என் மலர்

    ஆன்மிகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.
    • விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.

    வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்களை நைவேத்யமாகப் படைத்து குத்து விளக்கை ஏற்ற விநாயகப் பெருமானை மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    விநாயகர் பூஜை முடிந்தபின் முருகப் பெருமானுக்குரிய நாமங்களைச் சொல்லி அர்ச்சித்து தீபம் காட்டி வழிபட வேண்டும். மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி ஆகியவைகளைப் படிக்க வேண்டும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார். அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார். விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.

    சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம். எனவேதான், சூரியன் வழிபடும் முருகப்பெருமானை அந்நாளில் விரதமிருந்து நாமும் வழிபட்டு வருகிறோம்.

    விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும். பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.

    குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் உடனே பலன் கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை ஏழை எளியவர்களுக்கு தானம் கொடுப்பது மிகவும் நல்லது.

    வைகாசி மாதம் முழுவதும், எவர் ஒருவர் சூரியன் உதிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பே எழுந்து, குளித்து, கடவுளை வழிபடுகின்றாரோ, அவர்களுக்கு எங்கும், எதிலும் வெற்றி உறுதி என்கின்றன சாஸ்திரங்கள்! இயலாதவர்கள், வைகாசி பவுர்ணமி நாளிலாவது இதைக் கடைப்பிடிப்பது அவசியம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று முருகனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடக்கும்.
    • எந்த அபிஷேகத்தை பார்த்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.

    விசாக நட்சத்திரம் அன்று முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் நடைபெறும்.

    பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி, வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

    பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்டகடன்கள் தீரும்.

    பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்துபார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகும்.

    சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்களெல்லாம் நண்பர்களாக மாறுவர்.

    இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும்.

    எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும்.

    மாம்பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வ நிலை உயரும்.

    திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கெட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

    அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும்.

    சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அத்தனையும் தீர்ந்து போகும்.

    பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும்.

    தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

    சங்காலே அபிஷேகம் செய்து பார்த்தால் சகல வித பாக்கியமும் நமக்கு கிடைக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று முருகனை வழிபட உகந்த நாள்.
    • முருகனை வழிபடும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி இது.

