search icon
என் மலர்tooltip icon

    கார்

    • புதிய இருக்கை கவர்கள், குஷன்கள், டோர் கிளாடிங் மற்றும் டோர் வைசர்கள் ஆகியவை அடங்கும்.
    • 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி.

    சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் எக்ஸ்- ஷோரூமில் ரூ.5.49 லட்சத்தில் இக்னிஸ் ரேடியன்ஸ் மாடல் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலின் உள்ளேயும், வெளியேயும் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது Sigma, Zeta மற்றும் Alpha வேரியன்ட்டுகளில் கிடைக்கிறது.

    எண்ட்ரி லெவல் வேரியன்ட்:

    Sigma வேரியன்ட்டை வாங்குபவர்கள் கூடுதலாக ரூ.3,650-ஐ செலுத்தினால் வீல் கவர்கள், டோர் விசர்கள் மற்றும் குரோம் டிரிம் ஆகியவை பெறலாம்.


    மிட் மற்றும் டாப்-எண்ட் வேரியன்ட்:

    Zeta மற்றும் Alpha வகைகளின் வாடிக்கையாளர்கள் ரூ. 9,500 மதிப்புள்ள பாகங்களை பெறலாம். இதில் புதிய இருக்கை கவர்கள், குஷன்கள், டோர் கிளாடிங் மற்றும் டோர் வைசர்கள் ஆகியவை அடங்கும்.

    மாருதி இக்னிஸ் ரேடியன்ஸ் எடிஷன் எஞ்சின் ஆப்ஷன்கள்

    இக்னிஸ் ரேடியன்ஸ் எடிஷன் நிலையான ஹேட்ச்பேக்கில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 82bhp மற்றும் 113Nm இழுவிசையை உற்பத்தி செய்கிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    • பாரத் என்சிஏபி (Bharat NCAP) நடத்திய கிராஷ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
    • கிராண்ட் விட்டாராவின் 2 வேரியன்ட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபல நிறுவனமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. இந்நிறுவனத்தின் எர்டிகா, ஃபிராங்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் பிரெஸ்ஸா, வேகன்ஆர் வரிசையில் சமீப காலத்தில் அதிகம் விற்பனை கார்களின் மைல்கல் சாதனையில் கிராண்ட் விட்டாரா இணைந்தது.

    இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்களின் படி, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, பிஎன்சிஏபி எனப்படும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) நடத்திய கிராஷ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சோதனைகளின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சோதனை முடிவுகள் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கிராண்ட் விட்டாராவின் 2 வேரியன்ட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று டாப்-ஸ்பெக் மற்றொன்று மிட்-ஸ்பெக்.


    Photo Courtesy: Safe Cars India


    மாருதி கிராண்ட் விட்டாராவில் டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, எச்எஸ்ஏ, சரிசெய்யக்கூடிய சீட்-பெல்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், வேக எச்சரிக்கை அமைப்பு, சீட் பெல்ட் நினைவூட்டல் அமைப்பு மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

    இத்துடன் டூயல் ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, EPS, TPMS மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கூடுதல் அம்சங்களை உயர் வகைகளில் பெறலாம்.

    • 18 இன்ச் மற்றும் 19 இன்ச் வீல்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • எஞ்சின் பின்புற சக்கரங்களை இயக்கும் எட்டு வேக AT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை மாடலான பிஎம்டபிள்யூ 5 சீரிஸின் ஆரம்ப விலை ரூ.72.90 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வகைகளில், இரண்டு வண்ணங்கள் மற்றும் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. இது உலகளவில் வெற்றிபெற்ற நடுத்தர அளவிலான செடானின் 8-வது தலைமுறையாகும்.

    வெளிப்புற தோற்றம்:

    புதிய 5 சீரிஸ் சமீபத்திய பிஎம்டபிள்யூ-வின் சிக்னேச்சர் கிட்னி கிரில்லை நேர்த்தியான முழு எல்இடி ஹெட்லேம்ப்களுடன் பெறுகிறது. பிஎம்டபிள்யூ 18 இன்ச் மற்றும் 19 இன்ச் வீல்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கூடுதல் நீளமாக உள்ளதை பார்க்க முடியுகிறது.

