என் மலர்

    மகாராஷ்டிரா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 பேரும் வாலிபரின் ஆடையை களைந்தனர்.
    • இளம்பெண் தனக்கு நேர்ந்த அவலத்துடன் வீட்டுக்கு சென்றார்.

    மும்பை :

    பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் ஜிவ்தானி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள மலையில் சம்பவத்தன்று மாலை வேளையில் வாலிபர் ஒருவர், இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார். 20 வயதுடைய அவர்கள் காதலித்து வந்ததாக தெரிகிறது. காதல் ஜோடி தனியாக பேசிக்கொண்டு இருந்ததை அங்கு மதுகுடிக்க வந்த விரார் கிழக்கு சாய்நாத் பகுதியை சேர்ந்த தீரஜ் சோனி(வயது 25), லட்சுமண் ஷிண்டே(22) கவனித்தனர்.

    அவர்கள் தனிமையில் இருந்த ஜோடியை செல்போனில் படம் எடுத்தனர். மேலும் அந்த படத்தை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டி வாலிபரிடம் பணம் பறிக்க முயன்றனர்.

    வாலிபர் கையில் பணம் இல்லாததால் கூகுள் பே மூலம் ரூ.500 அனுப்புமாறு போனில் தொடர்பு கொண்டு நண்பரிடம் கேட்டு உள்ளார். அந்த நேரத்தில் தீரஜ் சோனியும், லட்சுமண் ஷிண்டேவும் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். இதனால் வாலிபர், இளம்பெண்ணை காப்பாற்ற அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தீரஜ் சோனி மண்டையை உடைத்தார்.

    இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் வாலிபரின் ஆடையை களைந்தனர். அவரை கீழே தள்ளி கைகளை கட்டி போட்டனர்.

    பின்னர் அவர்கள் இளம்பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்றனர். அங்கு அவர்கள் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். இந்த கொடூர செயலை தொடர்ந்து இளம்பெண்ணை மலை காட்டில் தனியாக விட்டு தப்பி ஓடினர். இளம்பெண் தனக்கு நேர்ந்த அவலத்துடன் வீட்டுக்கு சென்றார்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுடன் இருந்த வாலிபர் ஒருவழியாக தனது கைகட்டுகளை அவிழ்த்து மலையில் இருந்து கீழே ஓடி வந்தார். அவர் உதவிகேட்டு சத்தம் போட்டார். வாலிபர் ஆடை இல்லாமல் இருந்ததால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொதுமக்கள் நினைத்தனர்.

    இந்தநிலையில் வாலிபர் ஆடையில்லாமல் சுற்றிய தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரிடம் வாலிபர் நடந்த சம்பவத்தை கூறி கதறினார். ஆசாமிகளால் கடத்தப்பட்ட இளம்பெண்ணை வாலிபருடன் சேர்ந்து போலீசார் தேடினர்.


    இந்தநிலையில் வாலிபர், இளம்பெண்ணை கடத்தி சென்றவர்களில் ஒருவரை தலையில் தாக்கியதை போலீசாரிடம் கூறினார். எனவே போலீசார் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளை தொடர்பு கொண்டு தலையில் காயத்துடன் யாரும் சிகிச்சை பெற வந்தால் தகவல் கொடுக்குமாறு தெரிவித்தனர்.

    இந்தநிலையில் தலையில் காயத்துடன் வாலிபர் ஒருவர் சிகிச்சைக்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆஸ்பத்திரி டாக்டர் காயத்துடன் வந்த வாலிபரின் படத்தையும் போலீசாருக்கு அனுப்பினார். அப்போது அவர் காதலனை தாக்கி, இளம்பெண்ணை கற்பழித்த தீரஜ் சோனி என்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தீரஜ் சோனியை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் லட்சுமண் ஷிண்டேயையும் கைது செய்தனர்.

    சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ததாக போலீசார் கூறினர்.