    ஓம் அப்பா போற்றி

    ஓம் அரனே போற்றி

    ஓம் அழகா போற்றி

    ஓம் அருவே போற்றி

    ஓம் உருவே போற்றி

    ஓம் அபயா போற்றி

    ஓம் அதிகா போற்றி

    ஓம் அறுபடையோய் போற்றி

    ஓம் ஆறுமுகத்தரசே போற்றி

    ஓம் ஆதி போற்றி

    ஓம் அனாதி போற்றி

    ஓம் இச்சை போற்றி

    ஓம் கிரியை போற்றி

    ஓம் இறைவா போற்றி

    ஓம் இளையோய் போற்றி

    ஓம் ஈசா போற்றி

    ஓம் நேசா போற்றி

    ஒம் உத்தமா போற்றி

    ஓம் உயிரே போற்றி

    ஓம் உணர்வே போற்றி

    ஓம் உமைபாலா போற்றி

    ஓம் எளியோய் போற்றி

    ஓம் எண்குணா போற்றி

    ஓம் ஏகா போற்றி

    ஓம் அனேகா போற்றி

    ஓம் ஒலியே போற்றி

    ஓம் சுடரொளியே போற்றி

    ஓம் கந்தா போற்றி

    ஓம் கடம்பா போற்றி

    ஓம் கருணாமூர்த்தியே போற்றி

    ஓம் காவலா போற்றி

    ஓம் கார்த்திகேயா போற்றி

    ஓம் குகனே போற்றி

    ஓம் குமரா போற்றி

    ஓம் குறவா போற்றி

    ஓம் குன்றுதோர் நின்றாய் போற்றி

    ஓம் சரவணா போற்றி

    ஓம் சண்முகா போற்றி

    ஓம் சத்தியசீலா போற்றி

    ஓம் சிட்டானே போற்றி

    ஓம் சிவக்குமரா போற்றி

    ஓம் சிவக்கொழுந்தே போற்றி

    ஓம் சித்தி போற்றி

    ஓம் முத்தி போற்றி

    ஓம் தலைவா போற்றி

    ஓம் தவப்புதல்வா போற்றி

    ஓம் தணிகைமுருகா போற்றி

    ஓம் சூரா போற்றி

    ஓம் வீரா போற்றி

    ஓம் சுப்ரமண்யா போற்றி

    ஓம் செந்தமிழா போற்றி

    ஓம் செங்கல்வராயா போற்றி

    ஓம் சேவலா போற்றி

    ஓம் சேனாதிபதியே போற்றி

    ஓம் ஞானபண்டிதா போற்றி

    ஓம் தூயோய் போற்றி

    ஓம் துறையே போற்றி

    ஓம் நடுவா போற்றி

    ஓம் நல்லோய் போற்றி

    ஓம் நாதா போற்றி

    ஓம் போதா போற்றி

    ஓம் நாவலா போற்றி

    ஓம் பாவலா போற்றி

    ஓம் நித்தியா போற்றி

    ஓம் நிமலா போற்றி

    ஓம் பொன்னே போற்றி

    ஓம் பொருளே போற்றி

    ஓம் புலவா போற்றி

    ஓம் பூரணா போற்றி

    ஓம் மன்னா போற்றி

    ஓம் மயிலோய் போற்றி

    ஓம் மறையே போற்றி

    ஓம் மணக்கோலா போற்றி

    ஓம் மாசிலாய் போற்றி

    ஓம் மால்முருகா போற்றி

    ஓம் முருகா போற்றி

    ஓம் முதல்வா போற்றி

    ஓம் முத்தையா போற்றி

    ஓம் மூவர்க்கும் மேலோய் போற்றி

    ஓம் வரதா போற்றி

    ஓம் விரதா போற்றி

    ஓம் விவேகா போற்றி

    ஓம் விசாகா போற்றி

    ஓம் விதியே போற்றி

    ஓம் கதியே போற்றி

    ஓம் விண்ணோர் தொழும் விமலா போற்றி

    ஓம் குஞ்சரிமணாளா போற்றி

    ஓம் பரங்குன்றின் பரமா போற்றி

    ஓம் சூரனைமாய்த்தோய் போற்றி

    ஓம் செந்தில் செவ்வேலா போற்றி

    ஓம் ஆண்டியாய் நின்றாய் போற்றி

    ஓம் ஆவினன் குடியோய் போற்றி

    ஓம் ஏரகப் பெருமான் போற்றி

    ஓம் எம்பிரான் குருவே போற்றி

    ஓம் வள்ளி மணாளா போற்றி

    ஓம் வளர் தணிகேசா போற்றி

    ஓம் சோலையில் செல்வா போற்றி

    ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி

    ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி

    ஓம் உடல் நலம் தருவாய் போற்றி

    ஓம் செறுக்கினை அறுப்பாய் போற்றி

    ஓம் சினம் காமம் தவிர்ப்பாய் போற்றி

    ஓம் அவாவினை அழிப்பாய் போற்றி

    ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி

    ஓம் அனைத்தும் நீயே போற்றி

    ஓம் அருள்வாய் வள்ளி

    மணாளா போற்றி

    ஓம் தேவசேனா சண்முகா

    போற்றி போற்றி போற்றியே.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வைகாசி விசாகம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • மாம்பழத்தை வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

    அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

    வெஞ்சுமரில் அஞ்சேலென வேல் தோன்றும்-நெஞ்சில்

    ஒருகால் நினைக்க இருகாலும் தோன்றும்

    முருகா என்றோதுவோர் முன்.

    -திருமுறை

    ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய தெய்வத்தை கொண்டாடினால் சிறப்பான வாழ்க்கை அமையும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகை திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி மகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுது தான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது.

    வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனி ரெண்டைக் கொண்டவன் வடிவேலன். எனவே அவனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். இந்த ஆண்டு வைகாசி விசாகம் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

    வைகாசி விசாகம் தினத்தன்று விரதம் இருந்து தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை மனம் உருக வழிபட்டால் பகை விலகும். பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம், குடை, மோர், பாகனம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப் பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணெய் ஊற்றி, ஐந்து வித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான சுந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும். 'ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்' என்பதற்கிணங்க, மயிலில் பறந்து வந்து மால்மருகன் வரம் தருவான்.

    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்தவர் முருகன். சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன். இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீர வாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகாசூரன் சிங்கமுகன் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன், அவ்வைப்பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன். நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்ப சிவசாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன், வடக்கே பிறந்து தெற்கே வந்தாலும் முற்றிலும் செந்தமிழ் நாட்டிற்கே உரியவன்.

    சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு. முருகப்பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும்.

    விசாகம் தினமான இன்று செய்யுங்கள். முருகன் அருள் நிரம்ப கிடைக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.
    • திருப்பரங்குன்றம் ஆண்டவர் பாலாபிஷேகம்.

    இன்று வைகாசி விசாகம். நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி ரதோற்சவம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் பாலாபிஷேகம். காஞ்சீபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் காலை கருட வாகனத்தில் புறப்பாடு. அரியக்குடி ஸ்ரீசீனிவாசப் பெருமாள் வெள்ளி மஞ்சத்தில் பவனி. பழனி ஆண்டவர் ரதோற்சவம். திருப்பத்தூர் சிவபெருமான் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்போற்சவம் ஸ்ரீநம்மாழ்வார் திருநட்சத்திர வைபவம். ராமேசுவரம் பர்வத்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, வைகாசி-19 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி காலை 11.44 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம்: சுவாதி காலை 5.54 மணி வரை. பிறகு விசாகம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-சுபம்

    மிதுனம்-நலம்

    கடகம்-சுகம்

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- தாமதம்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- செல்வாக்கு

    மகரம்-அன்பு

    கும்பம்-சுபம்

    மீனம்-மேன்மை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 12 வகையான பூக்களை பூக்கும் பாதிரி மரம் தல விருட்சமாக உள்ளது.
    • இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் பாடலீஸ்வரர். இவர் கன்னிவனநாதர், தோன்றா துணையுடைய நாதர், கடைஞாழலுடைய பெருமான், சிவகொழுந்தீசன், உத்திரசேனன், பாடலநாதர், கரையேற்றும்பிரான் போன்ற பல்வேறு பெயர்களாலும், அம்பாளை பெரியநாயகி, லோகாம்பிகை, அருந்தவ நாயகி, பிரஹன்நாயகி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்கள்.

    12 வகையான பூக்களை பூக்கும் பாதிரி மரம் தல விருட்சமாக உள்ளது. இந்த மரம் செப்பு தகடுகளால் வேயப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பழமை வாய்ந்த மரமாக உள்ளது. இத்தலத்தில் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம் (குளம்), பாலோடை, கெடிலநதி மற்றும் தென்பெண்ணையாறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

    இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகர தீர்த்தம் உள்ளது. முன் மண்டபமும், அதையடுத்து 7 நிலை ராஜகோபுரமும் அமைந்துள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாசலை கடந்து உள்ளே சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக் கவசமிட்ட கொடிமரம் மற்றும் நந்தியும் உள்ளது. இங்கிருந்தே இறைவனை தரிசிக்கலாம்.

    வெளிபிரகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி, 2-வது வாசலை கடந்து இடது புறமாக திரும்பினால் உள் சுற்றில் சந்திரனும், திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தியும், மூல மூர்த்தமும் தனித்தனி சன்னதிகளாக உள்ளன. திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இந்த கோவிலில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும் போது 63 நாயன்மார்கள் சன்னதியை பார்த்து தரிசிக்கலாம்.

    தல விநாயகரான கன்னி விநாயகர் அருள்பாலிக்கிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவ திருமேனிகளின் சன்னதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூஜித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி, வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர் சன்னதிகள் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது உள்ளே சென்றால் பாடலீஸ்வரரை தரிசிக்கலாம். இங்கு சிவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    திருநாவுக்கரசர் வழிபட்ட பாடலீஸ்வரர் கோவில்

    சைவ பெரியவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் பண்ருட்டி அருகே திருவாமூரில் பிறந்தவர். சமண சமயத்தை சேர்ந்த அவர் சைவ சமயத்துக்கு மாறியதால், அவரை கொல்ல சமணர்களும், சமண சமயத்தைச்சேர்ந்த மன்னன் மகேந்திரவர்ம பல்லவனும் திட்டமிட்டனர். சமணர்கள் செய்த பல்வேறு சூழ்ச்சிகளில் இருந்து உயிர் தப்பிய திருநாவுக்கரசரை, மகேந்திர வர்ம பல்லவன் பிடித்து துன்புறுத்தினார். இதற்கெல்லாம் சற்றும் கலங்காத அப்பர் பெருமான் சிவபெருமானை வணங்கி, அந்த துன்பங்களில் இருந்து மீண்டார். இருப்பினும் பல்வேறு துன்பங்களில் இருந்து மீண்ட, அவரை கொல்லாமல் விடக்கூடாது என்று முடிவு செய்த, சமண சமயத்தவர், அவரை ஒரு கருங்கல்லில் கட்டி கடலில் வீசி எறிந்தனர். ஆனால் அவரோ இறைவனை நினைத்து நெஞ்சுருகி, சொற்றுணை வேதியன் சோதிவானவன் என்று தொடங்கும் பதிகத்தை பாடினார். அப்போது அந்த கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. பின்னர் அவர் கெடிலம் நதி வழியாக கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி இருக்கும் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரரை தரிசித்தார் என்று வரலாறு கூறுகிறது.