    பின்புறம் முந்தைய தலைமுறையின் வட்டத்தன்மையை இழந்து, உறுதியான பம்பர் மற்றும் சிக்னேச்சர் ரேப்-அரவுண்ட் எல்இடி டெயில் லேம்ப்களுடன் கூர்மையான தோற்றத்தில் காணப்படுகிறது.

    உட்புறம் மற்றும் சிறப்பம்சங்கள்

    பிஎம்டபிள்யூ கேபின் வடிவமைப்பு, கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஒற்றை திரை போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சென்டர் கன்சோல் பெரியதாகவும் மற்றும் ஸ்க்ரோல் வீல் மற்றும் கியர் செலக்டர் மெக்கானிசம் வழங்கப்பட்டுள்ளது.


    இரண்டாவது சீட் வரிசை மிகவும் விசாலமாகவும் அனைத்து வயதினருக்கும் தேவைப்படும் அனைத்து வசதிகளும் உள்ளன.

    இத்துடன் பனோரமிக் சன்ரூஃப், போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம், மல்டி-சோன் கிளைமேட் கண்ட்ரோல், இன்டீரியர் கேமரா, லெதரெட் இருக்கை மேற்கவர்கள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஃபோன் மிரரிங், கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா மற்றும் தானியங்கி பார்க்கிங் உள்ளிட்ட டிரைவர் உதவி அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

    பவர்டிரெய்ன் விருப்பங்கள்

    புதிய 5 சீரிஸ் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது. இது 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் மோட்டார் 256bhp/400Nm வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் பின்புற சக்கரங்களை இயக்கும் எட்டு வேக AT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த எஞ்சினுடன் 48V மைல்ட் ஹைப்ரிட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 வினாடிகளில் எட்டிவிடும். இந்த புதிய தலைமுறையில் 5 சீரிஸ், வரவிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் E-Class மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி.
    • புதிய ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.

    டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலை தமிழகத்தின் ராணிப்பேட்டையில் அமைகிறது. இதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இந்த ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை முதல் முறை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும்.

    தற்போது வரை ஜாகுவார் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை பிரிட்டன் ஆலையில் உற்பத்தி செய்து, அதன் பாகங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து பூனே ஆலையில் வைத்து அசெம்பில் செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ்-இன் ஜாகுவார் லேண்ட் ரோவர் ராணிப்பேட்டையில் அமைய இருக்கும் புதிய ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.

    இதுதவிர ஏராளமான இதர கார் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி செய்ய இருக்கிறது. இதில் ஹைப்ரிட் மாடல்களும் அடங்கும்.

    டாடா மோட்டார்ஸ்-இன் புதிய ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் இந்த ஆலை அமைய இருக்கிறது. இதற்காக ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும்.

    • DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
    • எலெக்ட்ரிக் கர்வ் மாடலை பத்து நிமிடங்களுக்குள் 100 கிலோமீட்டர்கள் வரை செல்வதற்கான சார்ஜ்-ஐ ஏற்றிவிடும்.

    வருகிற 7-ந்தேதி டாடா கர்வ் EV அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக இந்த காரின் விவரங்கள் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த மாத இறுதியில் ஐசி எஞ்சின் மாடலின் விலை அறிவிப்பு வெளியிடப்படும்.

    கர்வ் EV தேர்வு செய்ய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வரும். டாப் எண்ட் வெர்ஷனில் 55kWh பேட்டரி ஒற்றை மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வெர்ஷன் ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் தூரம் வரை செல்லும்.


    குறிப்பிடத்தக்க வகையில், DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது எலெக்ட்ரிக் கர்வ் மாடலை பத்து நிமிடங்களுக்குள் 100 கிலோமீட்டர்கள் வரை செல்வதற்கான சார்ஜ்-ஐ ஏற்றிவிடும்.

    அம்சங்கள் பிரிவில், டாடா கர்வ் EV ஆனது பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS சூட், 360-டிகிரி கேமரா, வென்டிலேட் செய்யப்பட்ட முன் இருக்கைகளை கொண்டிருக்கும்.

    புதிய கர்வ் எலெக்ட்ரிக் மாடல் விலை ரூ.18 முதல் 24 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கர்வ் EV ஆனது பிஓய்டி அட்டோ 3, எம்ஜி ZS EV, மஹிந்திரா XUV400 மற்றும் வரவிருக்கும் கார்களான ஹூண்டாய் க்ரெட்டா EV மற்றும் ஹோண்டா எலிவேட் EV ஆகியவற்றுக்கு போட்டியாக அமையும்.

