search icon
என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது ஒரு லாரி மோதியது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது ஒரு லாரி மோதியது. இதனால் பைக் லாரியின் அடியில் சிக்கி சேதமடைந்தது. உடனே பைக் ஒட்டி வந்த நபர் லாரி மீது ஏறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஆனால் அதைப் பொருட்படுத்தாது ஓட்டுநர் லாரியை ஓட்டிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அன்றைய தினம் இதே லாரி மற்றொரு விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. 

    • அகமது தான் காரை ஓட்டி பார்க்க விரும்புவதாக தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங் பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ். தொழிலதிபரான இவர் ரூ.4 கோடி மதிப்பிலான ஸ்போர்ட்ஸ் கார் வைத்துள்ளார்.

    இவர் அகமது என்பவரிடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நீரஜ் தனது ஸ்போர்ட்ஸ் காரை விற்பனை செய்ய முடிவு செய்தார். இது தொடர்பாக அவரது நண்பர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து நீரஜின் நண்பரான அமன் என்பவர் கார் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார்.

    இதனை கண்ட அகமது அது நீரஜ்ஜின் கார் என்பதை தெரிந்து கொண்டார். உடனடியாக அமனை தொடர்பு கொண்டு நான் காரை வாங்க விரும்புகிறேன்.

    மாமிட் பள்ளி கிராமத்தில் உள்ள என்னுடைய பண்ணை வீட்டிற்கு காரை கொண்டு வருமாறு கூறினார். அதன்படி அமன் காரை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றார்.

    அப்போது அகமது தான் காரை ஓட்டி பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். காரை அங்குள்ள சாலைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அகமது தனக்கு நீரஜ் 1 கோடி ரூபாய் கடன் தர வேண்டும். அவர் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்படி கேட்டார். இதனால் அமனுக்கும் அகமதுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அகமது காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் கார் முழுவதும் பற்றி எரிந்து நாசமானது. ஒரு கோடி ரூபாய் கடனுக்காக 4 கோடி ரூபாய் மதிப்பிலான கார் எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பஹடி ஷரீப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன
    • அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    இந்நிலையில், இன்று அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    இதனையடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாகத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "2004 ஆம் ஆண்டு பா.ஜ.க வெளியிட்ட ஒளிரும் இந்தியா தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரித்ததுபோல் இம்முறையும் வளர்ந்த இந்தியா தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரிப்பார்கள்.

    பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை என்பது தோல்வியடைந்த வங்கியில் எடுக்கப்பட்ட செல்லா காசோலை. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவரும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது நெகோண்டா ரெயில் நிலையம்.
    • திருப்பதி, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரெயில்கள் இங்கு நின்று செல்வதில்லை.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது நெகோண்டா கிராமம். நர்சம்பேட்டா தொகுதியில் உள்ள நெகோண்டா ரெயில் நிலையத்தில் திருப்பதி, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரெயில்கள் நின்று செல்வதில்லை.

    ரெயில் நின்று செல்ல என்ன செய்ய வேண்டும் என கிராம மக்கள் கேட்டதற்கு, 3 மாதத்துக்கு வருமானம் இருந்தால் மட்டுமே இங்கு ரெயிலை நிறுத்திச் செல்லமுடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, பயணிகள் கோரிக்கை காரணமாக சமீபத்தில் செகந்திராபாத்தில் இருந்து குண்டூருக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நெகோண்டாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இங்கு நின்று செல்லும் ஒரே ரெயிலையும் இழந்துவிடக் கூடாது என்பதை மனதில் கொண்டு நெகோண்டா கிராம மக்கள் ஒன்றுதிரண்டனர்.

    அவர்கள் 'நெகோண்டா டவுன் ரெயில்வே டிக்கெட் மன்றம்' என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி சுமார் 400 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அவர்கள் மூலம் ரூ. 25 ஆயிரம் நன்கொடை பெறப்பட்டது. இதன்மூலம், நெகோண்டாவில் இருந்து கம்மம், செகந்திராபாத் மற்றும் பிற இடங்களுக்கு தினசரி ரெயில் டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள்.

    தினமும் 60-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் வாங்கப்பட்டாலும் அதனை பயணிக்க பயன்படுத்துவதில்லை. ரெயில் நிலையத்துக்கு வருமானம் காட்டவே இப்படிச் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    தங்கள் ஊரில் ரெயில்கள் நின்று செல்வதற்காக டிக்கெட் எடுத்து வரும் கிராம மக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.
    • கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.'

