search icon
என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மலேகானில் மசூதிக்கு அருகே மோட்டார் சைக்களில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர்.
    • இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.

    மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரக்யா சிங் தாகூர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

    பலமுறை சம்மன் அனுப்பியும் பிரக்யாக சிங் ஆஜராகாமல் இருந்தார். தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராக நிலையில், ஏப்ரல் 25-ந்தேதிக்குள் (இன்று) நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் முன் இன்று ஆஜரானார். அப்போது தான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்தார். மேலும், உள்ளங்கையால் கையெழுத்து போட முடியாததால் கைரேகை வைக்க அனுதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், கேள்வி- பதில் வடிவில் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது.

    பிரக்யா தாகூர் உள்ளிட்ட ஆறு பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரணையை சந்தித்து வருகிறார்கள்.

    மலேகானில் மசூதிக்கு அருகே மோட்டார் சைக்களில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றது.

    முதலில் இந்த வழக்கை மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வந்தது. அதன்பின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)க்கு மாற்றப்பட்டது.

    • ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப viacom நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
    • ஏப்ரல் 29ம் தேதி அன்று தமன்னா நேரில் ஆஜராகும்படி உத்தரவு.

    2023ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில், நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.

    அதில், நடிகை தமன்னா நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.

    ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப viacom நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    ஆனால், தமன்னா ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக viacom சார்பில் புகார் எழுப்பப்பட்டது.

    அதன்படி, ஏப்ரல் 29ம் தேதி அன்று தமன்னா நேரில் ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.

    • 2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • இந்த ஊழல் நடந்தபோது, மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குனராக இருந்தார்

    மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே முதற்கட்டத் தேர்தலின்போது 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

    மகாராஷ்டிராவில் வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இந்த பாராமதி தொகுதிக்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் வழக்கை மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மூடியுள்ளது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர் ஆனந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பிரதமர் மோடி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பி, இது ஊழல் குடும்பம் என்று கூறினார். ஆனால், இன்று அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பாஜகவில் இணைந்த தலைவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் எந்த குற்றச் செயலையும் பார்க்கவில்லை என மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது" என அவர் கூறினார்.

    2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த ஊழல் நடந்தபோது, தற்போது மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் உட்பட, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குநர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஏக்நாத் ஷிண்டே கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
    • மயங்கிய நிலையில் கட்கரியை மற்ற தலைவர்கள் தாங்கியபடி அழைத்துச் சென்றனர்.

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் நிதின் கட்கரி. இவர் மத்திய அமைச்சராகவும் இருந்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இவர் மகாராஷ்டிரா மாநிலம் யவாத்மல் என்ற இடத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி வேட்பாளருர் ராஜஸ்ரீ பாட்டிலுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தது. பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மயங்கினார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் அவரை தூக்கிக்கொண்டு சென்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியேனதால் தலைவர்களும், தொண்டர்கள் நிதின் கட்கரிக்கு என்ன ஆனதோ, என கவலை அடைந்தனர்.

    ஆனால், மயக்க நிலைக்கு சென்ற நிதின் கட்கரி முறையாக சிகிச்சை பெற்று, பின்னர் மேடைக்கு வந்து தனது பேச்சை தொடர்ந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் மயங்கிய நிலைக்கு சென்ற வீடியோ எக்ஸ் பக்கத்தில் பரவத் தொடங்கியுள்ளது.

    நிதின் கட்கரி 2014 மற்றும் 2019-ல் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்
    • மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்

    சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 51 - வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு கிரிக்கெட் உலக வீரர்கள்,மற்றும் நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    டெண்டுல்கர் 24- 4- 1973-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். டெண்டுல்கருக்கு தற்போது 51 வயதாகிறது. கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சின் அழைக்கப்படுகிறார்.சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் வருமாறு :-




    டெண்டுல்கர் 11 வயதில் கிரிக்கெட் விளையாட்டில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவரது மூத்த சகோதரர் அஜித் டெண்டுல்கர் அவரை ஊக்குவித்தார்.

