில் முன்னேற்றம் காணும். செல்வபெருக்கு, புகழ் ஆகியன கிட்டும்.
- அவன் வந்ததும் ஒரு தலைச் சுவடியை நீட்டினார். “அதில் இன்று போய் நாளை வா” என்றிருந்தது.
- சனி பிடிக்காதது மட்டுமல்ல, சனியின் கெடுபலன்களையும் குறைத்து அருள்புரிகிறார் விநாயகர்.
ஜாதகத்தில் சனி தோஷம் கொண்டு துன்பங்கள் அனுபவிப்பார்கள் "விநாயகரை" வழிபட்டால் போதும், வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.
இதனை விளக்கும் புராண கதை ஒன்றை காணலாம்.
ஒரு தடவை ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் நிஷ்டையில் இருந்து, விநாயகர் தன்னைப் பிடிப்பதற்காக சனி பகவான் வருவதை அறிந்து கொண்டார்.
அவன் வந்ததும் ஒரு தலைச் சுவடியை நீட்டினார். "அதில் இன்று போய் நாளை வா" என்றிருந்தது.
பின்னர் விநாயகப் பெருமான் அதை அரசமரத்தடியில் வைத்தார்.
பின்பு சனி பகவானிடம் "சனீஸ்வரா எந்த நாளும் இந்த அரசமரத்திற்கு வருக.
இந்த ஓலைச் சுவடியில் என்ன எழுதி இருக்கிறதோ அதன்படி நடப்பாயாக!" என்று சபித்து விட்டு மறைந்து விட்டார்.
அதன் பிரகாரம் சனீஸ்வர பகவான் தினமும் அந்த அரச மரத்தடிக்குச் சென்று அதில் உள்ள
வாசகத்தைப் படித்து ஏமாந்தபடி திரும்புவது வழக்கமானது.
இப்படி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஏமாந்துபோன சனிபகவான், விநாயகரைப் பிடிப்பது என்பது முடியாத காரியம் என்றுணர்ந்து அவரை துதித்து வழிபடத் தொடங்கினார்.
விநாயகரும், அவர் முன்தோன்றி "சனீஸ்வரா, காரணமின்றி யாரையும் உன் சக்தியைப் பயன்படுத்தித் தவறாக நடக்கக்கூடாது. இதற்கு உன் அனுபவம் ஒரு படிப்பினையாகட்டும்.
இன்று முதல் என்னை வணங்கும் பக்தர்களையும் நீ பிடித்து துன்புறுத்தக்கூடாது" என்று கூறி அவருக்கு ஆசி அளித்து மறைந்தார்.
இதன்படியே இன்றும் சனிதோஷம் உள்ளவர்கள் விநாயகரை அவருக்கு உகந்த நாட்களான சங்கடஹர சதுர்த்தி,
விநாயகர் சதுர்த்தி இன்னும் பிற நாள்களிலும் வணங்கி வர சனிதோஷத்தில் இருந்து முற்றிலும் விடுபடுகிறார்கள்.
சனி பிடிக்காதது மட்டுமல்ல, சனியின் கெடுபலன்களையும் குறைத்து அருள்புரிகிறார் விநாயகர்,
நவக்கிரக கோட்டையில், அதுவும் சனி பகவான் எதிரியில் அமர்ந்து கொண்டு.
நவக்கிரக கோட்டையில் ஸ்ரீ நவசக்தி சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.
நவக்கிரகங்கள் எல்லாம் தனித்தனி சந்நிதி களில் விநாயகர் எழுந்தருளியிருக்கும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளனர்.
வேலூரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னை.
பொன்னையில் இருந்து 3 கி.மீட்டரில் உள்ளது நவக்கிரகக் கோட்டை.
வேலூரிலிருந்து பொன்னைக்கு பேருந்து வசதி உண்டு. பொன்னையில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ மூலம் நவக்கிரகக் கோட்டையை அடையலாம்.
- அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை நிச்சயம் பிறக்கும்.
- கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில் கோரையாற்றின் கரையில் அமைந்துள்ளார் மதுரவிநாயகர்.
திருமணத்தடை உள்ள ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்தக் கோவிலுக்கு வந்து கோவிலின்
எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும்.
அரளி, சிகப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து அவருக்குப் பிடித்த தேங்காய்,
வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும்.
அதனைத்தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இதேபோல் வணங்கி வந்தால் திருமணத்தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும்.
நெல்லை காந்திமதி அம்மன் ஆலயத்தில் அருள்புரியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு
தினமும் அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை நிச்சயம் பிறக்கும்.