    பாதிரி மரம்

    இறைவனை வழிபட்ட அடியார்கள் பலரும், தாங்கள் அடைந்த பரவசத்தையும், அனுபவத்தையும் பாடல்களாக பாடினர். அப்படி பாடிய அடியார்களில் சமயக் குரவர்களாக போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் திருக்கோவில். பாதிரி மர வனமாக இருந்த பகுதியில் பூத்து குலுங்கிய பலவகை பூக்களை, இறைவழிபாட்டிற் காக பறிக்க விரும்பினார் வியாக்ரபாதர். மரங்களில் ஏறி பூக்களை பறிப்பதற்காக இறைவனிடம் வேண்டி புலிக்கால்களை பெற்றார். இதனால் இவர் 'புலிக்கால் முனிவர்' என்றும் அழைக்கப்பட்டார். ஊரின் பெயரும் புலியூர் ஆனது. சிதம்பரத்திற்கு ஏற்கனவே 'பெரும்பற்ற புலியூர்' என்ற பெயர் இருந்ததால், பாதிரி மரங்கள் நிறைந்த இந்த ஊர் 'திருப்பாதிரிப்புலியூர்' என்றானது.

    நினைத்த காரியம் நிறைவேற பாடலீஸ்வரரை வழிபடுங்கள்

    பாடலீஸ்வரரை விரதமிருந்து மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீருவதோடு, மனநிம்மதியும் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தேரின் சிறப்பு

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் திருத்தேர் வெள்ளோட்டம் முடிவடைந்து, முதன் முதலில் கடந்த 22.5.2005-ம் ஆண்டு வைகாசி மாத பெருவிழாவையொட்டி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. இந்த தேர் 6 மாதங்களில் செய்து முடிக்கப்பட்டது. இந்த தேரின் அமைப்புகள் குறித்த விவரத்தை பார்க்கலாம்.

    தேர் சக்கரத்தின் மேல் தாமரை வடிவத்தில் பூலோகம் பஞ்சபூதமாக காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சூரியன், சந்திரன் 2 தேர் சக்கரங்களாக உள்ளது. மண்ணுலகம் பரந்த காட்சியை விளக்குகிறது. ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில், அதில் உள்ள இலுப்பை, காட்டு வாகை, தேக்கு, வேங்கை மரங்கள் உணர்த்துகிறது. முப்பது முக்கோடி தேவர்களும் தேரில் ஒரு நாள் வலம் வரும் காட்சியை குறிக்கிறது. இறைவன் இருப்பிடம் ஆகாய லோகமாகவும், கும்ப கலசங்கள் ஈர்ப்பு சக்தியாக உள்ளது. கும்ப கலசம் தாமிரத்தால் உருவாக்கப்பட்டது. தாமிரம் இழுக்கும் சக்தி, கடத்தும் சக்தியை குறிக்கிறது.

    தேரின் மொத்த எடை 45 டன் ஆகும். 4 சக்கரங்கள் 5 டன் எடை கொண்டது. இரண்டு அச்சுகள் 2½ டன் எடை, நீளம், அகலம் தலா 25 அடி, வடம் 200 அடி வரை உள்ளது. தேரின் 57 கால்கள் 57 தத்துவங்களை குறிக்கிறது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்களுக்கு இறைவனே நேரில் வந்து காட்சி அளிக்கும் வகையில் இந்த தேர்த்திருவிழா நடக்கிறது.

