search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • ஜெயம் ரவியுடன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ், சீதா, நட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
    • ஜெயம் ரவி இந்த படத்தில் கார்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஜெயம் ரவி தற்போது 'பிரதர்', 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' போன்ற படங்களில் நடித்துள்ளார். 'பிரதர்' திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

    'பிரதர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

    இத்திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ், சீதா, நட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.



    ஜெயம் ரவி இந்த படத்தில் கார்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ஒரு அக்கா மற்றும் தம்பி பாசப்பின்னணியில் கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படம் தீபாவளிக்கு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மிதக்குது காலு ரெண்டும்' வீடியோ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் லக்கி பாஸ்கர்.
    • நான் அஜித்தின் ரசிகன். இயக்குனரும் அஜித்தின் ரசிகர்தான்.

    மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் சினிமாவில் தான்கென ஒரு அடையாளத்தை நிறுவும் வகையில் கதைத் தேர்வில் கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் லக்கி பாஸ்கர்.

    மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தீபாவளியை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் துல்கர் சென்னையில் நடத்த அதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

    அஜித்தின் மங்காத்தா படத்தை போல லக்கி பாஸ்கர் படத்திலும், பணம் தொடர்பான விஷயங்கள் இருக்கிறது, எனவே அஜித்தை பின்தொடர்கிறீர்களா என்ற கேள்வி எழுபப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், நான் அஜித்தின் ரசிகன். இயக்குனரும் அஜித்தின் ரசிகர்தான். அஜித்தை வைத்து படம் பண்ணவேண்டும் என்பது அவருடைய ஆசை.

    ஒருவரை தொடர வேண்டும் என பிளான் செய்யத் தெரியாது. அஜித்குமாரை நான் நிறைய மதிக்கிறேன். அவர் மாதிரி வேறு யாரும் வர முடியாது, அவர் அப்படியே எப்போதும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
    • நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.

    ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார். மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

     


    சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.

    சீதா பயணம் படத்தில் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியாக இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
    • அமரன் படத்தை ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

    ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தப் படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    • கங்குவா படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

    இயக்குநர் சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கங்குவா." ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருக்கும் கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முழுமை பெற்று அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது.

    இந்த நிலையில், கங்குவா படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து படக்குழு மூலம் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த வரிசையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி கங்குவா படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

     


    அதில், "கங்குவா திரைப்படத்தை முழுமையாக பார்த்தேன். டப்பிங் செய்யும் போது நூற்றுக்கும் அதிக முறை பார்த்த விட்டேன், இருந்தும் திரைப்படத்தின் தாக்கம் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதிகரிக்கிறது. காட்சிகளில் பிரமாண்டம், மிக நுனுக்கமான கலை, ஆழமான கதை மற்றும் இசையின் அற்புதம் இவற்றுடன் சூர்யாவின் நடிப்பு, இதுவரை உருவாக்கியதில் மிக சிறப்பான படைப்பாக மாற்றுகிறது."

    "இயக்குநர் சிறுத்தை சிவா உருவாக்கி இருக்கும் மிரட்டலான அனுபவத்திற்கு மனமார்ந்த நன்றிகள். இவரின் கனவுகளை நனவாக்கிய ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர் மற்றும் மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
    • இப்படம் குறித்த முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் தற்போது புதிய படப்பிடிப்பில் இறங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று உள்ளது.

    இதில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர் மற்றும் மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் குறித்த முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த படம் எனது பாணியில் குடும்பப் படமாக அமையும். இளைஞர்களுக்கு பிடிக்கும் படமாகவும் இது இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும் விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா-2 படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
    • டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரும் புஷ்பா திரைப்படம் திரைக்கு வருகிறது.

    நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.

    நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரம் 1000 கோடி ரூபாயை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமை 660 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.220 கோடிக்கும் வட இந்தியாவில் ரூ.200 கோடிக்கும் தமிழ்நாட்டில் ரூ.50 கோடிக்கும் கர்நாடகாவில் ரூ.30 கோடிக்கும் கேரளாவில் ரூ.20 கோடிக்கும் வெளிநாடுகளில் 140 கோடிக்கும் புஷ்பா படத்தின் திரையரங்க உரிமை விற்பனையாகியுள்ளது.

    புஷ்பா 2 படத்தின் சாட்லைட் உரிமை ரூ.85 கோடிக்கும் இசை உரிமை ரூ.65 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ.275 கோடி கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரும் புஷ்பா 2 திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
    • கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO அண்மையில் வெளியானது.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.

    கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடலை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த பாடலில் கவர்ச்சியான உடையில் திஷா பதானி நடனமாடியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இந்நிலையில், YOLO பாடலில் படு கவர்ச்சியாக இருக்கும் திஷா பதானி காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையெனில் மாற்றியமைக்க வேண்டும் என சென்சார் போர்டு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'டங்கல்' திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
    • உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் டங்கல் திரைப்படம் எடுக்கப்பட்டது.

    அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'டங்கல்' திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

    மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவான 'டங்கல்' திரைப்படம், இந்தியாவில் பெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 'டங்கல்' திரைப்படம் சீனாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவை விட சீனாவில் டங்கல் திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது.

    இதனால், டங்கல் படத்தின் மொத்த வசூல் தற்போது 2,000 கோடி ரூபாயை தாண்டி அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.

    அரியானாவில் மகாவீர் போகத் என்ற முன்னாள் மல்யுத்த வீரர் தனது 2 மகள்களுக்கு பயிற்சியளித்து அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றினார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் டங்கல் திரைப்படம் எடுக்கப்பட்டது.

    அண்மையில் மகாவீர் போகத்தின் இளைய மகளும் பாஜக உறுப்பினருமான பபிதா போகத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, "எங்கள் வாழ்க்கை வரலாற்று கதையை படமாக எடுத்து அமீர் கான் 2000 கோடி சம்பாதித்தார். ஆனால் இதற்காக எங்கள் குடும்பத்திற்கு வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது" என்று பபிதா போகத் தெரிவித்தார்.

    பபிதா போகத் காமன்வெல்த் மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளில் 55 கிலோ எடைப் பிரிவில் 2010-ல் வெள்ளியும் 2014ல் தங்கமும் வென்றுள்ளார். இவரது அக்கா கீதா போகத்திற்கு பிறகு காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான் ஏற்கனவே 30 பள்ளிகளை தத்தெடுத்தேன்.
    • இப்போது மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறேன்.

    தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு தமிழில் கடல், இஞ்சி இடுப்பழகி, காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

    இன்னொரு புறம் சினிமாவைத் தாண்டி சமூகசேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு உதவிகளை செய்து வருகிறார்.

    தற்போது தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறார். இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறும்போது, "நான் ஏற்கனவே 30 பள்ளிகளை தத்தெடுத்தேன். இப்போது மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறேன்.

    மொத்தம் 50 பள்ளிகளை தத்தெடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை அரசு பள்ளிகளிலும் கொண்டு வரவே தத்தெடுத்து இருக்கிறேன். பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். கடந்த வருடம் 30 பள்ளிகளுக்கு அதை செய்தோம்.

    எத்தனையோ பேர் படித்து நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பள்ளியை தத்தெடுத்தால் ஊரையே மாற்றி விடலாம்'' என்றார்.

    • தேர்தல் விதியை அல்லு அர்ஜுன் மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • தன்மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யும்படி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனுதாக்கல் செய்தார்.

    புஷ்பா படத்தில் நடித்து பான் இந்தியா நடிகராக உயர்ந்தவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

    அல்லு அர்ஜுன் கடந்த மே மாதம் ஆந்திர மாநிலம் நந்தியாலா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ கிஷோர் ரெட்டியை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார்.

    அல்லு அர்ஜுன் வந்துள்ள தகவல் அறிந்து வீட்டின் வெளியே பெருங்கூட்டம் கூடியது. இதனால் தேர்தல் விதியை அல்லு அர்ஜுன் மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் தன்மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யும்படி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனுதாக்கல் செய்தார். மனுவில், 'எனக்கு பல வருடங்கள் நெருக்கமான நண்பராக இருக்கும் கிஷோர் நந்தியாலா தொகுதியில் போட்டியிட்டதால் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றேன்.

    நான் வந்து இருப்பதை அறிந்து ரசிகர்கள் திரண்டு விட்டனர். அப்போது எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. எனவே தேர்தல் விதியை நான் மீறியதாக சொல்வது சரியல்ல. எனவே எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தால் போதும் என்றுதான் நினைப்பேன்.
    • நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்வேன்.

    தமிழில் வெப்பம், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நித்யாமேனன் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் ஜோடியாக வந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

    இந்த நிலையில் நித்யா மேனன் அளித்துள்ள பேட்டியில், "நான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கு எல்லோருடைய பாராட்டுகளும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன்.

     

    நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தால் போதும் என்றுதான் நினைப்பேன். அதை மனதில் வைத்துதான் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். அதிக செலவில் பிரமாண்டமாக தயாராகும் மசாலா படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிக்காமல் நிராகரித்து விடுவேன். அதுமாதிரி படங்களில் நடிக்க பிடிக்காது.

    நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்வேன். அந்த படங்களின் படப்பிடிப்பு எப்போது தொடங்குமோ என்றும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருப்பேன். எல்லோரும் கடைபிடிக்கும் வழியிலேயே நானும் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×