குழந்தை பிறந்ததும் இங்கு சந்நிதிக்கு வந்து குழந்தையை இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில்
உட்புறமாக தந்து வெளிப்புறமாக குழந்தையை வாங்கிக் கொள்ளும் சம்பிரதாயம் இன்றும் நடைபெற்று வருகிறது.
ஓம் அஸ்வ கணேசா போற்றி!
ஓம் ஆலவாயன் மைந்தா போற்றி!
ஓம் இயற்கை ரூபனே போற்றி!
ஓம் பொன்னை அணிந்தாய் போற்றி!
ஓம் சித்தியின் நேசனே போற்றி!
ஓம் புத்தியில் உறைவோனே போற்றி!
ஓம் பார்வதி மைந்தா போற்றி!
ஓம் இலையுடைக்கரமே போற்றி!
ஓம் மோதகம் பிரியனே போற்றி!
ஓம் மோகன கணேசா போற்றி!
ஓம் அரசிதழ் நாயகனே போற்றி!
இந்த போற்றி பதினொன்றையும் சொல்லி அஸ்வதன அரசிலை கணேசரை வணங்கி வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது திண்ணம்.
- பூஜை முடியும் நாளில் “மோதகம்” நிவேதனம் செய்ய வேண்டும்.
- இந்த பூஜையை சங்கடஹரசதுர்த்தியில் தொடங்கலாம்.
சக்தி கொண்டு சித்தி தரும் இவ்விநாயகரை வழிபட பூஜை முறை ஒன்றிருக்கிறது.
ஒரு அட்டையிலோ, பலகையிலோ இந்த அஸ்வதன விநாயகரை ஒட்டி, சட்டமிட்டு பக்தர்கள் கோரிக்கைக்கு ஏற்றவாரு பூஜை செய்யலாம்.
அதற்குரிய சந்த வரிசைகள் இவையே:
இழந்த பதவி, வேலைகளை மீண்டும் பெற விநாயகர் படத்தில் இடது காதுப்பகுதியிலிருந்து சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு வர வேண்டும்.
மேலும் விநாயகரின் காரிய சித்தி மாலையை மும்முறை படிக்க வேண்டும்.
இப்படி 54 நாள்கள் படித்து வர நினைத்த கோரிக்கை நிறைவேறும் தினமும் கல்கண்டு, பால் நிவேதித்து,
பூஜை முடியும் நாளில் "மோதகம்" நிவேதனம் செய்ய வேண்டும்.
குழந்தைப் பேற்றுக்காக 48 நாள் தொப்புள் பகுதியில் தொடங்கி சந்தனப்பொட்டு இட வேண்டும்.
தினமும் த்ரிமதுரம் (தேன், பால், நெய்) கலந்து நிவேதனம் செய்து சாப்பிட்டு வர பலன்கள் கிடைக்கும்.
இந்த பூஜையை சங்கடஹரசதுர்த்தியில் தொடங்கலாம்.
சிலருக்கு அதிர்ஷ்டம், ராஜயோகம் வேண்டுதலாக இருந்தால், அதற்கு கணேசருடைய கவசத்தை தினமும்
மூன்றுமுறை படித்து "மோதகம்" நிவேதனம் செய்ய வேண்டும்.
"ஓம் கம் கம் கணேசாய நம!" என்று ஜபம் செய்ய வேண்டும்.
மேலும், பகையின்றி வெற்றி, அரசியல், லாபம் பெறுவதற்கு முஷ்டி மோதகம் என்னும் பிடிக் கொலுக்கட்டை வைத்து
சுக்கில சதுர்த்தியில் வலது கை இலைப்பகுதியில் தொடங்கி 56 நாட்கள்
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கணேஸ்வராய நமக" என்று தினம் 108 தடவை ஜபிக்க வேண்டும்.
இப்படியாக அஸ்வதன விநாயக பூஜையை எளிமையாசச் செய்து சாதகமான பலன்களை ஏராளமாகப் பெறலாம்.
- அஸ்வதன விநாயகருடைய அமைப்பு அரச மரத்தின் “எட்டு இலை”களால் ஆனது.
- இவரை வணங்குவதால் ராஜ தன்மை, ஜனவசீகரம் முதலிய பலன்கள் கிடைக்கின்றன.
அஸ்வதன விநாயகருடைய அமைப்பு அரச மரத்தின் "எட்டு இலை"களால் ஆனது. அதாவது
* நேத்ர மென்னும் கண்களின் மேல் பகுதியில் சூலமும், காதுகளில் குண்டலமும், வலது கரத்தில் "ஓம்" என்கிற பிரணவ மூல எழுத்தும், இடது கரத்தில் சுழல்கின்ற இந்தப் பூமியில் சமத்துவக் குறியீடான ஸ்வஸ்திக்கு இருக்கின்றது.