    பாடலீஸ்வரர் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் குறித்த விவரம் வருமாறு:-

    சித்திரை- இளவேனில் வசந்த விழா (அப்பருக்கு 10 நாட்கள் விழா)

    வைகாசி - வைகாசி பெருவிழா

    ஆனி - மாணிக்கவாசகருக்கு 10 நாட்கள் விழா

    ஆடி - அம்பிக்கைக்கு ஆடிப்பூர விழா (10 நாட்கள்)

    புரட்டாசி - நவராத்திரி விழா

    ஐப்பசி - அன்னாபிஷேகம்

    கார்த்திகை - சோமவார விழாக்கள்

    மார்கழி - திருவாதிரை மற்றும் தனுர்மாத விழா

    தை - பெண்ணையாற்றில் தீர்த்தவாரி மற்றும் தை அமா வாசை கடல் தீர்த்தவாரி

    மாசி - மாசி மக தீர்த்தவாரி

    உபமன்னியர் முயல் வடிவம் நீங்கப்பெற்ற தலம்

    பாதிரியை தல விருட்சமாகவும், புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்பட்டது. இங்கு உபமன்னியர் முனிவர் வழிபட்டு, தன்னுடைய முயல் வடிவத்தில் இருந்து சாப விமோசனம் பெற்ற தலமாக விளங்கி வருகிறது. இது தவிர அக்தியர், மங்கணமுனிவர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலமாகவும் உள்ளது.

    வைகாசி பெருவிழாவும், எல்லை கட்டுதல் நிகழ்ச்சியும்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடங்குவதற்கு முன்பு எல்லை கட்டுதல் நிகழ்ச்சி திருப்பாதிரிப்புலியூர் சோலைவாழியம்மன் கோவில் நிர்வாகம், மார்க்கெட் காலனி மக்கள் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

    இதில் பக்தர்கள் கையில் தீப்பந்தங்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் குறிப்பிட்ட தூரம் வரை 4 திசைகளிலும் ஓடிச்சென்று எல்லை கட்டுவர்.

    அதாவது, பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா எவ்வித தடையும் இன்றி நடைபெறுவதற்காக 4 திசைகளிலும் துர்தேவதைகளுக்கு பலி கொடுத்து, அவைகளுக்கு உணவு கொடுத்து சாந்தப்படுத்துவதற்காக இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    பாடலீஸ்வரருக்கு அபிஷேகம்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. குறிப்பாக சாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். இது தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். சாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், சேலை சாத்துதலும் செய்யலாம்.

    அமாவாசை அன்று கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.இது தவிர பாடலீஸ்வரருக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கட்கிழமைகளிலும் சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்படுகிறது. தங்க கவசம் செலுத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோசாலையின் பாலில் இறைவனுக்கு அபிஷேகம்

    பாடலீஸ்வரர் கோவிலில் கோசாலை உள்ளது.இந்த கோசாலையில் பசு, கன்றுகள் என 85 மாடுகள் உள்ளன. இந்த மாடுகளில் இருந்து கறக்கும் பாலை பாடலீஸ்வரருக்கு 5 கால பூஜைக்கும் பயன்படுத்தப்படுகிறது. மற்றவற்றை கன்று குட்டிகள் குடிப்பதற்காக விட்டு விடுகிறார்கள். இதனால் இந்த பால் கோவிலை தாண்டி எங்கும் கொடுப்பதில்லை.

    இந்த கோசாலையில் உள்ள மாடுகளுக்கு பக்தர்கள் பசுந்தீவனம், வைக்கோல் வழங்கி பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் அகத்தி கீரைகளை பக்தர்கள் வழங்கி வருகின்றனர். விரும்பும் பக்தர்கள் கோவில் திறந்திருக்கும் நேரம் பசுகளுக்கான தேவையான தீவனங்களை வழங்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தோஷம் நீக்கும் பாதிரி மரம்

    கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. மற்ற மரங்களை போல பாதிரி மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. விதை மற்றும் காய் இல்லாமல் இந்த பாதிரி மரம் வளரும். ஊதா, சந்தனம், சிவப்பு என வெவ்வேறு நிறத்தில் பூ பூக்கும்.

    இந்த பாதிரி பூ வருடத்தில் பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதத்தில் மட்டுமே மலரும். இந்த பூவை பாடலீஸ்வரருக்கு பூஜையின் போது, பயன்படுத்தப்பட்டு வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

    தற்போது இந்த மரம் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவிலில் உள்ள இந்த பாதிரி மரத்தை வலம் வந்தால், சாபம், தோஷம் நீங்கும் என்று இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏராளமானவர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
    • இன்று இரவு சுப்பிரமணியசுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகரமீனுக்கு காட்சியளிக்கிறார்.