    இதற்கிடையே போலீசார் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவரது வீட்டில் மீட்டனர். இளம்பெண்ணின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது கூட்டு பலாத்காரம், இயற்கைக்கு மாறான உறவு, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    மலையில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்த வாலிபரை கட்டிப்போட்டு, இளம்பெண்ணை 2 பேர் கூட்டுபலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்று வரும் முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் அணியை முடிவு செய்வதற்கான எலிமினேட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நாட் ஷிவர் பிரன்ட் 72 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.

    இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. டாப் ஆர்டர் வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். 56 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கிரண் நவ்கிரே, தீப்தி சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது.

    அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரண், 27 பந்துகளில், 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 43 ரன்கள் விளாசிய நிலையில், இஸ்சி வாங் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சிம்ரன் ஷாயிக், சோபி எக்லெஸ்டோன் ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இதன்மூலம் வாங் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

    தீப்தி சர்மா 16 ரன், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயாக்வாட் தலா 5 ரன்னில் ஆட்டமிழக்க, உ.பி. வாரியர்ஸ் அணி, 17.4 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இஸ்சி வாங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிரடியாக ஆடிய மும்பை அணி வீராங்கனை நாட் ஷிவர் பிரன்ட் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் விளாசினார்.
    • உ.பி. வாரியர்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்று வரும் முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போடடிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் அணியை முடிவு செய்வதற்கான எலிமினெட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி டெல்லி அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்.

    எலிமினேட்டர் சுற்று போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நாட் ஷிவர் பிரன்ட் 72 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.

    இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. டாப் ஆர்டர் வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். 56 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கிரண் நவ்கிரே, தீப்தி சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. குறிப்பாக கிரண் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சொந்த ஊர் திரும்பும் மகிழ்ச்சியில் 2 பேரும் விமானத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்தனர்.
    • அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் 2 பேரையும் கண்டித்தனர்.

    மும்பை:

    மராட்டிய மாநிலம் நலசோப்ரா பகுதியை சேர்ந்த 2 பேர் வளைகுடா நாட்டுக்கு வேலைக்கு சென்றனர். ஒரு ஆண்டுக்கு பிறகு அவர்கள் துபாயில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு வந்து கொண்டு இருந்தனர்.

    சொந்த ஊர் திரும்பும் மகிழ்ச்சியில் 2 பேரும் விமானத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்தனர். இதனால் அவர்களுக்கு போதை தலைக்கேறியது. அதில் ஒருவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து நடந்துகொண்டே மது குடித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் 2 பேரையும் கண்டித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் சக பயணிகளை ஆபாசமாக திட்டினார்கள். இதை தட்டிக்கேட்ட விமான பணியாளர்களை யும் 2 பேரும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர். உடனே விமான பணியா ளர்கள் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை கைப்பற்றினார்கள்.

    அந்த விமானம் மும்பையில் தரை இறங்கியதும் போதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய மந்திரி நிதின் கட்கரி அலுவலகத்துக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது.
    • நிதின் கட்கரி அலுவலகத்துக்கு மிரட்டல் அழைப்பு வருவது இது 2-வது முறையாகும்.

    மும்பை:

    பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவரது மக்கள் தொடர்பு அலுவலகம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ஆரஞ்சு சிட்டி மருத்துவமனை எதிரில் உள்ளது.

    இந்நிலையில், நிதின் கட்கரி அலுவலகத்துக்கு நேற்று காலை ஜெயேஷ் புஜாரி என்ற ஜெயேஷ் காந்தா என்பவர் போன் செய்தார். அவர் ரூ.10 கோடி தரவேண்டும் என கேட்டார். மேலும் பணம் கொடுக்காவிட்டால் நிதின் கட்கரியை தாக்குவேன் என மிரட்டினார். அவர் காலை 2 முறையும், மதியம் 12 மணியளவில் ஒரு முறையும் போன் செய்து மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மிரட்டல் போன் அழைப்பு வந்ததை அடுத்து நாக்பூரில் உள்ள நிதின் கட்கரியின் வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நிதின் கட்கரி அலுவலகத்துக்கு மிரட்டல் அழைப்பு வருவது இது 2-வது முறையாகும். கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி புஜாரி எனக் கூறி ஒருவர் நிதின் கட்கரி அலுவலகத்துக்கு போன் செய்து ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார். அவர் தாவூத் இப்ராகிம் கூட்டாளி எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது.
    • டெல்லி அணியின் துவக்க வீராங்கனைகள் கேப்டன் மெக் லேனிங்- ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தஹ்லியா மெக்ராத் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.

