search icon
என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது.
    • பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மேனகா தாமோர். இவர் கடந்த 19 ஆம் தேதி ஜெய்ப்பூர் பன்ஸ்வாராவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் ஆயிரக்கணக்கான பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டனர்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், பழங்குடி மக்கள் இந்துக்கள் கிடையாது. பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. இந்து பெண்களை போல பழங்குடி பெண்கள் தாலி அணிய வேண்டாம். குங்குமமும் வைக்க வேண்டாம். நான் கூட தாலி அணிவதில்லை. குங்குமம் வைப்பதில்லை. விரதம் கூட இருப்பதில்லை.

    பள்ளிக்கூடங்கள் என்பது, கல்வியின் கோயில். ஆனால் இன்று பள்ளிக்கூடங்கள் கடவுள்களின் இல்லமாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் விரதங்கள் கடைபிடிப்பதை நிறுத்துங்கள். சாமியார்கள், பூசாரிகள் சொல்வதை கேட்காதீர்கள். நாம் இந்துக்கள் அல்ல" என்று பேசினார்.

    மேனகா பேசிய இந்த வீடியோ வைரலான நிலையில், ராஜஸ்தான் கல்வித்துறை இணை இயக்குநர், மேனகா தாமோரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    மேனகா ராஜஸ்தான் கல்வி நிர்வாகத்திற்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டார். நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்று அம்மாநில கல்வித்துறை இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

    அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் மேனகா, ராஜஸ்தானில் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா (Adivasi Parivar Sanstha) என்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசின் இறப்பு சான்றிதழை ரத்து செய்வதற்கு சட்ட வழிகளை பாபுராம் நாடியுள்ளார்.
    • அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.

    ராஜஸ்தானில் அரசால் இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட பாபுராம் என்பவர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க பல முறை அலைந்தும், முடியாததால் குற்றங்களில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மிதோரா கிராமத்தில் வசிக்கும் பாபுராம் பில்லுக்கு ராஜஸ்தான் அரசு தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் தனது அடையாளத்தையும், சொத்துக்களுக்கான உரிமையையும் பாபுராம் இழந்துள்ளார்.

    அரசின் இறப்பு சான்றிதழை ரத்து செய்வதற்கு சட்ட வழிகளை பாபுராம் நாடியுள்ளார். ஆனால் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.

    இதனால் விரக்தியடைந்த பாபுராம் தன்னுடைய இருப்பை நிரூபிப்பதற்கு வித்தியாசமான வழிமுறையை கண்டறிந்தார்.

    அதன்படி, சமீபத்தில் பெட்ரோல் பாட்டில் மற்றும் கத்தியுடன் பள்ளி வளாகத்தில் புகுந்து பலரையும் பாபுராம் தாக்கியுள்ளார். பின்னர் போலீசார் விரைந்து வந்து பாபுராமை கைது செய்தனர். போலீசாரிடம் பிடிபட்ட போது, "போலீசார் என்னை கைது செய்தால்தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க முடியும்" என்று பாபுராம் கூறியுள்ளார்

    பின்னர் போலீசாரின் விசாரணையில், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க செல்போன் டவரில் ஏறி மிரட்டிய பாபுராம் கடைசியாக பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

    பாபுராம் கூறிய விவரங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    ஜெய்ப்பூர்:

    பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    மத்திய பட்ஜெட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் உள்ள நீட் தேர்வாளர்கள் பயிற்சிக் கட்டணத்தில் 18 சதவீத ஜி.எஸ்.டி.யில் எந்த நிவாரணமும் அறிவிக்கப்படாததால் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, உத்தர பிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த வைஷ்ணவி கூறுகையில், கல்வி ஒரு உரிமை, அதற்கு வரி விதிக்கக் கூடாது. பயிற்சிக் கட்டணத்தில் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருந்தால் அது எங்கள் பெற்றோருக்கு நிதி நெருக்கடியைக் குறைத்திருக்கலாம். ஆனால் அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    ஆனாலும், கல்விக் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ள வைஷ்ணவி, இது ஏழை குடும்ப மாணவர்களுக்கு உதவும். கல்விக்கான 3 சதவீத வட்டி குறைப்பு அதிக கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறினார்.