    1988 -ல், 15 வயதில் சச்சின் டெண்டுல்கர், குஜராத்திற்கு எதிராக ரஞ்சி டிராபி ஆட்டத்தில் பம்பாய்க்காக முதல் தடவையாக கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் சதம் அடித்த அவர், முதல்தர போட்டியில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.




    ரஞ்சி டிராபி, இரானி டிராபி மற்றும் தியோதர் டிராபி ஆகிய 3 உள்நாட்டுப் போட்டிகளிலும் அறிமுகத்திலேயே சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் இவர்.

    டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். அவர் 664 போட்டிகளில் ஆடியுள்ளார்.

    மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் தான். 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது இணையற்ற பேட்டிங் நுட்பங்களால் கிரிக்கெட் உலகில் ஜொலித்தார்.



    இவரது சாதனைகளுக்காக இந்திய அரசு டெண்டுல்கருக்கு பல விளையாட்டு விருதுகளை வழங்கி கவுரவித்தது. 1994 -ல் அர்ஜுனா விருது, 1997 -ல் கேல் ரத்னா விருது, 1998 -ல் பத்மஸ்ரீ, 2008 -ல் பத்ம விபூஷன் ,2013 -ல் பாரத ரத்னா விருதுகளை பெற்றுள்ளார்.

    • காஞ்சன்பென் பாட்ஷா தனது பேரன்களுடன் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி பகுதியில் வசித்து வருகிறார்.
    • காஞ்சன்பென் பாட்ஷா வீட்டில் இருந்தே வாக்களிக்க மறுத்து விட்டார்.

    மும்பை:

    பாராளுமன்றத் தேர்தல் கடந்த 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காஞ்சன்பென் பாட்ஷா என்ற 112 வயது மூதாட்டி ஒருவர் தபால் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்றும் நேரடியாக வந்து ஓட்டு போட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    1912-ம் ஆண்டு பிறந்த காஞ்சன்பென் பாட்ஷாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் இளம் வயதிலேயே இறந்து விட்டார். தற்போது அவர் இப்போது தனது 2 பேரன்களான பரிந்த் மற்றும் ஜிக்னேஷ் ஆகியோருடன் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி பகுதியில் வசித்து வருகிறார்.

    மும்பையில் மே 20-ந்தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவையொட்டி தற்போது 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் காஞ்சன்பென் பாட்ஷா வீட்டில் இருந்தே வாக்களிக்க மறுத்து விட்டார். வயதாகிவிட்டாலும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கப் போவதாக அவர் தெரிவித்தார். இந்த கால இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியை அமைத்துள்ளார்.

    வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்ற அவரது அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நோடல் அதிகாரி மற்றும் அவரது குழுவினர் காஞ்சன்பென்னைப் பாராட்டி அவரை கவுரவித்தனர்.

    சுதந்திர போராட்டம், பிரிவினை, உலகப் போர்கள் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளைக்கண்ட அவர், இப்போது ஜனநாயக செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க இளைஞர்களை வலியுறுத்துகிறார்.

    நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    காஞ்சன்பென் குறித்து அவரது பேரன் பரிந்த் கூறியதாவது:-

    இந்த வயதில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்குச் செல்வது மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அவர் நம்புகிறார். வீட்டில் இருந்து வாக்களிப்பது யாருக்கும் பயனளிக்காது என்று கூறி நேரடியாக வாக்குச்சாவடிக்குச் செல்வதையே அவர் விரும்புகிறார். இந்த வயதிலும் வெளியே சென்று வாக்களிக்கும்போது அதை பார்க்கும் மற்றவர்களும் வாக்களிக்க நினைப்பார்கள். அதுதான் வாக்களிக்க வெளியே செல்வதற்கான அவரது முக்கிய நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடி கர்நாடகாவில் வாக்காளர்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கோஷமிடச் சொல்லி பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை அழுத்துமாறு கூறினார்
    • பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் என்று அமித் ஷா வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்

    சிவசேனா தேர்தல் பிரச்சார பாடலில் இருந்து 'இந்து தர்மா' மற்றும் 'ஜெய் பவானி' ஆகிய வார்த்தைகளை நீக்க கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதற்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கடந்த வாரம், கட்சியின் பிரச்சார பாடலாக 'மஷல் கீத்' பாடலை வெளியிட்டோம். அதில் 'இந்து தர்மம்', 'ஜெய் பவானி' என்ற இரண்டு வார்த்தைகளுக்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபனை தெரிவித்தது. பாடலில் 'ஜெய் பவானி, ஜெய் சிவாஜி' என்ற முழக்கம் உள்ளது, இது மகாராஷ்டிரா மற்றும் மராத்தியின் பெருமை.

    மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு, மகாராஷ்டிராவின் குலதெய்வமான துல்ஜா பவானி தேவி மீது இவ்வளவு வெறுப்பு இருப்பதாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்று 'ஜெய் பவானி'யை நீக்கச் சொல்கிறார்கள், நாளை 'ஜெய் சிவாஜி'யை நீக்கச் சொல்வார்கள். இதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், "நரேந்திர மோடி கர்நாடகாவில் வாக்காளர்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கோஷமிடச் சொல்லி பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை அழுத்துமாறு கூறினார். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் என்று அமித் ஷா வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்.

    இந்த இரண்டு பேச்சுகளையும் குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திற்கு நான் கடிதம் எழுதி விளக்கம் கேட்டேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை. எனவே தேர்தல் ஆணையம் இப்போது எங்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால், அந்த ஆணையம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தவ் தாக்கரே பதில் அளித்துள்ளார். 

    • தேர்தலில் வென்றால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுலா.
    • இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தனது கட்சியின் புதிய கீதத்தில் இருந்து "ஜெய் பவானி" மற்றும் "இந்து" என்ற வார்த்தைகளை நீக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) நோட்டீஸ் வந்துள்ளதாகவும், ஆனால் அதைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, "கீதத்திலிருந்து 'ஜெய் பவானி'யை நீக்கக் கோருவது மகாராஷ்டிராவை அவமதிக்கும் செயலாகும்" என்றார்.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    மத்திய பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா தேர்தல்களில் 'பஜ்ரங் பலி கி ஜெய்' எனச் சொல்லி பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.

    தேர்தலில் வென்றால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்வோம் என பிரசாரங்களில் அமித்ஷா பேசி வருகிறார்.

    இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எங்கள் தேர்தல் பிரசார பாடலில் இருந்து 'இந்து', 'ஜெய் பவானி' ஆகிய வார்த்தைகளை நீக்கச் சொல்லி எங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    நான் தேர்தல் ஆணையத்திடம் கூறிக்கொள்ள விரும்புவது...

    அந்த வார்த்தைகளை நாங்கள் நீக்க மாட்டோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களவைத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பாஜகவின் ‘அப்கி பார், 400 பார்’ முழக்கம் தவறானது.
    • முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலத்தில் ஐந்து தொகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு ஏற்பட்டதற்கு கடுமையான வெப்பம் காரணம்.

    48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 5 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) மாநிலத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், எதிர்க்கட்சிகளுக்கு இடையே உள்ள பரந்த புரிதல், நிலையான ஆட்சியை வழங்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும். மக்களவைத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பாஜகவின் 'அப்கி பார், 400 பார்' முழக்கம் தவறானது. சில இடங்கள் தொடர்பாக இந்திய கூட்டணியினுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதில் கவனம் செலுத்தக்கூடாது.

    முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலத்தில் ஐந்து தொகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு ஏற்பட்டதற்கு கடுமையான வெப்பம் காரணம் என்றும் வாக்காளர்கள் காட்டாத உற்சாகம் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

    மேலும் கடந்த காலங்களில் மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தியதில்லை எனக்கூறிய சரத் பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரின் கைதுகளை மேற்கோள் காட்டி பா.ஜ.க.வை சாடினார்.

    • பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது.
    • முதல் கட்ட வாக்குப்பதிவு, எதிர்க்கட்சிகளின் தோல்வியை காட்டுகிறது.

    மும்பை:

    பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடி அளவில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு மற்றும் கிடைத்த தகவல்களின்படி, முதல் கட்ட தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது.