* வயிற்றில் அரவமென்னும் பாம்பினை போன்ற முப்புரிநூல் இச்சா, ஞான, கிரியா சக்திகளையும், ஞானம், செல்வம், வீரம் ஆகிய பேறுகளையும் அளிப்பதாக விளங்குகின்றது.
* நீலநிற இரு தந்தங்களும் தோஷங்களை விலக்குகின்ற தன்மையுடையதாகவும், எட்டு தனங்களும் மனிதனுக்குரிய நல்ல குணங்களை குறிப்பனவாகவும் உள்ளன.
*அஸ்வதன விநாயகருடைய தன மென்கிற இலைப்பகுதிகளில் அரச மரத்தில் பல தெய்வங்கள் இருப்பதைப் போலவே பிரம்ம ருத்திரர்கள், திக்கஜங்கள், நட்சத்திராதி தேவதைகள் வசிக்கிறார்கள்.
இவரை வணங்குவதால் பிள்ளைக்கனி தீர்வதோடு ராஜ தன்மை, ஜனவசீகரம் முதலிய பலன்கள் கிடைக்கின்றன.
மேலும்,
"அஷ்டதன மத்யே கணேசம்
சாந்தரூபம்
மதத்ரி ணேத்ரம்
நாகா பரண புஷிதம்
த்ரி சூல பாணினம், கிரீட
மகுட தாரினம்
சர்வ சித்திரப்ரதம் அஸ்வ
தன கணேசம் பஜே"
இதுவே அஸ்வதன விருட்ச கணேசரின் வழிபாட்டு சுலோகம்.
இதன் பொருள் எட்டுதனங்களை கொண்டவரும், அமைதியான உருவத்தை உடையவரும் யானையின்
மூன்று கண்களைப் போன்ற சிறு கண்களைக் கொண்டு ஆர்ப்பவரும், பல ஆபரணங்களைச் சூடியவரும்,
மிகவும் தூய்மையான, வெள்ளைப் பூணூலை அணிந்து கொண்டிருப்பவரும், முகத்தின் நடுப்பகுதியில்
சக்தி வடிவமானவரும், சிவபெருமானுடைய ஆயுதமான த்ரி சூலாயுதத்தை திலகமாக பொருத்தி இருப்பவரும்,
தலையிலுள்ள சிகைப் பகுதிகள் கிரீட மகுடத்தை அணிந்திருப்பவரும் இந்த சாந்தரூபமான அரச இலைகளால்
அமைந்து அருள் தருபவரான அஸ்வதன விநாயகரை வணங்கி நலம் பெறுவோமாக!
- அரச மரத்தை “ராஜ விருட்சம்” என்று அழைப்பார்கள்.
- அரச மர நிழலில் உள்ள விநாயகர் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பர்.
அஸ்வத்தம் என்றால் அரச மரத்தை குறிக்கின்றது.
பொதுவாக அரச மரத்தையும் அதிலுள்ள பொருள்களையும் அடுப்பில் எரிக்கக் கூடாது என்றும்,
தெய்வங்களைக் குறித்து செய்யப்படுகிற ஹோமங்களில் மட்டுமே இதன் குச்சிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் சாஸ்திர விதி உண்டு.
அரச மரத்தை "ராஜ விருட்சம்" என்று அழைப்பார்கள்.
இதனால் தான் கிராமப்புறங்களில் உள்ள பஞ்சாயத்து மேடைகளில் அரச மரம் காணப்படும்.
அரச மரத்தின் கீழ் அமைந்த விநாயகர் மிகவும் விசேஷமானவர்.
இந்த அமைப்புள்ள கணபதி மூர்த்தங்களை வணங்குவதால் நமக்கு சீரிய பலன்கள் சித்தியாகும் என்பது உறுதி.
அவற்றில் முக்கியமாக உயர்பதவி, வாரிசு உண்டாகுதல், சீரிய நலமான வாழ்க்கை பாதை இவை முக்கியமானவை.
அரச மர நிழலில் உள்ள விநாயகர் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பர்.
இந்த விநாயகர் கேட்டதைத்தரும் குணம் கொண்டவர் என்பதால், இன்றும் கிராமத்துப் பெண்கள் நதி தீரத்தில் நீராடிவிட்டு
அவருக்கு அரிசியும், வெல்லமும் படைத்துவிட்டு, ஈரத்துணியோடு பதினாரு முறை அடிப்பிரதட்சணம் செய்வார்கள்.
விநாயகரை அரச மரத்தின் கீழ் வழிபட வசதி இல்லாதவர்களுக்கும், அந்த முறை தெரியாதவர்களுக்கும்
"அஸ்வதன விநாயகர்" பூஜை சிறந்ததொரு வழிகாட்டும் பூஜை முறையாக விளங்குகின்றது.