    • தூய்மையான வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் எருமை கன்றை பார்க்க அப்பகுதி மக்கள் ஏராளமாக திரண்டனர்.
    • நாட்டு இன எருமை மாடு தற்போது தான் முதன் முறையாக குட்டியை ஈன்றுள்ளது.

    எருமை மாடுகள் மிகவும் கருப்பாக இருக்கும். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் கரவுளி பகுதியில் எருமை மாடு ஒன்று பால் போன்ற வெள்ளை நிறத்தில், அழகாக ஒரு குட்டியை ஈன்றுள்ளது. பார்க்க பசு கன்று போல தோற்றமளிக்கும் இந்த கன்றுக்குட்டியின் உடலில் ஒரு சிறு அளவில் கூட கருப்பு நிறம் இல்லை.

    தூய்மையான வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் இந்த எருமை கன்றை பார்க்க அப்பகுதி மக்கள் ஏராளமாக திரண்டனர். அவர்கள் இந்த கன்றுக்குட்டியை அதிசயமாக பார்த்து வருகின்றனர். இதுபற்றி எருமையின் உரிமையாளர் நீரஜ்ராஜ்புத் கூறுகையில், கடந்த 17-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு எருமை கன்றுக்குட்டி ஈன்றது. அப்போது வெள்ளை நிறத்தில் பிறந்த கன்றுக்குட்டியை பார்த்ததும் நாங்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தோம்.

    கன்றுக்குட்டி பிறந்ததில் இருந்து ஆரோக்கியமாக இருக்கிறது. அதன் தாய் குட்டியை மிகவும் அரவணைத்து பார்த்து கொள்கிறது என்றார். இந்த நாட்டு இன எருமை மாடு தற்போது தான் முதன் முறையாக குட்டியை ஈன்றுள்ளது. மரபணு கோளாறு காரணமாக இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில் 12 மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.
    • மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 13 மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.

    ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள 49 மாவட்டங்களை தனியாக பிரித்து பில் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என பழங்குடியின சமூகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதிலும் ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில் 12 மாவட்டங்களை சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    பழங்குடியினரின் பில் சமூகத்தினரை சேர்ந்த மிகப்பெரிய அமைப்பான ஆதிவாசி பரிவார் உள்ளிட்ட 35 அமைப்புகள் இன்று மிப்பெரிய பேரணிக்கு அழைப்பு விடுவித்திருந்தன. ஆதிவாதி பரிவார் சன்ஸ்தா நிறுவனர் மேனகா தமோர், பேரணியின்போது பழங்குடியின பெண்கள் பண்டிதர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றக்கூடாது எனத் தெரிவித்தார்.

    மேலும், பழங்குடியின குடும்பங்கள் பொட்டு வைக்கக் கூடாது, தாலி அணியக்கூடாது. பழங்குடியின சமூகத்தின் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் கல்வி மீது கவனம் செலுத்த வேண்டும். தற்போதில் இருந்து எல்லோரும் உண்ணாவிரத்தை நிறுத்த வேண்டும். நாம் இந்துக்கள் அல்ல எனக் கூறினார்.

    நான்கு மாநிலங்களில் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா பரவி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாரத் ஆதிவாசி கட்சி (பிஏபி) எம்.பி. ராஜ்கமார் ரோத் "பில் பிரதேசம்" என்பது புதிய கோரிக்கை அல்ல. பிஏபி இந்த கோரிக்கை வலுவாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மிகப்பெரிய பேரணிக்குப் பிறகு அமைப்பின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து கோரிக்கையை முன்வைப்போம்.

    ராஜஸ்தான் மாநிலத்தை தவிர்த்து மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மெகா பேரணியைத் தொடர்ந்து பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டது. இணைய தள சேவைகள் முடக்கப்பட்டன.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 12 மாநிலங்களையும், மத்திய பிரதேசத்தில் இருந்து 13 மாநிலங்களையும் பிரித்து பில் பிரதேச மாநிலத்தில் இணைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

    ராஜஸ்தான் மாநில பழங்குடியின துறை மந்திரி பாபுலால் கராடி கூறுகையில் "சாதி அடிப்படையில் மாநிலத்தை உருவாக்க முடியாது. இது நடந்தால், மற்ற மக்களும் இதுபோன்ற கோரிக்கை வைப்பார்கள். மத்திய அரசுக்கு நாங்கள் பரிந்துரை செய்ய மாட்டோம். மதம் மாறியவர்கள் பழங்குடியின இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறக்கூடாது." என்றார்.

