search icon
என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மகாராஷ்டிரா மாநிலத்தின் கோண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் குதே.
    • இவர் கடந்த 2018-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கோண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் குதே.

    இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. தலைவருமான ரமேஷ் குதே இன்று சிவசேனா கட்சியில் இணைந்தார். கட்சி தலைவரான உத்தர தாக்கரே முன்னிலையில் கட்சியில் இணைந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய சிவசேனா கட்சியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது 6 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தாய் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொலை செய்யப்பட்ட நபரின் உடலில் 22 பேரின் பெயரை பச்சைக்குத்தியுள்ளார்.
    • அதில் இடம் பிடித்துள்ள ஒருவர் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

    மும்பையில் நீண்ட காலமாக குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலில் 22 பேரின் பெயரை பச்சைக்குத்தியுள்ளார். போலீசார் 3 பேரை கைது செய்துள்ள நிலையில், அவருக்கு திங்கு விளைவித்த எதிரிகளின் 22 பேரை பச்சை குத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆர்டிஐ ஆர்வலர் எனக் கூறப்படும் மும்பையைச் சேர்ந்த குரு வாக்மார் (வயது 38) மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர் புதன்கிழமை அதிகாலை மத்திய மும்பையில் உள்ள வோர்லி என்ற இடத்தில் உள்ள ஸ்பாவில் (Spa) கொலை செய்யப்பட்டார்.

    அவரது உடலை பரிசோதனை செய்தபோது, அவரது தொடையில் 22 பேர் பெயரை பச்சைக்குத்தியது தெரியவந்துள்ளது. இந்த 22 நபர்களால் துன்புறுத்தப்பட்டிருந்ததால் தன்னுடைய உடலில் பச்சைக்குத்தி வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் ஸ்பா உரிமையாளர் சந்தோஷ் ஷெரேகர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அதில் ஷெரேகர் பெயர் குரு வாக்மார் உடலில் பச்சைக் குத்தப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    குரு வாக்மாரின் பணம் பறிப்பு தொடர்பாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் கோபம் அடைந்து கொலை செய்ய ஷெரேகரை தூண்டியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். முகமது பெரோஷ் அன்சாரி (26) என்பவருக்கு குரு வாக்மாரை கொலை செய்வதற்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

    அன்சாரியும், ஷெரேகரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகம் ஆனவர்கள். அன்சாரி மும்பை அருகே நள சோபாரா என்ற இடத்தில் ஸ்பா நடத்தி வந்தவர். ரெய்டு காரணமாக கடந்த வரும் ஸ்பாவை மூடிவிட்டார். அதிகாரிகளுக்கு குரு வாக்மார் புகார் அளித்ததன் மூலம் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    அன்சாரி ஷெரேகரை அணுகி ஸ்பா உரிமையாளர்களிடம் இதுபோன்று வாக்மார் புகார் அளிப்பது மற்றும் மிரட்டி பணம் பறிப்பதை தடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது வாக்மாரை ஒழிக்க வேண்டும் என ஷெரேகர் தெரிவித்துள்ளார்.

    அதன்பின் அன்சாரி சகிப் அன்சாரியை தொடர்பு கொண்டுள்ளார். சகிப் அன்சாரி டெல்லியை சேர்ந்தவர்கள். அதன்பின் கொலை செய்ய சதி திட்டம் மூன்று மாதங்களுக்கு முன்பு அரங்கேறியுள்ளது.

    மூன்று மாதங்கள் குரு வாக்மாரின் நடமாட்டத்தை நோட்டமிட்ட அவர்கள், அதன்பின் ஷெரேகர் ஸ்பாவில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    சியோன் பகுதியில் உள்ள மதுபான பாருக்கு வெளியில் வாக்மார் தனது பிறந்த நாளை 21 வயது தோழியுடன் செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடியிருந்தபோது ரெயின்கோட் அணிந்த இருவர் அவரை பின்தொடர்ந்தனர். பின்னர் ஷெரேகர் ஸ்பா இருக்கும் இடம் வரை வாக்மோரை ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தில் முகமது பெரோஸ் அன்சாரி ஈடுபட்டதை, அருகில் உள்ள கடையில் பொருள் வாங்கி UPI மூலம் பணம் செலுத்தியது, பின்னர் UPI ID-யில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பரில் இருந்து ஷெரேகருக்கு போன் செய்தததில் இருந்து போலீசார் கண்டுபிடித்தனர்.