- வன்னிமரப் பிள்ளையாரைக் காண்பதே அரிது. வன்னிமரத்திற்கு விசேஷ அம்சங்கள் உண்டு.
- வில்வமர விநாயகரைச் சுற்றி வந்து வணங்கினால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர்.
பிள்ளையார் பல்வேறு மரத்தின் அடியில் இருந்து பலவிதமாக பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
எந்தெந்த மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் என்னென்ன சிறப்பு உண்டாகும் என்பதைக் காணலாம்.
வில்வமரப் பிள்ளையார்:
தெற்கு நோக்கியவாறு இருந்தால் சிறப்புடையது.
சித்திரை நட்சத்திரத்தன்று குடும்பத் தேவைக்கேற்ப மளிகைப் பொருட்களை, ஏழைக்குடும்பங்களுக்கு தானமாக அளித்து
வில்வமர விநாயகரைச் சுற்றி வந்து வணங்கினால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர்.
அரசமரப் பிள்ளையார்:
மேற்கு நோக்கி இருப்பது சக்தி வாய்ந்ததாகும்.
பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்தால் நிலம் மற்றும் தோட்டத்தில் விளைச்சல் பெருகும்.
உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். பணக்கஷ்டம் நிவர்த்தியாகும்.
ஆலமரப் பிள்ளையார்:
வடக்கு நோக்கி இருந்தால் சிறப்புடையது.
நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று ஐந்து வகை சித்திரான்னங்களை (எலுமிச்சை, தயிர், பால், புளி, தேங்காய்) படைத்து தானமளித்தால் கடுமையான நோய்கள் விலகிவிடும்.
வேப்பமரத்துப் பிள்ளையார்:
கிழக்கு முகப்பிள்ளையார் விசேஷம் நிறைந்தவர்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஐந்து வித எண்ணெய்த் தீபமான பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் மனதுக்கேற்ற வரன் அமையும்.
மாமரப் பிள்ளையார்:
கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு மூன்று சுமங்கலிப் பெண்களுக்கு உடை, உணவு, அளித்து வந்தால் பகைமை, கோபம், பொறாமையால் பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.
புன்னைமரப் பிள்ளையார்:
ஆயில்ய நட்சத்திரத்தில் இளநீர் அபிஷேகமும் செய்து நெசவுத்துணிகளை பிள்ளையாருக்கு அணிவித்து அதனை
ஏழை நோயாளிகளுக்கு அளித்து வந்தால் கணவன் மனைவியிடையே உள்ள மனக்கசப்பு நீங்கி தாம்பத்திய உறவு சீர் பெறும்.
மகிழமரப் பிள்ளையார்:
அனுஷ நட்சத்தித்தில் இந்த மகாகணபதிக்கு மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வந்தால் ராணுவம்,
வெளிநாடுகளில் உள்ளோர் நலம் பெறுவர்.
மகிழ மரப்பிள்ளையாரை முறைப்படி தொழ செய்வினைகள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் பொறாமை,
கண்திருஷ்டி நீங்கி, கவுரவமான வாழ்வு மலரும்.
வன்னிமரப் பிள்ளையார்:
அவிட்டம் நட்சத்திரந்தோறும் வன்னி விநாயகரை நெல்பொரியினால் அர்ச்சித்து அபிஷேகம் செய்து வழிபட்டால்
திருமண காரியத்தில் வரும் தடை நீங்கி, மகிழ்ச்சியான குடும்பம் அமையும்.
ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தும், மணவாழ்க்கையில் தம்பதிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு,
மனக்கசப்போடு பிரிந்து வாழ்பவர்கள் சஞ்சலம் அகன்று சுகவாழ்வு காண்பார்கள்.
வன்னிமரப் பிள்ளையாரைக் காண்பதே அரிது.
வன்னிமரத்திற்கு விசேஷ அம்சங்கள் உண்டு.
வன்னி மரத்தடிப் பிள்ளையாரை வணங்கி நள தமயந்தி முன் வினை நீங்கி நலன்பெற்றதாக வரலாறு இருக்கிறது.
- சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லப கணபதியைக் காணலாம்.
- மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு அருளும் விநாயகர் இவர்.
குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லப கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து
நல்ல அழகான குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம்.
சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லப கணபதியைக் காணலாம்.
சிதம்பரம் நகரின் தெற்கு தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னதியை நோக்கியவாறு சக்தி பாலவிநாயகர் உள்ளார்.
சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
நடராஜர் கோவில் இருந்தபோது இவ்விநாயகர் கோவில் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர்.
குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அமிர்த கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார்.
மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு அருளும் விநாயகர் இவர்.