    • ஒரு வீட்டின் வராண்டா பகுதியில் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் உயரமான இடத்தில்தான் அந்த ஷூ வைக்கப்பட்டிருக்கிறது.
    • சுமார் 30 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்வையிட்டு உள்ளனர்.

    ராஜஸ்தானில் ஷூவுக்குள் பதுங்கிய பாம்பு ஒன்று படமெடுத்து சீறும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை கொட்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு மனிதனின் குடியிருப்புகள்கூட சேதம் அடைந்துள்ளன.

    இதுபோன்ற காலங்களில், நிலத்தில் சந்துபொந்து, இண்டு இடுக்குகளில் வாழும் உயிரினங்களின் வாழ்விடங்கள் அதிக அளவில் சேதம் அடைந்து அவை வீதிக்கு வருகின்றன. குறிப்பாக பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதுகாப்பான, மேடான வாழ்விடங்களைத் தேடி மனிதனின் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடுவது வாடிக்கை. புதர் மண்டிய பகுதிகள், ஒதுக்குப்புறமான வீடுகளில் பாம்புகள் புக அதிக வாய்ப்புள்ளது.

    ராஜஸ்தானை சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரர், நீரஜ் பிரஜாபத், ஒரு வீட்டில் சிறுவர்களின் ஷூவில் பதுங்கியிருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். அதுபற்றிய வீடியோக்கள்தான் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

    ஒரு வீட்டின் வராண்டா பகுதியில் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் உயரமான இடத்தில்தான் அந்த ஷூ வைக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் அதில் ஒரு பாம்பு பதுங்கியிருப்பது மேலோட்டமாக பார்த்தபோதே தெரிந்ததால் வீட்டின் உரிமையாளர், பாம்புபிடிவீரரை அழைத்துள்ளார். அவர் வந்து பாம்பு பிடிக்கும் குச்சியால் காலணியை தொட்டதும், அதில் பதுங்கியிருந்த பாம்பு சீறியபடி வெளியே வந்தது. அது படமெடுத்தபடி நிற்கும் காட்சி பார்ப்பவர்களை மிரள வைத்தது.

    நீரஜ், அந்த பாம்பை லாவகமாக பிடித்ததுடன், அதுகுறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுமார் 30 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்வையிட்டு உள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப பொத்தானை அழுத்தி உள்ளனர்.

    • குறுகலான ரெயில் பாலத்தில் நின்று ட்ரோன் மூலமாக ஒரு புதுமண தம்பதி ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
    • பாலத்தில் இருந்து புதுமண தம்பதி குதிக்கும் வீடியோ உறவினரின் மொபைல் போனில் பதிவாகியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குறுகலான ரெயில் பாலத்தில் நின்று ட்ரோன் மூலமாக ஒரு புதுமண தம்பதி ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

    அப்போது ரெயில்வே தடத்தில் திடீரென ரயில் வந்ததால் பயத்தில் செய்வதறியாது 90 அடி பள்ளத்தில் கணவன் மனைவி இருவரும் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலத்தில் இருந்து புதுமண தம்பதி குதிக்கும் வீடியோ உறவினரின் மொபைல் போனில் பதிவாகியுள்ளது.

    குறைவான வேகத்தில் ரெயில் வந்து கொண்டிருந்ததால் புதுமண தம்பதியை பார்த்து உடனடியாக ரெயிலை நிறுத்தினார். ஆனால் ரெயில் நிற்பதற்கு முன்பாக அவர்கள் இருவரும் பாலத்தில் இருந்து குதித்துள்ளனர்.