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுயம்புலிங்கசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.

    திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது. மதியம் உச்சிகால பூஜை நடந்தது. பக்தர்கள் சுவாமியை அருகில் நின்று தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் பக்தர்கள் நெரிசல் இன்றி நீண்ட வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சாயரட்சய பூஜை நடந்தது. தொடர்ந்து தென்னாடுடைய சிவன், முழுமுதற்கடவுள் என்ற தலைப்புகளில் சமய சொற்பொழிவு, சுயம்புலிங்க சுவாமி வரலாறு, வில்லிசை, நகைச்சுவை பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    இன்று காலை ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து அதை கடற்கரையில் கொட்டி நேச்சை கடன் செலுத்தினர். அது கடற்கரையில் குன்றுபோல் காட்சியளித்தது ஏராளமானவர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    இன்று இரவு விழாவின் சிகர நிகழ்ச்சியான சுப்பிரமணியசுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகரமீனுக்கு காட்சியளிக்கிறார். விசாகத் திருவிழாவில் கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி. முருகேசன், துணைத்தலைவர் கனகலிங்கம், உறுப்பினர்கள் ராஜாமணி, ஜீவரத்தினம், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில், திசையன்விளையில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் 3-வது நாளான இன்று கருடசேவை உற்வம் விமரிசையாக நடை பெற்றது. இதையொட்டி இன்று காலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஊதா நிற பட்டு உடுத்தி மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க, வேதப்பாராயண பாடலுடன் வரதராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    பல்வேறு மாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்ததால் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நான்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. கருடசேவை விழாவையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
    • மலை மீது பக்தர்கள் வீசிச்சென்ற பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. அங்கிருந்து 6 மலைகளை தாண்டி 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.

    அடர்ந்த வனப்பகுதியான வெள்ளியங்கிரி மலையில் மழை காலத்தில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்படும். எனவே மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவிலில் இருந்து மலை மீது ஏறிச் செல்ல தொடங்கும் இடத்தில் உள்ள கேட் மூடப்பட்டது. அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதில் பதிவாகும் காட்சிகளை வனத்துறை உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி பக்தர்கள் மலை ஏறி செல்வதை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வெள்ளியங்கிரி மலையில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். தற்போது மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலை மீது பக்தர்கள் வீசிச்சென்ற பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் வெள்ளியங்கிரி மலையில் சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறிவிடும். திடீரென்று மழை, சூறாவளி காற்று வீசும். வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். அது நேரத்தில் பக்தர்கள் சென்றால் போதிய பாதுகாப்பு இருக்காது.

    எனவே தான் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை. அதை மீறி பக்தர்கள் யாரும் மலையேறி செல்ல வேண்டாம். அதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மலையேறும் பக்தர்கள் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    • நாளை கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா இன்று நடந்தது.

    முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் இன்று விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது வருகிறது. இந்த விசாக திருவிழாவில் கலந்து கொண்டு ஒருநாள் சாமி தரிசனம் செய்வதால் ஒரு வருடத்தில் 12 மாதம் வெள்ளிக்கிழமை தரிசனத்துக்கு சமம் என்பது ஜதீகம்.

    அந்த வகையில் பக்தர்கள் நேற்றில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரையாகவும் வாகனங்களில் வந்து இன்று காலையில் இருந்தே கடல் மற்றும் நாலி கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, அலகு குத்தியும், அங்க பிரதட்சணம் செய்தும், பால் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து கோவிலை வலம் வந்து கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என கோஷம் விண்னண பிளக்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெரும் இவ்விழா கடந்த மே 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் பகலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்தல் நடைபெற்றது.

    கடற்கரையில் புனிதநீராடிய பக்தர்கள் கூட்டம்.

    கடற்கரையில் புனிதநீராடிய பக்தர்கள் கூட்டம்.


    10-ம் நாளான இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. உச்சிகால தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

    தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், அதைத் தொடர்ந்து முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலமாக வந்து கோவில் சேர்கிறார்.

    இதே போல வைகாசி விசாகத்திருவிழாவிற்கு முதல் நாளான நேற்று பக்தர்கள் வசதிக்காக கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் நாளையும் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    பக்தர்கள் வசதிக்காக கோவில், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.