    • 25 மாதங்களில் மைல்கல்லை எட்டிய ஹூண்டாய் க்ரெட்டாவின் சாதனையை இது முறியடித்தது.
    • அடுத்த 1,00,000 யூனிட்கள் வெறும் 10 மாதங்களில் விற்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபல நிறுவனமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. இந்நிறுவனத்தின் எர்டிகா, ஃபிராங்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் பிரெஸ்ஸா, வேகன்ஆர் வரிசையில் சமீப காலத்தில் அதிகம் விற்பனை கார்களின் மைல்கல் சாதனையில் கிராண்ட் விட்டாரா இணைந்துள்ளது.

    மாருதி சுசுகியின் கிராண்ட் விட்டாரா, 2022-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் வெறும் 22 மாதங்களில் 2 லட்சம் யூனிட் விற்பனையைத் தாண்டியுள்ளது. ஜூன் 2024 இறுதிக்குள், இது 199,550 யூனிட்களை விற்றது. 2,00,000 உள்நாட்டு விற்பனையைத் தொடுவதற்குத் தேவையான 450 யூனிட்கள் ஜூலை 2024 தொடக்கத்தில் எட்டியது.

    இதன் மூலம் அதிவேகமாக 2 லிட்சம் யூனிட்கள் விற்பனையான எஸ்யூவி என்ற பெருமையை கிராண்ட் விட்டாரா பெற்று இருக்கிறது. 25 மாதங்களில் மைல்கல்லை எட்டிய ஹூண்டாய் க்ரெட்டாவின் சாதனையை இது முறியடித்தது.

    செப்டம்பர் 19, 2023 அன்று, மாருதி கிராண்ட் விட்டாரா வெறும் 12 மாதங்களில் 1 லட்சம் யூனிட் விற்பனையானதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அடுத்த 1,00,000 யூனிட்கள் வெறும் 10 மாதங்களில் விற்கப்பட்டுள்ளன.

    ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற மாடல்களுடன் மிகுந்த போட்டி கொண்ட நடுத்தர எஸ்யூவி சந்தையில் நுழைந்தாலும், மாருதி கிராண்ட் விட்டாரா தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

    2024 நிதியாண்டில், அதன் விற்பனையானது, இது ஹூண்டாய் க்ரெட்டாவிற்குப் பிறகு (1,62,773 யூனிட்கள், 8.2 சதவீதம் அதிகரித்து) இரண்டாவது அதிகம் விற்பனையான நடுத்தர SUV ஆகும் (1,21,169 யூனிட்கள், 136 சதவீதம் அதிகம்).

    • ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்ப்பு.
    • கூடுதலான இரண்டு கதவுகள் மற்றும் அதிகரித்த நீளம், வீல்பேஸ் ஆகியவற்றுடன் வடிவமைப்பில் புதுமை.

    இந்தியர்களின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா தார் மாடல் கார்களை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் 5 டோர் கொண்ட புதிய வெர்ஷனை வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த வெர்ஷனுக்கு தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) எனப் பெயர் வைத்துள்ளது.

    தார் 3 டோர் வெர்ஷனை போலவே அதிக கவர்ச்சியான மற்றும் மிடுக்கான தோற்றத்தை கொண்டதாக இது காட்சியளிக்கின்றது. இதற்கேற்ப ஆறு ஸ்லாட்டுகளைக் கொண்ட புதிய கிரில் காரின் முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சமும், முன்பக்க பம்பரும் தார் ராக்ஸ்-க்கு வேற லெவல் அழகான பிம்பத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

    கூடுதலான இரண்டு கதவுகள் மற்றும் அதிகரித்த நீளம், வீல்பேஸ் ஆகியவற்றுடன் தார் ராக்ஸ் வடிவமைப்பிலும் நுட்பமான புதுமைகளை பெறுகிறது.

    இன்ஜினைப் பொருத்தவரை 1.5 லிட்டர் டீசல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்பட இருக்கின்றது. மஹிந்திரா தார் ராக்ஸ் ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    • இந்தியாவில் மேக்னைட் மாடலுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • இது Fully Loaded வேரியண்ட் ஆக இருக்கும்.