    பெரோஷ், சகிப் அன்சார் புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் ஸ்பாவிற்கு வந்து, வாக்மாரின் தொழியை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்ற பிறகு, வாக்மார் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் கழுத்தை பிளேடால் அறுக்க, மற்றொருவர் வயிற்றில் குத்தி கொலை செய்துள்ளார்.

    இந்த கொலை குறித்து வாக்மாரின் தோழி காலை 9 மணிக்கு தெரிந்து கொண்டு, ஷெரேகரிடம் கூற அவர் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து போலீஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    மும்பை, நவி மும்பை, தானே, பல்கார் போன்ற பகுதிகளில் உள்ள ஸ்பாக்களில் கடந்த 2010-ல் இருந்து மிரட்டி பணம் பறித்ததாக வாக்மார் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர் மீது மிரட்டி பணம் பறித்தல், கற்பழிப்பு, பாலியல் தொல்லை கொடுத்தல் போன்று வழக்குகள் உள்ளன. அடையாளம் காணப்பட்ட 8 வழக்குகளும், சந்தேகத்தின் அடிப்படையிலான 22 வழக்குகளும் உள்ளன.

    • காவல் துறை சார்பில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
    • 24 மணி நேரத்தில் மட்டும் 44 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மும்பையில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று காவல் துறை வலியுறுத்தி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து காவல் துறை சார்பில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில் இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பைவாசிகள் வீடுகளிலேயே இருக்க கேட்டுக் கொள்கிறோம். ஏதேனும் அவசர உதவிகளுக்கு 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் என மும்பை காவல் துறை குறிப்பிட்டுள்ளது.

    முன்னதாக கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அருகாமை விமான நிலையங்களில் இருந்து மும்பை வரவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மும்பையில் 44 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதிகளில் 90 மில்லிமீட்டர்களும் பதிவாகி உள்ளது.

    இதுதவிர கனமழை காரணமாக பூனேவில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். இருவர் தானேவில் உள்ள பார்வி அணையில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்தனர்.

    • குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • 205 சாய்பாபா பக்தர்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.

    மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்றைய நாளில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் பணம் உள்ளிட்டவற்றை அளித்தனர்.

    குரு பூர்ணிமா நாளில் ரூ.6.25 கோடி உண்டியல் வசூலானது. மேலும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.

    இது தவிர கடந்த 3 நாட்களில் 205 சாய்பாபா பக்தர்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.

    • அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தொடர் மழை காரணமாக, மும்பை மாநகரப் பகுதிக்கு தண்ணீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரி நிரம்பி உள்ளது.

    மகாராஷ்டிராவில் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை கனமழை முதல் மிகக் கனமழை (115.6 முதல் 204.4 மிமீ வரை) பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த சில தினங்களாக மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையால், நகரின் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் மும்பையில் உள்ள அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவில் பெய்த கனமழையால் சில பொது போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

    தொடர் மழை காரணமாக, மும்பை மாநகரப் பகுதிக்கு தண்ணீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரி நிரம்பி உள்ளது.

    • இருவருக்கும் இடையில் காதல் மலரவே தொலைபேசி மூலம் தொடர்ந்து இருவரும் பேசி வந்துள்ளனர்.
    • கடந்த பிப்ரவரி மாதம் பாபரை ஆன்லைனிலேயே சனம் என்ற பெயரில் திருமணம் செய்துள்ளார்

    மகாராஷ்டிர மாநிலம் தானே நகரைச் சேர்ந்தவர் நக்மா நூர் மஃஸூத் அலி. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் அபோட்டாபாத் [ Abbottabad ] நகரில் வசித்து வரும்பாபர் பஷீர் என்ற நபரை பேஸ்புக்கில் சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையில் காதல் மலரவே தொலைபேசி மூலம் தொடர்ந்து இருவரும் பேசி வந்துள்ளனர்.