    ரயிலை நிறுத்திய ஓட்டுநர்கள், கீழே விழுந்த ராகுல் - ஜான்வி தம்பதியை அவர்களின் நண்பர்களுடன் இணைந்து மீட்டனர். படுகாயம் அடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • அனுராதா ராணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்ட்டர் கிரிராஜ் என்னிடம், உன்னை பார்த்துக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடு, ஒரு ராத்திரிக்கு எவ்வளவு என்று கேட்டார்.

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் கன்னத்தில் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றுபவர் அனுராதா ராணி. இவர் கடந்த ஜூலை 11 வியாழக்கிழமை அதிகாலை சக ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை நிறுத்தி, விமான நிலைய நுழைவுவாயிலில் விமான குழுவினரிடம் ஸ்கிரீனிங் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது அனுராதாவிடம் தகாத முறையில் ஆபாசமாக கிரிராஜ் பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம்ஏற்பட்டு அனுராதா ராணி கிரிராஜின் கன்னத்தில் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் அனுராதா ராணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அனுராதா ராணியிடம் சரியான விமான நிலைய நுழைவு அனுமதி இருந்தது. ஆனால் அவர் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளால் தகாத வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையை அணுகி உள்ளோம். இந்த விஷயத்தில் எங்கள் ஊழியருக்கு முழு ஆதரவையும் வழங்குகிறோம் என்றார்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனுராதா ராணி தற்போது கிரிராஜ் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முனவித்துள்ளார். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'ஜூலை 11 காலை 4.30 மணிக்கு நான் எனது வேலையை செய்ய வந்தேன். அப்போது சப்-இன்ஸ்பெக்ட்டர் கிரிராஜ் என்னிடம், உன்னை பார்த்துக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடு, ஒரு ராத்திரிக்கு எவ்வளவு ரேட் என்று கேட்டார்.

     உங்கள் மீது போலீசில் புகார் அளிப்பேன் என்று நான் கூறியதற்கு, நான் சொல்வதைக் கேள், நீ நன்றாக உணர்வாய், வேலை வேகமாக முடிந்துவிடும் என்று தெரிவித்தார். இதனால் அவரை அறைந்தேன். நான் போலீஸ் புகார் அளிப்பதற்கு முன் அவர் என்மீது புகார் அளித்துவிட்டார்' என்று தெரிவித்தார். விமான நிலையத்தில் இரவு நேரத்தில் பெண் போலீஸ் அதிகாரிகள் இல்லாததால் மற்ற பெண் பணியாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

    • வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக வெற்றி பெற்றது பாஜாகாவுக்கு பேரிடியாக அமைந்தது.
    • 'நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் உள்ளே சில வெளிநாட்டு கைகள் இயங்கிவந்தன'

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களிலும், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களிலும் வெற்றி பெற்றது. 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி தேர்தலை சந்தித்த பாஜக, கூட்டணி வெற்றியை சேர்க்காமல் தனித்து 240 இடங்களில் மட்டுமே வென்றது.

    இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் தயவில் மோடி தலைமையில் மீண்டும் பாஜக அரசு ஆட்சியமைதுள்ளது. பாஜகவின் கோட்டையாக விளங்கும் உத்தரப் பிரதேசம் உள்ள மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக வெற்றி பெற்றது பாஜாகாவுக்கு பேரிடியாக அமைந்தது.

    இந்த நிலையில்தான் தற்போதைய பாஜக அரசில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சராக உள்ள சிவராஜ் சிங் சவுகான் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக நிறைய இடங்களில் தோற்பதற்கு வெளிநாட்டு சக்திகளின் தலையீடே காரணம் என்று பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    இன்று ராஜஸ்தானில் நடந்த சுமார் 88,000 உறுப்பினர்கள் பாஜக கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற சிவராஜ் சிங் சவுகான், 'நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் உள்ளே சில வெளிநாட்டு கைகள் இயங்கிவந்தன. அந்த வெளிநாட்டு சக்திகள் பாஜக வெற்றி பெறுவதை விரும்பவில்லை' என்று தெரிவித்தார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் சுமார் 16 ஆண்டுகள் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பிரவீன் பிரஜாபத் மேடை ஏறும் காட்சியுடன் வீடியோ தொடங்குகிறது.
    • வீடியோ இன்ஸ்ட்ராகிராமில் வைரலாகி 9 லட்சத்துக்கும் மேலான பார்வைகளை பெற்றது.

    பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான அமெரிக்கா காட் டேலண்ட் நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த 10 வயது சிறுமி மாயா நீலகண்டன் பங்கேற்று கிட்டாரில் பாப் பாடல் வாசித்து அசத்திய வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரை சேர்ந்த இளம் நடன கலைஞர் பிரவீன் பிரஜாபத் பங்கேற்று தனது தலையில் 18 கண்ணாடி கிளாஸ்களுக்கு மேல் பானையை வைத்து நடனமாடி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பிரவீன் பிரஜாபத் மேடை ஏறும் காட்சியுடன் வீடியோ தொடங்குகிறது. பின்னர் பிரவீன் பிரஜாபத் தனது தலை மீது 18 கண்ணாடி கிளாஸ்களை அடுக்குகின்றார். அவற்றின் மேல் ஒரு பானையை வைத்து சமநிலை படுத்திக் கொண்டே பிரவீன் பிரஜாபத் அசத்தலாக நடனமாடுகிறார்.

    இதை பார்த்து நடுவர்கள் திகைத்தனர். இந்த வீடியோ இன்ஸ்ட்ராகிராமில் வைரலாகி 9 லட்சத்துக்கும் மேலான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பிரவீன் பிரஜாபத்தின் திறமையை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    • அனுராதா ராணி சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்தார்.
    • எங்கள் ஊழியருக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக ஸ்பைஸ்ஜெட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் கன்னத்தில் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவர் அறைந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றுபவர் அனுராதா ராணி. இவர் நேற்று அதிகாலை சக ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை நிறுத்தி, விமான நிலைய நுழைவுவாயிலில் விமான குழுவினரிடம் ஸ்கிரீனிங் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் அதிகரித்தது. அப்போது அனுராதா ராணி சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் அனுராதா ராணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அனுராதா ராணியிடம் சரியான விமான நிலைய நுழைவு அனுமதி இருந்தது. ஆனால் அவர் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளால் தகாத வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையை அணுகி உள்ளோம். இந்த விஷயத்தில் எங்கள் ஊழியருக்கு முழு ஆதரவையும் வழங்குகிறோம் என்றார்.

    • இளம்பெண்ணை கடத்தி சென்ற குடும்பத்தினர், அவரை கொலை செய்து உடலை எரித்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பெண்ணின் உடல் 80 சதவீதத்துக்கும் மேல் எரிந்திருந்தது.

    சாதி, மதம், படிப்பு, தகுதி, அந்தஸ்து, பொருத்தம் ஆகியவற்றை பார்த்து ஒரு மகன் அல்லது மகனுக்கோ திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கின்றனர். இதெல்லாம் மீறி மகனோ அல்லது மகளோ தங்களது விருப்பம் இல்லாமல் காதல் திருமணம் செய்தால் அவர்களை கொலை செய்யும் அளவுக்கும் பெற்றோர் செல்கின்றனர்.

    அப்படி ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

    தங்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ததற்காக 24 வயது இளம்பெண்ணை குடும்பத்தினர் கடத்தி சென்று கொன்று உடலை எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் ரவி பீல் என்பவரை பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக திரமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதை அறிந்த காதல் தம்பதி பல்வேறு இடங்களில் தங்கி தங்களது உயிரை பாதுகாத்து வந்தனர். இறுதியாக காதல் தம்பதியினர் வங்கிக்கு வரவுள்ள தகவல் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.

    இதனால் வங்கிக்கு சென்ற குடும்பத்தினர் அங்கே காத்திருந்து, அப்பெண்ணை கணவரின் கண் முன்னே காரில் கடத்தி சென்றன. இதையடுத்து கணவர் போலீசில் புகார் அளித்தார். அதற்குள்ளாக அந்த இளம்பெண்ணை கடத்தி சென்ற குடும்பத்தினர், அவரை கொலை செய்து உடலை எரித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பெண்ணின் உடல் 80 சதவீதத்துக்கும் மேல் எரிந்திருந்தது. போலீசார் வருவதை அறிந்த குடும்பத்தினர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.

    ×