    நிசான் நிறுவனம் சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த எக்ஸ் டிரெயில் காரின் இந்திய வெர்ஷன் விவரங்களை தெரிவித்துள்ளது. மூன்றடுக்கு இருக்கை கொண்ட புது எஸ்யுவி மாடல் இந்தியாவில் மேக்னைட் மாடலுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.

    தற்போது நிசான் நிறுவனம் மேக்னைட் மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. இது Fully Loaded வேரியண்ட் ஆக இருக்கும்.

    புதிய எக்ஸ் டிரெயில் மாடல்: பியல் வைட், டைமண்ட் பிளாக் மற்றும் ஷேம்பெயின் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கும். அளவீடுகளை பொருத்தவரை இந்த கார் 4680mm நீளம், 1840mm அகலம், 1725mm உயரம் கொண்டுள்ளது. இந்த காரின் வீல்பேஸ் 2705mm ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 210mm ஆக உள்ளது.

     


    2024 நிசான் எக்ஸ் டிரெயில் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 12 வோல்ட் மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 160 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 13.7 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 9.6 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது. புதிய எக்ஸ் டிரெயில் மாடலில் ஸ்ப்லிட் ரக எல்இடி ஹெட்லேம்ப்கள், 20 இன்ச் மெஷின்டு அலாய் வீல்கள், முன்புற கதவில் ORVMகள், எல்இடி டெயில் லைட்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ஷார்க் ஃபின் ஆன்டெனா, ரியர் வைப்பர் மற்றும் வாஷர் வழங்கப்படுகிறது.

    • இயந்திர ரீதியாக, புதிய CNG அமைப்புடன் கூடிய எக்ஸ்டர் 1.2-லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது.
    • ஒரு CNG சிலிண்டர் பொருத்துதல் போல் இல்லாமல், CNG டுயோ மாடலில் இரண்டு சிலிண்டர்கள் உள்ளன.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை போன்றே, இரட்டை CNG சிலிண்டர் டேங்க்-ஐ தனது வாகனத்தில் வழங்கியுள்ளது. இந்தியாவில் டாடா, மாருதி மற்றும் ண்டாய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சிஎன்ஜி-யில் இயங்கும் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.

    சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் இரட்டை சிஎன்ஜி டேன்க் கொண்ட வாகனத்தை அறிமுகம் செய்த நிலையில், தற்போது ஹூண்டாய் நிறுவனம் இதே போன்ற தொழில்நுட்பத்துடன், இரட்டை CNG-ஐ தனது எக்ஸ்டர் மாடலில் வழங்கி உள்ளது.

    எக்ஸ்டர் CNG டுயோ என அழைக்கப்படும் புதிய காரின் ஆரம்ப விலை ரூ. 8.50 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் ஆகும். S, SX மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட SX நைட் ஆகிய 3 மாடல்களில் இந்த வசதி வழங்கப்படுகிறது.

    இயந்திர ரீதியாக, புதிய CNG அமைப்புடன் கூடிய எக்ஸ்டர் 1.2-லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இருப்பினும், ஒரு CNG சிலிண்டர் பொருத்துதல் போல் இல்லாமல், CNG டுயோ மாடலில் இரண்டு சிலிண்டர்கள் உள்ளன. இது, 60 லிட்டர் CNG திறன் கொண்ட 27.1km/kg என்ற எரிபொருள் செயல்திறனை எக்ஸ்டர் வழங்குகிறது. புதிய சிஎன்ஜி டுயோவுடன், ஒற்றை டேங்க் எக்ஸ்டர் சிஎன்ஜி தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.

    புதிய எக்ஸ்டர் CNG டுயோ குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தருண் கர்க் கூறுகையில், "ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிலையான மற்றும் புதுமையான இயக்க தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. அதிக எரிபொருள் திறன், போதிய பூட் ஸ்பேஸ் மற்றும் SUVயின் பல்துறை சலுகைகள் ஆகியவற்றுடன், எக்ஸ்டர் CNG டுயோ கார்பன் பாதிப்பை குறைக்கும்," என்று தெரிவித்தார்.

    ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி டுயோ விலை விவரங்கள்:

    ஹூண்டாய் எக்ஸ்டர் டுயோ S ரூ.8,50,300

    ஹூண்டாய் எக்ஸ்டர் டுயோ SX ரூ.9,23,300

    ஹூண்டாய் எக்ஸ்டர் டுயோ SX நைட் எடிஷன் ரூ.9,38,200

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • ஆடி க்யூ5 போல்ட் எடிஷன் கருப்பு ஸ்டைலிங் பேக்கேஜ் உடன் வெளிப்புற மேம்பாட்டைப் பெறுகிறது.
    • கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடும்.

    இந்தியாவில் பலராலும் அதிகம் விரும்பப்படும் கார் நிறுவனங்களில் ஆடியும் ஒன்று. ஆடி என்றாலே விலையுயர்ந்த மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    இந்த நிலையில் ஆடி நிறுவனம் Q5 எஸ்யூவியை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து போல்ட் எடிஷன் சிரீஸை கொண்டு வர உள்ளது. Q5 இன் மாடல் ரூ.72.30 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்படும் Q5 போல்ட் எடிஷனை ஆன்லைன் மற்றும் டீலர்களிடம் சென்று வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆடி க்யூ5 போல்ட் எடிஷன் கருப்பு ஸ்டைலிங் பேக்கேஜ் உடன் வெளிப்புற மேம்பாட்டைப் பெறுகிறது.

    கிரில், ஆடி லோகோக்கள், ஜன்னல் சுற்றுகள், ORVMகள் மற்றும் ரூஃப்-ரெயில்கள் ஆகியவற்றில் உயர் பளபளப்பான கருப்பு பெயிண்ட் இதில் அடங்கும். மேலும், கிலேசியர் ஒயிட், நவெரா ப்ளூ, மித்தோஸ் பிளாக், டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் மான்ஹட்டன் கிரே ஆகிய ஐந்து வண்ணம் விருப்பங்களில் கிடைக்கிறது.


    அம்சங்களைப் பொறுத்தவரை, ஆடி Q5 ஆனது நினைவக செயல்பாடு, 360 டிகிரி கேமராவுடன் பார்க்கிங் உதவி, ஆறு டிரைவ் மோட்கள், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 19-ஸ்பீக்கர்கள் மற்றும் ஓலுஃப்சென் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் காக்பிட், வயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன.

    இயந்திர ரீதியாக, Q5 ஆனது 2.0-லிட்டர் TFSi பெட்ரோல் மோட்டார் மூலம் 261bhp மற்றும் 370Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதே நேரத்தில் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் எலக்ட்ரானிக் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • பின்புறத்தில், டெயில்-லேம்ப்களில் லேசான மாற்றங்கள் இருக்கும்.
    • 2025 ஆம் ஆண்டில் ஸ்கோடாவிற்கான மூன்றாவது புதிய தயாரிப்பாக ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் இருக்கும்.

    பிரபலமான ஸ்கோடா ஸ்லாவியா செடான் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு செப்டம்பரில் வெளியாக இருக்கிறது. ஸ்கோடாவின் மேட் ஃபார்-இந்தியா செடான் பிப்ரவரி 2022 முதல் விற்பனையில் உள்ளது.

    இந்தியா 2.0 தயாரிப்புகளில் ஸ்லாவியா நான்கு மாடல்களில் ஒன்றாகும். இதில் ஸ்கோடா குஷாக் மற்றும் வோக்ஸ்வாகன் டைகன் எஸ்யூவிகளுடன் அதன் பேட்ஜ் பொறிக்கப்பட்ட இரட்டை ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் செடானும் அடங்கும்.

    புதுப்பிக்கப்பட்ட ஸ்லாவியாவை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட குஷாக் அறிமுகம் செய்யப்படும். ஸ்கோடாவின் புதுப்பிக்கப்பட்ட செடான் முன் மற்றும் பின்புற பம்பர்களில் ஸ்டைலிங் மாற்றங்களைக் கொண்டிருக்கும்.

    ஹெட்லேம்ப்கள் லேசான மறுவடிவமைப்பைக் காணும், கிரில் சற்று அகலமாக இருக்கும், மேலும் குரோம் பிட்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். கூடுதலாக, ஹூண்டாய் வெர்னாவில் காணப்படுவது போன்ற கனெக்டெட் ஹெட்லேம்ப்கள் உள்ளன. பின்புறத்தில், டெயில்-லேம்ப்களில் லேசான மாற்றங்கள் இருக்கும்.

    உட்புறத்தில், மாறுபாட்டைப் பொறுத்து சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் உபகரணங்களை எதிர்பார்க்கலாம்.

    பவர்டிரெய்ன் விஷயத்தில் எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்பட முடியாது. அதாவது மேனுவல் மற்றும் DSG கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல், மற்றும் 115 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும். இத்துடன் மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.


    2025 ஆம் ஆண்டில் ஸ்கோடாவிற்கான மூன்றாவது புதிய தயாரிப்பாக ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் இருக்கும். இந்த பிராண்ட் அனைத்து புதிய காம்பாக்ட் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுகத்துடன் புதிய ஆண்டைத் தொடங்கும், பின்னர் முறையே குஷாக் மற்றும் ஸ்லாவியாவிற்கான ஃபேஸ்லிஃப்ட்கள் அறிமுகம் செய்யப்படும்.

    முன்னதாக, ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவியா மிட்சைஸ் செடான் மற்றும் குஷாக் மிட்சைஸ் எஸ்யூவியின் மாடல்களின் விலையை குறிப்பிட்ட காலத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் வரை குறைத்தது. இத்துடன் கார் வேரியண்ட்களுக்கு புதிய பெயர்களையும் ஸ்கோடா வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
    • புதிய பெட்ரோல் என்ஜினுடன் இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    யூரோ NCAP புதிய கிராஷ் சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய Suzuki Swift, 2024 Dacia Duster, புதிய Skoda Kodiaq போன்ற பல கார் மாடல்களின் சோதனை முடிவுகள் அடங்கியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட்டின் சோதனை முடிவுகள் குறித்து பார்ப்போம்...

    சோதனையில், 2024 ஸ்விஃப்ட் விபத்து சோதனையில் மூன்று நட்சத்திர மதிப்பீடு பெற்றது. இதில், வயது வந்தோர் பாதுகாப்பில் 67 சதவீதமும், குழந்தைகள் பாதுகாப்பில் 65 சதவீதமும், பாதுகாப்பு உதவியில் 62 சதவீதமும், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனாளிகளுக்கு 76 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது.

    ஸ்விஃப்ட்டின் இந்த சோதனை செய்யப்பட்ட யூனிட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர்கள் மற்றும் லோட் லிமிட்டர்கள் மற்றும் சீட்பெல்ட் நினைவூட்டல் அமைப்பு ஆகியவை அடங்கும். மேலும், இது இரண்டாவது வரிசையில் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை ஆங்கரேஜ் மற்றும் ADAS வசதிகளை கொண்டுள்ளது. முன்பக்க ஆஃப்செட் சோதனையில் காரினல் பயணிகள் அமரும் பெட்டி நிலையானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஐரோப்பாவில் விற்கப்படும் ஸ்விஃப்ட் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது, எனவே இந்தியாவில் விற்கப்படும் ஸ்விஃப்ட் உடன் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ESP, HSA, பின்புற பார்க்கிங் சென்சார்கள், சீட்பெல்ட் நினைவூட்டல் அமைப்பு, வேக எச்சரிக்கை அமைப்பு, Isofix குழந்தை இருக்கை ஆங்கரேஜ் மற்றும் சில கூடுதல் அம்சங்களை இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் கொண்டுள்ளது. சுசுகி கனெக்ட் தொழில்நுட்பம். வரவிருக்கும் மாதங்களில் புதிய ஸ்விஃப்ட் BNCAP-ல் சோதிக்கப்படுமா என்பதைப் பார்க்க வேண்டும்.


    மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஸ்விப்ட் மாடல் இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய பெட்ரோல் என்ஜினுடன் இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    டிசைனை பொருத்தவரை 2024 ஸ்விப்ட் மாடலில் முற்றிலும் புதிய பம்ப்பர்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிளாஸ் பிளாக் முன்புற கிரில், எல்.இ.டி. ஃபாக் லைட்கள், 15 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. 2024 ஸ்விப்ட் மாடல் லஸ்டர் புளூ மற்றும் நோவல் ஆரஞ்சு என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    ×