    டெல்லி அணி தரப்பில் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    துவக்க வீராங்கனைகள் கேப்டன் மெக் லேனிங்- ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். ஷபாலி வர்மா 21 ரன்களும், மெக் லேனிங் 39 ரன்களும் விளாசினார். முன்னதாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இணைந்த மாரிசான் கேப்- அலைஸ் கேப்சி இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த சூழ்நிலையில், அலைஸ் கேப்சி 34 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜெஸ் ஜோனாசன் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார். பின்னர் மாரிசான் அடுத்த இரண்டு பந்துகளில் வெற்றியை உறுதி செய்தார். அவர் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    13 பந்துகள் மீதமிருந்த நிலையில், டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெல்லி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தஹ்லியா மெக்ராத் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் குவித்தார்.
    • டெல்லி அணி தரப்பில் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதிரடியாக ஆடிய துவக்க வீராங்கனை ஸ்வேதா ஷெராவத் 19 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கேப்டன் அலிசா ஹீலி 36 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. சிம்ரன் ஷாயிக் 11 ரன்களிலும், கிரண் 2 ரன்னிலும், தீப்தி சர்மா 3 ரன்னிலும், ஷோபி ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர்.

    அதேசமயம் மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய தஹ்லியா மெக்ராத் அரை சதம் கடந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. தஹ்லியா மெக்ராத் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.

    டெல்லி அணி தரப்பில் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது, அந்த அணியின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் மும்பை அணியை சமன் செய்யும். இதில் ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். எனவே, இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெறுவதடன், மும்பை அணியைவிட அதிக ரன் ரேட் பெறவேண்டும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
    • அமலியா கெர் போட்டியின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் தலா 29 ரன்கள் எடுத்தனர். மும்பை தரப்பில் அமலியா கெர் 3 விக்கெட் கைப்பற்றினார். நாட் ஷிவர் பிரண்ட், இஸ்சி வாங் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனைகள் ஹெய்லி மேத்யூஸ் 24 ரன்களும், யஸ்திகா பாட்டியா 30 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அதன்பின் நாட் ஷிவர் பிரண்ட் 13 ரன், கேப்டன் கவுர் 2 ரன், பூஜா வஸ்த்ராகர் 19 ரன் என ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அபாரமாக ஆடிய அமலியா கெர், 21 பந்துகள் மீதமிருந்த நிலையில் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்ததால், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமலியா கெர் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார். அவர் போட்டியின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. டெல்லி அணி 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது.
    • 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 9 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின.

    முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ராகர் 26 ரன்கள் சேர்த்தார். இஸ்சி வாங்கி 23 ரன், அம்ஜோத் கவுர் 19 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 9 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஷபாலி வர்மா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் மெக் லேனிங் (32 நாட் அவுட்), அலைஸ் கேப்சி (38 நாட் அவுட்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர். இதனால் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது. அத்துடன் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ராகர் 26 ரன்கள் சேர்த்தார்.
    • டெல்லி அணி தரப்பில் மாரிசான் கேப், ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய மும்பை இந்தியன்ஸ், டாப் ஆர்டர் வீராங்கனைகளை விரைவில் இழந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (23 ரன்கள்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ராகர் 26 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இஸ்சி வாங்கி 23 ரன், அம்ஜோத் கவுர் 19 ரன் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது.

    டெல்லி அணி தரப்பில் மாரிசான் கேப், ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசன் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print