என் மலர்

    தெலுங்கானா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது.
    • தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும் பயன் படுத்தக்கூடிய ராக்கெட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.

    பெங்களூர்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

    பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது.

    இந்த நிலையில் தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும் பயன் படுத்தக்கூடிய ராக்கெட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.

    செயற்கைகோளை விண்ணில் நிலை நிறுத்த கொண்டு செல்லும் ராக்கெட்டின் பாகம் விண்வெளியில் சுற்றும் அல்லது கடலில் விழும். மேலும் வெடித்து சிதறும் வாய்ப்பும் உள்ளது.

    செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட்டை மீண்டும் பூமியில் தரையிறங்கும் ஆய்வில் இஸ்ரோ ஈடுபட்டது. 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வந்த நிலையில் விண்ணில் இருந்து ராக்கெட் பூமியில் தானாக தரையிறங்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரோ, இந்திய பாதுகாப்புத்துறை, இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து இச்சோதனையை கர்நாடக மாநிலம் சித்ர துர்காவில் உள்ள ஏரோ நாட்டிகல் டெஸ்ட் ரேஞ்ச் மையத்தில் நடத்தப்பட்டு இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் இணைக்கப்பட்ட ராக்கெட், 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து தரையிறக்கப்பட்டது.

    ஹெலிகாப்டரில் இருந்து விடுவிக்கப்பட்ட ராக்கெட் ஓடுபாதையில் வெற்றிகரமாக தரையிறக்கியது. விஞ்ஞானிகள் நிர்ணயித்த இலக்கின் படி ராக்கெட் தரையிறக்கியது. இதன் மூலம் இச்சோதனை வெற்றி பெற்றது.

    செயற்கைக் கோள்களை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்திய பின் ராக்கெட்டை பூமியில் தரையிறக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து உள்ளது.

    மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் மூலம் செலவு குறையும். கால விரயம் தடுக்கப்படும். மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ முந்திய மைக்கல்லை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இதுகுறித்து இஸ்ரோ கூறும்போது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனம் என்ற கனவு யதார்த்தத்திற்கு இந்தியா ஒரு படி நெருக்கமாக வருகிறது.

    மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஏவுகணைகளை தயாரிப்பது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்து உள்ளது.

    சோதனை முடிந்த பிறகு மென்பொருள் தரையிறங்கும் கருவி சரிபார்ப்பு, ஓடு பாதையில் உள்ள உத்தேச இடத்துக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான சென்சார் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாகனங்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • தேர்தல் நெருங்கும் வேளையில் இன்னும் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. பெங்களூருவில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பெங்களூருவுக்கு வரும் வாகனங்கள், பெங்களூருவை விட்டு வெளியே செல்லும் வாகனங்களை போலீசார் தீவிரமாக பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக பெங்களூரு நகர் முழுவதும் 100 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸ்காரர்கள் உள்பட 3 போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    8 மணிநேரத்திற்கு ஒரு ஷிப்ட் என்ற அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருடன் சேர்ந்து தேர்தல் அதிகாரிகளும் சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த சோதனை சாவடிகள் வழியாக வரும் அனைத்து விதமான வாகனங்களும் முழுமையாக பரிசோதனை செய்யப்படுவதுடன், அங்கு வரும் வாகனங்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக வடக்கு மண்டலத்தில் 28, தெற்கு மண்டலத்தில் 26, ஒயிட்பீல்டு மண்டலத்தில் 10, வடகிழக்கு மண்டலத்தில் 3, மேற்கு மண்டலத்தில் 19, மத்திய மண்டலத்தில் 16, தென்கிழக்கு மண்டலத்தில் 3, கிழக்கு மண்டலத்தில் 16 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கும் வேளையில் இன்னும் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சதீஷ் தனது குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் அங்குள்ள குஷிகுடா பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு வேதா என்ற மனைவியும், நிஷிகேத் (வயது 9), நிஹல் (5) ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சதீஷ் தனது குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இரண்டு குழந்தைகளும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிகிச்சை அளித்தும் குணமாகாததால் சதீஷ் தனது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தானிய ஆலை ஊழியர்கள் அபூர்வ வகை பாம்பை அதிசயத்துடன் பார்த்தனர்.
    • போலீஸ் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் பாம்பு பிடிக்கும் பழக்கம் இருந்ததால் சம்பவ இடத்திற்கு வந்து அரிய வகை வெள்ளை நிற நாக பாம்பை பிடித்தார்.

    தெலுங்கானா மாநிலம் ஜெய்சங்கர் பூபால பள்ளி மாவட்ட எல்லையான மகாராஷ்டிரா மாநிலம் கட்சி ரோலி மாவட்டம் சரோஞ்சாவில் உள்ள தானிய ஆலையில் நேற்று காலை வெள்ளை நிறத்திலான அபூர்வ வகை நாகப்பாம்பு ஒன்று சுற்றி கொண்டு இருந்தது.