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வக்கீல் முன்னிலையில் திகார் ஜெயிலில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து கவிதாவை ஜெயிலிலேயே சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.

    • டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அல்லது அவரது தந்தையை ஐதராபாத்தில் களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
    • ஐதராபாத்தில் நடந்த இப்தார் விருந்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் ஒவைசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் மாதவி லதா பா.ஜ.க வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அல்லது அவரது தந்தையை ஐதராபாத்தில் களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஒவைசியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சைவார்த்தை நடத்தி வருகிறது.

    ஐதராபாத்தில் நடந்த இப்தார் விருந்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் ஒவைசி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான முகமது பெரோஸ் கான் கூறுகையில்:-

    காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்தால் ஒவைசியுடன் நட்பு கொள்ள தயார் என மறைமுகமாக கூட்டணி குறித்து தெரிவித்துள்ளார்.

    சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை தோல்வி அடைய செய்ய எந்த கூட்டணிக்கும் தயார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • எனது தம்பி பவன் கல்யாண் தனது சொந்த பணத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
    • அவரை ஊக்கப்படுத்த என்னுடைய பங்காக இந்த நன்கொடையை ஜனசேனா கட்சிக்கு வழங்கி உள்ளேன்‘’ என்றார்.

    நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் ஜனசேனா கட்சி நடத்தி வருகிறார். தற்போது பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் ஐதராபாத்தில் 'விஸ்வம்பரா' படப்பிடிப்பில் இருந்த நடிகர் சிரஞ்சீவியை, நடிகர் பவன்கல்யாண், ஜனசேனா கட்சி பொதுசெயலாளரும், சிரஞ்சீவியின் இன்னொரு தம்பியுமான நடிகர் நாகபாபு சந்தித்தனர்.




    அப்போது அவர்களை அன்போடு படப்பிடிப்பு தளத்தில் சிரஞ்சீவி வரவேற்றார். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி கொண்டனர். அதன் பின் நடிகர் சிரஞ்சீவி ரூ. 5 கோடிக்கான காசோலையை ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணிடம் நன்கொடையாக வழங்கினார்.

    இது குறித்து சிரஞ்சீவி கூறும்போது ''பலர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் மக்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால், எனது தம்பியான பவன் கல்யாண் தனது சொந்த பணத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

    இந்த சேவை என்னை மிகவும் கவர்ந்து உள்ளது.மேலும் அவரை ஊக்கப்படுத்த என்னுடைய பங்காக இந்த நன்கொடையை ஜனசேனா கட்சிக்கு வழங்கி உள்ளேன்'' என்றார்.

    • வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் 10 கிலோ எடையுள்ள கட்டி இருப்பது தெரிய வந்தது.
    • சிக்குடு வம்சி கிருஷ்ணா தலைமையிலான டாக்டர் குழுவினர் அனிதாவின் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அவரது உயிரை காப்பாற்றினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சிக்குடு வம்சி கிருஷ்ணா. டாக்டரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பெண் ஒருவர் வயிற்றில் உள்ள கட்டியால் மன உளைச்சல் மற்றும் உடல் நல கோளாறால் அவதி அடைந்து வருவதை அறிந்தார்.

    இதையடுத்து நாகர்கர்னூல் மாவட்டம் பலமூரில் பாதிக்கப்பட்ட பெண் அனிதாவை அச்சம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் கடந்த ஒரு ஆண்டாக கட்டியுடன் அவதிப்படுவதாக டாக்டரிடம் தெரிவித்தார்.

    அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் 10 கிலோ எடையுள்ள கட்டி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சிக்குடு வம்சி கிருஷ்ணா தலைமையிலான டாக்டர் குழுவினர் அனிதாவின் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அவரது உயிரை காப்பாற்றினர்.

    அனிதாவின் உயிரை காப்பாற்றியதற்கு அவரது குடும்பத்தினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், டாக்டருமான சிக்குடு வம்சி கிருஷ்ணாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

    • ஆய்வின்போது கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டு இருந்த பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
    • பழங்கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் உலக வரைபடத்தில் பனிகிரி இடம் பிடித்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் , சூரியா பேட்டை மாவட்டம், பனிகிரியில் புத்தர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆய்வின்போது கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டு இருந்த பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

    அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் பானையை வெளியே எடுத்தனர். அதில் பழங்காலத்தை சேர்ந்த ஏராளமான ஈய நாணயங்கள் குவிந்து கிடந்தன.

    மொத்தம் 3,730 பழங்கால நாணயங்கள் இருந்தன. பானை இருந்த இடத்தின் அருகில் கண்ணாடி மாதிரிகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளின் மாதிரிகள் இருந்தன.