    முதல் கட்ட வாக்குப்பதிவு, எதிர்க்கட்சிகளின் தோல்வியை காட்டுகிறது. காங்கிரஸ் ஏற்கனவே தனது தோல்வியை ஒப்பு கொண்டு விட்டது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

    தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி சரிந்து விழும். அந்த கூட்டணியே இருக்காது. அக்கூட்டணி கட்சிகள் தங்களுக்குள்ளாகவே மோதிக் கொள்கிறார்கள். ராகுல் காந்திக்கும், கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. 25 சதவீத தொகுதிகளில் இந்திய கூட்டணி கட்சிகள் ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுகிறார்கள்.

    எதிர்க்கட்சி கூட்டணி என்பது தங்கள் ஊழல் செயல்களை பாதுகாக்க ஒன்றிணைந்த சுயநலவாதிகள் குழு.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் சிலர் மேல்-சபை தேர்தல் மூலம் பாராளுமன்றத்தில் நுழைய பார்க்கிறார்கள்.


    தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் பயந்து ஓடுகிறார்கள். சில தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாததால் பாராளுமன்ற தேர்தலில் இருந்து வெளியேறி மேல்சபை தேர்தலுக்கு சென்றனர்.

    இந்தியா கூட்டணியின் தலைவர் யார்? என்பதை அவர்களால் மக்களுக்கு சொல்ல முடியாது. காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) அமேதி தொகுதியில் இருந்து ஓடினார். தற்போது வயநாடு தொகுதியில் இருந்தும் ஓடிவிடுவார்.

    வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்திக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அவரும், அவரது குழுவினரும் 26-ந்தேதி வயநாட்டு தொகுதியில் நடக்கும் வாக்குப்பதிவுக்காக காத்திருக்கிறார்கள். அமேதியில் இருந்து தப்பி ஓடியது போல அவர்கள் வயநாட்டை விட்டு ஓடுவார்கள்.

    அமேதியில் தோல்வியடைந்த பிறகு ராகுல் காந்தி வயநாட்டையும் இழக்க நேரிடும். எனவே அவர் ஏப்ரல் 26-ந்தேதிக்கு பிறகு பாதுகாப்பான இடத்தை தேட வேண்டும்.

    காங்கிரஸ் செய்த தவறுகளை சரி செய்வதற்காகவே எங்களின் அதிக நேரம் செலவழிக்கப்பட்டது. அடுத்த 25 ஆண்டுகள் உலகில் இந்தியாவின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஆண்டாக இருக்கும். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தியது. அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    குடியுரிமை திருத்த சட்டம் இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சீக்கியர்களின் கதி என்னவாகும் என்று நினைத்து பாருங்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 தொகுதிகளில் இன்று தேர்தல்.
    • அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் வாக்குப்பதிவு.

    நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்கள் உள்பட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.

    அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், உலகின் மிகவும் உயரம் குறைவான பெண்ணாக அறியப்படும் ஜோதி ஆம்கே நாக்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களித்தார்.

    2009-ம் ஆண்டில், ஜோதி ஆம்கேக்கு உலகின் 'உயரம் குறைந்த பதின்ம வயதுப் பெண்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

    அப்போது 15 வயதான ஜோதி ஆம்கேவின் உயரம் 2 அடி 0.3 அங்குலமாக இருந்தது.

    தற்போது, ஜோதிக்கு 30 வயதாகிறது.

    • நாக்பூரில் பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
    • 75 சதவீத வாக்குப்பதிவைக் கொண்டு செல்வதே எங்களது லட்சியம்.

    நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று வாக்களித்த மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    பின்னர் நிதின் கட்காரி பேசியதாவது:-

    நாட்டின் மிகப்பெரிய பண்டிகையை நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம்.

    நாக்பூரில், வெப்பநிலை அதிகமாக இருப்பதால், சீக்கிரம் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு நான் குறிப்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கடந்த முறை 54 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 75 சதவீத வாக்குப்பதிவைக் கொண்டு செல்வதே எங்களது லட்சியம்.

    இந்த தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×