    இதனை கண்ட தானிய ஆலை ஊழியர்கள் அபூர்வ வகை பாம்பை அதிசயத்துடன் பார்த்தனர்.

    அப்போது பாம்பு அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டது.

    இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. கிராம மக்கள் திரளானோர் வந்து வெள்ளை நிற பாம்பை பார்த்தனர். மேலும் இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் பாம்பு பிடிக்கும் பழக்கம் இருந்ததால் சம்பவ இடத்திற்கு வந்து அரிய வகை வெள்ளை நிற நாக பாம்பை பிடித்தார். பின்னர் அதனை வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அவர் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    ஏற்கனவே பா.ஜ.க. சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் சார்பில் மக்கள் குரல் என்ற பெயரில் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைவர்கள் சட்டசபை தொகுதி வாரியாக சென்று பொதுக்கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக இன்று (திங்கட்கிழமை) கர்நாடக  மாநிலத்திற்கு வந்துள்ளார். பெலகாவியில் காங்கிரசின் இளைஞர் புரட்சி மாநாடு இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதன் மூலம் ராகுல் காந்தி கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். கூட்டத்தில் அவர் வேலையில்லா திண்டாட்டம், அதானி விவகாரம் போன்ற விஷயங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராகுல் காந்தியின் மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அவர் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

    ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பெலகாவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கர்நாடகாவில் 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. பெலகாவி நிகழ்ச்சிக்கு பின்னர் பெங்களூரு வரும் ராகுல் காந்தி, கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இதையடுத்து, மைசூர் செல்லும் ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரசின் செயல் தலைவராக இருந்து மறைந்த துருவநாராயணின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். ராகுல் காந்தியின் வருகை கர்நாடக காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • பிரதமர் மோடி அதிரடி வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார்.

    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி அதிரடி வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார்.

    ஏற்கனவே பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பிற மத்திய மந்திரிகள், பா. ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 மாதத்தில் 6 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்துள்ளார்.

    தற்போது 7-வது முறையாக அவர் மீண்டும் கர்நாடகா வர உள்ளார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக விஜய சங்கல்ப யாத்திரையை பா.ஜனதா நடத்தி வருகிறது. இந்த யாத்திரை வருகிற 25-ந் தேதி தாவணகெரே மாவட்டத்தில் நிறைவு பெற உள்ளது. இதற்காக தாவணகெரேயில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு பா.ஜனதா ஏற்பாடு செய்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேச உள்ளார்.

    இதற்காக பிரதமர் மோடி வருகிற 25-ந் தேதி மீண்டும் கர்நாடகம் வருகிறார். அன்று காலையில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூருவுக்கு வரும் பிரமதமர் பெங்களூரு கே.ஆர்.புரம் மற்றும் ஒயிட்பீல்டு இடையே புதிதாக மெட்ரோ ரெயில் ரெயில் சேவையை தொடங்கி தொடங்கி வைக்கிறார்.

    அதற்கு முன்பாக மகாதேவபுரா தொகுதியில் இருக்கும் சத்யசாய் ஆசிரமத்தில் இருந்து ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் நிலையம் வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோடு ஷோவாக ஊர்வலம் செல்ல இருக்கிறார். மேலும் கே.ஆர்.புரம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஒயிட்பீல்டு வரை அவர் மெட்ரோ ரெயிலிலேயே பயணம் செய்யவும் இருக்கிறார்.

    அதன்பிறகு, பெங்களூருவில் இருந்து சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு மருத்துவ கல்லூரியை அவர் திறந்து வைக்க உள்ளார். பின்னர் அங்கிருந்து தாவணகெரே மாவட்டத்திற்கு சென்று பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேச இருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் பேரை திரட்ட பா.ஜனதாவினர் திட்டமிட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே 13.75 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

    வழக்கமாக கே.ஆர்.புரத்தில் இருந்து ஒயிட்பீல்டுக்கு சொந்த வாகனத்தில் செல்ல ஒரு மணிநேரம் ஆகும். ஆனால் மெட்ரோ ரெயிலில் வெறும் 24 நிமிடத்தில் சென்று விடலாம் என்று மெட்ரோ ரெயில் நிாவாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்நாடக மாநிலம் மங்களூருக்கு இன்று காலை வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
    • குழந்தையின் டயபருக்குள் தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    கர்நாடக மாநிலம் மங்களூருக்கு இன்று காலை வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது குழந்தையுடன் வந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த குழந்தையை வாங்கி பரிசோதித்தனர். அப்போது குழந்தையின் டயபருக்குள் தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒருபுறம் மழை பெய்து கொண்டு இருந்தாலும் தீ பற்றி எரிந்தது. தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் 5-வது தளத்தில் புகை மூட்டம் சூழ்ந்தது.
    • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ஆர்பி சாலையில் 8 அடுக்கு மாடிக் கொண்ட வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