    ஒரே நேரத்தில் இவ்வளவு பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது நாட்டில் இதுவே முதல் முறை என அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    பழங்கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் உலக வரைபடத்தில் பனிகிரி இடம் பிடித்துள்ளது.

    பவுத்த வரலாற்றை இந்த நாணயங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் உலகின் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கவனம் பனிகிரி புத்த கோவில் மீது விழுந்துள்ளது.

    • கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
    • 2019 தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 49.29 சதவீதம், பா.ஜ.க- 19.45 காங்கிரஸ்- 29.48 சதவீத வாக்குகளை பெற்றன.

    தெலுங்கானா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்து 2014-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவானது. ஐதராபாத், வாரங்கல், கம்மம் உள்ளிட்ட 14 பெரிய நகரங்கள் இந்த மாநிலத்தில் உள்ளன.

    2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 3 கோடியே 51 லட்சத்து 93 ஆயிரத்து 978 ஆக உள்ளது. 119 சட்டமன்ற தொகுதிகள் 17 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளில் பயணித்த கே.சந்திரசேகர ராவ் 2001-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை தொடங்கினார். அவரது முன்னிலையில் எடுக்கப்பட்ட போராட்டங்களால் தெலுங்கானா மாநிலம் உருவானது. இதனால் அசைக்க முடியாத தலைவராக சந்திரசேகர ராவ் உருவானார்.

    தொடர்ச்சியாக 2 முறை தேர்தலில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக பதவி வகித்தார்.

    கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

    சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி 39 இடங்களிலும் பா.ஜ.க-8 இடங்களிலும் வென்றது. தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 13-ந் தேதி ஒரே கட்டமாக 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், பி.ஆர்.எஸ். கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 - ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சி-9 இடங்களிலும் பாஜக- 4, காங்கிரஸ் -3, இடங்களிலும் வெற்றி பெற்றன.

    ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தெலுங்கானாவில் போட்டியில் இருந்து விலகின.

    2019 தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 49.29 சதவீதம், பா.ஜ.க- 19.45 காங்கிரஸ்- 29.48 சதவீத வாக்குகளை பெற்றன.

    தென்னிந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவற்றை விட தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. கூடுதல் கவனம் செலுத்துகிறது. சட்டமன்றத் தேர்தலில் டார்கெட் 75 இலக்குடன் களமிறங்கிய பா.ஜ.க., இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் இலக்குடன் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக களம் இறங்கியுள்ளது.

    பெண்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவித்து முதன் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

    கட்சிக்கு புதியவரான ரேவந்த் ரெட்டி பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வெல்வதன் மூலம் கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இருந்து ஓட்டம், வேட்பாளர்கள் பின்னடைவு, ஜெயிலில் மகள் என பல்வேறு சிக்கலில் உள்ள சந்திரசேகர ராவ் பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க தீவிரமாக செயல்பட்டுகிறார்.

    சந்திரசேகர ராவ் மற்றும் அவருடைய மகன் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தெலுங்கானாவில் மண்ணின் மைந்தர் என்ற கோஷத்துடன் புறப்பட்ட பி. ஆர்.எஸ்.கட்சி இந்த தேர்தலில் ஓரங்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தெலுங்கா னாவை பொருத்தவரை காங்கிர சுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை அடுத்துள்ள சங்காரெட்டி மாவட்டம், சந்தாபூர் எனும் ஊரில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் திடீரென ரசாயன டேங்கர் வெடித்து தீப்பற்றியது.

    தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர். இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சங்காரெட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • குரங்குகள் செத்து மிதந்த தொட்டியில் இருந்து ஒரு வாரமாக பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
    • தண்ணீரை குடித்த பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தெலுங்கானா:

    தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் நந்திகொண்டாவில் குடிநீர் பயன்பாட்டிற்காக தொட்டியில் இருந்து திறக்கப்பட்ட நீரில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து தண்ணீர் தொட்டியில் இறங்கி பார்த்தபோது அழுகிய நிலையில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் செத்து மிதந்தன.

    குரங்குகள் செத்து மிதந்த தொட்டியில் இருந்து ஒரு வாரமாக பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் குடிக்க தொட்டிக்குள் இறங்கிய குரங்குகள் மேலே வர முடியாமல் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தண்ணீரை குடித்த பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தண்ணீர் தொட்டியில் குரங்குகள் செத்து மிதந்ததன் பின்னணி குறித்து நந்திகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×