    காதலர் பாபரை சந்திக்க நக்மா விண்ணப்பித்திருந்த பாகிஸ்தான் விசா நிராகரிக்கப்பட்ட நிலையில் தனது ஆதார் கார்டில் சனம் கான் ரூக் என பெயரை மாற்றி கடந்த பிப்ரவரி மாதம் பாபரை ஆன்லைனிலேயே சனம் என்ற பெயரில் திருமணம் செய்துள்ளார் நக்மா. அதைத்தொடர்ந்து போலியான ஆவணங்களைத் தயாரித்து அதன்மூலம் தற்போது பாகிஸ்தான் சென்று திரும்பியுள்ளார் அவர்.

    கடந்த ஜூலை 17 ஆம் தேதி நக்மா நாடு திரும்பிய நிலையில் அவரது போலி ஆவணங்கள் மூலம் போலீசில சிக்கியுள்ளார் நக்மா. இதனையடுத்து நக்மாவை போலீசார் விசாரித்து வருகின்றனர். தனது மகள் அவளது பெயரை கடந்த 2015 ஆம் ஆண்டே மாற்றிவிட்டதாக நக்மாவின் தாய் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கருவைக் கலைக்க மும்பை அருகே உள்ள தானேவில் உள்ள மருத்துவமனைக்கு காதலனால் அழைத்துச்செல்லப்பட்டார்.
    • அழுதுகொண்டிருத்த இரண்டு குழந்தைகளையும் அவர்கள் ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர்.

    கருக்கலைப்பு செய்தபோது உயிரிழந்த கர்பிணி பெண்ணின் உடலை ஆற்றில் வீசி, அவரின் 2 குழந்தைகளையும் அதே ஆற்றில் காதலன் தள்ளிவிட்டுவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள புனே மாவட்டத்தில்  கணவனைப்  பிரிந்து காதலுடன் வாழும்  25 வயது பெண்  கர்பமடைந்த நிலையில்  கருவைக் கலைக்க மும்பை அருகே உள்ள தானேவில் உள்ள மருத்துவமனைக்கு காதலனால் அழைத்துச்செல்லப்பட்டார்.

    கருக்கலைப்பின்போது துரதிஷ்டவசமாக பெண் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து பெண்ணின் உடல் அவரது காதலனிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவரை விட்டு பிரிந்து காதலனுடன் வாழும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு குழந்தையும் 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 9 ஆம் தேதி தனது நண்பனுடன் பெண்ணின் உடலை எடுத்துக்கொண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு புனே நோக்கி காதலன் வந்துள்ளான்.

    வரும் வழியில் காதலன் தனது நண்பனுடன் சேர்ந்து இந்திரயாணி ஆற்றில் பெண்ணின் உடலை வீசியுள்ளான். அழுதுகொண்டிருத்த இரண்டு குழந்தைகளையும் அவர்கள் ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர். தனது பெண்ணை காணவில்லை என்று தாய் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆற்றில் இருந்து பெண்ணின் உடலை போலீசார்  மீட்ட நிலையில் காணாமல் 2 குழந்தைகளையும் தேடி வருகின்றனர். 

    • கப்பற்படை தளத்தில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த போது தீ விபத்து.
    • நேற்று ஏற்பட்ட தீ இன்று காலை முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.

    இந்திய கப்பற்படையின் முக்கியமான போர்க்கப்பல்களில் ஒன்று ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா. இந்த கப்பல் மும்பையில் உள்ள கப்பற்படை தளத்தில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கப்பலில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக வீரர்களை மும்பை தீயணைப்புப்படை உதவியுடன் தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடுமையான போராட்டத்திற்குப்பின் இன்று காலை தீ அணைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் மாயமாகியுள்ளார். கப்பலில் மேலும் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக என அதிகாரிகள் கப்பல் முழுவதும் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த தீ விபத்தால் கப்பல் ஒரு பக்கம் சாய்ந்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா என்பது உள்நாட்டிலேயே கட்டப்பட்ட போர்க்கப்பல்களில் முதன்மையானது. இது ஏப்ரல் 2000-ல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

    கப்பலில் நடுத்தர தூரம், குறுகிய தூரம் மற்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேற்பரப்பில் இருந்து மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகள் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

    ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா 5300 டன் எடை கொண்டது. 125 மீட்டர் நீளமும், 14.4 மீட்டர் அகலமும் (beam) கொண்டது. 27 நாட்டிக்கல் வேகத்தில் செல்லக் கூடியதாகும்.

    • பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
    • அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சரானார்.

    2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. பின்னர் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து சிவசேனா கட்சி தனது ஆட்சியை தக்கவைத்தது.

    பின்னர் சிவசேனா கட்சியை உடைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சரானார்.

    இந்நிலையில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியை உடைத்து விட்டு முதலமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்ரேவுடன் கூட்டணி வைத்துள்ள சரத் பவார் சந்தித்து பேசியுள்ளார்.

    இன்னும் சில மாதங்களில் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
    • ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஓடுபாதை செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம்.

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மராட்டியம், கேரளம், கர்நாடகம், கோவாவில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மும்பையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இடைவிடாமல் பெய்த கனமழையால், விமான நிலையத்தில், ஆபரேட்டர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஓடுபாதை செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதில், விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 12 விமானங்கள் உள்பட இண்டிகோவின் 24 விமானங்களும், ஏர் இந்தியாவின் எட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல், மும்பை விமான நிலையத்தில் விஸ்தாரா தனது நான்கு விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

    ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா உட்பட குறைந்தது 15 விமானங்கள் அருகிலுள்ள குறிப்பாக அகமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு மாலை 4 மணி வரை திருப்பி விடப்பட்டன.

    மும்பையில் 82 மிமீ மழை பெய்துள்ளது

    பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தகவலின்படி, மும்பையில் மாலை 4 மணி வரை நகரில் 82 மிமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 96 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 90 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

    கனமழை காரணமாக மும்பை முழுவதும் விமான சேவைகள் மட்டுமின்றி சாலை மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

    பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மத்திய ரயில்வேயின் துறைமுகப் பாதையில் சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    அடுத்த 18-24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தாக்குதலில் ஷிண்டேவுக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ஜிம்மில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவியது.

    மும்பையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த யோகேஷ் ஷிண்டே என்ற 20 வயது வாலிபரை பயிற்சியாளர் நகேல் திடீரென மரக்கட்டையால் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அதில், யோகேஷ் ஷிண்டே ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார். அவருக்கு ஒரு பயிற்சியாளர் உதவி செய்கிறார். அவரிடம் இருந்து விலகி நிற்கும் மற்றொரு பயிற்சியாளரான நகேல் திடீரென ஒரு கட்டையை எடுத்து ஷிண்டேவை தாக்குகிறார். இதனால் ஷிண்டே வலியால் துடித்து தலையை பிடித்துக்கொண்டு அமர்வது போன்று காட்சிகள் உள்ளன.

    அப்போது ஜிம்மில் இருந்தவர்கள் நகேலை தடுக்க முயல்கின்றனர். உடற்பயிற்சி செய்த போது ஷிண்டே காமெடி செய்ததாகவும், இதனால் பயிற்சியாளர் ஆத்திரம் அடைந்து அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலில் ஷிண்டேவுக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஜிம்மில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான இந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து ஷிண்டேவின் புகாரின் பேரில் நகேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரத்தம் சொட்ட சொட்ட இந்த விவகாரத்தை வீடியோவாக பேசி அப்பெண் வெளியிட்டுள்ளார்.
    • அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    புனேவில் ஜெரலின் டி சில்வா என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பின்னே வந்த கார் இவரை முந்தி செல்ல முயற்சித்தது. ஆனால் முந்தி செல்ல முடியாமல் 2 கிமீ தூரம் ஸ்கூட்டரின் பின்புறம் கார் சென்றுள்ளது. இதனால் காரை ஓட்டி வந்த முதியவர் கோவமடைந்துள்ளார்.

    பின்பு ஸ்கூட்டருக்கு முன்பு காரை நிறுத்தி இறங்கிய முதியவர் கோபத்துடன் அப்பெண்ணின் முடியை பிடித்து இழுத்து முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அப்பெண்ணின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.

    பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட இந்த விவகாரத்தை வீடியோவாக பேசி அப்பெண் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    வீடியோ வைரலானதை அடுத்து, தாக்கிய முதியவர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    ×