    5-வது தளத்தில் கால் சென்டர் இயங்கி வருகிறது.நேற்று இரவு 8-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென 7,6,5-வது தளங்களுக்கும் வேகமாக பரவியது. தீ விபத்தை கண்ட வணிக வளாகத்தில் இருந்தவர்கள அலறி அடித்துக் கொண்டு கீழேஇறங்கினர். சிலர் ஜன்னல் வழியாக குதித்தும் உயிர் தப்பி ஓடினர்.

    ஒருபுறம் மழை பெய்து கொண்டு இருந்தாலும் தீ பற்றி எரிந்தது. தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் 5-வது தளத்தில் புகை மூட்டம் சூழ்ந்தது.

    இதனால் கால் சென்டரில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் மயங்கி விழுந்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள் தீயில் வெடித்து சிதறியது.

    இதையடுத்து ராட்சத கிரேன் மூலம் கால் சென்டரில் சிக்கி இருந்த 18 பேரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

    அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பெயர், விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கால் சென்டர் ஊழியர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏர்பட்ஸ்களை தயாரிக்க ரூ.230 கோடியில் ஹேர்படம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
    • தனியார் தொழிற்சாலை அமைவதன் மூலம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரூ.1800 கோடியில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. ஐபோன் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்த தெலுங்கானா மாநில அரசு பர்சனான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.

    மேலும் ஏர்பட்ஸ்களை தயாரிக்க ரூ.230 கோடியில் ஹேர்படம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக ஏர்பட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. தனியார் தொழிற்சாலை அமைவதன் மூலம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டிலேயே ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளதால் ஐபோன்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.

    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மூன்று கட்சிகளும் பல்வேறு பெயர்களில் யாத்திரைகள் மூலம் பொதுக்கூட்டங்களை நடத்தி பலத்தை காட்டி வருகின்றன.

    கா்நாடக தேர்தல் களத்தில் வழக்கமாக பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தான் போட்டியில் இருக்கும். இந்த முறை புதிய வரவாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் குதிக்கின்றன. 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இந்த முறை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளும் பா.ஜனதாவுக்கு எதிரான தனது அரசியலை மிக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

    தேர்தலை சந்திக்கும் விதமாக பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே பா.ஜ.க.வில் உள்கட்சி மோதல் வலுத்து வருகிறது. கர்நாடகாவில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தன் மகனை தனது பாரம்பரிய சிக்காரிபுரா தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்தார். ஆனால் கட்சி தலைமை ஒப்புதல் வழங்காத நிலையில் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா சென்றார்.

    விஜய் சங்கல்ப யாத்திரைக்கு தலைமை தாங்க சென்ற அவரது காரை சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர். இதனால் எடியூரப்பா தனது பிரசார பயணத்தை ரத்து செய்து, திரும்பிச் சென்றார். இதன்மூலம் பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், விஜய் சங்கல்ப் யாத்திரையில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா அந்த இடத்தை விட்டு வெளியேறியதையும், அந்த இடத்தில் இருந்த சி.டி.ரவி தனது ஆதரவாளர்களுடன் வேறு திசையில் நடந்து செல்வதையும் காண முடிகிறது.

    எடியூரப்பாவுக்கு எதிராக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி நேரடியாக போர்க்கொடி தூக்கியிருப்பது, பா.ஜ.க.வில் இருக்கும் உட்கட்சி பூசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கும், வீட்டு வசதி மந்திரி சோமண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    யாரும் யாரையும் புறக்கணிக்க முடியாது. எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனது மகன் விஜயேந்திரா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே நோக்கம். மற்ற விஷயங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் நேரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்துவதால் கட்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். அதிருப்தியை சரிசெய்யும் பணியை கட்சி மேலிட தலைவர்கள் செய்கிறார்கள்.

    அனைத்து சமூகங்களையும் சமமாக பார்க்க வேண்டும். லிங்காயத்து சமுதாய ஓட்டு தேவை இல்லை என்று சி.டி.ரவி கருத்து கூறி இருந்தால் அது தவறு. இதுபற்றி அவருடன் பேசுகிறேன்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    இந்த சூழலில் விஜய சங்கல்ப யாத்திரையில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணிக்கு கர்நாடகம் வருகிறார். தனி விமானம் மூலம் சித்ரதுர்கா மாவட்டம் தோரனகல்லில் உள்ள விமான நிலையத்திற்கு வருகிறார். அவர் அங்கிருந்து கார் மூலம் செல்லகெரேவுக்கு வந்து பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin